Pages

Thursday, April 29, 2010

ஃபேஸ்புக்கில் ரசித்த படம்!


நன்றி: ஆனந்த் குமார், ஜிகர்தண்டா கார்த்திக்கின் நண்பர்.

Tuesday, April 27, 2010

கிரிலக்ஷ்மி மிஸ் -2 கற்றது தமிழ்

கிரிலக்ஷ்மி மிஸ் -2


ஹைத்ராபாதிலிருந்து சென்னை வந்தப்போ ஸ்கூல் அட்மிஷனுக்கு அம்மா அவஸ்தை படலை. ஏன்னா அம்மாவோட போடி,  பங்கஜம் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் ஹெட்மிஸ்ட்ரெஸா இருந்த அதே திருமதி அய்யாசாமி (ஆமாங்க, பெண் தான்) தான் இங்கேயும் பிரின்ஸிபால். ஏதோ சினிமா மாதிரி இருந்தது எனக்கு. போடி எங்கே ஹஸ்தினாபுரம் எங்கே? இருந்தாலும் கடவுள் எனக்கு இந்த இடத்துல தான் ரொம்ப சாதகமா பண்ணி வெச்சார். எந்த டெஸ்டும் இல்லாம,” லக்ஷ்மி குழந்தைகளா?”ன்னு உடனே சேர்த்துண்டாங்க. அம்மா தான் ஸ்கூல் ஃபர்ஸ்டாச்சே! அதுனால எங்க மேலையும் அப்படி ஒரு (தப்பான) நம்பிக்கை. தங்கைமணி 4லேயும் நான் 7லேயும் சேர்க்கப்பட்டேன்.

அட்மிஷன் அப்போ தான் அய்யாசாமி மேடம் கேட்டாங்க,” தமிழுக்கு என்ன பண்ணப்போறே”ன்னு. ஆமாம் எங்க ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. போடியில சண்முகன் அருள் நெறி ஸ்கூல்ல ஒண்ணாப்பு ஓபி அடிச்சதிலே(ஆமா, நான் அப்போவே அப்படித்தான்!) உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மட்டும் தான் தெரியும். விகடன்ல விட்டுக்கள் படிப்பேன், கோகுலம் முக்கி முனகி ஒரே ஒரு குட்டிக்கதை படிச்சுட்டு புஸ்த்தகத்தை தூக்கி எறிஞ்சுடுவேன். அவ்ளோ சுறுசுறுப்பு.

அப்படி அய்யாசாமி மேடம் கேட்டப்போ, எங்கம்மா, ”நான் பெர்ஸனலா கோச் பண்ணி எப்படியும் பிக்கப் பண்ண வெச்சுடறேன் மேடம்”ன்னு அபார நம்பிக்கையோட கமிட் பண்ணினாங்க. எனக்கா தலை சுத்திடுத்து. தங்கை மணிக்கு சுத்தமா தமிழே தெரியாது. அது தெலுங்கு படிச்சது. பாவம் தான்னாலும் 4வதுக்கு அவ்ளோ சிலபஸ் இருக்காது, இவளுக்கு ஈஸி தான்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் தான் வசம்மா மாட்டிண்டேன்.

முதல் நாள் ஸ்கூலுக்கு போனப்போ சிவப்பா, அழகா, நீளமான கூந்தலோட, கொஞ்சம் ஜெயா அத்தை ஜாடையா உயரமா இந்த மிஸ் க்ளாஸுக்கு வந்தாங்க. எல்லாரும் எழுந்து ”வணக்கம் ஆசிரியை”ன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப புதுமையா இருந்தது. இது நாள் வரை ஆந்திராவில் டீச்சர், மிஸ், மேடம்ன்னு கூப்பிட்டு தான் பழக்கம்.

ரொம்ப எளிமையா,  இனிமையா அதே நேரம் ரொம்ப கண்டிப்பாகவும் நடந்துண்டாங்க. அவங்க பேர் தான் கிரிலக்ஷ்மி டீச்சர்.. டா.....ன்... (பின்னே ஹீரோயின் இண்ட்ரொடக்‌ஷன் ஆச்சே! அதுக்கோசம் மிஸ்ஸை டான்ஸெல்லாம் ஆட சொல்லக்கூடாது) முதல் நாளே மிஸ்ஸை அம்மா மீட் பண்ணி என்னை பத்தி வத்தி வெச்சாச்சு. மஹா பயம் எனக்கு. நான் எழுத்து கூட்டி ஒரு வரி படிக்கறதையே சாதனையா நினைச்சுண்டு இருந்த நேரத்துல ஆசிரியை , உரைநடையில் ரா.பி. சேதுப்பிள்ளையின் பேச்சு வழக்கு பத்தி  முதல் பாடம் எல்லாம் நடத்த எனக்கு தலை சுத்திச்சு. என்ன தான் அம்மா கோச் பண்ணினாலும் என்னால இலக்கணம் எல்லாம் பிக்கப் பண்ணவே முடியல.

இன்னோரு அதிர்ச்சி என்னன்னா, தமிழுக்கு ரெண்டு பேப்பராம். அடக்கஷ்டமே.. ஒரு பேப்பர் எழுதறதுக்கே சரக்கில்லை. 2 பேப்பர் என்னத்த எழுதப்போறேனோன்னு ஒரே டென்ஷன். எப்படியோ சமாளிச்சு முதல் மிட் டெர்ம் எழுதியாச்சு. மார்க்கு வந்தப்போ பயங்கர அதிர்ச்சி. முதல் பேப்பர் செய்யுள் உரைநடை 34/50, ரெண்டாவது பேப்பர், இலக்கணம், கட்டுரை, மெழி பெயர்ப்பு -18/50. ஃபெயில்! எனக்கு உலகமே இருட்டிண்டு வந்தது. பின்னே. இது நாள் வரைக்கும் பாலாமணி மாதிரி பண்ணினாலும் ஃபெயில் ஆனதா சரித்திரம் இல்லை. ஏதோ தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு ஒரு பார்டர்லயாவது பாஸ் பண்ணின ஆளு.. இப்படி கேவலமா வாழ்க்கையில தோத்துட்டோமேன்னு மனசு வெறுத்து போயிடுத்து. நமக்கெல்லாம் வாழத்தகுதியே இல்லைன்னு நினைச்சுண்டேன்.  அம்மா கிட்டே சொன்னா அவ்வளவு தான். திட்டி பிரிகட்டிடுவாங்கன்னு ஒரே பயம். ஒரு வாரம் கப்சிப்ன்னு இருந்தேன். அம்மா தினமும் கேட்டாங்க. பேப்பர் வரலைன்னு கூசாம பொய் சொன்னேன்.

அப்புறம் மனசு ரொம்ப குறுகுறுக்க பிராக்ரஸ் ரிப்போர்டு குடுத்த அன்னிக்கு சொல்லிட்டேன். அம்மா ரொம்ப கூலா சொன்னாங்க. அவ்ளோ தானே? நீ இந்த மார்க்கு கூட வாங்குவேன்னு நான் நினைக்கலை. பரவாயில்லை, எப்படியும் குவார்டர்லிக்குள்ளே உன்னை கோச் பண்ணிடுவேன் அப்படீன்னு சொன்னப்போ பெரிய ரிலீஃப்.

முதல்லே, ப்ளெயின் பேஜ்ல எழுதவே கஷ்டமா இருந்தது. தமிழ் ஆரம்பத்துல இருந்து எழுதிப்பழகாதது எப்பேர்ப்பட்ட பிழைன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். ஒற்றெழுத்து எல்லாம் ஒரேடியா தப்பு விடுவேன். இப்போவும் இந்த பிரச்சினை இருக்கு. தக்குடு மாதிரி ற,ர, ன,ண இண்டெர்சேஞ் இஷ்யூஸ். அநியாய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். அம்மா ஸ்கேல் வெச்சுண்டு அடி போட்டு திருத்துவாங்க. சரி, பாடங்கள் எல்லாம் ஓரளவுக்கு படிச்சு, வேற்றுமை உருபுகள் எல்லாம் புரிஞ்சும் புரியாமலும் நெட்று அடிச்சு, குற்றியலுகரம், குற்றியலிகரம் எல்லாம் டப்பா அடிச்சு ஒரு மாதிரி குவார்டர்லி பரீட்சை எழுதிட்டேன்.

கிரிலக்ஷ்மி ஆசிரியை ஆன்ஸர் பேப்பர் கொடுக்க கொடுக்க, வயித்தக் கலக்கிடுத்து. ஏதோ ஒரு பையன் தான் க்ளாஸ் டாப்பர்ன்னு நினைவு. ஏதோ ஒரு ஆர்டர்ல கொடுத்த் மாதிரி எனக்கு பட்டது. ஆனா எப்போ என் பேப்பர் வரும்ன்னு ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆயிண்டு இருந்தேன். எல்லோருக்கும் கொடுத்து முடிச்சப்புறம் ஒரே ஒரு பேப்பர் வெச்சு இருந்தாங்க. எனக்கு கன்ஃபார்மா தெரிஞ்சு போச்சு.. இன்னைக்கு சங்கு தான் நமக்கு. ஸ்பெஷல் அர்ச்சனை, அடி எல்லாம் கிடைக்கப்போறதுன்னு ரொம்ப வேர்த்துக்கொட்ட ஆரம்பிச்சுடுத்து. ஆசிரியை சொன்னாங்க, ”தமிழே தெரியாம இருந்தாக்கூட நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கி இருக்கா” ன்னு என் பேர் சொன்னப்போ நான் வாயப்பொளந்ததுல ரெண்டு பூச்சி வாய்க்குள்ளே போயிடுச்சு. ”எல்லோரும் கைத்தட்டுங்க”ன்னு ஆசிரியை சொன்னப்போ நான் இது நிஜம் தானான்னு நம்ப முடியாம திணறினேன். அது வரைக்கும் மேக்ஸிமம் மார்க்கு 67ன்னு கேட்டது. நான் 73! பேப்பர் வாங்க கிட்ட போன போது மிஸ்,” இந்த வாட்டி பரவாயில்லை ஆனா அடுத்த முறை இந்த மாதிரி ஹாண்டுரைட்டிங் இருந்தா ஸீரோ தான் போடுவேன்”னு சொன்னாங்க. அதெல்லாம் எங்கே என் காதுல விழுந்தது? நான் பறந்துண்டுன்னா இருந்தேன்!

சந்தோஷம்னா சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். மார்க்குக்கு இல்லை, ஆசிரியை கிட்டே கிடைச்ச அங்கீகாரத்துக்கு. அம்மாவுக்கும் தான் நன்றி சொல்லணும் பெண்டு நிமித்தினாங்களே. ஆனா ஆசிரியை என்கிட்டே ஒரு ஸ்பெஷல் கரிசனம் காட்டுவாங்க. ஒரு எம்பதி. அவங்க அப்ரோச்ல நிறைய தாய்மை இருக்கும். ஆசிரியை வெறும் தமிழ் மட்டும் சொல்லித்தரலை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் இப்படி எல்லா வாழ்க்கை நெறி முறைகள அழகாக எடுத்து சொல்லி இருக்காங்க. ஹ, அது சிலபஸ்ல இருக்கு, என்ன பெரிய விஷயம் எல்லா ஆசிரியர்களும் பண்றது தானேன்னு கேக்கலாம். ஆனா இவங்க இந்த விஷயங்களை மனசுல விதைச்ச விதம் இருக்கே.. இன்னிக்கும் கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்ன்னு நான் ஞாபகமா சொல்றேன்னா அதுக்கு காரணம் அவங்க தான். அது மட்டுமில்லை 7வது வகுப்பில் நிறைய கிரியேட்டிவ் ரைட்டிங் எழுத தூண்டியவர். கதை கவிதை, பட்டிமன்றம் இப்படி நிறைய பங்கு கொள்ள பண்ணினாங்க.  ஆக, இன்னிக்கி ஏதோ ஒரு சில ஸ்பெல்லிங் டவுட்டுகளை பாஸ்டன் ஸ்ரீராமண்னா கிட்டே கேட்டுண்டு எழுதினாலும், மத்தபடி ஏதோ இப்படி தத்தி தடுமாறி தமிழ்ல ப்ளாக் எழுத படிக்க முடியறதுன்னா அதுக்கு மூல காரணம் அம்மா & ஆசிரியை. இவங்க அன்னிக்கு போட்ட சுழி தான் இன்னைக்கும் நான் ஏதோ தெரிஞ்ச அளவுல கடை போட்டு கல்லா கட்டிண்டு இருக்கேன்.

Training is an ungrateful profession ன்னு நிறைய பேரு அடிக்கடி சொல்ல, கேட்டு இருக்கேன். நானும் அதே துறையை சேர்ந்தவள்ங்கற முறையில என்னிடம் படிச்சவங்க எல்லாம் என்னை மறந்துட்டாங்கன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கும். ஆனா நான், என்னை உருவாக்கிய ஆசிரியர்களை மறக்கவே இல்லை. ஏதாவது ஒரு வழியில அவங்களையும் அவங்க நினைவுகளையும் அசை போட்டுண்டே தான் இருப்பேன்.

நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியலை, ஆசிரியை. ஆனால் ஒரு அற்ப மாணவியின் நினைவுகள்ல நீங்க எப்போவும் இருக்கீங்க. வணக்கம் ஆசிரியை.

Monday, April 26, 2010

கிரிலக்ஷ்மி மிஸ் -1

கிரிலக்ஷ்மி மிஸ் -1

சுஜாதாவின் ’ஆ’ கதைல வர்ற ஜெயலக்ஷ்மி டீச்சர்  மாதிரி இன்னிக்கு எனக்கு கிரிலக்ஷ்மி மிஸ் நினைவு ஜாஸ்தியா இருக்கு. ரேடியோ வெச்சுட்டு ரங்குவும் நானும் பால்கனியில் நின்னுண்டு அபுதாபி வியூ பாக்குறது வழக்கம். இன்னைக்கு ரேடியோ வெச்சப்போ இதயத்தாமரை படத்துல இருந்து, “ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” பாட்டு வந்தது. ஹான்னா என்ற பெண் இந்த பாட்டை ”ஒரு டாஷு தேவதை பூமியில் வந்தாள்”ன்னு பாடினது ஏனோ மனசுல ஒரு நிமிஷம் ஃப்ளாஷ் ஆச்சு. இந்த மாதிரி மாத்தி பாட முதல் காரணம் கிரிலக்ஷ்மி மிஸ் தான்.

என்ன காரணம்ன்னு தெரியலை, குரோம்பேட்டை ஹஸ்தினாபுரம் சேவியர் ஜீஸஸ் ஸ்கூல்ல ப்ரேயர் அஸெம்ப்ளில அடிக்கடி பாட சொல்லுவாங்க. ஏதாவது ஒரு அனெளன்ஸ்மெண்டுக்கு காத்திருக்கும் நேரத்திலா இருக்கலாம். நினைவில்லை. அப்படி ஒரு சமயம் நம்ம ஸ்கூல் பையன் ஒருத்தன் போய் அப்போ ரொம்ப ரொம்ப பிரபலமா பேசப்பட்ட ”ராஜா கைய வெச்சா” அப்படீங்கற அபூர்வ சகோதரர்கள் படத்துல இருந்து பாட்டை பாடினான். அந்த பையனுக்கு நல்ல குரல்வளம், ஓரளவுக்கு நல்லாவே பாடினான். எல்லோருக்கும் பயங்கர சந்தோஷம் பின்னே சினிமாப்பாட்டு அதுவும் ஹிட் பாட்டு, அதும் அஸெம்ப்ளில.. கேக்கவா வேணும். எல்லாரும் நல்லா எஞ்சாய் பண்ணி கேட்க ஆரம்பிச்சோம்.ஆனா, கிரிலக்ஷ்மி மிஸ்ஸுக்கு பயங்கர கோபம்.  மிஸ் குறுக்கிட்டு அந்த பையன் பாட்டை கட் பண்ணி பல்பு குடுத்து”இந்த மாதிரி அசிங்கமான பாட்டெல்லாம் அஸெம்ப்ளில பாடக்கூடாது”ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நானும் ரொம்பவே யோசிச்சு பார்த்தேன். இந்த பாட்டுல கமலஹாசன் கூட ஆடும் பெண்களால தான் மிஸ் தப்புன்னு சொல்றாங்க போல இருக்குன்னு நினைச்சுண்டேன்.  பாவம் அவன் முகம் சுணங்கிப்போய் திரும்பி வந்து தன் இடத்துல வந்து நின்னுண்டான்.

அடுத்து நம்ம ஹான்னா போனா.மெளனராகம் படப்பாடல் சின்னச்சின்ன வண்ணக்குயில் பாட்டை எடுத்து பாட ஆரம்பிச்சா. மிஸ்ஸை பார்த்துட்டு திருட்டு முழி முழிச்சுண்டு, திட்டுவாங்களோ, பல்பு கிடைச்சுடுமோன்னு  ஒரே பயம் அவளுக்கு. மிஸ்ஸுக்கு அவ்ளோ திருப்தி இல்லை ஆனா ராஜா கைய வெச்சாவுக்கு எவ்ளோவோ பராவாயில்லையேன்னு சும்மாத்தான் நின்னுண்டு இருந்தாங்க..


பல்லவியை இனிதே தப்பில்லாம பாடின நம்ம ஹான்னா, சரணத்துக்கு வந்த போது, “ மேனிக்குள் காதல் வெள்ளம் மெல்லத்தான் பாயக்கண்டேன்”ன்னு பாடுறதுக்கு பதிலா, மிஸ்ஸை பார்த்துண்டே, ”மேனிக்குள் டாஷு வெள்ளம் மெல்லத்தான் பாயக்கண்டேன்”னு பாடினா. கொல்லுன்னு எல்லாக் குழந்தைகளும் சிரிச்சுட்டாங்க.

இந்த சம்பவத்துக்கப்புறமா எல்லாக்குழந்தைகளும் பாட்டை எடிட் பண்ணாம பாடவே மாட்டாங்க. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஹான்னா மேலே சொன்ன அந்த  இதயத்தாமரை படப்பாட்டை அப்படி பாடினா.

சினிமாப்பாட்டு பாடும்போது சபையுணர்வு எவ்ளோ முக்கியம்ன்னு உணர்த்தினாங்க அந்த மிஸ். ஒரு விழிப்புணர்வு வந்ததுன்னு சொல்லலாம்.
ப்ரைவேட் சிங்கிங், பப்ளிக் சிங்கிங்குக்கு பாட்டு செலக்‌ஷன் எவ்ளோ முக்கியம்ன்னு அப்போ புரிஞ்சுண்டேன்.

சமீபமா ஏதோ ஒரு மஹா மட்டமான மூன்றாம்தர பாடலை ஒரு 8 வயது சிறுமி மலையாள சானலில் பாடிண்டு இருந்தா.. துளி கூட அந்த பாவம் பிசகாம போல்டா நிஜமா பாடின பாட்டுக்காரரை எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி  பாடினான்னு சொன்னா மிகையில்லை.

நிச்சியம் இதை பார்க்கும் போது கிரிலக்ஷ்மி மிஸ் முகம் சுளிப்பாங்கன்னு மட்டும் நினைச்சுக்குவேன். எண்பதுகளின் கடைசியிலேயே அவ்ளோ கண்டிப்பானவங்களா இருந்தாங்களே கிரிலக்ஷ்மி மிஸ், இப்போ அவங்க என்ன பண்ணிண்டு இருப்பாங்க? இந்த மாதிரி கண்ணியம் மட்டும் இல்லை, இந்த கிரிலக்ஷ்மி மிஸ்ஸை நினைச்சு பார்க்குறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு. அடுத்த பதிவுல சொல்றேன். இல்லாட்டி எல்.கே ரொம்ப நீளமான பதிவுன்னு சொல்லிடுவான்!

நீங்க ரொம்ப காத்திருக்க வேண்டாம். நாளைக்கே சொல்லிடறேனே..

Saturday, April 24, 2010

சந்தை & அபுதாபி கார்னிஷ்


கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு சொல்றதை மாதிரி நாங்களும் வீக்கெண்டுக்கு வீக்கெண்டு கார்னிஷ் போயிடுவோம். கார்னிஷ்ன்னா என்னன்னு பலர் கேக்கலாம். கார்னிஷ்ன்னா கடற்கரையோரமா இவங்க, 6 கிலோமீட்டருக்கு மும்பாய் மெரீன் ட்ரைவ் மாதிரி கட்டி, அதை சுத்தி ஃபவுண்டெயின்ஸ், மரங்கள், பூச்செடிகள், புல்த்தரை இப்படி செயற்கையா செஞ்சு வெச்சு இருக்காங்க. இங்கேத்த ஷேக்குக்கு பசுமை, ஃபவுண்டெயின்னா ரொம்ப பிடிக்குமாம். அங்கே போனாலே ரொம்ப ரம்மியமா இருக்கும்.

 யாரெல்லாம் கார்னிஷ் ரோடுல இருக்காங்களோ அவங்களெல்லாம் ரொம்ப குடுத்து வெச்சவங்க. ஒரு பத்து நிமிஷம் அங்கே இருக்கற காற்றை சுவாசிச்சாலே உடம்புல இருக்கற வியாதி எல்லாம் டாட்டா சொல்லிடும். அவ்ளோ தூய்மையான காற்று மண்டலம். பத்தாக்குறைக்கு லேசான அலைகளோட சலசலக்கற தண்ணீர், ஆங்காங்கே வசீகரமான கனோபிகள், நடக்க அழகிய அகலமான நீல நடைபாதை, ஸ்கேட்டிங், சைக்கிளிங் இதுக்கெல்லாம் தனி ட்ராக், மிகப்பெரிய குழந்தைகள் ப்ளே ஏரியா, வாட்டர் தீம்ஸ், பார்பிக்யூ ஏரியா இப்படி பல ஐடியாக்களால் இந்த இடம் தான் ஒட்டுமொத்த அபுதாபி வாசிகளுக்கு சுவர்க்கபுரி.

இதை முனிசிபாலிட்டி ரொம்ப நல்லா மெயிண்டெயின் பண்றாங்க. செடி பராமரிப்பு, நடக்கும் பாதையை சுத்தப்படுத்தறது இப்படி பல நடவடிக்கைகள் எடுத்து எப்போ போனாலும் மனம் கொள்ளை போகும் அளவுக்கு அருமையான ஒரு இடம். எத்தனை வாட்டி போனாலும் ஹை, இது போன வாட்டி நாம பார்க்கலையேன்னு தோணும். புதுசு புதுசா ஏதாவது ஒரு வால்யூ அடிஷன் பண்ணிண்டே இருக்காங்க. போன வாரம் போனப்போ புதுசா எக்ஸர்ஸைஸ் மெஷின்ஸ் வெச்சு இருக்காங்க. பார்க்க மேலே, படம். நிறைய பேர் ஃபுல்லார்ம் ஷர்டெல்லாம் போட்டுண்டு எக்ஸர்ஸைஸ் பண்றாங்க. அந்த அளவுக்கு ஈடுபாடு பார்க்க முடியுது.



நேத்திக்கி வழக்கம்போல கார்னிஷ் தான் போயிருந்தோம். புதுசு புதுசா ஸ்டால்ஸ், பட்டாணிகள் கூட்டம், குதூகலத்துடன் குழந்தைகள், பெரியவர்கள், பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னன்னு கவனிச்சா, ராயல் எமிரேட்ஸ் க்ரூப் நடத்தும் ஃபன் ஃபேர். அதாவது ஜாலி சந்தை.

 குழந்தைகளுக்காகவே  விதவிதமான பெரிய பெரிய ரைடுகள், ரயில், ரோலர் கோஸ்டர் போன்ற சமாச்சரங்கள் வந்திருக்கு. குழந்தைகள் ஸ்பெஷல் ஒரு ராட்சதப்பந்தை உள் வழியா உருட்டிண்டே போறது. நான் இதை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கேன்! பயங்கர ஆச்சிர்யம்.



ஒரு குறிப்பிட்ட இடம் வழியா போயிண்டு இருந்தோம். திடீர்ன்னு பார்த்தா நம்ம ரங்க்ஸ் ஆளைக்காணோம். பின்னாடி திரும்பி பார்த்தா அங்கே செருப்பு என்னமோ ஃபெவிக்கால் போட்டு ஒட்டி வெச்சாப்புல ’ஞ’ன்னு நின்னுண்டு இருந்தார். எதைப்பார்த்து இப்படி ஸ்தம்பிச்சு போயி நின்னுண்டு இருக்கார்ன்னு பார்த்தா, இதான்.



வாயில் டன் டன்னா ஜொள். கண் ரெண்டும் வெளியில, சுருட்டி வெச்ச பாயை பிரிச்ச மாதிரி நாக்கு வெளியில ரோல் அவுட்டாகி பஞ்சு மிட்டாயை பார்த்துண்டே நின்னுண்டு இருந்தார். ப்ளூக்கலர் பஞ்சு மிட்டாய் சூப்பரா இருந்ததே, அதுனால அந்த ஃபிலிப்பினோ கிட்டே பெர்மிஷன் கேட்டு ஃபோட்டோ எடுத்துண்டு ஒரு ’பஞ்சுமிட்டாய்க்கலர்’ பஞ்சு மிட்டாய் (:-P) வாங்கிண்டு, மேல நடந்தோம். நிறைய கடைகள், ஏகப்பட்ட பெப்ஸி வெண்டிங் மெஷின்கள், ரெஸ்டாரண்டுகள், சைனா எலக்ட்ரானிக்ஸ் கடைகள், வீட்டு அலங்காரப்பொருட்கள், (உலகின் எந்த மூலையாக இருந்தாலும்) பெண்கள் விரும்பி கூட்டம் போடும் ஃபேன்ஸிக்கடைகள், துணிக்கடைகள் இப்படி ஒரே கடைகள் மயம்! நாளையிலிருந்து தான் திறப்பார்களாம். வெள்ளியாதலால் அவர்கள் சாஸ்த்திரத்துக்கு திறந்த மாதிரி எனக்கு பட்டது. (ஹீ ஹீ)

இதையெல்லாம் பார்த்து ஒரு இனம் புரியாத சந்தோஷம் எனக்கு.

சின்ன வயசுல அவ்வாகூட வீரபாண்டித் திருவிழாவுக்கு போயிருக்கோம். புதுசா வளையல், ரிப்பன், எல்லாம் அவ்வா வாங்கிக்குடுப்பாங்க. பயங்கரக்கூட்டமா இருக்கும். மே திருவிழான்னா, அதுக்கு முன்னாடியே போடியில ரோட்ல ‘கொட்டு’ வரும். வித்தியாசமான மேள சத்தத்துடன் கரகம் எல்லாம் எடுத்து டான்ஸ் ஆடிண்டே போவாங்க. அதை பார்க்க அப்படி ஒரு ஆவல். அடிச்சு பிடிச்சுண்டு வாசப்பக்கத்துல இருந்து கொல்லைப்பக்கம் ஓடுவோம். (1கிமீ இருக்கும், ஹீ ஹீ). பயங்கரமான ‘கப்பு’ இருந்தாலும், (open drainage system) இந்த கொட்டு வந்தா கொல்லைப்புறக்கதவை திறந்துண்டு நின்னு வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே.. ஹ்ம்ம்.. இந்தக்கொட்டுக்கு ஒரு தீம் கலர் இருக்கும். Any guesses? கரெக்டு. மஞ்சள். எல்லாமே மஞ்சளா இருக்கும். அவங்க உடை, ஆக்ஸஸரீஸ், காவடி, கரகம், முகம் உட்பட! அதான் இத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் பசுமையா அப்படியே இருக்கு அந்த நினைவு.



வீரபாண்டித்திருவிழா கடைசியா போனது, 1992வில். சரோஜி அத்தை கூட்டிண்டு போனாங்க. அப்போவும் ரிப்பன் பஞ்சு மிட்டாய், சர்க்கரை மிட்டாய், தேன் மிட்டாய் எல்லாம் தான் வித்துண்டு இருந்தாங்க. சென்னையில படிச்சுண்டு இருந்த எங்களுக்கு அது ஒரு புதிய அனுபவமா இருந்தது. கோவிலுக்குள்ளே அம்மனை பார்க்கவே முடியல. கூட்டம் முண்டி அடிச்சது. அந்தக்காலத்துல முக்கியமா சந்தை/திருவிழாக்களுக்கு போனால் கண்டிப்பா பண்ற விஷயம் ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடுத்துக்கறது. தாஜ்மெஹல் ஸ்க்ரீன் முன்னாடி மணி மாமா என்னை தூக்கி வெச்சுண்டு எடுத்த போட்டோ ரொம்ப தெளிவா நினைவிருக்கு.



அடுத்தடுத்து சந்தை திருவிழா எல்லாம் பார்க்க சான்ஸ் கிடைக்காம போயிடுத்து. விஜயவாடாவில இருந்த போது எக்ஸிபிஷன் தான். அங்கே போனா அப்பா மசாலா அப்பளம், ரஷ், கோல்டுஸ்பாட் எல்லாம் வாங்கிக்கொடுப்பார். ஒரு பாட்டில் வாங்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதை குடிக்கும்போது இருக்காது. பயங்கர சோடா. அந்த காரம் மூக்குல ஏறும். ஒவ்வொரு வாட்டியும் அதை குடிக்கும்போது ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் இதை இனிமே வாங்கவே கூடாதுன்னு நினைச்சுப்போம், ஆனா டீவீயில கவாஸ்கர் வந்து ரஷ் குடிக்க சொன்ன உடனே மனசு சரின்னு சொல்லிடும்.


சென்னை வந்ததுக்கப்புறமா தீவுத்திடல் ரெண்டு மூணு வாட்டி போய் இருக்கோம். அப்படி ஒண்ணும் பெரிய இம்ப்ரஸிவ்வா இருக்காது. கூவம் கப்புல மூக்கை மூடிண்டு தான் ஃபன் ரைட்ஸ் எல்லாம் போக முடியும். அதுவும் எனக்கு, ஜெயண்ட் வீல் எல்லாம் ’வீல் வீல்’ன்னு கத்தற அளவுக்கு பயம். அதுனால அந்த வம்புக்கெல்லாம் நான் போனதே இல்லை. தங்கைமணி பயங்கர அட்வென்சரஸ். எல்லாத்துலேயும் போகும். எக்ஸிபிஷன்லஎல்லாம் இருக்கற அட்ராக்‌ஷனே லைட்டுகள் தான். நிறைய விதவிதமான கலர்ல வெளிச்சம் போட்டு இருப்பாங்க. லாஃபிங்ஹவுஸில் கண்ணாடிகள் இருக்கும். மேஜிக் ஷோ நடுத்துவார்கள். அந்த வயசுல எங்களுக்கு நிச்சியமாய் அது ஒரு வினோத உலகம் தான்.
 
சரி, சரி,  புள்ளை குட்டியெல்லாம் கூட்டிண்டு அபுதாபி வரதா இருந்தா, கண்டிப்பா கார்னிஷ் ஒரு நடை போயிட்டு வாங்க. குழந்தைகள் ரசிக்கும்.

Tuesday, April 20, 2010

நூறாவது பதிவு-பாலக்காட்டுத்தமிழ் ஒரு அறிமுகம்

நானும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சு அம்பிகாபதி மாதிரி 99 கண்ணி எழுதியாச்சு. இது நூறாவது கண்ணி. வில்லன் நம்பியார், அந்த படத்துல சிவாஜி கிட்டே போங்காட்டம் ஆடி, “கடவுள் வாழ்த்து கணக்குல வராதுன்னு சொல்லுவாரே,  அதே மாதிரி ’ஹலோ வேர்ல்டு’ன்னு ஜாவா புரோக்ராம் அவுட்புட் மாதிரி நான் முதன் முதலா எழுதின போஸ்டை ”செல்லாது செல்லாது ”ன்னு நாட்டாமை மாதிரி சவுண்டு விடுறவங்க போடுற பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேனாக்கும். சரி இப்போ பதிவுக்கு போகலாம். பாலக்காட்டுத்தமிழ்.

இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதியது அல்ல. என் பார்வையில் இந்த மொழியைப்பற்றிய கருத்து அவ்வளவே

எல்லோரை மாதிரி நானும் பாலக்காட்டு தமிழை முதன் முறையா ரசிச்சது மைக்கல் மதன காமராஜன்ல தான். அப்புறம் நியூகாலனில குடியிருந்த போது ஒரு பாலக்காட்டு மாமி வீட்டுல தான் குடியிருந்தோம். அப்போ கொஞ்சம் அந்த மொழி பரிச்சயம். மத்தபடி ஆராய்ச்சி எல்லாம் பண்ணினதில்லை!

கல்யாணத்துக்கு அப்புறம் தான் இந்த மொழியின் ’சிறப்பு’ கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சது. எதைச் சொன்னாலும் புரியாம நான் ரெண்டு ரெண்டு வாட்டி கேட்டப்போ ரங்க்ஸ் நொந்து போயிட்டார். இருந்தாலும் பொறுமையா இந்த மொழியை எனக்கு விளக்கினார். இப்போ பாருங்க, பாலக்காட்டு மாமியா ஆயிட்டேன்! இதுக்கு முழு க்ரெடிட்டும் ரங்குவையே சாரும்! கீதா மாமி சொல்வது போல.. தாங்கீஸ்ஸ்ஸ்ஸ் ரங்கு டார்லிங்!

முதலில் எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு தெரிய மாட்டேங்கிறது! அவ்வளவு விஷயங்கள்!

1.கல்யாணமான புதிதில் நான் கவனிச்சது, சொல்லின் இடையில் வரும் ச வை இவர்கள் ஷ என்கிறார்கள். நாம் பேசறா என்பதை பேஸறா என்றும் அசடு என்பதை அஸடு என்றும் சொல்கிறோமே, இவர்கள் ’பேஷரா, அஷடு’ என்கிறார்கள்.

2.ஆரம்பத்தில் வரும் ச வை நாம் ஸ என்போம். இவர்கள் அழுத்தி ச்ச்ச்ச என்கிறார்கள்.நாம்: ஸொல்லி இருக்கா, இவர்கள் : ச்சொல்லி இருக்கா,

3.தக்குடு மாதிரி ஆட்களுக்கு தெரியாத ற் போன்ற எழுத்துக்களை இவர்கள் கமலஹாசனை விட அழுத்தியே உபயோகிக்கிறார்கள். கறி என்று சொல்லும்போது நாபிக்கமலத்தில் இருந்து ஆக்ரோஷமாக வரும் இ சத்தம் நாக்கை பல்லில் அ|ளவுக்கதிகமாக் உரசி பலத்த மரத்தை ரம்பத்தால் அறுக்கும் அளவுக்கு இடற வேண்டும். அப்போத்தான் ற்ற்ற் சரியாக வரும். இப்போ மறுபடியும் சொல்லிப்பாருங்க.. சரியா வரும். கறி. இந்த சொல்லின் பயன்பாடு என்னவென்றால் வதக்கி,  வேகவைத்து, அரைத்து, கொதித்து, இப்படி எந்த ப்ரொசீஜரில் செய்த காயாக இருந்தாலும் அது கறி என்றே அழைக்கப்படும். குர்மா, கூட்டு, கிரேவி இப்படி எது செஞ்சாலும் அது கறியே ஆகும்!

4. எந்த சொல் சொன்னாலும் அத்துடன் ’ஆக்கும்’ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். சொல்வதற்கு ஒன்றுமே இல்லாவிட்டாலும் சும்மாங்காச்சுக்கும் ’அதாக்கும்’ என்று சொல்ல வேண்டும். அப்போ தான் ஒரு வரி முடிவடையும். மை.ம.கா படத்தில் அப்பாவிக்கமல் ”அதுல போட்றுக்குமாக்கும் எனவும்”, நாகேஷ் சொல்வாரே,”ஆமா, எல்லாத்துக்கும் ஒரு ஆக்கும் சேர்த்துக்கோ..” என்பாரே.. 100/100 உண்மை!

5. இந்த மொழியின் சிறப்பம்சமே வாயில் காற்றை நிரப்பிக்கொண்டு பேசவேண்டும். அதாவது வார்த்தைகளை அழுத்தாமல் பூப்போல ஃப்ரீயாக பேசுதல். நன்றாக கவனித்தீர்கள் என்றால், மை.ம.கா படத்தில் கமல் வாயை திறந்தபடியே தான் படம் முழுவதும் பேசுவார். வாய், மூடவே மூடாது. ”அவா தாஞ்சொன்னா, வரணுங்கிட்டியா” போன்ற சொற்றொடர்களில் ம் என்ற ஒற்றெழுத்து திரிந்து ஞ், ங் ஆகி வருவது முறையாகும்.

6.அடுத்ததாக கேட்டியா, கேட்டேளா இல்லாமல் எந்த ஒரு வாக்கியமும் நிறைவடையாது. எல்லா வரிகளும் கேட்டியா அ கேட்டேளா என்ற சொல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். யேட்டையா என்பது தவறான உச்சரிப்பாகும். ட்டியா என்பதே மிகத்துல்லியமான உச்சரிப்பு அ பேச்சுவழக்கு என்பது எனது நான்காண்டு  கால ஆப்ஸர்வேஷனின் ரிசல்டு

7.இந்த பாலக்காட்டு பாஷையில் ஒரு க்ளோஸ் எண்டெட் கேள்வி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ”நாளைக்கு நேரத்தே ஏந்திருக்கணுமா?” அதாவது விடிகாலையில் எழுந்திருக்கணுமான்னு கேட்டால் இவர் ‘ ஏ....ய்’ என்பார். எனக்கு எரிச்சலாக வரும். ஒண்ணு ஆமாம்ன்னு சொல்லட்டும். இல்லே, இல்லைன்னு சொல்லட்டும். அதென்ன ஏ...ய்ன்னு ஒரு பதில்? அப்புறம் தான் தெரிஞ்சது ஏய்ன்னா இல்லைன்னு அர்த்தமாம்! தெலுங்குல ”அபே, அபெபே” மாதிரி மலையாளத்துல ”ஏ...ய்”ன்னு சொல்றது இல்லைன்னு பொருள் படுமாம்! நீங்க பாட்டுக்கு தப்பு தப்பா ஏய்ன்னு சுருக்கிச்சொல்லிட்டு அவாளுக்கு புரியலைன்னு சொன்னா கொம்பேனி பொறுப்பேற்க முடியாது!

8. சில வார்த்தைகள் தமிழிலும் இருக்காது, மலையாளத்திலும் இருக்காது, சமஸ்க்ருதத்துலேயும் இருக்காதாம். ஆனா பாலக்காட்டு தமிழ்ல இருக்குமாம்! உ:அம்படத்தான். தமிழில் அவ்வளவுதான் என்று பொருள்படும்.

9. சில தமிழ்ச்சொற்கள் வேறு அர்த்தத்தில் வழங்கி வருகின்றன. உ: பனி- நமக்கு பனின்னா ஐஸ்கட்டி. இங்கே இவர்களுக்கு பனின்னா ஜூரமாம். மடின்னு நாம் ஆச்சரமா குளிச்சு தனியாக்காயப்போட்ட துணிகளை உடுத்திண்டு சுவாமி கார்யங்கள் செய்வதை சொல்லுவோம்.இங்கே மடின்னா சோம்பேறித்தனம். நான் மடியா இருந்து நிவேத்யம் பண்ணினேன்னு சொன்னா இவங்களுக்கு தப்பர்த்தமாயிடுமே.

10. வரலை, போகலை, இல்லை இந்த வார்த்தயெல்லாம் சாதாரணத்தமிழில் வரல, போகல, இல்ல என்று நாம் கூறுகிறோமே, இவர்கள் வரலைஐஐ, போகலைஐஐ , இல்லைஐஐ என்று அதிகப்படி கர்வேச்சர் கொடுப்பார்கள். அப்படி ரவுண்டாக முடிக்காவிடில் அது பாலக்காட்டு மொழி அல்ல என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது!

 11.ஒண்ணு என்று நாம் பேச்சு வழக்கில் சொல்ற ஒன்றுங்கற வார்த்தையை இவங்க எல்லாம் ஒந்நுன்னு தான் சொல்லுவாங்க. அதுவும் ந் சொல்லும்போது இரண்டு பல்வரிசைக்கும் நடுவில் நாக்கை மாட்ட வைத்து, மூக்கை சுருக்கி, முக்கினால் தான் அந்த சவுண்டு எஃபெக்டு வரும். எங்கே இப்போ சொல்லுங்க பார்க்கலாம். ஒந்நு.. சபாஷ்.. குட் கோயிங் கேட்டேளா?

Friday, April 16, 2010

மோஹனின் மொக்கைகள்

இது கொஞ்சம் பழைய ஜோக்குதான்ன்னாலும் சொல்ல பயங்கர சுவையா இருக்கு.. ரங்குவை மாட்டிவிடுற மேட்டர் எல்லாம் அப்படி ஒரு சுவை தங்கமணிகளுக்குன்னு உங்க எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல நல்லா தெரியுமே!

ஒரு மூணு வருஷம் முன்னாடி இங்கே முதல் வாட்டி வேலை கிடைச்சு சுமார் ஒரு மாசத்துல ஒரு தமிழ்ப்பெண்ணை ஃப்ரெண்டு பிடிச்சு பேசிப்பேசி அவள் வீடு கோபால் அண்ணா வீட்டுப்பக்கத்துல தான் இருக்குன்னு கண்டு பிடிச்சப்போ பயங்கர சந்தோஷம். அவளும் தமிழ்க்கலாச்சாரப்படி, எங்க வீட்டுக்கு கண்டிப்பா நீ வரணும்ன்னு அன்புக்கட்டளை போட்டுட்டா. அதான் அப்போ எல்லாம் வீக்கெண்டுன்னா நேரா கார் தானா ஷார்ஜா போயிடுமே. அண்ணா வீட்டுல உக்காண்டு மொக்கை போட்டுட்டு நன்னா மூக்கை பிடிக்க சாப்பிட்டுட்டு சாயந்திரம் தான் வருவோம். இல்லாட்டி மறுநாள் கார்த்தால. சரி போறது தான் போறோம் அப்படியே நாஸியா வீட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்ன்னு பேசி டிசைடு பண்ணினோம்.

இவர் வழக்கத்துக்கு மாறா ரொம்ப முன்னாடியே ட்ரெஸ் பண்ணிண்டு ரெடியாயாச்சு. ஒரு அரை மணி நேரமா என்னமோ யோசனையில ஆழ்ந்து இருந்தார். அப்படி யோசிச்சுண்டு இருக்கும்போது தேவையே இல்லாமல் ஜுப்பாவை குனிஞ்சு பார்த்துண்டே, தடவிண்டே உக்காந்து இருந்தார். ”என்னன்னா”ன்னு கேட்டு இருக்க வேண்டாம். விதி வலியது. கேட்டாச்சு. ”புருவம் நெறித்து, இந்த களர் (இவங்க அப்படித்தான் சொல்லுவாங்க) நன்னா இருக்காம்மா”ன்னு வினயமாத்தான் கேட்டார்.” ஏன்? இந்த டார்க் மெரூனுக்கென்ன? உங்க நிறத்துக்கு எடுப்பா ஜோரா இருக்கே? ஏன் கேக்கறேள்”ன்னு அப்பாவியா கேட்டேன். முகமெல்லாம் முகஸ்துதியிலே பிரகாசமாகி, “இல்லே, நாஸியாவுக்கு இந்த களர் இஷ்டப்படுமா?”ன்னு கேட்டப்போ ஆடிப்போயிட்டேன்.

சுமார் ஒரு மணி நேரம் ’அர்ச்சனை’, ’அலங்காரம்’, எல்லாம் முடிச்சுட்டு, கண்றாவியா ஒரு டிஸ்கோ டான்ஸர் டீ ஷர்ட்டும் கேவலமான ஒரு ’சம்பந்தமூர்த்தி’ பேண்டும் மாட்டி விட்டு நாஸியா வீட்டுக்கு கூட்டிண்டு போனேன். ”நாஸியா, விச் ஃப்ளோர்”ன்னு கேக்கறதுக்கு ஃபோன் பண்ணினா, இவர் நடூல மூக்கை நுழைச்சு, ”அவாத்துல சேப்பு கம்பளம் இல்லாட்டி விட்டுடச்சொல்லு.. என்ன தான் நான் வரேன்னாலும், என்னத்துக்கு அனாவஸியமா அதெல்லாம் எல்லாப்படியிலும் போட்டுண்டு.. எப்படியும் நாம லிஃப்டுல தான் போவோம்,காரிடர்ல மட்டும் போட்டாப் போறும்ன்னு சொல்லிடூ” ன்னு உளரி எக்ஸ்ட்ராவாக செல்ஃபோனாலேயே மண்டையில் ரெண்டு பொடுமி வாங்கிக்கொண்டு போறாக்குறைக்கு ஸ்பைசியாக கொஞ்சம் திட்டும் வாங்கிக்கட்டிண்டார். காரில் கண்ணாடி, வெளியில் தெரியும்.. லிஃப்டுன்னா யாருக்கும் தெரியாதுன்னு ஹாண்டு பேக்கில் வெச்சிருந்த ஸ்கேல் & பூரிக்கட்டை பத்திரமா இருக்கான்னு பார்த்துண்டேன். நல்ல வேளை எல்லாம் பத்திரமாக இருந்தது!

”ஹாய்”ன்னு வரவேற்ற நாஸியா என்னை மட்டும் உள்ளே கூட்டிண்டு போயிட்டா. அதுக்கப்புறம் இவரும் நாஸியா கணவரும் பேசிண்டு இருந்தாங்க. கடைசியில பேசிட்டு கிளம்பும் போது தான் நம்ம ஹீரோ நாஸியாவை பார்த்தார். ஹீரோவுக்கு ரொம்ப வருத்தம். நாஸியா ரெட் கார்பெட் போடலை, தன் கூட பேசலைன்னு. க்ர்ர்ர்ர்...

நெக்ஸ்டு நேத்திக்கி நடந்த காமெடி.. கார்னிஷ் போய் ரொம்ப நாளாச்சுன்னு போயிருந்தோம். நல்ல 1 மணி நேர நடைக்கப்புறமா ரோடெல்லாம் க்ராஸ் பண்ணி ஒரு புல்த்த்ரையில் போய் உக்காண்டோம். தாகம் நாக்கை வறட்ட, ஒரு கோக் வேணா குடிக்கலாமான்னு கேட்டார். முன்னக்காலத்து ட்ராமால எல்லாம்,"இதோ, அவரே வர்றாரே”ன்னு சொல்லுவாங்களே அதே மாதிரி, இதோ, பக்கத்துலேயே வெண்டிங் மெஷின் இருக்கேன்னு சொல்லிண்டே இவர் போய் கோக் வாங்கிண்டு வந்தார்.

ரொம்ப தாகமாச்சேன்னு நான் பெருந்தன்மையா காத்திருக்க, ரங்கு கோக் டின்னை ஓப்பன் பண்ணி ஒரு வாய் விட்டுண்டார். தாகசாந்திக்கு உபச்சாரமா, அலங்காரமா ”நன்னா இருக்கா”ன்னு நான் கேட்டது தான் தப்பு.

ரங்கு ஒரு ஃப்ராக்‌ஷன் ஆஃப் செகண்டுல சொல்றார், ”கோக் என்ன சீயஞ்சட்டியிலையா உண்டாக்கறா? ஃபேக்டரியிலயாக்கும் உண்டாக்கறா.. எல்லாமே ஒரே டேஸ்டாத்தான் இருக்கும்.அதே கோக் டேஸ்டு தான். நோ சேஞ்சு!”

என்னால முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!!

Wednesday, April 14, 2010

இறுக்கம்

அவசரமாக கடுகு வேண்டி இருந்தது. எப்போவும் இரண்டு பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருப்பாள். இன்று எதிர்பாராமல் தீர்ந்து விட, பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ளலாம் என்று கிளம்பினாள். இன்னும் ஒரு மணி இருக்கிறது அவள் கணவன் சாப்பிட வருவதற்கு. அதற்குள் வாங்கிக்கொண்டு வந்து விடலாம். தலையை சரிபண்ணிக்கொண்டு மீண்டும் ஒரு கீற்று குங்குமம் வகிட்டில் தீற்றிக்கொண்டாள். கதவைப்பூட்டிக்கொண்டு வெளியில் லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தாள்.

ஒரு சில நொடிகளில் லிஃப்டு காலியாக வந்தது. புகுந்து கொண்டாள். 12வது மாடியில் மீண்டும் நின்றது. ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் வந்து சேர்ந்து கொண்டார்கள். எப்படியும் லிஃப்டு போகிறதே, இன்னும் இரண்டு பேர் வந்தால் ஒரே மின் செலவில் இத்தனை பேருக்கு உபயோகமாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டாள். அப்படி நினைத்தாலும், ஏதோ ஒரு அந்நிய உணர்வு! டெலிக்கேட்டாக இருக்கும். சில மைக்ரோ நொடிகள் தான் என்றாலும், முகம் தெரியாதவர்களுடன் செய்யும் இந்த லிஃப்டு பயணம் அவளுக்கு கிட்டத்தெட்ட மரணாவஸ்தையாக இருப்பதென்னமோ உண்மை தான்.

ஒரு வேளை தான், தான் கொஞ்சம் பட்டிக்காட்டுத்தனமாக இவ்வாறு உணர்கிறாளோ. இதோ இப்போது குழந்தையுடன் வந்தாளே, இந்த அராபிய பெண்மணி எப்படி உணர்கிறாள் என்று கூர்ந்து ஒரு நொடி கவனித்தாள். தண்ணீரில் இருந்து வெளியில் விழுந்த மீன் போல துடித்துக்கொண்டிருந்தாள். பாவம் என்ன கஷ்டமோ என்னமோ என்று நினைத்துக்கொண்டாள்.

லிஃப்டு இப்போது மீண்டும் 6வது மாடியில் நின்றது. இன்னேரம் பயங்கர பிஸி நேரம் போலுள்ளதே.. நிறைய பேருக்கு லிஃப்டு வேண்டியதாக இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். ஒரு பிலிப்பினோ இளைஞன் ஏறிக்கொண்டான். அவன் லிஃப்ட் கதவு மூடியதிலிருந்து, அந்த மேலே ஒளிரும் ஆரோ பட்டனையே பார்த்தவாறு ஜி எப்போது வரும் என்று நிம்மதி இல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

சரிதான் எல்லோருக்கும் அதே நிலை தான் போலுள்ளது என்று நினைத்து சிரித்துக்கொண்டாள். இந்த பில்டிங்கில் எப்போதும் ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். புதிய முகங்கள், பரிச்சயப்படாத மொழி, நிறம், கலாச்சாரம். யாரும் மற்றவருடன் பேசுவதில்லை.

எப்போது தான் ஜி வரும் என்று காத்திருந்தவர்கள் போல கீழ்த்தளம் வந்தவுடன் வெளியில் சிதறினார்கள். வெளியில் வந்தாளே ஒழிய, சோர்வாக இருந்தது. ஏன் இவ்வளவு இறுக்கம். சில மைக்ரொ வினாடிகள் தான் என்றாலும், எதற்கு இவ்வளவு சக்தி உடலில் விரயமாகிறது என்று எண்ணியவாறே நடந்தாள்.

கடுகு வாங்கிக்கொண்டு உள்ளே பில்டிங்கினுள் நுழையும் போது லிஃப்டுக்காக ஒரு மலையாளி பெண்ணும் அவள் மகனும் காத்துக்கொண்டு இருந்தார்கள். லிஃப்டு வந்தவுடன் மெதுவாக கதவை பிடித்தவாறே அவ்விருவரையும் உள்ளே அனுமதித்துவிட்டு இவளும் புகுந்து கொண்டாள். 14ஐ அமிழ்த்திவிட்டு “விச் ஃப்ளோர்?” என்று சிரித்தவாரே கேட்டாள். 10 என்றான் அந்த சிறுவன் பளிச்சென்று. ஒரு புன்னகையுடன், 10ஐ அமிழ்த்திவிட்டு, அந்த பெண்ணை நோக்கி சிநேகமாக சிரித்தாள்.


அந்த பெண்ணும் பதிலுக்கு புன்னகைத்தாள். அந்த சிறுவனை நோக்கி சிரித்துக்கொண்டே, ”வாட் ஈஸ் யூவர் நேம்?” என்றாள். “நிகில்” என்றே வெட்கத்துடன் சொன்னான். ஒரு சில கேள்விகளும் அந்த குழந்தையின் அழகு பதில்களும் அந்த லிஃப்ட் பயணத்தை இனிமையாக்கின. அவர்கள் இறங்கி போகும்போது,” பாய் ஆன்டீ” என்றான் நிகில். லிஃப்டு கதவை மூடி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

எதனால் போகும்போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை? மிகவும் குதூகலத்துடன் இருக்கிறோமே? ஏன்? அந்த சிறுவனா? இல்லை அவன் தாயா? இல்லை அவன் மழலைப் பேச்சா? என்ன? என்று யோசித்தாள்? விடை தெரிந்தது. அது - சிரிப்பு.


இனி லிஃப்டு பயணங்கள் அந்த பட்டனை நோக்கிய, இறுகிய முகப்பயணங்களாக இருக்காது என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

அவள் வீட்டுக்கதவை திறக்கும்போது தான் அதை உணர்ந்தாள். இப்போது அவள் மனக்கதவும் திறந்து இருந்தது.

Tuesday, April 13, 2010

விக்ருதி ஆண்டு ஸ்பெஷல் - வாழ்த்துக்கள்!

புத்தாண்டு போஸ்டு போடணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.. ஏற்கனவே நான் சங்கல்பிச்சு வெச்சிருந்த குறையொன்றுமில்லை பாட்டை கார்த்திக் புத்தாண்டு போஸ்டுக்கு போட்டுட்டான்.. இனி நான் என்ன பண்ண? இப்படி யோசிச்சுண்டு இருக்கும்போது தான் ரகு மாமா ஒரு ஜாலி ஃபார்வார்டு மெயில் அனுப்பி இருக்கார். சரி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்னு தான் இதையே போஸ்ட்டா போட்டுட்டேன். எல்லாமே செம்ம மொக்கைஸ். மக்களே, எஞ்சாய்!



1) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?



2) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.



3) ஒரு முறை நியூட்டனுக்கு 17 வயதாக இருக்கும்போது, வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு, அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்டபோது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய மனதி'ல் அல்ல" என்றார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....



4) நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....



5) மூன்று புத்தாண்டு மொக்கைகள்: (பாக்கி எல்லாம் எந்த வகைன்னு எல்லாம் கேக்கப்படாது!)



a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்போ, பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா ஸ்டேஜ்லேயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்லே டான்ஸ் ஆட முடியுமா?



6) ஒன்றுமே தெரியாத மாணவன் கிட்டே கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடுமை சார் இது?....(பொற்கொடி, அமைதி அமைதி!)



7) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது....



8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிட்டுதான் கிளம்பணும்...



9) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...

சொல்லட்டுமா?

பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...

ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....



11) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !

அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!





12) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் சிரிச்சுகிட்டு இருக்கீங்க பாருங்க. கை குடுங்க...சூப்பருங்க



13) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.



14) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....



15) தத்துவம் 2010

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


16) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!


17) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாலும்" ஒரே மாதிரி இருக்கா?...........

நெஸ்டு, மீட் பண்றேன்...



எல்லோருக்கும் இனிய விக்ருதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

டிஸ்கி: இன்று இடம் பெறும் சன் டீவீ சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே என் பதிவை படித்துவிட்டு (ரத்தக்கொதிப்பு அதிகரித்து, மண்டை காய்ந்து) கண்டபடி கோபத்துடன் பின்னூட்டினால் அதற்கு கொம்பேனி பொறுப்பேற்காது என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

Thursday, April 8, 2010

மனம் ஒரு குரங்கு 12

புதிதாக ஏஷியானெட் மிடில் ஈஸ்ட் என்ற சானலை துவங்கி இருக்கிறார்கள். அதே மொக்கை நிகழ்ச்சிகள் தான். அதே சூப்பர் சிங்கர், வாக் வித் சுபைதா, 1000 முறை போட்ட திரைப்படங்கள், அடுக்களை. எல்லாம் அதே தான். பின்னே என்ன மிடில் ஈஸ்ட்? முக்கியமான காரணம், விளம்பரதாரர் செளகர்யம் தான். டைடு வாஷிங் பெளடர்,கம்ஃபோர்ட் ஃபேப்ரிக் சாஃப்ட்னர், ஜிஃப் கிரீம், இப்படி எல்லாமே இங்கே உபயோகிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துகிறார்கள். வார இறுதி சினிமா இப்போ சனி ஞாயிறு ஒளிபரப்பபடுகிறது இல்லையா அதே மாதிரி இனிமேல் வெள்ளி சனியாக மாற்றப்படுமாம். புதிதாக கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஸ்டுடியோவில் நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இப்போது zee, சோனி மாதிரி இவர்களும் கிளம்பிவிட்டார்கள். பின்னே, இங்கே இருக்கும் இந்த இக்கானமியை கட்டியதே இவர்கள் தானே.



பழைய அலுவலகத்தில் வேலை செய்யும்போது, என்னிடம் ஒரு அரபி முதியவர் தொலைபேசியில் பேசும்போது, This Economy was built by you people. Indians. If you people hadnt worked so hard, it wouldnt have flourished ன்னு ரொம்ப பெருந்தன்மையோடு வாழ்த்தினார். அப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்மாணித்தவர்கள் இந்த மலையாளிகள். மற்றபடி இந்த மலையாள மிடில் ஈஸ்டு சானலினால் ஒரு உபயோகமும் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை.



நேத்திக்கி லூலு போயிருந்தோம். வழக்கம் போல லூஸுத்தனமா ஷாப்பிங் ஸ்ப்ரீ ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ எண்ணெய் நமக்கு x அளவு ஒரு மாசம் செலவாகும்ன்னு வையுங்களேன், திடீர்ன்னு எல்லாத்தையும் வித்து தீர்க்க, 5X அளவு இவ்ளோ தான்னு ஒரு விலை போடுறாங்க. நேத்திக்கி விலை கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு லாபமும் இல்லை. எல்லாத்துக்கும் மேல ஸ்டோர் பண்றதுக்கு இடமில்லை. 5 மடங்கு வாங்கி எங்கே வைக்கறதாம்? இருக்கற சாமானை வைக்கறதுக்கே கிச்சன்ல இடமில்லை! இந்த அழகுல கன்னா பின்னா ஆஃப்ர்ஸ் வேற! நிறைய நம்மூர்ப்பெண்கள் இந்த ஆஃபர்ஸைப்பார்த்து நின்னு குழம்புவதைப்பாக்கறேன். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். தேவையானதை மட்டும் வாங்குறது தான் புத்திசாலித்தனம். பணத்தைப்போட்டு பல்க்கா ஆஃபரில் சாமான் வாங்குறதுல லாபம் இல்லை. இந்த நாலு வருஷ கல்ஃப் வாழ்க்கையில் ஆஃப்ர் போயிடுமேன்னு நான் நினைச்சப்போ எல்லாம், மறுநாளே வேற ஒரு ஆஃபர் போடுவான். அதான் உண்மை. எப்போ கடைக்கு போனாலும், முதலிலேயே லிஸ்ட் தயார் செஞ்சுண்டு தான் போவேன். இதனால் தேவையில்லாத பல பொருட்கள் வாங்குறதை தவிர்க்கலாமே. இருந்தாலும் பாருங்க, ஒண்ணோ ரெண்டோ எக்ஸ்ட்ரா சாமான் வாங்கிண்டு தான் வருவோம்!



நேத்திக்கி இந்த மாதிரி ஆஃபர்ஸெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வண்டியை திருப்பிண்டு வரும்போது இரு பெண்குழந்தைகள் என்னமோ தமிழில் அவங்கம்மாவை நச்சு பண்ணிண்டு இருந்தது. அவங்கம்மா ஏனோ தெரியல பயங்கர கடுகடுப்பா முகத்தை வெச்சுண்டு இருந்தாங்க நாங்க பில்லிங் முடிச்சுட்டு வெளீல வந்தப்போ அந்த பெண் குழந்தையின் பேச்சு என் காதுல விழுந்தது!” என்னிக்காவது ஒரு நாள் சோளம் சாப்பிடலாமாப்பா?” ஆம் அந்த மலேஷியன் கார்ன் கடை இப்பொ புதுசா திறந்திருக்காங்க. (Small Cup-6 Dhms, Medium-10, Large-12) பெரியவங்களுக்கே அந்த வாசனைக்கு வாங்கி சாப்பிடலாம்ன்னு தான் தோணும். சின்ன குழந்தை தானே. அது பல வாட்டி கேட்டு இருக்கு. அவங்கப்பா முடியாதுன்னு சொல்லிட்டார் போல இருக்கு. அதுக்குத்தான் அந்த குழந்தை அந்த மாதிரி சொல்லி இருக்கு. இதான் இந்த கல்ஃப் வாழ் இந்தியர்களின் நிதர்சனமான உண்மை நிலை. இந்தியாவில் வாழும் பலரும் வெளிநாட்டில் வசிக்கும்  எல்லோரும் கோடீசுவரர்கள் என்று நினைக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என்ன பாடு என்று. ஏனோ தெரியவில்லை அந்த குழந்தையின் ஏக்கமான குரல் என் காதுகளில் ஒலித்த வண்ணம் இருந்தது. இதை நினைத்துக்கொண்டே காரில் வெளியே வந்த போது டாக்ஸிக்காக அந்த குடும்பம் காத்துக்கொண்டு இருந்தது. ப்ச்.. பாவம். நாமளாவது வாங்கிக்கொடுத்து இருக்கலாமோ?



புதிதாக ஒரு பொருள் லாஞ்சு செய்யும் கம்பெனிக்காரர்கள் ஒரு விளம்பர யுக்தியாக ஒரு காப்ஷன் வைப்பது வழக்கம். Ceat - Born tough, Dinesh - Take the world in your stride, Singer - Home makers for a life time, Onida- Neighbours envy, owners pride, SSI -Think Oracle, Think SSI இப்படி என் நினைவில் பல காப்ஷன்கள் பளிச்சிடுகின்றன. அட்லஸ் ஜூவல்லரி என்ற விளம்பர்த்தில் கடை ஓனர் ஒரு தாத்தா பளபளக்கும் வழுக்கை மண்டையுடன் வந்து ஜனகோடிகளின் விஷ்வஸ்த ஸ்தாபனம் என்று மலையாளத்தில் சொல்வது மிக பிரபலம். ஆச்சா.. இப்போ இந்த காப்ஷன்ங்கறது, அந்த பொருளுக்கு சம்பந்தமுடையதாத்தான் இருக்கணும். இல்லாட்டி படா டமாசா போயிடும். இங்கே இயங்கும் ஒரு பிரபல வங்கியின் காப்ஷனான Where the world Comes to bank என்பதை சற்றே மாற்றி அமைத்து, லூலூ,  Where the world comes to shopன்னு வெச்சுண்டாங்க. தப்பில்லை.இருந்துட்டு போகட்டும். ஃபாத்திமா சூப்பர்மார்கெட்டின் சமீபத்திய புதிய காப்ஷன் இது. Achieve, Aspire!  இதுக்கும் சூப்பர் மார்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லவும்.



சமீபமா டீவீயில ஒரு ஆட் வருது. ரொம்ப ரசனையா இருந்தது. ஒரு பாட்டி தன் கண்வரை ஏதோ கேலி செய்வதற்கு ஒரு பாட்டு பாடி டான்ஸ் ஆட, பேரன் குட்டிப்பையன் பார்த்துடுறான். பாட்டியை அந்த பாட்டை வெச்சே ஓட்டி, ஓட்டி ஐஸ்கிரீம், சாக்லேட்டு போல, எல்லா காரியமும் சாதிச்சுக்கறான். கடைசில அந்த வீட்டில எல்லோருக்கும் அந்த பாட்டைப்பத்தியும் இந்த பாட்டியைப்பத்தியும் தெரிஞ்சிருக்கு பல்பு வாங்குற அந்த பாட்டி, அந்த பேரனுக்கு லஞ்சம் தர்றதை நிறுத்திடுறாங்க. நிரந்தரமாக வருமானம் தருவது மாதிரி கான்செப்டுக்காக Metlife Insuranceசின் விளம்பர யுக்தி எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது!



இவரோடு வாக்கிங் போனால் ஒரு தொல்லை பாருங்கள், கார்களுக்கு நடுவில் தான் நடந்து போவார். முன்னும் பின்னும் வண்டிகள் பார்க்கிங் தேடிக்கொண்டு இருக்கும். எனக்கென்னமோ விசாலமான நடைபாதை இருக்கும்போது எதுக்கு கீழே இடுக்கில் நடக்க வேண்டும் என்று தோன்றும். ஜம்போ சிக்னலில் ரோட்டை கடந்து,  முரூர் ரோடில் நடக்க ஆரம்பித்தோம். வழக்கம் போல இவர் நடைபாதையில் இருந்து இறங்கி கார்களுக்கு இடையில் நடக்க ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது. ”அது ஏன்னா அப்படி பண்றேள்? உங்களுக்கு ஏதோ சுகக்கேடு (வியாதி) இருக்கு. சினிமாவில் வரும் லாலாலா பாட்டை ஃபார்வார்டு பண்ணுங்கோன்னா பல்லவி முடிஞ்சு சரணத்தின் முதல் வரியில் நிறுத்திடுறேள். எவ்வளவு மோசமாக அந்த பாட்டு இருந்தாலும் பல்லவிக்கு அப்புறம் ஃபார்வார்டு மட்டும் பண்ண மாட்டேள். கொஞ்சம் கொஞ்சமா க்ளாக்வைஸ் ஒவ்வொரு டிகிரியா ஸ்க்ரூ டைட் பண்ற மாதிரி ஏதாவது குளிகை கிடைச்சா உங்களுக்கு வாங்கிக்குடுக்கணும்" என்றேன். ஒரு வினாடிக்குள் வந்தது பதில்!" எனக்காவது பரவாயில்லைம்மா, குளிகை கழிச்சா போறும், சிலவேருக்கு ஷாக் ட்ரீட்மெண்டு குடுக்க வேண்டி இருக்கு." என்று திருட்டு முழியுடன் தெரிவித்துவிட்டு, பார்க்கிங் லாட் கார்களுக்கிடையில் சிதறி ஓடினார்!

Tuesday, April 6, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்


ஹைதராபாத்தில் நாங்கள் குடிபோன போது நாராயண்கூடாவில் வீடு கொடுத்திருந்தார்கள். உயரமான காம்பவுண்டுள்ள வீட்டில் ஃப்ர்ஸ்டு ஃப்ளோரில் எங்கள் அபார்ட்டுமெண்டு. மெஸனைன் ஃப்ளோரில் ஒரு ஸ்டுடியோ ஃப்ளாட் இருந்தது. கீழே வசித்த வீட்டுக்கார பாட்டி, கண்களை உருட்டியபடியே அந்த ஸ்டுடியோ ஃப்ளாட்டில் டீவீ நடிகை ஒருவர் வசிப்பதாக கூறினார். ’வென்னெலவேடா’ என்ற ஆந்திர தூர்தர்ஷனில் இடம் பெறும் தொடரில் நடிப்பதாகவும் கூறினார். பொதுவாக அந்த காம்பவுண்டுக்காரர்கள் யாரும் அந்த பெண்ணிடம் பழகுவதாக தெரியவில்லை.எனக்கென்னமோ பயங்கர குஷி! அதெப்படி டீவீயில் வரும் பெண்ணை கண்டு கொள்ளாமல் இருப்பது?



அந்த பெண்ணை நேரில் பார்த்த போது பயங்கர குதூகலம்! அவர் பெயர் ப்ருந்தா என்றார். மிக எளிமையானவராய் தென்பட்டார். யாரும் பேசாத அந்த காம்பவுண்டில் ஒரு குடும்பம் நம்மிடம் பழகுகிறதே என்று மகிழ்ச்சி கொண்டவராய் தென்பட்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவருடன் நட்பு வளர்ந்தது. அவுட்டோர் ஷூட்டிங் போய்விட்டு வந்தால் அம்மா அவரை, பரிவுடன் விசாரிப்பார். அவருக்கு சாய் என்று ஒரு மகன். கணவரை பிரிந்து வாழ்ந்தார். எங்கள் இருவரையும் கண்டால் கொள்ளை பிரியம் அவருக்கு. விஜ்ஜீ, ஜோதீ என்று ஆசையுடன் விளிப்பார். அவர் அக்கா குழந்தைகள் பெயர்கள் அவை. நாங்கள் இருவரும் அவர்கள் இருவர் மாதிரியே இருப்பதால் அப்படி கூப்பிடுகிறாராம். பூஜா ஹாலிடேஸில் அவர்கள் சென்னையிலிருந்து வந்த போது சந்தித்தோம். எங்கள் இருவருக்கும் - அவர்கள் இருவருக்கும், நாங்கள் பெண் குழந்தைகள் என்பதைத்தவிர வேறு ஒரு ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை!

ப்ருந்தா ஆன்ட்டி, எங்கள் குடும்பத்துடன் இப்படி நட்பு பாராட்டி வந்தார். தமது நாடக வாய்ப்புகளைப்பற்றி எங்களிடம் விலாவாரியாக டிஸ்கஸ் செய்வார். ரொம்ப தூரம் அவுட்டோர் எல்லாம் போக மாட்டார். சாயி படிப்பு பாதிக்கும் என்று அவருக்கு கவலை. எங்களை ஒரு வாட்டி அவுட்டோர் கூட்டிக்கொண்டு போகிறேன் காலை போய்விட்டு மாலை வந்து விடலாம் என்று கெஞ்சி கூட்டிக்கொண்டு போனார். நானும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணித்தான் போனேன் என்று சொல்லித்தெரிய வேண்டாமே! நிறைய குணச்சித்திர நடிகர்களை பார்த்தோம். முக்கியமாக நினைவில் நின்றவர் ராள்ளபள்ளி என்ற நடிகர். இவர் பம்பாயில் அரவாணியாக நடித்தார். பேசும் படத்தில் பிச்சைக்காரனாக நடித்தவரையும் பார்த்து பேசினோம். எப்பேர்ப்பட்ட கலைஞர்கள். எல்லோருக்கும் நன்கு தமிழ் தெரிந்தது. அவர்கள் எல்லோருமே சென்னையில் தான் வசிப்பதாக தெரிவித்தார்கள். ஏதோ ஒரு ஷாட், கூட்டமாக நிற்க வேண்டும் என்று எங்கள் இருவரையும் நிற்க வைத்தார்கள். மறு வாரம் அந்த எபிசோடு டீவீயில் வந்தது. இதைப்பார்த்த நைனா, ”இவங்க ரெண்டு பேரும் டீவீ ட்ராமாவுல ஆக்டு பண்ணிட்டு வந்துட்டாங்க” என்று யாரிடமோ பீத்தினார்!!!

ப்ருந்தா ஆன்ட்டியுடன் நாட்கள் இனிதே கழிந்தன. அவருடன், கோட்டீ என்ற கடைத்தெருவில் ஷாப்பிங் சென்றோம். ”அஹா நா பெள்ளண்டா” என்ற அருமையான காமெடி படத்துக்கு போய் இருந்தோம். ப்ருந்தா ஆன்ட்டிக்கு நம்மூர் பாக்கியராஜ், பாண்டிய ராஜன் என்றால் ரொம்ப பிடிக்கும். இருவரின் திருட்டு முழிதான் காரணம் என்று சொல்லி சிரிப்பார். சிக்கட்பள்ளி, ஓடியன்-சுதர்ஷன் தியேட்டரில் ’எங்க சின்ன ராஜா’ என்ற பாக்கியராஜ் படத்தின் தெலுங்கு டப்பிங் வந்திருந்தது. அவருடன் அந்த படம் போய் பார்த்தோம். ரவீந்திர பாரதியில் நடந்த மிகப்பெரிய கலை விழாவில் அவர் நடனம் ஆட, அதைக்காண எங்களுக்கு ஸ்பெஷல் டிக்கெட் ஏற்பாடு பண்ணி இருந்தார்.
ஷூட்டிங்கிலிருந்து களைத்து வரும் ப்ருந்தா ஆன்ட்டிக்கு அம்மா சமைத்து தருவார். மிகவும் பிரியமாக பேசியதால் இவர்கள் இருவரிடையே மிக ஆரோக்கியமான நட்பு இருந்தது..

எங்கள் காம்பவுண்டில் கீழ் வீட்டில் லக்ஷ்மி என்று ஒரு பெண் 8வது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். அந்தப்பெண் வேறு பள்ளியில் படித்ததால் அவளுடன் எங்கள் இருவருக்கும், அவ்வளவாக பழக்கம் இல்லை . எங்கள் பக்கத்து ஃப்ளாட்டில் வசித்த ஹரிதா அமிதா என்ற இருவருடன் மட்டும் நல்ல நட்புடன் இருந்தோம்.

திடீரென்று ஒரு நாள் அந்த லக்ஷ்மி என்ற பெண்னைக்காணோம்! அவர்கள் வீட்டார் அலறிப்புடைத்துக்கொண்டு, போலீஸில் புகார் கொடுத்து, வீட்டிற்கு போலீஸ் வந்தது. எனக்கு ஒரே ஆச்சிர்யம். எப்படி தொலைந்து போனாள்? பெரிய பள்ளியில் படித்தாள். ஸ்கூல் பஸ் இருந்தது. அப்படி இருக்கும்போது எப்படி காணாமல் போனாள் என்று எல்லோருக்கும் ஒரே குழப்பம். போலீஸ் அவள் பெற்றோரிடம்,”உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா?” என்று கேட்க, கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் அவர்கள் ப்ருந்தா ஆன்ட்டியை சுட்டி இருக்கிறார்கள். போலீஸூம் கடமையைச்செய்ய, ஆன்ட்டியை கேள்வி மேல் கேள்விகள் கேட்க, கை கால் வெலவெலத்து விட்டது அவருக்கு. அவளை கடத்தி இருக்கிறீர்கள், எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்? எவ்வளவு கேட்க திட்டம் போன்ற கேள்வி அம்புகளால் காயப்படுத்தி இருக்கிறார்கள்!

பாவம் ஆன்ட்டி . நிராதரவான ஒரு பெண். கணவனை பிரிந்து வாழும் கிட்டத்தெட்ட ஒரு அபலைப்பெண், தன் சம்பாத்தியத்தைக்கொண்டு தன் மகனை படிக்க வைக்கும் ஒரு தாய், ஹைதராபாத்தின் வெப்பத்தையும் பொருட்படுத்தாது கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மீது தாருமாறாக இப்படி ஒரு பழி!

ப்ருந்தா ஆன்ட்டி அம்மாவிடம் அழுதார். மிகவும் வருத்தப்பட்டார். அப்போது தூர்தர்ஷனில் வந்து கொண்டிருந்த தெனாலிராமன் என்ற சீரியலில் நடித்த மிகப்பிரபலமான நடிகர் அஷோக்குமார் எங்கள் வீட்டில் வந்து அம்மாவிடம் பேசினார். அவருக்கு சப்போர்டாக அவர்கள் நடிகர் சங்கம் வேண்டிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

மூன்று நாட்களில் அந்தப்பெண் கிடைத்தாள். ”எங்கே போயிருந்தாளாம்? கடத்தப்பட்டாளா? எப்படி கிடைத்தாள்? என்ன விஷயம்?” என்று காம்பவுண்டுக்குள் ஒரே சலசலப்பு.உண்மை என்னவென்றால், அந்தப்பெண் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் தன் அபிமான நட்சத்திரமான கிருஷ்ணாவை சந்திக்க சென்னை செல்லும் ரயிலில் ஏறி இருக்கிறாள். எப்படியோ போலீஸின் கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கிறாள்! என்ன ஒரு துணிச்சல் அவளுக்கு என்று எங்கள் இருவருக்கும் ஒரே ஆச்சர்யம்! நிலமை இப்படி இருக்க அனாவஸ்யமாக ப்ருந்தா ஆன்ட்டியை எதுக்கு இதில் வம்புக்கு இழுக்க வேண்டும்? என்று ஒரே கோபம். என்ன தான் இருந்தாலும் அவருக்கு என்மேலும் எனக்கு அவர் மேலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம் இருந்தது!

”ஒரு பெண் தானே, அதுவும் ஒரு டீ வீ நடிகை தானே?” என்று துச்சமாக நினைத்து, அவர்களும் ப்ருந்தா ஆன்ட்டியிடம் மன்னிப்பு எதுவும் கேட்டதாக தெரியவில்லை! எவ்வளவு நெஞ்சுறத்துடன் தூஷணை செய்தார்கள்? ஒரு நிமிஷத்தில் போட்டார்களே அபாண்டமாக அவர் மீது பழி? அதை சரிசெய்ய முடியவே முடியாது என்றாலும்,  ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்கவில்லையே என்று நினைத்து நினைத்து, இன்று வரை என் மனசு வலிக்கிறது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள்  துபாயில் இருந்த போது சப்தகிரி சானலில் ப்ருந்தா ஆன்ட்டியை பார்த்தேன். வயதான பாட்டி வேடத்தில் தன் பேரனின் மேல் அன்பை பொழிந்து கொண்டிருந்தார். அவசரமாக அம்மாவுக்கு ஃபோன் பண்ணி தெரிவித்துவிட்டு, முழு நாடகமும் பார்த்து முடித்தேன். நிஜமாகவே அந்த கதையில் வரும் பேரனைப்போல் அவரிடம் உண்மையான அன்பைப்பெற்றதால் எனக்கு என்னமோ ஆன்ட்டி நடித்த மாதிரியே தெரியவில்லை! உண்மையாக அவரை பார்த்து நலம் விசாரித்தது போன்ற உணர்வு! அவர் மீது சுமத்தப்பட்ட பழியை நினைத்து மெளனமாக அழுதேன். என் பிரார்த்தனையில் அவர் என்றும் இடம் பெறுவார் என்பது மட்டும் சத்தியமான உண்மை!

Sunday, April 4, 2010

சினிமாப்பக்கம்

இந்த வார இறுதியில் ஏகப்பட்ட படங்கள் பார்த்தோம். ஒரே குழப்பமாக இருக்கு! புதன் இரவே பார்க்க ஆரம்பிச்சுட்டதால, ஓரளவிற்கு கவர் பண்ணிட்டோம்!!! ஹீ ஹீ..

வழக்கம் போல ஒரு சில படங்கள் தான் தேரித்து. அதுல நினைவுல நின்ற படங்கள் இவை.



ஃப்ராஸ்ட் நிக்ஸன்(2008)

இந்த படத்தோட டி.வீ.டீ ரொம்ப நாளா எங்க வீட்டு ட்ராவுல இருந்தது. நான் கூட பேரைப்பார்த்தப்போ ஏதோ கிக் பாக்ஸிங்கு படம் போல இருக்கு.(மைக்டைசன் மாதிரி ஃப்ராஸ்ட் நிக்ஸன்னு பட்டிக்காட்டுத்தனமா நினைச்சுண்டு) மொக்கைன்னு பார்க்காம விட்டுட்டேன். ”இது என் கொலீக்கோட சீ.டீ ரிட்டன் பண்ணனும்”ன்னு இவர் சொல்ற வரைக்கும் அதை தப்பித்தவறி கூட போடலை! படம் ஆரம்பிச்சப்போ தான் தெரிஞ்சது இது ஒரு 1977ன் மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வை வெச்சு எடுக்கப்பட்டதுன்னு. ஆரம்பத்துல நம்ம முதல்வன் கதையோன்னு கொஞ்சம் யோசிக்க வைச்சாலும் போகப்போக படம் சூடு பிடிச்சது. ஆனா க்ளைமாக்ஸுல ரொம்ப சாதாரணமா சொல்லி சப்புன்னு முடிச்சுட்டாப்புல எனக்கு ஒரு ஃபீலிங்கி.

ஒரு ஜனாதிபதி தான் பண்ணிய ஊழலை ஒப்புக்கொள்ளாமல் ஜகா வாங்கிண்டு ராஜினாமா செய்யறார். ஒரு காமடி பீஸாக கருதப்பட்ட டீ.வீ நிருபர் இவரை பேட்டி எடுக்கறதுக்கு 2 மில்லியன் டாலருக்கு 12 எபிசோடுகள் ஒப்புதல் போடுறார். பேட்டியில் ஜனாதிபதி பயங்கர டபுள் கேம் ஆடி, வளவளவென்று பேசிப்பேசியே மரண மொக்கை போட்டு நேரத்தை கடத்துகிறார். ”2 மில்லியன் டாலர்களை முழுங்கி விட்டு, கடைசியில் ஒரு விஷயமும் கிரஹிக்க முடியவில்லையே இந்த மொள்ளமாரியிடம்” என்று ஃப்ராஸ்டு நொந்து போகிற இடம் தூள்! கார்ப்பொரேட் டிப்ளோமசியுடன் (வெளியே சிரிப்பு, உள்ளே கடுப்பு) கூடிய அனல் பறக்கும் வசனங்களுடன் என்ன நடக்கிறது என்பது தான் க்ளைமாக்ஸ்!இந்த படத்தில் முக்கியமானவர்கள் ஜனாதிபதியும் அந்த நிருபரும் தான். இரண்டே நடிகர்களைக்கொண்டு இவ்வளவு விறுவிறுப்பான (நிஜக்)கதை சொன்ன விதத்துக்கு ஒரு ஷொட்டு! ஜனாதிபதி ஜார்ஜ் நிக்ஸனாக நடிச்ச ஃப்ரான்க் லாஞ்செலாவுடன் போட்டி போட்டுக் கொண்டு, பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவிட் ஃப்ராஸ்ட்டாக  மைக்கல் ஷீன் நடிச்சிருக்கிறார். ரொம்ப நேர்த்தியான நடிப்பு. பெரிய அளவில் பேசப்பட்ட படம். நானும் பார்த்தாச்சு.

கேரளா கஃபே:

நாங்க மிடில் ஈஸ்ட் இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவெலுக்கு போனப்போ இந்த படம் ஃபீச்சர்டுன்னு போட்ட ப்ரோஷர் பார்த்ததிலிருந்து, இந்த படத்தை பார்த்துடணும்ன்னு  எனக்கு பயங்கர ஆசை. தியேட்டரில் வந்தப்போ அபுதாபியில் ரிலீஸ் பண்ணலை.எனக்கு ரொம்ப வருத்தம். டாரண்டுல ஐலண்டு எக்ஸ்ப்ரஸ் மட்டும் டவுன்லோடு பண்ணி பார்த்தேன். அப்படி ஒண்ணும் இம்ப்ரெஸிவா இல்லே. உண்மை சொல்லப்போனா, பாதி புரியவே இல்லை. ரொம்ப கவிதை நடை வசனம். பேச்சே கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான்  புரியும், கவிதை நடை வசனங்கள் எல்லாம் புரியறது பிரும்ம ப்ரயத்னமாச்சே. அதுனால சீ டீ வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவது தான் உத்தமம்ன்னு நினைச்சு விட்டாச்சு. படம் பார்த்தப்போ நிச்சியம் ஏமாத்தலைன்னு தோணித்து. இது மாதிரி எல்லாம் தமிழ்ல முயற்சி கூட பண்ண முடியுமான்னு தெரியலை!

10 இயக்குனர்கள், 10 கதைகள். அதுல 7 அருமை! மலையாள திரையின் எல்லா (அ) முக்கால்வாசி நடிக நடிகையர்களை பயன்படுத்தி(மோஹன்லாலைத்தவிர) ஒரு அருமையான கலவை சாதமாக உருவாக்கி இருக்கிறார்கள். பத்துக்கு ஏழு என்பதே இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங்க்.

என் கருத்துப்படி முதல் 7 இடங்கள் தருவது இவற்றுக்கே:



1.தி பிரிட்ஜ் - நெகிழ்ச்சியோ நெகிழ்ச்சி. இந்தக்கதையின் எதிரொலி தான் மனதில் ஓடிண்டே இருக்கு. ஒரு அதிர்வு ஏற்படுத்தித்துன்னு சொன்னா அது மிகையில்லை.

2.புறம் காழ்ச்சகள் - மம்முட்டியின் ஆஹா நடிப்பு

3.மகள்- மனதைத்தொடும் கதை, இயக்குனர் ரேவதிக்கு ஷொட்டு!

4.ஹேப்பி ஜர்னி - ஜொள்ளர் ஸ்பெஷல்

5.அவிராமம்-குடும்ப பிணைப்பின் முக்கியத்துவம்

6.நாஸ்டால்ஜியா - கல்ஃப் மலையாளியின் யதார்த்த முகம்

7.ஐலண்டு எக்ஸ்பிரஸ்-ஹை ஸ்டாண்டர்டு மொழி, கதை ஓக்கே

8.ஆஃப் ஸீஸன்-சுராஜின் கலகலப்பு

9.ம்ருத்யுஞ்சயம்-புரியலை (அ) அப்படி பெருசா என்னை இம்ப்ரெஸ் பண்ணலை! ஹாரராம். சொல்லிட்டு எடுத்தா பரவாயில்லை!

10.லலித ஹிரண்மயம்- இதான் இந்த படத்தின் மொக்கை(யஸ்ட்டு) கதை!

கண்டிப்பாக சப்டைட்டில்ஸுடன் கூடிய டீவீடீ எடுத்துப் பார்க்கவும். ஹைலி ரெக்கமெண்டட்.

வைரம்:

இந்த படம் ஆஹா ஓஹோ என்று சில மாதங்களுக்கு முன் பேசப்பட்டது. ரொம்ப எதிர்ப்பார்ப்புகளுடன் எடுத்துண்டு வந்தோம். அப்படி ஒண்ணும் பெருசா தெரியல. நிறைய நெருடல்கள். கதை ஓரளவுக்கு டீவியில் பார்த்த காட்சிகளிலிருந்து ஊஹிக்க முடிவதா இருந்ததுகூட ஒரு காரணமா இருக்கலாம்.

உண்மைக்கதையை எடுத்ததுக்கு ஒரு பாராட்டு தரலாம்.


பசுபதி தமிழிலேயே பேசி நடிச்சு இருக்கலாம்.” எண்டே மோல்(மோள்)” என்று ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சில் மலையாளம் பேசியே அந்த வைரமணியை கொலை பண்றாரோன்னு எனக்கு டவுட்டு! நடிப்புன்னு பார்த்தா நாம் இதுக்கு முன்னாடியே இதெல்லாம் நாயகன்ல பார்த்தாச்சு. ஒரு டே ஜாவூ எஃபெக்டு. பத்தாக்குறைக்கு நம்ம சுரேஷ் கோபி டயலாக் பேசிப்பேசியே ரவுடிகளை நொறுக்கி எடுக்கும் காட்சிகள்! முடியல. ஓவராக்‌ஷன் கம்மி பண்ணாட்டி சுரேஷ் கோபியின் கரீயர் ஓவர் தான்.. யாராவது சொல்லுங்கப்பா.. எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரி வக்கீல் வேஷம் தான் இவருக்கு. இந்த வாட்டி சம்பந்தமே இல்லாமல் முகேஷ் வருகிறார். ரொம்ப நேரம் வெட்டிப்பேச்சு பேசி கடுப்படிக்கிறார். ஆடியன்ஸ் பதபதைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் சுரேஷ் கோபியும் முகேஷும்,  இவர்கள் பழைய நட்பைப்புதுப்பிக்கும் வசனங்கள் எல்லாம் நற நற டைப்பாக எனக்கு தோன்றியது.

ஷங்கர் மஹாதேவனின் நாட்டு பாட்டு கேட்டோ பாட்டு கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ’காற்றே’ங்கற வரியில ஒரு சாஃப்ட் ’ட’ போட்டு பாடாம,’ நாஞ்சி நாட்டு காட்டே’ன்னு அப்பட்டமா அழுத்திப்பாடி இருக்கறது பயங்கர சொதப்பல். நம்ம தமிழ் மாதிரி இவங்க பேசும் போது தப்பு செய்யறதில்லை. இருந்தாலும் இதை இவங்க அனுமதிச்சது எனக்கு பயங்கர ஆச்சிர்யம்! ரொம்ப ரொம்ப சுமார். ப்ளாட் மட்டும் ஓக்கே. திலகனும் கேபிஏசீ லலிதா நடிப்பும் படா தூள்!

டூப்ளிக்கேட்:

அதே எங்க வீட்டுப்பிள்ளையின் (2009?) ரீமேக். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,.. முடியல! இன்னும் எத்தனை வருஷ காலம் இதே மாதிரி எடுக்க போறாங்க? மலையாள காமெடி நடிகர் சுராஜை இப்படி எல்லாம் நடிக்க வைக்க வேண்டி இருக்கலை. மொக்கை படம். எல்லாத்துக்கும் மேல இந்த படத்தை இங்கே மென்ஷன் பண்ண ஒரு காரணம் இருக்கு. கோடீஸ்வரனான சுராஜின் கார் ஒரு விபத்துக்குள்ளாகுது. அது அப்படியே ஒரு பாலத்திலிருந்து தொபுக்கடீர்ன்னு தண்ணீருக்குள் விழறது! தூரத்துல இருந்து ஒரு வெள்ளைக்கார்ன்னு மட்டும் தெரியுது. இன்னொசெண்டும் இன்னொரு சுராஜும் உதவப்போறாங்க. பக்கத்துல போய் பார்த்தா, கோடீஸ்வரன் ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு அம்பாஸிடர் கார்! என்னால முடியல! என்னதான் லோ பட்ஜட் ஃபில்ம் மேக்கிங் என்றாலும் இப்புடியா? டூமச்! தயவு செஞ்சு இந்த படத்தை அவாய்டு செய்யவும். மெகா மொக்கை!

ஸ்டேட் ஆஃப் ப்ளே:

இந்த படத்த்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு அபிப்ராயமும் இருக்கலை. பார்த்தப்புறம் ரொம்ப பிடிச்சது. ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர்ன்னு சொல்லலாம். ரொம்ப வித்தியாசமா இருந்தது. ரஸல் க்ரோ இருக்கறதுனால இவர் கொண்டு வந்தார். பென் அஃபெலக் என்ற நடிகரின் இறுக்கமான நடிப்பும், ரஸல் க்ரோவின் கண்டுபிடிப்புகளும் படத்தின் க்ரிப்பை அதிகரிக்க வைக்கின்றன.அருமையான திரைக்கதை. சஸ்பென்ஸை ஊஹிக்க முடியவில்லை! நாங்கள் இருவரும் இந்த படத்தை சோஃபா நுனியில் உட்கார்ந்து பார்த்தோம். ஸ்டேட் ஆஃப் ப்ளே ஸ்டேட் ஆஃப் டோட்டல் கேயோஸ் அண்ட் த்ரில்ன்னு சொல்லலாம். கண்டிப்பாக பார்க்கவும்.

Thursday, April 1, 2010

பேன்களும் சில பெண்களும்.

Statutory Warning - இந்த பதிவை படிக்கும்போது தலை அரிப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருப்பதால் முன் ஜாக்கிரதையாக சீப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.


ச்சே என்ன அநன்யா இவ்ளோ டிஸ்கஸ்டிங் டாப்பிக் போய் எடுத்துண்டு இருக்கேன்னு கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். நான் எல்லாம் டிஸ்கஸ்டிங் தான். (இந்த வரியை பின்னூட்டத்தில் quote செய்தால்,  நாஞ்சில், LK போன்றவர்களின் கருத்துக்கள், Unconditional ஆக நிராகரிக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்)பெரிய சோஃபிஸ்ட்டிக்கேட்டட் ஒண்ணும் இல்லை. உள்ளது உள்ளபடி எழுதறேன். (இப்படி ஒரு சீரியஸ் ஸ்டார்ட்டிங் குடுத்தா தானே படிக்க தூண்டும் படி இருக்கும்?)






பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேரும் வரை பேன் என்றால் என்ன என்றே தெரியாது எனக்கு. அடர்த்தியான கூந்தலில்(அட, நிஜமாத்தாங்க) ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு மடித்துக்கட்டிக்கொண்டு கருப்பு ரிப்பனில் 4 இதழுள்ள பூ வருவதுபோல knot போட்டுக்கொள்வேன். பள்ளியில் சேர்ந்த பதினைந்து நாட்களில் பேன் தொல்லை ஆரம்பமாகியது. மெதுவாக பென்சில் பேனா கொண்டு தலையை சொறிந்த நான், நாள் பட, காம்பஸ், டிவைடர் போன்றவற்றால் சொறிய ஆரம்பித்தேன். செல்லவ்வாவிற்கு ஒரே கவலை. கண்ணாடியை போட்டுக்கொண்டு வாசலில் உட்கார வைத்து, வேர்க்க விறுவிறுக்க குனிய வைத்து பேன் பார்ப்பார்.






எந்த விஷயத்திலும் என்னுடன் ஒத்துப்போகாத தங்கைமணி இந்த பேன் பார்க்கும் படலத்துக்கு மட்டும் ஓடி வந்து விடுவாள். எல்லோருக்கும் ஒவ்வொரு வீக்னெஸ் இருப்பது போல இவளுக்கு இந்த பேன் பார்க்கும் வீக்னெஸ். நன்றாக சிக்கு எடுத்து வாரிய பிறகு, ரெண்டு பேன்சீப்பால் ஆல்டர்னேட்டிவ்வாக,  செல்லவ்வா வாருவார்.  அவர், லாவகமாக அழுத்தி பேன் சீப்பை பிரயோகிக்க,தங்கை மணி, அந்த சீப்பை, வாழைப்பழத்தை பிடுங்கும் குரங்கு போல பிடுங்கி, பேன் தேடி சொடுக்குவாள். ஏன் உனக்கு இந்த ரத்த வெறி? என்று கேட்கத்தோன்றும் அளவுக்கு எல்லாப்பேன்களையும் சக்ரவ்யூஹம் அமைத்து கொல்லுவாள். சில பேன்ஸ் குடுகுடு என்று சீப்பின் பல்லிடுக்கில் நுழைந்து மறுபக்கம் ஓடி, தப்பிக்க பார்க்கும். இவளிடமா நடக்கும். ம்ஹூம். விரட்டி விரட்டி சொடுக்குவாள். சீப்பில் சாவட்டை எனப்படும் செத்த ஈர் இருந்தாலும் அதையும் விடாமல் சொடுக்கி பார்த்து பல்பு வாங்குவாள்.


இந்த செல்லவ்வா இருக்காரே, பாவம். ரோடில் ஒரு குறத்தி விடாமல் எல்லோரிடமும் ஒவ்வொரு ஈர்க்கொல்லி எனப்படும் நீண்ட உபகரணத்தை வாங்குவார். இது சரியில்லை, ஈர் வரமாட்டேங்குது என்பார். அந்த குறத்தி இதான் பெஷ்ட்டு என்று விற்று விட்டு போவாள். வீட்டில் மொத்தம் பத்தோ பதினைந்தோ, ஈர்க்கொல்லி இருக்கும். எல்லாவற்றாலும் என் முடியை பிடித்து இழுப்பார். முடி தான் வருமேயோழிய ஈர் பெப்பே காட்டி விடும். ”பாவம் குழந்தை, சதா தலையை அரிச்சுண்டே இருக்கா, அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியறதில்லை” என்பார்..(ஐய்யோ பாவம்! செல்லவ்வா, பேன் தொல்லை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் தான் பத்தாவதில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கி இருப்பேனே, என்னத்த சொல்ல?)






அடுத்ததாக பேன் அத்தியாயத்தில் நாம பார்க்க இருப்பது, எங்க ஸ்கூல் பெண்களை. முதல் முறையா, ஒருத்தி தலையில இருந்து எடுத்த பேனை,  அவள் கையில் கொடுத்தப்போ மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்புறம் தான் தெரிந்தது, யார் தலையில் பேன் இருக்கோ, அவங்க தான் அதை சொடுக்கணும்ன்னு. அதான் பேனுலகின் எழுதி வைக்கப்படாத சட்டம்ன்னு தெரிஞ்சுண்டேன். அந்த பெண்களும் ஏதோ நோபல் பரிசை பெற்ற மாதிரி பெருமையுடன் வாங்கிக்கொள்வார்கள். சில ப்ரும்மஹத்திகள் ஜாமெட்ரி பாக்ஸில் போட்டு பத்திரப்படுத்தும். அப்புறம் சொடுக்குவதற்காம்! முடியல!




இந்த பேன் ஆப்ஸர்வேஷன் இருக்கே ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். நம்ம பெஞ்சுக்கு முன்னாடி உட்காரும் பெண்ணின் பின் தலையை நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தோமானால் சுமார் 30 பேன்கள் வாக்கிங் போய்க்கொண்டு இருக்கும். சிலதுகள், மேலிருந்து உள்ளே டைவ் அடித்துக்கொண்டு இருக்கும். சிலதுகள் மக்குசுப்பன் கணக்காக தேமே என்று ஒரே இடத்தில் இருக்கும். இந்த பெண்ணின் தலையில் இவர் அம்மா அழகாக எண்ணெய் தேய்த்து விட்டு மிகத்துல்லியமாக வகிடு எடுத்து சமமாக பிரித்து ஜடை பின்னி இருப்பார். ஆனால் பாருங்கள், இரு புறமும் நரைத்த முடியோ என்று பதறும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் சாவட்டை ஈர்களைப்பற்றி கவலையே பட்டிருக்க மாட்டார். இந்த சாவட்டை ஈர்கள் இரு புறமும் எழுந்து நின்று சல்யூட் அடிக்க, வகிட்டின் நடுவில் இருந்து பேன்கள் மார்ச்பாஸ்ட் பண்ணிண்டு இருக்கும்கள். வயல் வரப்பின் நடுவில் பாத்தி கட்டி இருப்பார்களே அதே மாதிரி வகிட்டில் நடந்து போய்க்கொண்டு இருக்கும். சில பேன்ஸ் பின்னங்கழுத்தில் குடி கொண்டு இருக்கும். சிலது காதுகளின் பின்னாடி தஞ்சம் புகும்.






சில தில்லாலங்கிடிகள், பேன்ஸை தன் தலையில் தடவித்தடவியே பிடித்துவிடுவது வழக்கம்! அவர்களுக்கெல்லாம் சிலை வைக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சில குரூர பெண்கள் பிடித்துத்தரும் பேன்ஸை அவர்களுக்கு பிடிக்காத எதிரி பெண்களின் தலை மேல் போட்டு விட்டு வருவார்கள்! ராட்சஸிகள்.






ரொம்ப ப்ரயத்னம் பண்ணி வசம்பு தேய்த்து, வேப்பெண்ணை தேய்த்து, புஸ்தகத்தில் வரும் (ஏடாகூட) டிப்ஸ் எல்லாம் படித்து தலைகீழே நின்று பார்த்தாச்சு. பேன் தொல்லை ஒழியவில்லை. கென்ஸ் வாங்கிண்டு வா என்று என்னைத்தான் கேசவ முதலியார் கடைக்கு அனுப்பினார்கள். அவரும் தலை சொறிந்துகொண்டே எடுத்துக்கொடுத்த கென்ஸை என் தலை பேன்ஸ் தம் ப்ருஷ்ட பாகத்தால் சிரித்தே விரட்டின. கென்ஸும் என்னிடம் படுதோல்வி அடைந்தது. அப்போ தான் மார்க்கெட்டில் மெடிக்கர் வந்தது. ஒரு 30 வாட்டி தலை அலசியதலாலும், செல்லவ்வாவின் கடின உழைப்பாலும்  தலையில் அரிப்பு குறைந்தது. மெதுவாக பேன் தொல்லை ஒழிந்தது.






சரி இப்போ எதுக்கு பேன் பத்தின பதிவுன்னு தானே கேக்கறீங்க? எல்லாரும் ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம்ன்னு ஏடாகூட பதிவு போடுறாங்க. நான் ஒரு சின்ன விஷயம் சொல்றதுக்கு தான் இவ்ளோ பெரிய முன்னோட்டம்.


இரண்டாவது பத்தியில் தங்கை மணியை பத்தி சொன்னேன் இல்லையா? இதே மாதிரி ஏப்ரல் 1, 1989 என்று நினைக்கிறேன். லீவு விட்டு இருந்தார்கள். வீட்டில் என்ன செயவதென்று தெரியாமல் இருந்த போது தனது அசகாய திறமையினால் என்னை சுமார் 25 வாட்டி முட்டாளாக்கிய தங்கை மணி என்னிடம் ஒரு முறை கூட முட்டாளாகவில்லை. எனக்கு ரொம்ப மூட் அவுட். அதென்ன நாம் மட்டும் ஆவது இவள் தப்பிப்பது என்று தீவிரமாக யோசித்த நான், அவளை லாவகமாக முட்டாளாக்கும் முயற்சி தொடங்கினேன். கொஞ்ச நேரம் தலையை தடவுவது போல பாவலா செய்து கொண்டிருந்தேன். த.ம நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தாள். மெதுவாக ஆக்டு கொடுத்தேன். “அம்மா, அம்மா, நான் ஒரு பேனை பிடிச்சு இருக்கேன். கொழு கொழு பேன், நீங்க எடுத்துருவீங்களாம்மா? விட்ற மாடீங்களே?” என்று பில்டப்பு எல்லாப் பலம்மாக டெவலப் செய்தேன். ஸ்லோ மோஷனில், தங்கை மணி ஓடி வந்து என் தலையை தாக்கினாள். நானும் ஸ்லோ மோஷனில் என் கையை எடுக்க, பேன்......... காயப், ஹோத்தோ, போயிந்தே, போயேபோச்சு, சோலெகாச்சே, இட்ஸ் கான்! ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்...
Related Posts with Thumbnails