Pages

Monday, September 30, 2013

விஜயவாடா விசும்பல்ஸ்


விஜயவாடா விசும்பல்ஸ்:

அவளுக்கு 7 வயசு தான் எனக்கு 10 வயசு. நான் ஒரு வருஷம் வெயிட்டீஸ் பண்ணி ரெண்டாவது வாட்டியா 3வது படிச்சுட்டு, இப்போ 5வது படிக்கறேன். (பாஸ் தான், இருந்தாலும் போடியில் ஸ்டாண்டர்ட் போறாதாம், விஜயவாடாவில் தான் மிகவும் ஹைஐஐ ஸ்டாண்டர்டாம் மறுபடியும் பாஸ் பண்ண பாடத்தையே வேற ஊர்ல வெச்சு சேர்த்தாச்சு - மை மதர் தெரஸா) அவள் யூ கே ஜீ யோ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டோ..

ச்செய்த்தன்யா பப்ளிக் ஸ்கூல் விஜயவாடாவிலேயே.. சரி இல்லை.. க்ருஷ்ண லங்காவிலேயே.. சரி சர்வீஸ் ரோடு பக்கத்திலேயே.. அதெல்லாம் வாண்டாம். ஒரு குட்டி ஸ்கூல். மை நைனாவின் அலஹாபாத் பேங்க் குவார்ட்டர்ஸுக்கு மிக மிக அருகில் இருந்தது. எங்கேயா? ஸ்கூல் கிரவுண்டு ஃப்ளோர்..வீடு ஃபர்ஸ்ட் ஃப்ளோர். அம்மாம்பெரிய இஸ்கோலு! அக்காங்!

தினமும் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் கெக்கே பிக்கேன்னு இருக்காளேன்னு மை மதர் தெரஸாவுக்கு மூக்குல வேர்ந்திங்.. அண்டு கொண்டு போயிங் அண்டு ஜாயினிங் தி அப்போதைய ஃபேஷன் ஹிந்தி ட்யூஷன்ஸ். ”பிராத்மிக் ராஸ்துந்தண்டீ”ன்னு சொல்லிட்டா மிஸ்! செம்ம கடுப்பு. "அவ என்ன சொல்றது. நான் ராய மாட்டேம்மா"ன்னு சொல்லிப்பார்த்தேன். அப்பெல்லாம் மை மதர், ”எதிர்த்தா பேசுறே”ன்னு பளார் பளார்ன்னு அறைஞ்சிங்ஸ் ஒன்லி.. இப்போத்தான் சாந்த ஸ்வரூபி மதர் தெரஸா அவதாரம் டேக்கிங்ஸ்! சரி விஷயத்துக்கு வரேன்.

தினசரி சாயந்திரம் 4.15க்கு ட்யூஷனுக்கு போற வழியில் எங்க பில்டிங்குக்கு பக்கத்திலேயே ஆந்திரா பாங்க் கிட்டக்க ஒரு டீக்கடை இருந்தது. ’பே....’ ன்னு பிராக்கு பாத்துண்டே போவேனா.. அந்தக் கடையில அடுக்கி வெச்சிருந்த ஜாடிகள்ல Croissant மாதிரி ஏதோ ஒரு சமாச்சாரம். அதுக்குள்ளே பச்சையா, வெள்ளையா ஏதோ ஒண்ணு. அதை திங்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. மை மதர் தெரஸா அடிச்சிங்ஸ்.. அதுனால கேட்கலை.

தங்கைசனியும் சாரி.. தங்கைமணியும் கூடவே வரும் ஹிந்தி டியூஷனுக்கு. சும்மா இன்ஸ்பெக்‌ஷனுக்கு மை மதர் அனுப்பிங்ஸ் ஹர். போலீஸ் உத்தியோகத்துக்கு தான் அது லாயக்குன்னு நினைச்சுக்குவேன். நான் டியூஷன்ல எழுதாம வேடிக்கை பார்த்தது, இன்னொரு ஸ்டூடெண்டோட ஓடிப்பிடிச்சு வெளாண்டது எல்லாத்தையும் வந்து பிராம்ப்டா போட்டுக் 

கொடுத்து எனகு அடி வாங்கிக் கொடுத்திடும் அது.




இவ்வளோ செக்யூரிட்டி பிரச்சினைகளுக்கிடையில் எனக்கிது தேவையில்லை தான். பக்கித்தனம், ஆசை யாரை விட்டுது? ஒரு நல்ல சுபயோக சுபலக்னமா பார்த்து, அந்த சுப காரியத்தை செஞ்சேன். ஒரு 50 பைசாவை அலமாரியில இருந்து நைஸா எடுத்து புக்குக்குள்ளே வெச்சுண்டேன். அதே நாலேகால், அதே ரோடு, அதே டீக்கடை. “இருடீ நம்மா”ன்னு அதை ரோட்டிலேயே நிக்க வெச்சுட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைச்சுண்டு ”இதெந்த்தா?”ன்னு அந்த ஜாடியை காட்டி கேட்டேன். (அருஞ்சொற்பொருள் - இது எவ்வளோ?) அடடே.. ஒரு குட்டி தேவதை வந்திருக்கே நம்ம கடைக்குன்னு அகமகிழ்ந்த அந்த கடைக்காரர், ”பாவலா (paavalaa)நே...தீஸ்க்கோம்மா"ன்னு ரெண்டை எடுத்து என் கையில அதிவாத்ஸல்யத்துடன் கொடுத்துட்டார். (”காலணா தான், இந்தா எடுத்துக்கோம்மா”)

திரு திருன்னு முழிச்சுண்டே ஒண்ணை வெறுப்புடன் என்னை நோக்கிய தங்கை சனிக்கு கொடுத்துட்டு, வேகமாக அந்த ட்ரீம் கம் ட்ரூவை ரசித்து கடித்து சாப்பிடும்போது சுவர்க்கம் இது தான் போல்ருக்குன்னு நினைச்சுண்டேன். மீண்டும் கடைக்காரர் வந்து, “டீ தாகுத்தாராம்மா?”ன்னு கேட்டார்.( அருஞ்சொற்பொருள்: டீ குடிக்கறீங்களா குழந்தைகளா) ”ஹேன்? டீயா?” ன்னு நான் முழிக்க, தங்கைசனி முறைக்க, ”மீ நான்னகாரு ரோஜு இக்கடேனம்மா டீ தாகுத்தாரு”ன்னு (அருஞ்சொற்பொருள் - ”உங்க நைனா டெய்லி இங்கே தாம்மா வந்து டீ குடிப்பார்”) அவர் எங்களை கன்வின்ஸ் பண்ண, சரின்னு மண்டையை ஆட்டினேன்.

மை மதர தெரஸா போடும் லாஸா லம்ஸா சாக்லெட் டீ மாதிரியெல்லாம் வருமா என்னன்னு நினைச்சுண்டே அங்கே நின்னு அந்த மைதா சமாச்சாரத்தையும் முழுவதும் சாப்பிட்டு டீயும் குடிச்சுட்டு 50 காசையும் கொடுத்துட்டு (இன்னும் 50 காசு கொடுக்கணும் அவருக்கு, ”பரவாலேதுலேம்மா, மீ நான்னகாரு இஸ்தார்லே”ன்னுட்டார் அவர் - அருஞ்சொற்பொருள்: பரவாயில்லையாம் மை நைனா குடுப்பாராம் பாக்கி 50 பைசா)

ஆச்சா.. அந்த க்ரீம் பன்னோ என்ன இழவோ அதைத்தின்ன சந்தோஷத்தில் மிதந்து டியூஷனில் பூரா அதையே நினைத்து அகமகிழ்ந்து, அடிவாங்கி, உதை பட்டு வீட்டுக்கு போனா.. என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கு இன்னேரம் தெரிஞ்சிருக்குமே? அதே தான். என் உடன் பிறந்த எட்டப்பி, நேராக மை மதர் தெரஸாவிடம் போட்டுக்குடுத்துட்டள். “அம்மா இவ டீக்கடையில போய் டீயெல்லாம் வாங்கி குடிக்கறாம்மா” ”அடிப்பாவி சண்டாளீ.. நீயுந்தானே டீ குடிச்சே” ன்னு நான் நினைக்கறதுக்குள்ளே.. சர்ர் சர்ர் சர்ர்ன்னு முதுகில் 3 தோசை விழுந்தது. மதர் தாடகா தான்.. சாரி தெரஸா.. ”டீயா குடிச்சே? டீ குடிப்பியா”?ன்னு கத்தி ரகளை பண்ணி மொத்து மொத்துன்னு மொத்தினாள். ”இல்லேம்மா.. இனிமேல் காஃபியே குடிக்கறேன்மா”ன்னு நான் அழுதுண்டே சொன்னது யார் காதுலேயுமே விழலை!

“காசு எங்கேந்து கிடைச்சது”ன்னு கேட்க (நானெல்லாம் தான் பேசவே தேவையில்லையே.. எட்டப்பி எதுக்கிருக்கா.. எடுத்துக் கொடுத்தா) “அந்த அலமாரியில நீங்க வைக்கறதை இவ புக்குக்குள்ளே திருடி, வெச்சுண்டு எடுத்துண்டு வர்றாம்மா.. “ ஆச்சு, நான் என்னமோ பிறவியிலேயே திருடி மாதிரி ஒரு ருத்ர பார்வை, விஜயவாடாவில் கால் குத்திய தினத்திலிருந்து நான் அந்த டீக்கடையின் ரெகுலர் கஸ்டமர்ங்கற ஹோதாவுல கற்பனை பண்ணிண்டு அந்த விளாசு விளாசியிருக்கா மை மதர் தாடகா. அன்னிக்கி வாங்கின மொத்து இருக்கே இப்போ வரைக்கும் மறக்கவே மறக்காது.

இதை பஞ்சாயத்து பண்ணி வைக்க வந்த மை நைனாவுக்கும் கடுங்கோபம். சனியன், கழிசடை இன்ன பிற விலங்குகளின் பெயர்களைச் சொல்லி எனக்கு அஷ்டோத்திரம் வாசித்தார். எனக்கானா எக்கச்செக்க கோபம்ஸ். பின்னென்னங்கறேன். “மீ நான்ன காரு ரோஜூ இக்கடேனம்மா டீ தாகுதாரு”ன்னு அவர் சொன்னதும் தானே நான் குடிச்சேன்? இந்த டயலாக்கை நைனாவிடம் சொல்லியே விட்டேன். மை மதர் தாடகா உடனே மை நைனாவை ஒரு உக்கிரப் பார்வை பார்த்தார். ஹை ஜாலி அனதர் ஆக்‌ஷன் ரீப்ளே ஆகும்ன்னு ஆசையா பார்த்தா, ”ச்சே.. நான் எதுக்கு அங்கே போய் டீ குடிக்கப் போறேன்? பொய் வேற பேச ஆரம்பிச்சிருக்கா இவ” ன்னு சொல்லி அவசரமா டாப்பிக்கை மாத்தி, விட்ட இடத்துல இருந்து அஷ்டோத்திரத்தை தொடராம, மறுபடியும் மொதல்ல இருந்து சொல்ல ஆரம்பிச்சுட்டார்.

அவர் அஷ்டோத்திரம் வாசிக்க மை மதர் தாடகா எனக்கு ”அலங்காரம்” பண்ணிவிட திருட்டுத்தனமா என்னை மாட்ட வெச்ச மை ஜென்ம விரோதி தங்கை சனி கமுக்கமாக அடுத்த ரூமுக்கு போயாச்சு!

தங்கையுடையாள் டீ குடிக்கக் கூட அஞ்சணும் போல்ருக்கே!!!

வதனமே சந்திர பிம்பமோ!

இதை ஃபேஸ்புக்கில் ஏற்கனவே போட்டுட்டேன், இருந்தாலும் ஒரு ரெக்காடுக்காக இங்கேயும் போடுறேன். மறுபடியும் படிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிங்க்ஸ்!
முதல் வாட்டி பியூட்டி பார்லர் போனது 1993யில். ரெண்டு புருவத்தையும் வில்லாக வளைத்துக் கொடுத்தாள் - ஆம்ரபாலியில் - மலாட் ஈஸ்ட், மும்பய். அவ்வாவிடம் சத்தமாக ஆர்க்யூ பண்ணி, அம்மா அழைச்சுண்டு போனார். காடாய் வளர்ந்த புருவத்தை அவள் வெடுக் வெடுக் இழுத்த போது விண் விண் வலி இருந்தாலும் ஏதோ மாற்றம் வரப்போறதுன்னு திடுக் திடுக் இதயத்தோடு ஆசையா இருந்தேன்.

புருவச் செதுக்கல் முடிஞ்சு, கண்ணாடியில் பார்த்தபோது, அடேடே.. முகமே மாறிவிட்டதேன்னு படு சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் அதிக நாள் நிலைக்கவில்லை. குரோம்பேட்டையில், தி நகரில் திருச்சியில்(ஜங்ஷன் பக்கத்தில்) எங்கேயும் பாம்பே எஃபக்ட் கிடைக்கலை. தமிழ்நாட்டில் ஒரு தம்ப் ரூல் வைத்திருந்தார்கள். நிச்சியம் ரெண்டு புருவமும் ஐடெண்டிக்கலாக இருக்கக்கூடாது.. கட்டாயம் ஒன்று வளைந்தும் அடுத்தது கோடு மாதிரியும் அமைப்புடையதாகத் தான் இருக்கணும் என்று ஒரு சட்டம் வைத்திருந்தார்கள். அல்லது ஒன்றரை வயதுக் குழந்தை சுவற்றில் க்ரேயான்ஸால் போடும் தீற்று மாதிரி இருக்கணும் என்றும் சில பார்லர்களில் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அந்த மாதிரியான பார்லர்களில் ட்ரெயினிங் செண்டர் அட்டாச்டு என்றும் போர்டு போட்டிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல ஒரு கத்துக்குட்டி வந்து என் புருவத்தை பதம் பார்த்துவிடும்!

”ஏற்கனவே இவ மஹா மேதாவி. இதுல புருவத்தை வேற என்னமோ கோரம் பண்ணிண்டு வந்திருக்கா பாரு மூதேவி என்று நைனாவின் (ஹைக்கூ) நான்ஸ்டாப் லட்சார்ச்சனைக்கு அஞ்சாமல், அஞ்சால் அலுப்பு மருந்து சாப்பிட்டு, நான் மட்டும் மஹா நம்பிக்கையுடன் உருப்படியாக புருவம் செதுக்குபவளை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தேன்.

அடுத்த படியாக அந்தக் கால கட்டத்தில் ஃபேஷியல் படு ஃபேமஸ். இப்போ இருக்கற மாதிரி விதவிதமாக எல்லாம் இருக்காது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஹெர்பல் ஃபேஷியல். வித விதமான வாசனைப் பூச்சுக்களை முகத்தில் தடவி,ஊறவிட்டு, வேகவிட்டு, அப்புறம் மேல் பூச்சு பூசி, சுண்ணாம்பு மாதிரி அடித்து, காயவிட்டு, அப்புறம் அலம்பிவிட்டு அனுப்பி விடுவார்கள். இதற்கு நடுவில் மூக்கின் மேற்பரப்பில் ப்ளாக் ஹெட்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என்று (Saw - Part 1-7) ஜிக்ஸாவை (Jigsaw) விட அதிகமாக ரூம் போட்டு யோசித்து டார்ச்சர் செய்வார்கள். இதனால் மூக்கின் கரும்புள்ளிகள் போயிடும். ஆனால் மூக்கின் டிஃபால்ட் ஷேப் அப்படியே தான் ரீட்டெயின் ஆகும் என்பதை நினைவில் கொள்க! என்னைப்போல மூக்கு டிஃபெக்டிவ்வாக இருப்போருக்கு எந்த முன்னேற்றமும் தெரியாது.

இந்த மூக்கு ப்ளாக்ஹெட்ஸ் ரிமூவ் பண்ணப்பட்ட பெண்களுக்கு மூக்கு மட்டும் ஆஞ்சு டார்லிங் மாதிரி சிவந்து வீங்கி விடும். மோஸ்ட்லி வீட்டுக்கு வந்தவுடன் வடைமாலை போட்டு, வெண்ணைக்காப்பு சார்த்தி விடுவார்கள். மூக்கின் மேல் இருக்கும் வலிக்கு சில சமயம் கருப்பாக திட்டு திட்டாக அகிவிடும். மூக்கு ஒரு வாரத்தில் ஒரு வழியாக சரியாவதற்குள், முகம் வழக்கம் போல கருத்து விடும். இதனால் ஃபேஷியல் செய்யாமல் இருப்பதே பெட்டர் அல்ல, பெஸ்டாக்கும்.

பிஃபோர் ஃபேஷியல் அண்ட் ஆஃப்டர் ஃபேஷியல் முகத்தை பார்த்தால் பிஃபோரே பெட்டர் என்று தோன்றும். இதில் வேக வைத்து முகமசாஜ் கொடுத்த பெண், “பாத்தீங்களா மேடம், டேன் எல்லாம் நல்லா போயிடுச்சு, பளிச்சுன்னு க்யூட்டா இருக்கீங்க” என்பாள். சரிதான் போல்ருக்குன்னு ஈன்னு மவுத்ஃபுல்லாஃப் டீத்துடன் மறுபேச்சு எதுவும் பேசாமல் 200 ரூபாய்(அப்பெல்லாம் அவ்வளவு தான்) கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால், ”என்னடீ மூஞ்சிக்கு ஒண்ணுமே பண்ணிக்கலையா, நாளைக்கி யாரோ பார்க்க வராளாம்” என்பார் மை மதர் தெரஸா! செல்லவ்வா வந்து, ”மூஞ்சி கருப்பா அழுக்கா இருக்கு, சோப்போட்டு அலம்பி பவுடர் போட்டுக்கோ” என்பார். (இந்த ரெண்டுமே செய்யக்கூடாது என்று அந்த பார்லர் பெண் வேலை மெனக்கெட்டு அறிவுருத்தியிருப்பாள்) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மை மைண்ட் வாய்ஸ் - 200 ரூபாய்க்கு சங்கா???? (செல்லவ்வாவிற்கு பீட்டி பார்லர் எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதுனால மூச்!)

அப்புறம் நாள் பட, இந்த ஃபேஷியல் பண்ணிக்க போகும்போது, மேடம் புதுசா பிக்மெண்டேஷன் பேக், டிஃப்ராக்மெண்டேஷன் பேக், அமல்கமேஷன் பேக், மெட்ரிக்குலேஷன் பேக் இருக்கு. ஆய்லிஸ்கின், ட்ரை ஸ்கின், டேமேஜ்ட் ஸ்கின், ப்ளேடால கீச்சின ஸ்கின் இதுக்கெல்லாம் போட்டா அதிகமான பலன் கிடைக்கும். விலை 300 ரூபாய் தான். போட்டுக்கோங்க, முகம் கருக்கவே கருக்காதுன்னு க்ராஸ் ஸெல்லிங், அப்ஸெல்லிங் எல்லாம் செய்வார்கள். ஃபேஷியலுக்கு 300, தனியாக போடும் பேக்குக்கு இன்னொரு 300! கடைசியில் அந்த டிஸ்க் டிஃப்ராக்மெண்டேஷன் பேக்கானது நம்ம கேசவ முதலியார் நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய முல்த்தானி மிட்டி/நெல்லிக்காய்ப் பொடி/கருஞ்சீரகப்பொடி, பெருஞ்சீரகப்பொடி, கடுக்காய்ப்பொடி இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்! இதுக்கு 300 ரூபாயா! 10 ரூபாயில் முடிய வேண்டிய விஷயம்!

ஒரு வாட்டி குரோம்பேட்டையில் பார்லருக்கு போயிட்டு, ப்ளீச் போட்டுக்கோங்க ப்ளீஸ்ன்னு கெஞ்சினார்கள். நானும் சூனாப்பானா வடிவேலு மாதிரி சர்த்தான் களுதைய போட்டுப்பாப்போம்ன்னு போட்டுண்டா, மூஞ்சி பூரா பொசுங்கிடுத்து! அவ ஏதோ ஆஸிட்டை போய் ப்ளீச்சா போட்டுட்டா போல்ருக்கு! ஃபயர் சர்வீஸுக்கு ஃபோனைப்போட்டு வரவழைக்க வேண்டிய கட்டாயம். நான் மட்டும் அப்போ ஒரு கஸ்டமர் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்டா இருந்திருந்தா அவங்களை கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கே இழுத்திருப்பேனாக்கும். மூஞ்சி எறிஞ்சிங் + டார்க் பேட்சஸ். இம்மீடியட்டாக ஜில் தண்ணி ஊத்தி, ஏதேதோ கிரீமெல்லாம் தேய்ச்சு கொஞ்சம் அந்த டார்க் பேட்சஸ் குறைஞ்சது! அன்னீல இருந்து நோ ப்ளீச் ப்ளீஸ்ன்னு நான் தீர்மானமா சொல்லிடுறது.

ஒரு 4-5 வருஷம் முன்னாடி ஒரு பார்லர்ல போனப்போ ஸ்டீமிங்க் பண்றதுக்கு ஒரு மெஷின் வெச்சிருந்தா. அடடே.. டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்ன்னு மகளிர் மட்டும்ல வர பேஷண்ட் மாதிரி சந்தோஷப்பட்டுண்டு மூஞ்சியை கொடுத்தா.. அந்த மெஷின் ஏதோ ரிப்பேர் போல்ருக்கு.. அதுலேந்து கொதிக்கும் வென்னீர்த்துளிகள் தேமேன்னு படுத்துண்டு இருந்த எம்மேல விழு, அலறி அடிச்சுண்டு ஓடியாந்துட்டேன்! பாருங்க, ஃபேஷியலுக்கு போன இடத்துல தீப்புண்கள்! ப்ளடி பிட்பாக்கெட்!

கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் மாதிரி மை நைனா முகலிவாக்கம்ங்கற ஒரு இடத்துல வீடு கட்டினார். அத்துவானக்காடு. அங்கே பார்லரே இல்லை. எதுக்கெடுத்தாலும் போரூர் ஜங்க்ஷன் தான் போகணும். கொஞ்ச காலத்துல பக்கத்துலேயே ஏஞ்சல்ன்னு ஒருத்தி பார்லர் திறந்தா. பழக்கப்படுத்திண்டு அக்கவுண்ட் வெச்சுக்கலாமேன்னு போய்ப்பாத்தோம். பேர் தான் ஏஞ்சல். அங்கே வேலை செஞச ரெண்டு ஸ்டாஃபும் பூச்சாண்டீஸ் மாதிரி தான் இருந்தா. அந்த CEO அதை விட பயங்கரம். உஸ்ஸ்.. சரி.. அவங்க வேலை எப்படின்னு பார்த்தோமானா.. புருவம் ஷ்யுவர் ஷாட் அலங்கோலம் பண்ணிட்டுத்தான் விடுவாள். கண்டிப்பாக ஏதாவது ஒரு சொதப்பல் இருக்கும். நகங்களை வெட்டாமலே பெடிக்யூர் பண்ணிடுவா. எல்லா வேலையுமே அரைகுறை. மொத்தத்துல அங்கே ஐஸ்வர்யா ராய் போனாலும் பூச்சாண்டி மாதிரி தான் திரும்பி வரணும். பேசாம பூச்சாண்டி பேஸ் ஸ்டேஷன்னு பேரை கன்வீனியண்டா மாத்தி வெச்சுக்கலாம் இல்லே?

இப்பெல்லாம் நோ ஃபேஷியல். இருக்கற முகமே போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து! இப்போ தெரிஞ்சதா என் அழகின் ரகஸியம்?
Related Posts with Thumbnails