Pages

Showing posts with label Manam oru Kurangu. Show all posts
Showing posts with label Manam oru Kurangu. Show all posts

Thursday, April 8, 2010

மனம் ஒரு குரங்கு 12

புதிதாக ஏஷியானெட் மிடில் ஈஸ்ட் என்ற சானலை துவங்கி இருக்கிறார்கள். அதே மொக்கை நிகழ்ச்சிகள் தான். அதே சூப்பர் சிங்கர், வாக் வித் சுபைதா, 1000 முறை போட்ட திரைப்படங்கள், அடுக்களை. எல்லாம் அதே தான். பின்னே என்ன மிடில் ஈஸ்ட்? முக்கியமான காரணம், விளம்பரதாரர் செளகர்யம் தான். டைடு வாஷிங் பெளடர்,கம்ஃபோர்ட் ஃபேப்ரிக் சாஃப்ட்னர், ஜிஃப் கிரீம், இப்படி எல்லாமே இங்கே உபயோகிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துகிறார்கள். வார இறுதி சினிமா இப்போ சனி ஞாயிறு ஒளிபரப்பபடுகிறது இல்லையா அதே மாதிரி இனிமேல் வெள்ளி சனியாக மாற்றப்படுமாம். புதிதாக கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஸ்டுடியோவில் நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இப்போது zee, சோனி மாதிரி இவர்களும் கிளம்பிவிட்டார்கள். பின்னே, இங்கே இருக்கும் இந்த இக்கானமியை கட்டியதே இவர்கள் தானே.



பழைய அலுவலகத்தில் வேலை செய்யும்போது, என்னிடம் ஒரு அரபி முதியவர் தொலைபேசியில் பேசும்போது, This Economy was built by you people. Indians. If you people hadnt worked so hard, it wouldnt have flourished ன்னு ரொம்ப பெருந்தன்மையோடு வாழ்த்தினார். அப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்மாணித்தவர்கள் இந்த மலையாளிகள். மற்றபடி இந்த மலையாள மிடில் ஈஸ்டு சானலினால் ஒரு உபயோகமும் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை.



நேத்திக்கி லூலு போயிருந்தோம். வழக்கம் போல லூஸுத்தனமா ஷாப்பிங் ஸ்ப்ரீ ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ எண்ணெய் நமக்கு x அளவு ஒரு மாசம் செலவாகும்ன்னு வையுங்களேன், திடீர்ன்னு எல்லாத்தையும் வித்து தீர்க்க, 5X அளவு இவ்ளோ தான்னு ஒரு விலை போடுறாங்க. நேத்திக்கி விலை கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு லாபமும் இல்லை. எல்லாத்துக்கும் மேல ஸ்டோர் பண்றதுக்கு இடமில்லை. 5 மடங்கு வாங்கி எங்கே வைக்கறதாம்? இருக்கற சாமானை வைக்கறதுக்கே கிச்சன்ல இடமில்லை! இந்த அழகுல கன்னா பின்னா ஆஃப்ர்ஸ் வேற! நிறைய நம்மூர்ப்பெண்கள் இந்த ஆஃபர்ஸைப்பார்த்து நின்னு குழம்புவதைப்பாக்கறேன். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். தேவையானதை மட்டும் வாங்குறது தான் புத்திசாலித்தனம். பணத்தைப்போட்டு பல்க்கா ஆஃபரில் சாமான் வாங்குறதுல லாபம் இல்லை. இந்த நாலு வருஷ கல்ஃப் வாழ்க்கையில் ஆஃப்ர் போயிடுமேன்னு நான் நினைச்சப்போ எல்லாம், மறுநாளே வேற ஒரு ஆஃபர் போடுவான். அதான் உண்மை. எப்போ கடைக்கு போனாலும், முதலிலேயே லிஸ்ட் தயார் செஞ்சுண்டு தான் போவேன். இதனால் தேவையில்லாத பல பொருட்கள் வாங்குறதை தவிர்க்கலாமே. இருந்தாலும் பாருங்க, ஒண்ணோ ரெண்டோ எக்ஸ்ட்ரா சாமான் வாங்கிண்டு தான் வருவோம்!



நேத்திக்கி இந்த மாதிரி ஆஃபர்ஸெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வண்டியை திருப்பிண்டு வரும்போது இரு பெண்குழந்தைகள் என்னமோ தமிழில் அவங்கம்மாவை நச்சு பண்ணிண்டு இருந்தது. அவங்கம்மா ஏனோ தெரியல பயங்கர கடுகடுப்பா முகத்தை வெச்சுண்டு இருந்தாங்க நாங்க பில்லிங் முடிச்சுட்டு வெளீல வந்தப்போ அந்த பெண் குழந்தையின் பேச்சு என் காதுல விழுந்தது!” என்னிக்காவது ஒரு நாள் சோளம் சாப்பிடலாமாப்பா?” ஆம் அந்த மலேஷியன் கார்ன் கடை இப்பொ புதுசா திறந்திருக்காங்க. (Small Cup-6 Dhms, Medium-10, Large-12) பெரியவங்களுக்கே அந்த வாசனைக்கு வாங்கி சாப்பிடலாம்ன்னு தான் தோணும். சின்ன குழந்தை தானே. அது பல வாட்டி கேட்டு இருக்கு. அவங்கப்பா முடியாதுன்னு சொல்லிட்டார் போல இருக்கு. அதுக்குத்தான் அந்த குழந்தை அந்த மாதிரி சொல்லி இருக்கு. இதான் இந்த கல்ஃப் வாழ் இந்தியர்களின் நிதர்சனமான உண்மை நிலை. இந்தியாவில் வாழும் பலரும் வெளிநாட்டில் வசிக்கும்  எல்லோரும் கோடீசுவரர்கள் என்று நினைக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என்ன பாடு என்று. ஏனோ தெரியவில்லை அந்த குழந்தையின் ஏக்கமான குரல் என் காதுகளில் ஒலித்த வண்ணம் இருந்தது. இதை நினைத்துக்கொண்டே காரில் வெளியே வந்த போது டாக்ஸிக்காக அந்த குடும்பம் காத்துக்கொண்டு இருந்தது. ப்ச்.. பாவம். நாமளாவது வாங்கிக்கொடுத்து இருக்கலாமோ?



புதிதாக ஒரு பொருள் லாஞ்சு செய்யும் கம்பெனிக்காரர்கள் ஒரு விளம்பர யுக்தியாக ஒரு காப்ஷன் வைப்பது வழக்கம். Ceat - Born tough, Dinesh - Take the world in your stride, Singer - Home makers for a life time, Onida- Neighbours envy, owners pride, SSI -Think Oracle, Think SSI இப்படி என் நினைவில் பல காப்ஷன்கள் பளிச்சிடுகின்றன. அட்லஸ் ஜூவல்லரி என்ற விளம்பர்த்தில் கடை ஓனர் ஒரு தாத்தா பளபளக்கும் வழுக்கை மண்டையுடன் வந்து ஜனகோடிகளின் விஷ்வஸ்த ஸ்தாபனம் என்று மலையாளத்தில் சொல்வது மிக பிரபலம். ஆச்சா.. இப்போ இந்த காப்ஷன்ங்கறது, அந்த பொருளுக்கு சம்பந்தமுடையதாத்தான் இருக்கணும். இல்லாட்டி படா டமாசா போயிடும். இங்கே இயங்கும் ஒரு பிரபல வங்கியின் காப்ஷனான Where the world Comes to bank என்பதை சற்றே மாற்றி அமைத்து, லூலூ,  Where the world comes to shopன்னு வெச்சுண்டாங்க. தப்பில்லை.இருந்துட்டு போகட்டும். ஃபாத்திமா சூப்பர்மார்கெட்டின் சமீபத்திய புதிய காப்ஷன் இது. Achieve, Aspire!  இதுக்கும் சூப்பர் மார்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லவும்.



சமீபமா டீவீயில ஒரு ஆட் வருது. ரொம்ப ரசனையா இருந்தது. ஒரு பாட்டி தன் கண்வரை ஏதோ கேலி செய்வதற்கு ஒரு பாட்டு பாடி டான்ஸ் ஆட, பேரன் குட்டிப்பையன் பார்த்துடுறான். பாட்டியை அந்த பாட்டை வெச்சே ஓட்டி, ஓட்டி ஐஸ்கிரீம், சாக்லேட்டு போல, எல்லா காரியமும் சாதிச்சுக்கறான். கடைசில அந்த வீட்டில எல்லோருக்கும் அந்த பாட்டைப்பத்தியும் இந்த பாட்டியைப்பத்தியும் தெரிஞ்சிருக்கு பல்பு வாங்குற அந்த பாட்டி, அந்த பேரனுக்கு லஞ்சம் தர்றதை நிறுத்திடுறாங்க. நிரந்தரமாக வருமானம் தருவது மாதிரி கான்செப்டுக்காக Metlife Insuranceசின் விளம்பர யுக்தி எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது!



இவரோடு வாக்கிங் போனால் ஒரு தொல்லை பாருங்கள், கார்களுக்கு நடுவில் தான் நடந்து போவார். முன்னும் பின்னும் வண்டிகள் பார்க்கிங் தேடிக்கொண்டு இருக்கும். எனக்கென்னமோ விசாலமான நடைபாதை இருக்கும்போது எதுக்கு கீழே இடுக்கில் நடக்க வேண்டும் என்று தோன்றும். ஜம்போ சிக்னலில் ரோட்டை கடந்து,  முரூர் ரோடில் நடக்க ஆரம்பித்தோம். வழக்கம் போல இவர் நடைபாதையில் இருந்து இறங்கி கார்களுக்கு இடையில் நடக்க ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது. ”அது ஏன்னா அப்படி பண்றேள்? உங்களுக்கு ஏதோ சுகக்கேடு (வியாதி) இருக்கு. சினிமாவில் வரும் லாலாலா பாட்டை ஃபார்வார்டு பண்ணுங்கோன்னா பல்லவி முடிஞ்சு சரணத்தின் முதல் வரியில் நிறுத்திடுறேள். எவ்வளவு மோசமாக அந்த பாட்டு இருந்தாலும் பல்லவிக்கு அப்புறம் ஃபார்வார்டு மட்டும் பண்ண மாட்டேள். கொஞ்சம் கொஞ்சமா க்ளாக்வைஸ் ஒவ்வொரு டிகிரியா ஸ்க்ரூ டைட் பண்ற மாதிரி ஏதாவது குளிகை கிடைச்சா உங்களுக்கு வாங்கிக்குடுக்கணும்" என்றேன். ஒரு வினாடிக்குள் வந்தது பதில்!" எனக்காவது பரவாயில்லைம்மா, குளிகை கழிச்சா போறும், சிலவேருக்கு ஷாக் ட்ரீட்மெண்டு குடுக்க வேண்டி இருக்கு." என்று திருட்டு முழியுடன் தெரிவித்துவிட்டு, பார்க்கிங் லாட் கார்களுக்கிடையில் சிதறி ஓடினார்!

Friday, March 5, 2010

மனம் ஒரு குரங்கு 11

மனம் ஒரு குரங்கு வேணும் வேணும்ன்னு கேட்டு கோடானுகோடி ஈமெயில்கள் குவிந்ததினால், (ஹீ ஹீ) இந்த பகுதி இடம் பெறுகிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

போனவாரம் இங்கு நல்ல மழை. அபுதாபியில் மழை வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஆனால் சுதா மன்னி ஃபோனில் பேசியபோது,  ஷார்ஜாவில் பயங்கர வெள்ளம் என்றார். இப்போது மெதுவாக வெயில்காலம் ஆரம்பித்து விட்டது. இப்போ இங்கு ஒரே பொடிக்காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி வானிலையில் வீட்டை பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான். எவ்வளவுதான் கதவு ஜன்னல்களை மூடினாலும் மிக நுண்ணிய மணல் துகள்கள் வீட்டுக்குள் புகுந்து விடும். சதா சர்வ காலமும் மாப்பும் விளக்குமாறும் கையுமாகத்தான் இருக்க வேண்டி இருக்கும்.


நேற்று ரொம்ப நாளைக்கப்புறம் முரூரில் இருக்கும் கார்ரெஃபோர் போய் இருந்தோம். எனக்கென்னமோ கார்ரெஃபோர் அவ்வளவாக பிடிப்பதில்லை. அவ்வப்போது ஒரு சேஞ்சுக்கு வெவ்வேறு கடைகளுக்கு போவது. என்ன தான் ரிசெஷன் இருந்தாலும் கூட்டத்துக்கு குறைவு இருப்பதில்லை. எல்லோருக்கும் பல்க் பயிங்க்(bulk buying) எப்படி சாத்தியப்படுகிறது என்று ஒவ்வொரு முறை இந்த கடைக்கு போகும்போதும் வியக்காமல் இருப்பதில்லை! ஆளுயர ஷாம்பூவை வாங்கிக்கொண்டு போனால் எனக்கெல்லாம் 2 வருடம் வரும்.(இல்லையோ பின்னே, அறுபதடி கூந்தலாச்சே!)அடுத்த வாரமே அடுத்த பாட்டில் வாங்க வந்து விடுகிறார்கள்! இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே! எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை!



போன மாதம் துவரம் பருப்பு விலை கன்னாபின்னா என்று ஏறி விட்டது! முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்டது. இதே துவரம் பருப்பு மற்ற கடைகளில் 9 என்றால் கார்ரெஃபோரில் 9.90!!! டூம்ச்!



காய்கறிகள் எல்லாம் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். அதிலும் நம்மூர் அயிட்டங்கள் எல்லாம் அவ்வளவாக கிடைக்காது. மொத்தத்தில ஐரோப்பியர்கள் தான் அதிகம் இந்த கடையை விரும்புகிறார்கள். ஏஸர் கம்பியூட்டர்ஸில் வேலை பார்த்த போது, ஒரு கஸ்டமர், இந்தக்கடையில் எலக்ட்ரானிக்ஸெல்லாம் பகல் கொள்ளை என்று கூறினார்.சேல்ஸில் கேட்ட பொழுது, மார்ஜின் அவர்கள் அப்படி வைக்கிறார்கள் என்றனர். அதனால் இங்கு வர ஒரு மோட்டிவேஷன் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் வேடிக்கை பார்த்து பொழுது போக மிக நல்ல இடமாக காட்சி அளித்தது.



சில மாதங்களாக காயின் ட்ராலி சிஸ்டம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தி டெர்மினல் என்ற படத்தில் டாம் ஹான்க்ஸ் பண்ணியது போல சில நம்மூர்க்காரர்கள் அந்த ஒரு திராம் காயினுக்காக எங்கேயோ விடப்பட்ட ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வந்து ஸ்டாண்டில் போட்டு ஒரு திராம் எடுத்துக்கொள்கிரார்கள். நம் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் பட்டாணிகள் இதைவிட கெட்டிக்காரர்கள். எதற்கு கொண்டு போய் கடையில் விட வேண்டும்? என்று பேசாமல் கம்பியைப்போட்டு நிமிண்டி, அந்த ஒரு திராம் காயினை சாமர்த்தியமாக அபேஸ் செய்து விடுகிறார்கள்.



போன வாரம் ஈ மசாலாவில் இரவு 8 மணி படத்துக்கு காத்திருந்து பார்த்தபோது ஜிலேபியை பிழிந்து போட்டிருந்தார்கள். துள்ளிக்குதித்துக்கொண்டு ஹையா என்று பார்க்க உட்கார்ந்தேன். சூப்பர் குட் வழங்கும் என்று போட்டவுடன் எனக்கு பொறி தட்டி, சானலை மாற்றி இருந்தால் நான் கெட்டிக்காரி! அதான் இல்லையே... அதன் பிறகு எப்படியோ ஒரு மாதிரி குத்துமதிப்பாக தெலுங்கு எழுத்துக்களை படித்தும் விட்டேன். என்னமோ கோரிண்டாக்கு என்றிருந்தது.. ஆஹா.. கோதாவரி மாதிரி ‘கொம்ப்ப தீஸீ’ சேகர் கம்முல படமா இருக்குமோன்னு ஆசையா உட்கார்ந்தா, நம்ம டாக்குடர் ராஜசேகர் (ஓவரா)நடிச்சிருந்தார். வழக்கம்போல அண்ணா தங்கை பாசம். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் ஏகப்பட்ட மேக்கப்புடன் மெகாசீரியல் டைப்பில் இருந்தார்கள்.  என்னால முடியல. முதல் 15 நிமிடத்துக்குள் ஏகப்பட்ட லாலாலா கோரஸ்கள், கை காலை (புல்லரித்து) பிறாண்டி, ரத்தம் கொட்ட வைத்த செண்டிமெண்டு காட்சிகள்! விக்ரமன் எஸ் ஏ ராஜ்குமார் கூட்டணியா இருக்குமோ என்னமோ.. யப்பா.. கடுப்ஸ் ஆஃப் இண்டியா. இவங்கல்லாம் எப்போ திருந்துவாங்க?



அப்படியே சானலை மாத்தி சோனிக்கு போனோம். தூமகைன் என்று டைட்டில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது. இவர் தன் லாப்டாப்பை முறைத்துப்பார்த்துக்கொண்டே கிருபானந்த வாரியார் மாதிரி குரலை செருமிக்கொண்டு துமகைனுன்னா என்ன? மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன? தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா? வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு. அதெப்படி இன்ஸ்டண்டா இப்படி எல்லம் இவருக்கு தோணுதோ? சூப்பர்!

Wednesday, December 9, 2009

மனம் ஒரு குரங்கு 11

மனம் ஒரு குரங்கு

இந்த வார விடுமுறை மிக சிறப்பாக கழிந்தது.ஷார்ஜாவிலிருந்து கோபால் அண்ணா வந்திருந்தார்.கோபால் அண்ணா மிக சுவையான மனிதர். நிதானமானவர். அமைதியானவர். யோசித்து செயல்படும் திறம் படைத்தவர். தேவை இல்லாமல் யாரைப்பற்றியும் பேச மாட்டதவர். எல்லாவற்றுக்கும் மேலே எளிமையானவர். அவர் வருகிறார் என்றவுடன் எனக்கு ஒரே குதூகலம் தான். அவருக்கு பிடித்த சமையல் பண்ணி வைத்துக்கொண்டு தயாராக இருந்தோம். பர்துபாயில் அய்யப்ப பூஜையாம் அதை முடித்துக்கொண்டு மாலை 6  மணிக்கு வந்தார். சூடான பஜ்ஜி காபியுடன் வரவேற்றோம். மாலை ஆறு மணிக்கு மேல் கார்னிஷ் சென்றோம். புல்வெளியில் உட்கார்ந்து பேசினோம்.நல்ல நேரத்தில் வாண வேடிக்கை ஆரம்பித்தது. Night Photography பற்றி அண்ணா  நிறைய விஷயங்கள் பேசினார். அவருடைய கேமரா லென்ஸ் மிகவும் powerful. Stand எடுத்துக்கொண்டு வராதது எவ்வளவு பெரிய தப்பு என்று அடிக்கடி புலம்பினார்.

கோபால் அண்ணாவிற்கு போட்டோகிராபியைத்தவிர விவசாயம் பிடிக்கும். இதான் சாக்கு என்று அவருக்கு facebookகில் id  ஓபன் பண்ண வைத்து Farmville introduce பண்ணினேன். அண்ணாவிற்கு பயங்கர ஆச்சர்யம். சிறு குழந்தை போல உட்கார்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.  இப்போ எல்லாம் என் அண்டை விவசாயி ஆக இருக்கிறார்.தினமும் எனக்கு பரிசுகள் அனுப்பி, என் வயலை பார்வையிட்டு, உரம் தெளித்துவிட்டு போகிறார். கோபால் அண்ணாவின் மோட்டோ -Slow and Steady wins the race.  நிதானமாக எதையும் செய்வார். அவர் செய்யும் வேலை Perfection உடன் இருக்கும் . அவரை பழக்குவதற்காக என் வயலில் அறுவடை செய்யுமாறு கூறினேன். முறையாக எல்லாம் முடித்த பின்னர் prompt ஆக, "அநன்யா , Harvest எல்லாம் பண்ணியாச்சு கேட்டியா" என்று ரிப்போர்டினார். :)





அநேகமாக சன் சானலை ஸ்கிப் / boycott செய்து விடுவேன் என்று நினைக்கிறேன். எப்போவாவது காட்டப்படும் வடிவேலு கௌண்டமணி காமடி காட்சிகளுக்காக மட்டும் நான் சன் பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் தரம் மகா மட்டமாக போய் விட்டது. ஐந்தாறு மூன்றம் தர நடிகைகளை கொண்டு வந்து ஜட்ஜாக உட்கார வைத்து அவர்களையே அரை குறையாக குத்து நடனம் ஆட விடுகிறார்கள். ஆபாசம் தாங்க முடியவில்லை. வீட்டு வரவேற்பறையில் ஆபாசம் தலைவிரி கோலமாக ஆடுகிறது என்றே சொல்ல வேண்டும்.சென்ற வாரம் இடம் பெற்ற டீலா நோ டீலா நிகழ்ச்சியில் ஒரு பெண்," என் புருஷன் கிட்ட சாந்த்ரோ கார் இருக்கு,  (கிடைத்த gapபில் பீத்தல் வேறு)ஆனா அவருக்கு அதை விட நல்ல கார் வாங்கி குடுக்கணும் அதுனால தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்" என்று கூறி, ஓவென்று ஒப்பாரி வைத்தாள்.அவனவன் அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கி அடித்துகொண்டு இருக்கும்போது,இருப்பதைக்காட்டிலும் பெரிய கார் வாங்க இருப்பதைக்காட்டிலும் பெரிய கார் வேண்டும் என்று எக்குதப்பாக உளறிக்கொட்டி அழும் பெண்களை என்னவென்று சொல்லுவது? இந்த அபத்தத்தை பப்ளிசிட்டி கோசம் program promoவில் போடும் சன் தொலைகாட்சி தான் உருப்படுமா? முன்பெல்லாம் ரியாலிடி ஷோக்களில் இதே போல வேண்டுமென்றே பங்கு கொள்வோரை சண்டை போடும்படி கிளப்பி விட்டு(எல்லாமே சும்மா தான்!!) அதை படம் பிடித்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டார்கள், இப்போது இந்த மாதிரி பேத்தல்களில் இறங்கி இருக்கிறார்கள்.ஒரு மூன்றாண்டுகளுக்கு முன்னர் அரட்டை அரங்கத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ஒரு விளக்கமான மெயில் பார்த்திருக்கிறேன்.அது கூட எல்லாம் செட்டப்பாம்.பங்கு கொள்வோரை எல்லாம், என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்று கூறி விடுவார்களாம். எல்லாம் முன்னரே எழுதப்பட்ட Script டாம். : அந்த மெயில் கிடைத்தால் விரைவில் பதிவு போடுகிறேன். இனி தப்பி தவறி சன் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

சென்ற வாரம் இங்கே அபுதாபியில் இஸ்க்கான் நடத்திய ஸ்ரீமத் பாகவத சப்தாகம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். கண்ணனின் லீலைகளை பல விதமாய் சொன்னார்கள். தொடர்ந்து எல்லா நாளும் செல்ல முடியாவிட்டாலும் அங்கு பார்த்து, கேட்ட ஒரு சில கதைகளின் நிகழ்வுகள் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.கண்ணனின் லீலைகள் தான் எவ்வளவு மதுரம்.திரு ஜகத்சாக்ஷி பிரபுவின் வர்ணனைகளும் அவர் விவரிக்கும் விதமும் நாம் ஏதோ அந்த கதைகள் நடக்கும் இடத்துக்கே சென்று நேரில் பார்ப்பது போன்ற ஒரு பிரமை. Feedback Sesison இல் நான் இதை தெரிவித்தேன் "Though we are physically present in Abudhabi, we are magically transformed to a world of Krisha and we could feel Krishna is all our senses" என்றேன்.  அவர்கள் கூறுவது போல அது ஒரு Nectarian experience. அடுத்த ரெண்டு நாட்களில் வருண் பாப்பவையே ஸ்ரீகிருஷ்ண ஸ்வரூபமாக நினைத்து மகிழ்ந்தேன்.



இஸ்க்கானில் நான் பார்த்த சில சுவையான விஷயங்கள் இதோ

  • ஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையுடன் அழைக்கிறார்கள். ஆண்களை பிரபு என்றும் பெண்களை மாதாஜி என்றும் பரஸ்பரம் அழைத்துக்கொள்கிறார்கள்
  • நம்மை மாதிரி ஹலோ, ஹாய் என்றெல்லாம் வாழ்த்துவதில்லை. ஹரே கிருஷ்ணா என்று தான் கூறி வரவேற்பார்கள்.
  • எல்லோரும் அழகாக மூக்கிலிருந்து ஆரம்பித்து சந்தனத்தில் நாமம் இட்டுக்கொள்கிறார்கள்.
  • ஒவ்வொரு பக்தர் வீட்டிலும் ஒரு மண்டபம் அமைத்து அதில் கண்ணனை படத்திலோ அல்லது சிலை வடிவமாகவோ வைத்து வழிபடுகிறார்கள்.
  • உணவில் பூண்டு வெங்காயம் சேர்ப்பதில்லை.அவ்வாறு சேர்ப்பதால் சாத்வீக வாழ்வில் ஈடுபட முடியாது என்று கூறுகிறார்கள்
  • அப்படி தயாரிக்கப்பட்ட உணவை கண்ணனுக்கு சமர்ப்பிக்காமல் இவர்கள் உண்பதில்லை. சமர்ப்பிக்கும்போது மண்டபத்தில் திரைசீலை போட்டு மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்தே எடுத்து பரிமாறுகிறார்கள்
  • அந்த உணவின் சுவையை நாம் எழுத்து மூலம் விளக்குவது கடினம், உண்டு தான் உணர வேண்டும்
  • எல்லோரும் எந்நேரமும் ஜபமாலையுடன் இருக்கிறார்கள். 
  • என்ன நிகழ்சியாக இருந்தாலும் நம்மை அழைத்து கூறுவார்கள், பாலோ அப் பண்ணி வருமாறு அன்புடன் அழைப்பார்கள். 
  • எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரசாதம் அருந்தி விட்டு தான் போக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள்
  • அவர்கள் பாடும் பஜனைப்பாடல்கள் எல்லாம் தேவகானம் தான். இனிமையான பாடல்களை மெல்லிய ஆட்டத்துடன் இவர்கள் பாடும்போது, மெய்மறந்து போய்விடுவோம். 
ஹரே கிருஷ்ணா.

"இந்த நவரத்தின தைலம் தேய்ச்சுக்காதீங்கோ,தேய்ச்சுக்காதீங்கோன்னு சொன்னா கேக்கறேளா? ,  தலைகாணி எல்லாம் சிவப்பா சாயம் ஒட்டறது" என்றேன் இவரிடம். இவர் சொல்கிறார், "என் தலைகாணியாவது பரவாயில்லை சிவப்பா சாயம் தான் இருக்கு, உன் தலைகாணி பார், ஒரே களிமண் " என்று கூறிவிட்டு ஓடிவிட்டார்..இன்னும் scale லுடன் துரத்திக்கொண்டு இருக்கிறேன் பிடிபட மாட்டேங்கிறார்

Thursday, November 19, 2009

மனம் ஒரு குரங்கு 10

In my last post it was an english heading with a tamil post. I thought this time, let me try a new post with tamil heading and an english post. he he.. No that is not it. The Tamil  transliteration feature of google stopped working for the past one week. I have been trying day in and day out. But it wont work. Hence I decided to write an english post for Manam oru Kurangu part 10.


Drama Dilemma:



Earlier this week, I have been constantly listening  to SVe Shekhar's comedy dramas. I was surprised that for some strange reasons, I seem to be sleeping only upon switching on these dramas. I mean some conversation puts me to sleep. I had been accustomed to these things long back when I was a kid. Mother bought Mahabharathatthil Mangaaatha in 1989 when TV was little dominant. I mean there were only 2 channels and Channel two always broadcasted documentaries sports etc excepting post 10.00PM dramas, songs and cinema shows. We listened to this Mahabharathatthil Mangaatha with great enthusiasm, ever since then, we both became a fan of SveShekhar. He was quick witted and though his dramas were a garland of jokes, we still enjoyed them a lot. As a next step, we were delighted when Bharani Audios in Chrompet Radhanagar had the video cassettes (VHS Versions)of many of Sve Shekhar's Comedy plays. We managed to watch Aayiram udhai vaangiya aburva sigamani, Adhirshtakkaaran, Kaattula Mazhai etc and rejoiced. Infact we hired the same cassettes over and over again especially when we had guests at home. My Chandru Pinny(Dad's youngest brother) was rolling with laughter upon seeing these dramas.Ever since then, we had been listening to all SVe Shekhar's Dramas. We waited eagerly in 1992 for his release of Periya Thambi which I consider as his best so far. It was a total mockery of foolish tamil movies which were super duper hits then. My sister and I enjoyed listening to this drama numerous times.  So, If he is to offer me or my sister a role to play in his play, we dont need any rehearsals you see.. We are all set for the show because we know all the dialogues bye heart!
Now, coming back to my drama addiction before sleeping, I have to necessarily play a drama as I slip into sleep. deeper and deeper as I sink into my sleep, the conversations get fainter and fainter. Sleep is really getting ecstacic but what happened.. suddenly I wake up only to find some song being played . Oh! the drama is over and I get up for some song. Now I have to turn off that song. Wish that drama couldve been longer...
Strange but true. People normally listen to songs and good music before going to bed. But I am addicted in such a way that I wake up upon the starting of a song... Strange but true.


The Galloping Horse :



Mother called ten days ago to say that keeping a Galloping horse would bring good vibes in the house. Though I believe in such vibrations, I find it very hard to convince my husband to buy anything that is artistic in the house. I always felt very conscious when I went to see the other houses in the neighbourhood. We never had any showpiece  at our house. This was an opportunity to convince him and buy a nice horse to decorate our ailing TV Almirah. (this almirah has all the Gods and Goddesses according to the Hindu Mythology). So I set out looking for a galloping horse. To my dismay, wherever I went, it was a big  :-(     NO NO.
I tried in almost all shops far and wide in Abudhabi. They dint have Horses. They had Camels and Elephants  and Monkeys and Birds.. But horses???? Naaaah.. Grrr.... I had to meet a consultant the other day. I returned walking back home due to the non availability of taxis in abudhabi. I found a shop called hyper market in Najda Street. I asked the Philippino sales girl if they have a gallopping horse at their store. She smiled and said Yes. "Turrrrn right and you will find horses there". I did, and what do I see? a huuuuuuge horse gigantically placed on a steel stand. Honestly speaking our little single bedroom apartment cant hold such big statues you know.. he he.. I thanked the girl and left the place quietly.
So I almost gave up the idea of buying a horse. We normally buy all grocery from our nearest supermarket Al falah plaza. We get all glorious Indian vegetables in this store and it is just a few yards away from our building.  So asusual to buy some adhoc veggies we had been to Al Falah Plaza last week. We needed to buy some stationery so had to peep into other segments of the store. There... We were thrilled to see the beautiful white horse galloping . It was not only handy but also very beautiful. We had been looking for this horse all over abudhabi. Phew.! it was so relieving when we instantly bought the horse and decorated it in our almirah. It proudly gallops near our TV. We dont watch TV anymore!


Second CD:



I was standing in Capital Videos Passport Road when a man came to the shop. As he was looking at what movie to take, with lot of grief he said, Kandhasami second CD dint work properly. Lot of disturbance. I couldnt stop laughing. I left the place immediately thinking, "CD work aayittaa mattum...."


Vidiyaa Moonji :





There is this  All in All Azhaguraja in our building. He is a Plumber, Carpenter, Electrician, Painter and what not. He is omnipresent in almost all the houses in our building. I do admire his Multi faceted talents, however, I call him 'Vidiyaa Moonji' because whatever we ask for, he would deny it prima facie. He would right away say "NO, IT CANT BE DONE" even if it is as easy as changing a bulb. Moreover we have to follow up with our Nathur(Watchman of the building) numerous times before having this vidiyaamoonji in our place for fixing the various problems that arise from time to time. Recently I have been chasing him to get our apartment whitewashed. Asusual he is not turning up as promised. Even if he comes, I am confident, he would leave one portion of the house without whitewashing due to some disagreement. He would say, "yahaan paint naheen kar sakte". Most important feature of vidiyamoonji is that he wouldnt drop a smile even after getting twice or thrice the cost of his services.


Joke of the Day:


I had been trying to post this article ever since I posted 'Finding Swapna'. I was all excited that I recieved comments immediately after posting that article. I told my husband, Na, I got three comments within 2 hours of posting finding Swapna. He said without waiting for a moment, So they mustve commented asking you not to write such posts again isnt it? Grrr... nara nara...

Thursday, October 29, 2009

மனம் ஒரு குரங்கு - 8

மனம் ஒரு குரங்கு

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் ..


பாதி காதல் பாட்டு (படம்: மோதி விளையாடு ) எனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் , அதை கேட்கும் பொழுது எனக்கு பழைய indie pop music எல்லாம் நினைவுக்கு வருவதாகவும்  கூறி இருந்தேன் இல்லையா?. நேற்றைக்கு ஒரு மெகா கண்டுபிடிப்பு. அது நான் சொன்ன மாதிரியே Colonial Cousins பேண்டின் ஒரு பழைய tune  reuse தான். Leslie Lewis இசையில் சுனிதா ராவ் பாடிய 'Pari Hoon Main' பாடலின் அச்சு அசலான தமிழ் பதிப்பு தான் இந்த பாம்பே  ஜெயஸ்ரீ  பாடிய 'பாதி  காதல்'  பாட்டு . வழக்கமாக இசைஅமைப்பாளர்கள் மாதிரி ditto வாக reuse பண்ணாமல்   கொஞ்சம் creative ஆக பண்ணி இருக்கிறார்கள். தென்னிந்தியர்கள்  ரசனைக்கேற்ற படி அதை மெருகூட்டி, இங்கே அங்கே கர்நாடக touch ups கொடுத்து ஜெயஸ்ரீ என்ற அருமையான படகியைக்கொண்டு பாட வைத்து இருக்கிறார்கள்.



நிற்க. இந்த 90 களில் வந்த indie pop பாடல்கள் எல்லாம் என்ன கனவா என்று நினைக்கும்படி மாயமாய் மறைந்து விட்டதே? அந்த நாட்கள் திரும்ப கிடைக்கபெருமா என்றெல்லாம் ஏங்கி இருக்கிறேன். தினம் தினம் ஒரு புதிய பாட்டு launch பண்ணுவார்கள்.



 நானும் என் தங்கையும் விடாமல் Mtv Channel V, DD2 பார்ப்போம். Super Hit Muquabla என்ற நிகழ்ச்சியில் இருந்து இந்த trend ஆரம்பம்  ஆயிற்று . இதை பார்த்து சுரேஷ்  பீட்டர்ஸ்  , அனுராதா  ஸ்ரீராம் , தேவன் , பாப்  ஷாலினி ,  யுகேந்திரன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாப் ஆல்பம் தமிழில் ரிலீஸ் செய்தது நினைவிருக்கலாம். இருந்தும் அது எதிர்பார்த்த    அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.




அனைடா, அலிஷா  சினாய் , அனாமிகா , ஸ்வேதா ஷெட்டி , சுனிதா  ராவ் ,ராஜேஷ்வரி, லக்கி  அலி , ஷங்கர்  மகாதேவன் , ரமண  கோகுலா, KK, ஹரிஹரன் , லெஸ்லீ  லூயி, சோனு  நிகம்  ஜோஜோ - : இது போன்ற (முன்பு அறியப்படாத ) பெயர்கள் எல்லாம் எங்களுக்கு பரிச்சயம் ஆயின. தினம் தினம் எதாவது ஒரு புதிய பாடலுக்கு காத்திருப்போம். அம்மா அப்பாவும் கூட விரும்பி பார்க்கும் அளவிற்கு அவற்றில் சில நன்றாக  இருக்கும்.

ஒரு Pop Album Music Video என்பது ஒரு விளம்பரத்தை காட்டிலும் சற்றே நீளமான ஒரு venture ஆகும். அந்த சில நிமிடங்களில் பார்பவர்களை ஈர்க்கும்படி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் almost அனைத்து  டைரக்டர்களும்  தத்தம் கற்பனைத்திறனை நன்கு வெளிப்படுத்தி வெற்றி  பெற்றே  இருந்தனர்  என்பது  என்னுடைய  தாழ்மையான  அபிப்பிராயம் .



 இந்த  பாடல்களில் என்ன விசேஷம் என்றால், எதாவது ஒரு Theme இருக்கும் . பார்ப்பதற்கும் கேட்பதற்கும்  இனிமையாக  இருப்பதோடு , சில  பாடல்கள்  நம்  இதயம்  தொடும்  படி  படம்  எடுத்து  இருப்பார்கள்  . lucky ali யின்  'Anjaane Raahon'  என்ற பாடல்  நம்  கண்களை  குளமாக்கி  விடும் .சில  பாடல்கள்  கிச்சு  கிச்சு  மூட்டும்  படி  இருக்கும். 'Saamne yeh koun aaya'  என்ற பாட்டு Instant Karma என்ற ஆல்பத்தில் இடம் பெற்றது. ஒரு எளிமையான concept ஐ  mid 70s theme கொண்டு  எடுத்து  இருந்தார்கள் .இப்போதுள்ள trend க்கு எல்லாம் முன்னோடியாக இந்த பாட்டை தான் கூற முடியும்.

வித்தியாசமான backdrop பில் படமாக்கப்பட்ட நாட்டுபுற  இசையை  மையமாக  கொண்ட  Euphoria வின் Dhoom Pichak Dhoom பாட்டை மறக்க முடியாது. நல்ல இசை, நல்ல பாடகர்கள், நல்ல லோகேஷன் , நல்ல தீம் இதெல்லாம் இருந்த ஆல்பங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை.

(பின் குறிப்பு : 'ஒஹ் அந்த நாட்கள்' என்று மூக்கை சிந்தி, கர்சீப்பை பிழிபவரா  நீங்கள்? கவலை வேண்டாம் யூ டியூபில் எல்லா பாடல்களும் intact ஆக இருக்கின்றன என்ஜா.........ய்! . ஆனால் அந்த Golden Era மட்டும்  திரும்பி  வரவே  வராது .. )

இந்த சமையல் நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம். எதையும் விடுவதில்லை. புரிகிறதோ புரியவில்லையோ சைவ சாப்பாடு சமைத்து காட்டினால் கட்டாயம் பார்ப்பேன்.

வழக்கமாக நம்மூர் பொதிகை சன் விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் வரும் சமையல்  நிகழ்ச்சிகளில் செய்யும் பதார்த்தத்தை விட அதிகமாக கண்களை கவர்வது செய்பவருடைய கையலங்காரம், மோதிரம்(ங்கள்!!!), வளையல், நெயில் பாலிஷ், மெகந்தி, புடவை, நகைகள், மேக்கப் , உபயோகப்படுத்தபடுகின்ற பாத்திரங்கள், கரண்டிகள், அடுப்பு, blender , Microwave safe dishes போன்ற  விஷயங்களே!


சமீபமாக கைரளியில் ஒளிபரப்பான  சமையல் நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டு இருந்தேன் . Dr லக்ஷ்மி நாயர் என்பவர், ஊர் ஊராக போய் அங்குள்ள சுவைகளை ருசித்து பார்க்கிறார். காரைக்குடி செட்டிநாடு பக்கம் வருவதாக சொன்னவுடன், ஹை என்று பார்க்க ஆரம்பித்தேன். நிஜம்மாகவே சொல்கிறேன், நம்ம வீட்டு சமையலறைக்குள்ளே எட்டிப்பார்த்த மாதிரி இருந்தது அந்த நிகழ்ச்சி. எந்த ஒரு டாம்பீகமும் இல்லாமல் சாதாரணமாக ஒரு நம்மூர் பெண் வெவ்வேறு வண்ணங்களில் புடவையும் ரவிக்கையும் அணிந்து ஒரு குந்துமணி நகை கூட அணியாமல், ஒரு  துளி  talcum powder கூட  போட்டுக்கொள்ளாமல் , வீட்டில்  உபயோகபடுத்துகின்ற மிகச்சாதாரண  பாத்திரங்களில்   விதவிதமாக அருஞ்சுவை உணவு சமைத்து காட்டி அசத்தினார். Dr லக்ஷ்மி சிறு குழந்தையின் ஆர்வத்தோடு அதை உண்டு ரசித்து மகிழ்ந்து பாராட்டினார். சமையல் நிகழ்ச்சின்னா  இப்பிடித்தான் இருக்கணும். பேஷ் பேஷ். Good work guys!.



TV  ரிமோட்டில்  சேனல்களை surf பண்ணிக்கொண்டே  இருந்த  பொழுது  people tv இல break  அடித்து  நின்றேன் . என்  favourite பாடகர் ஷங்கர்  மகாதேவனை ஒருத்தர் பேட்டி கண்டு கொண்டு இருந்தார். நான் பிரேக் அடிக்கத்த சுப லக்னத்தில் பேட்டி முடியபோகிறது என்ற கசப்பான உண்மை தெரிந்தது. ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். Taare Zameen Par என்ற  படத்தில்  இடம்  பெறும்   'Maa' பாடலை  உணர்ச்சிபூர்வமாக  பாடிய  ஷங்கரின்  திறமையை   நான்  பிரமித்த  அதே  நேரம் , பேட்டி எடுப்பவர் அந்த பாடலில் லயித்து ,  வாய்  பிளந்து   'பே ' என்று  பார்த்துக்கொண்டு  இருந்தார் . பாடி  முடித்த  shankar, இவரது  நிலையை  உணர்ந்து , எழுந்து, சுதாரித்து  கொண்டு , கைகொடுத்து , பேட்டியை  நிறைவு   செய்தார் . அப்பொழுதும் பேட்டி எடுப்பவர் புகழ்வதற்கு வார்த்தைளை தேடிக்கொண்டு இருந்தார் Not just breathless, Speechless too .. Kudos Shankar!!!

Monday, October 26, 2009

மனம் ஒரு குரங்கு- 7

மனம் ஒரு குரங்கு- 7


இப்போதெல்லாம் லூலூ சூப்பர் மார்க்கெட்டில் பூங்கொத்துகள் மற்றும் பூச்செடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதோடு, இந்த இறுக்கமான, complex வாழ்க்கையிலும் நம்மையறியாமல் ஒரு இனிமை நுழைந்துவிடும் படியாக இந்த பூக்கள் புன்முருவலிடுகின்றன. அன்று கடைக்கு போவதற்கு முன்னர் ஏதோ சிறிய மனஸ்தாபம் எனக்கும் என் கணவருக்கும். வழக்கமானது தான் என்றாலும் நான் வழக்கத்துக்கு மாறாக முகத்தை உர்ர் என்று வைத்துக்கொண்டு வாராந்திர shopping சென்றேன். கூட அவரும் வந்தார். Khalidiya Mall இல் ஏதோ வேலை இருப்பதால் அங்கே இருக்கும் லூலூ supermarket இலேயே வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவாயிற்று.

கடையில் காய்கறி பக்கம் போனால் அங்கே வண்ணமயமான அழகழகான பூக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. எடுதுப்பார்த்தபொழுது, அவை பூந்தொட்டிகள். தனியாக பூங்கொத்துகளும் வைத்து இருந்தார்கள்.மனதுக்குள் "வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்" என்று முணுமுணுத்துக்கொண்டே அந்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் நின்று கொண்டு இருந்தேன். வேறு என்ன பாட்டு இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து "வசந்தம் தேடி வர வைகை பாடி வர "என்றெல்லாம் பாடிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.. மனசுக்குள்ள தான். (உரக்க வெளியே பாடினா super market இலிருந்து என்னை வெளியேறும்படி மைக் announcement வந்து விடும்.)

என் இறுக்கம் எல்லாம் தளர்ந்து, தானாக என் முகத்தில் புன்னகை வந்து விட்டு இருந்தது. லூசு மாதிரி தனியாக நின்று கொண்டு பூக்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தேன். நான் மட்டும் தான் அப்படியோ என்று நினைத்த பொழுது தான் அக்கம் பக்கம் பார்த்தேன். பூக்களை பார்த்த மற்றவர்களும் அப்படியே நின்று ரசித்துக்கொண்டு இருந்தார்கள். என்ன பண்ணுவது? இங்கே பூக்களை காண்பதரிதாயிற்றே!

கணவர் வேலையை முடித்து கொண்டு வந்தார். எனக்கு அவர் மேல் வருத்தம் இருந்தது போல அவருக்கும் என் மேல் ஏதோ கோபம். (இதை vice versaa வாக நீங்கள் எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல) இறுக்கமான முகத்துடன் வந்தார். இன்னும் காய் வாங்கலையா என்று கேட்டுவிட்டு நான் எதை பார்த்துக்கொண்டு நிற்கிறேன் என்று அவரும் பூக்களை பார்த்தார். நான் எதிர்பார்த்தபடியே அவரும் இறுக்கம் தளர்ந்து பூக்களை ரசித்து "செடி வாங்கலாம்" என்றார். 'ஹய்' என்று சந்தோஷப்பட்டது தான் தாமதம், "அடுத்த மாதம் " என்று அந்த வரியை முடித்தார். அதானே பார்த்தேன்.வாங்கிக்குடுதுட்டாலும் ...

முன்னெல்லாம் கடைகளுக்கு போனால் யாரவது தமிழில் பேசிக்கொண்டால்,"ஹய் தமிழ்" என்று பேபி ஷாலினி போல் மனம் குதூகலிக்கும். குறிப்பாக இந்த ஊருக்கு வந்த புதிதில் கார் ஜன்னல் வெளியில் எல்லாமே 'நம்மூர்காரங்க ' மாதிரி தான் இருப்பார்கள் பட் பேசுவது தான் புரியாது. மலையாளிகள். அதனால் யாரவது தமிழ் பேசினால், நான் மிகவும் மகிழ்ந்து விடுவேன். இப்போ பழகி விட்டது. தமிழ் பேச்சு கேட்டால் ஓகோ, இவர்களும் தமிழ் தான் என்று நினைத்துக்கொண்டு," சூனா பானா, போ போ போய்கிட்டே இரு" என்று போய் விடுகிறேன்.


TR என்றவுடன் எனக்கு என் தம்பி பாலாஜியின் mimicry யும் அவனுடைய high pitch இல் " ஏ டண்டணக்கா டணக்கு நக்கா" உம் தான் நினைவுக்கு வரும் .


அதென்னமோ தெரியவில்லை இந்த விகடனுக்கும் விஜய டிஆருக்கும் ஆகாது போல இருக்கு. சென்ற ஆண்டு டிசம்பரில் புத்தாண்டு இணைப்பில் இப்படி தான் ஒரு பேட்டி பிரசுரத்திருந்தார்கள். இதை படித்த அனைவரும் வாய் விட்டு சிரித்தோம் . அந்த போட்டோ வேறு பயங்கர comedy யாக கிச்சு கிச்சு மூட்டியது . வெகு நேரம் நானும் என் கணவரும் சிரித்ததுமில்லாமல் அதை screenshot எடுத்து ஈ மெயிலில் கூட அனுப்பி நண்பர்களையும் சிரிக்க வைத்து இருக்கிறேன்.

முதலில் அந்த பேட்டி ...கீழே பார்க்கவும் . பின்னர் அடுத்த செய்தி.
**********************************************************************************


' தம்த தகிட... தம்த தகிட... இது நாட்டுச் சரக்கு. அடுத்ததா வெஸ்டர்ன் வேணுமா? தகஜூம் தும்


தும்... த்தாத்தா'' தலைமுடி துள்ள, அறையே அதிரவாயா லேயே வாத்தியம் வாசிக்கிறார் விஜய டி.ஆர். ''சார்.. நான் ஓர் இசைக்கலைஞன் சார். தோல் வாத்தியம் தெரியும்.எனக்குத் தோளே வாத்தியம் சார்!''என்றபடி வலது கையால் இடது தோளை'ரப் ரப்'என்று அறைந்து தாளம் போடுகிறார். மிரட்டலாக ஆரம்பிக்கிறது விஜய டி.ராஜேந்தரின் பேட்டி.


''வந்திருச்சு சார் இடைத் தேர்தல். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சின்னு அத்தனைக்கும் இது டெஸ்ட்டு சார். இந்த ஆட்சி பற்றி மக்கள் மனதில் பலவிதமான குறைபாடுகள் இருக்குன்னு கலைஞர்கிட்ட சொல்லிட்டுதான், மாநில சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவியை ராஜி னாமா
செஞ்சேன். விலையேற்றம், மின்சாரத் தட்டுப் பாடுன்னு மக்கள் சிரமப்படுறாங்க சார். 'இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும் யுத்தம். தமிழன் சிந்தக் கூடாது ரத்தம். அதற்காக நீங்கள் கொடுக்க வேண்டும் சத்தம்'னு இன்னிக்கு வரைக்கும் சத்தம் போட்டுப் பேசிட்டு இருக்கேன். 'பிரணாப் முகர்ஜி இன்னும் ஏன் இலங்கைக்குப் போகலை?'ன்னு கேட்டா,
கலைஞர் பதில் சொல்ல மாட்டேங்குறாரு. தப்பு நடக் கும்போதெல்லாம் தட்டிக் கேட்டுக்கிட்டே இருக்கேன் சார்!'
'''திருமங்கலம் இடைத் தேர்தலில் உங்க கட்சியோட நிலை என்ன?''

''இந்த இடைத் தேர்தலை ஏன் இப்பவெச்சாங்கன்னு கலைஞரே சந்தேகமாக் கேக்குறாரு. 'தேர்தல் முடிவு பாதகமா இருந்துச்சுன்னா, தி.மு.க-வைக் கழட்டிவிட்டுடலாம்'கிறது காங்கிரஸோட கணக்கு.
திருமங்கலத்தில் நான் போட்டிபோடணும்'னு என் கட்சியினர் எழுதினாங்க சுவர் எழுத்து. எனக்குத் தெரிஞ்சிருச்சு தேர்த லோட தலையெழுத்து. அதனால, லட்சியத் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது. திருமங்கலம் தேர்தல்களமா... ரணகளமா..? அங்கு நடக்கப்போவது ஜனநாயகமா... பண நாயகமான்னு மக்கள்தான் பதில் சொல்லணும். நான் ஆன்மிகவாதி. ஜோதிடம் அறிந்தவன். என் ராசி தனுசுல சூரியனும் செவ்வாயும் சேர்ந்து உட்கார்ந்திருக்காங்க. குரு உச்சத்துல இருக்கான். கூடவே, ராகு இருக்குறான். இந்தக் காலத்தை நான் பார்க்கிறேன். என் கண்ணில் ஒரு ரணகளம் தெரியுது!''


''விஜயகாந்த்தோட அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கு?''

''தமிழ்நாட்டுல போண்டா மணி ஓட்டு கேட்டுவந்தாக் கூட கூட்டம் வரும். திருமங்கலத்துல நின்னா, திருப்பு முனையை ஏற்படுத்துவேன்னு தெருமுனையில பேசு றாரே, ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரலை? ஜெயலலிதா, காங்கிரஸ் இவங்களோட கூட்டணிவைக்க ணும்னா, இலங்கைத் தமிழர் பிரச்னையில அடக்கி வாசிக்கணும்னு விவரமா இருக்கார். (பல்லைக் கடித்தபடி விஜயகாந்த் வாய்ஸில் மிமிக்ரி செய்கிறார்.) விஜயகாந்த்துக்கு முன்னாடியே நான் அரசியல் களம் பார்த்தவன் சார். ஆனா, அவ்வளவா விவரம் இல்லாதவன். நான் வேகமான தமிழன். ஆனா, பிழைக்கத் தெரியாத தமிழன். இதுதான் உண்மை!''

''மாறன் - கலைஞர் குடும்ப இணைப்புபற்றி என்ன நினைக்கிறீங்க?''
''தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டபோது,'மதுரையை கண்ணகி எரிச்சதையெல்லாம் மக்கள் பார்க்கலை. ஆனா, இவங்க எரிச்சதை இப்பதான் பாக்குறாங்க'னு விஜயகாந்த் அன்னிக்குக் கொடுத்தாரு பேட்டி.
இன்னிக்கு அவுந்துடுச்சு பாத்தீங்களா, அவரு வேட்டி. நான் அன்னிக்கு ஏதாவது பேட்டி கொடுத்தேனா? கலைஞர் டிவி. ஆரம்பிச்சப்ப, நான் அங்கே போகாம சன் டி.வி-யிலயே அரட்டை அரங்கம் பண்ணுனேன்
எவன் விவரமானவன், எவன் சிந்திக்கத்தெரிஞ்சவன்னு புரியுதா? ராஜேந்தருக்கு இருக்குறது முடி மட்டுமில்ல... மூளை! (தலையைக் கலைக்கிறார்) இவன்கிட்ட இருக்குறது வேகம் மட்டுமில்ல... விவேகம்.என்கிட்டே துடிப்பும் இருக்கு, படிப்பும் இருக்கு. எனக்காகப்பிரசுரிங்க சார். கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும்அடிச்சுப்பாங்க... ஒண்ணா கூடிப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.நீரடிச்சு நீர் விலகாது.கலைஞர் கதை, திரைக்கதை, வசனம்எப்படி வேணும்னாலும் எழுதுவார்னு எனக்குத் தெரியும் சார்!''


''சிம்பு மேல மட்டும்இவ்வளவு சர்ச்சைகள் வருதே?''


''காய்ச்ச மரம் கல்லடி படத்தான் சார் செய்யும். 'இந்தப் பையன் இப்படி வளர்றானே!'னு சிம்பு மேல பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கு எல்லாம்ஆதங்கம் இருக்கு. என் மகனைப் போல ஒரு நல்லவனை நான் இதுவரைக்கும் பார்க்கலை.எவ்வளவோ பெண்களோட பழக வாய்ப்புள்ள
சினிமாஉலகத் துல, காதல் குறித்த ஒரு மென்மையான இதயத்தோடஇருக் கான். சினிமாவுல இருந்துட்டு, என்னை மாதிரியே அவனும் நல்லவனா இருக்குறது பெரிய விஷயம் சார் இப்படி ஒரு மகனைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுறேன் சார்!''


''தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாரா வர்றதுக்கு யாருக்கு வாய்ப்பிருக்கு?''
''சினிமாவுல திறமைசாலி, புத்திசாலி மட்டும் ஜெயிக்க முடியாத பொறுமைசாலியாவும் அதிர்ஷ்டசாலியாவும் இருக்கணும். இவ்வளவு நடிகர்கள் இருக்குற தமிழ் சினிமாவுல ரஜினி - கமல், விஜய் - அஜீத், சிம்பு - தனுஷ்னு 6 பேருக்குத் தான் ரசிகர்கள் இடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒருபையனா வந்து நிக்கிறான் யாரு..அவனைப் பெத்தது இந்த விஜய டி.ஆரு. 'ஐ யம் எ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்'னு 1989-லயே 'சம்சாரம் சங்கீதம்' படத்தில் நான் ஒரு பாட்டு எழுதிட்டேன் சார். எதிர் காலத்துல என் பையன் எப்படி வளர்ந்து வருவான்னு வெயிட் பண்ணிப் பாருங்க . நான் தலைக்கனத்தோட சொல்லலை, தன்னம்பிக்கையின் இலக்கணத்தோடு சொல்றேன்!''


'' 'வீராச்சாமி'க்கு அப்புறம் என்ன படம் பண்றீங்க?''
'' என்னோட அடுத்த படம் 'ஒருதலைக் காதல்'. 1979-ல் 'ஒருதலை ராகம்' எடுத்தேன். 2009-ல் 'ஒருதலைக் காதல்' எடுக்குறேன். இப்போ உள்ள யூத்து களுக்காக இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக் கேன். டப்பாங்குத்துப்
பாட்டுக்களோட இன்னைய டிரெண்டுக்கு இறங்கி அடிக்கப் போறேன்.இதுல ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல? இப்ப உள்ள ஹீரோக்களை என்னை மாதிரி ஆடிப் பாடச் சொல்லுங்க சார். தம் அடிச்சு யாருக்குமே தம் இல்லை.' வீராச்சாமி'யில நானஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க சார். உங்களை மாதிரி சில பேர்தான் 'ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?'ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்) ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக'டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்'னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல... அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!''
***********************************************************************************
இந்த வாரம் ஜூனியர் விகடனில் மசாலா மிக்ஸ்இல் இதே போல இன்னொரு நியூஸ்."லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' குறித்துப் பேச ஆரம்பித்தால் ஏக குஷியாகி விடுகிறார் விஜய டி.ராஜேந்தர். ஒவ்வொரு ஊருக்கும் பிரசாரத்துக்குப் போன சமாச்சாரங்களை எதுகை மோனையோடு தாளம் போட்டபடி சிலாகித்துப் பேசும் விஜய டி.ஆரிடம், 'உங்க கட்சியில சிம்புக்கு என்ன பதவி கொடுக்கப் போறீங்க?'என ஒரு கேள்வி கேட்டு உசுப்பியதுதான் தாமதம்...''அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு.அவரை எதுக்கு இழுக்குறே வம்பு...'என சாமியாடி அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுகிறாராம்"
***************************************************************************

நான் எப்போதும் படிக்கிற விகடன் வாசகர் கருத்து படிக்கும்பொழுது மோகன்என்ற வாசகர் தம் வலைத்தளமுகவரி கொடுத்து நமக்கு ஒரு புதிய TR ஐ அறிமுகப்படுத்தினார். அவரது வலைப்பதிவில்
போய் பார்த்தபோது TR எவ்வளவு எளிமையான இனிமையான மனிதர் என்பது தெரிந்தது.


From now on, I changed my opinion about TR.
http://msams.blogspot.com/2009/10/t.html


சரி சரி எல்லாரும் கண்ணை துடைச்சுக்கோங்க. போறும் sentiment!
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த எஸ் வி சேகர் ஜோக். யாமிருக்க பயமேன் டிராமாவிலிருந்து:


வழக்கமான சண்டை போடும் ஹீரோயினிடம்,


எஸ் வி சேகர் : ஹே நான் இப்போ தானே உன்னை வெளீல பார்த்தேன்?


ஹீரோயின் : என்னை யா?


எஸ் வி சேகர் : ஆமா , அதான் அந்த ட்ரம்மடிச்சிகினு கம்பி மேல போனீங்களே ஓ, அந்த பார்ட்டி நீ இல்லியா?


ஹீரோயின் : ??????????????????#$%#$%#$%#@$%@#$%@#$%#@$%






அதே டிராமாவில் இன்னொரு ஜோக்.


எஸ் வி சேகர்: ஜட்ஜ் மாமா ஜட்ஜ் மாமா


வக்கீல் : என்னய்யா ஜட்ஜ்ஐ போயி மாமாங்க்றியே?


எஸ் வி சேகர்: இல்லேங்க குடும்ப கோர்ட்ன்னு சொன்னாங்க

Saturday, October 24, 2009

மனம் ஒரு குரங்கு-6



மனம் ஒரு குரங்கு-6

ஹப்பா.. இப்போ தான் இங்கே வெய்யில் சற்று குறைந்துள்ளது. இரவில் ஜிலு ஜிலு காற்று வீசுகிறது. இனி வரும் நாட்களில் பகலிலும் காற்று வீசக்கூடும்.. நிம்மதியாக பால்கனி கதவையும் ஜன்னல் கதவையும் திறந்து வைத்துக்கொள்ளலாம். இது தான் இங்கேத்து வசந்த காலம். இந்த பில்டிங்கில் சென்ட்ரல் ஏ சி இருப்பதால் குளிர் காரணமாக எப்போதும் மக்குத்தனமாக இருக்கும். அதுவும் என்னுடைய பரம பாக்கியத்தினால் நாங்கள் வசிக்கும் பிளாட்டில் மட்டும் எ சி யை அட்ஜஸ்ட் பண்ண முடியாது. permanent ஆக 15 டிகிரி தான் . விறைக்கும் குளிரில் fleece blanket போர்த்திக்கொண்டு சுகமாக சோபாவில் சாய்ந்துகொள்ள தான் தோன்றும். வெளியில் அசுரத்தனமாக வெய்யில் அடித்து கொண்டு இருக்கும். நாமோ வீட்டில் குளிருக்கு போர்த்திக்கொண்டு இருப்போம்.. என்ன ஒரு contradiction. இதற்காக கதவை தப்பிதவறி திறந்து வைத்தோம், செத்தோம். வீடே furnace போல ஆகிவிடும்.

இந்த மாதிரி பாலைவன பிரதேசங்களில் வாழ்வதன் பயன்களை யோசித்துபார்த்தேன். வடாம் வத்தல் அரிசி அப்பளம் எல்லாம் சில மணி நேரத்திலேயே காய்ந்து விடும். அதாவது காலையில் இட்டால், மத்தியானத்திற்கு அவைகளை உரித்து எடுத்து, பொறித்து திங்கலாம் (நம்மூர் மே மாச வெய்யிலில் மினிமம் 4-5 நாட்கள் வத்தல் காய வேண்டும் ).ஆமா, இங்கே அதெல்லாம் யாரு பண்ணறாங்க? சொடுக்கு போடுவதற்குள் துணிகள் எல்லாம் காய்ந்து விடும். இட்லி மாவு பிரெஷ் ஆக அரைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் புளித்துப்போய்விடும். இப்படி பல பயன்கள். ஏன் கேட்கிறீர்கள் போங்கள்! எனக்கு இங்கே மிகவும் அதிகமாக பிடித்த time இந்த நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகும். weather மிகவும் ரம்மியமாக இருக்கும் . welcome spring.

நேற்று மதியம் weekend ஆதலால், மதிய உணவு அருந்தி விட்டு ஏதோ ஒரு டுபாகூர் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம். அது என்ன படம்னா.... நான் இந்த வெளையாட்டுக்கு வரல்ல. அப்புறம் எல்லாரும் turn போட்டுண்டு திட்டரதுக்கா? no ways. சரி. இப்போ விஷயத்துக்கு வர்றேன். இவருடைய ஒன்று விட்ட தம்பி (அடச்சே , அதில்லிங்க , சித்தி பையன்) போன் செய்தான். இங்கே F1 race rehearsal நேற்று நடக்கவிருப்பதாக சொன்னான். அதற்கு அவனிடம் extra passes இருப்பதாக சொன்னான். இவருக்கு அதில் ரொம்ப ஆர்வம் இருப்பது போல தோன்றியது . சரி என்று புறப்பட்டேன் . சாதியத் ஐலன்ட் தாண்டி யாஸ் ஐலன்ட் என்ற இடத்தில் இந்த கார் ரேசிற்கான தளத்தை அமைத்திருந்தார்கள் . இந்த பிரம்மாண்ட event arrangements பார்த்து வாய் பிளந்தேன். ஒரு ஐலன்ட் பூராவும் இவர்கள் ஒரு car race கு அர்ப்பணித்திருக்கிறார்கள். அம்மாடியோவ். இதான் அந்த ஐலன்ட்.




மெயின் ரோடிலிருந்து எடுக்கப்பட்ட படம். அந்த தீவின் நாலா புறமும் விளக்குகள் போடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.



தூரத்திலிருந்து பார்த்த பொழுது fly over போன்றதொரு அமைப்பு தென்பட்டது. அது Ferrari World என்று பிறகு தெரிந்தது. அதை மேலே இருந்து பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று வலையில் தேடி உங்களுக்காக இதோ Ferrari World.

 கார் park செய்து விட்டு வந்தால் அங்கு அரங்கத்துக்குள் செல்ல பஸ்கள் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள் . அவ்வளவு பெரிய இடம் . எங்களுடன் பார்க் பண்ணியவர்களை பின் தொடர்ந்து ஒரு bussil ஏறி அமர்ந்தால், அது அதிவே.........க நத்தை போல சென்று கொண்டு இருந்தது . அந்த யாஸ் ஐலன்ட் பூராவும் எங்களுக்கு சுத்திக்காட்டி கொண்டு தேவையில்லாமல் U turn அடித்துக்கொண்டும் நகர்ந்து சென்று கொண்டு இருந்தது .


 பசுமையோ நீர்பரப்போ இருந்தால் அவ்வளவாக கஷ்டம் தெரியாது . என்னத்தை பார்க்க? மொட்டை வெயில் அதில் பொட்டல் காடு . வரிசையாக பனைமரங்கள் கை தூக்கிக்கொண்டு handsup என்று யாரோ கூரினாற்போல் நின்று கொண்டு இருக்க , வளைந்து வளைந்து ரோடு . இந்த அழகில் சிக்னல்கள் வேறு .

இங்கே பஸ் உள்ளே இருக்கும் மக்கள் எல்லாரும் காட்டுகூச்சல் போட்டு கொண்டு இருந்தார்கள் . முக்கியமாக பிலிப்பிநோக்களில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தத்தலா புத்தலா என்று அதிகம் பேசுபவர்கள் . ஒரு விதத்தில் யோசித்தபொழுது, துபாயில் நான் போன பஸ் பிரயாணங்களை விட இது வித்தியாசமகாவும் குதூகலத்துடனும் இருந்ததாக பட்டது. துபாயில் எல்லா பிரயாணிகளும் பஸ்சில் இறுக்கமாக உட்கார்ந்து இருப்பார்கள் . ஏ சி பஸ் ஆதலால் ஜன்னல் திறக்காது. அதானலோ என்னமோ மனசும் திறக்காது. உர்ர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு போனில் பேசிக்கொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, டிராபிக்கை திட்டிக்கொண்டோ வருவார்கள். அப்படி இல்லாமல் இந்த பஸ்ஸில் எல்லா நாட்டவர்களும் ஒரே நோக்குடன் இந்த பஸ்ஸில் அமர்ந்து இருக்கிறோம் என்று நினைத்த பொது சந்தோஷமாக இருந்தது.

இப்படி ஆலோசித்து கொண்டு இருக்கும்போது தான் தெரிந்தது சுமார் ஒரு மணி நேரமாக அந்த வண்டியில் நாங்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று . Drop off பஸ் நா இப்பிடியா?இதே நம்மூர்ல பஸ் ஏறி இருந்தா இந்நேரம் திண்டிவனம் தாண்டி போயி இருக்கலாம் என்று புலம்பிக்கொண்டோம்.


என்னுடைய ராஜயோகம் பாருங்கள், அந்த பஸ் முதலில் ஓரிடத்தில் நின்றது. பின்னர் ஒரு போலீஸ் அதை வேறு ஒரு இடத்திற்கு செல்லுமாறு கூற, அது ஊர்ந்து போயி ரெண்டுங்கெட்டான் இடத்தில் நின்று விட்டது. டிரைவரிடம் கேட்டால் instructions
வரவில்லை என்று கூறிவிட்டான். security மிகவும் tighten பண்ணி இருந்தார்கள். பயணிகள் அனைவரும் restless ஆகி விட்டார்கள். ஒரு ஐரோப்பிய பெண் படிக்கட்டில் நிற்க ஆரம்பித்து விட்டாள்.வெளியில் நோட்டம் விட்ட பொழுது பழனி பஸ் ஸ்டான்ட் போல ஜகஜ்ஜோதியாக  மக்கள் கூட்டம்.
மேலும் ஒரு பத்து நிமிடம் கழித்து, வெளியிலிருந்து, ஒரு அராபிய பெண்மணி பஸ் கதவைத்தட்ட, டிரைவர் தெரியாமல் கதவை திறந்து விட, போலீஸ் வண்டியில் இருந்து தப்பும் திருடனைபோல எல்லா பயணிகளும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்!! இதை அவன் முன்னாடியே செய்திருக்கலாம்.


சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அரங்கம் இருந்தது. மகராசன் கேட்டு கிட்டக்க இறக்கி விட்டு இருக்க கூடாதா? என்று புலம்பிக்கொண்டே நடந்தோம். போலீஸ் படை திரண்டு எல்லாரையும் செக் பண்ணி கொண்டு இருந்தார்கள். செக்யூரிட்டி செக் முடிந்து அரங்கத்தில் நுழையும் முன்னரே ரேஸ் தொடங்கி விட்டது. அந்த டிரைவருக்கு அஷ்டோத்தர சத நாமாவளி அர்ச்சனை பண்ணிக்கொண்டே படி ஏறி மேலே சென்றோம். அதற்குள் ஒரு போலீஸ் என்னை tag அணிந்து கொள்ளுமாறு எரிந்து விழுந்தான்.


அரங்கத்துக்குள் ஒரே கூட்டம். ஒரு segment மட்டும் திறந்து விட்டு நிறைய அரபியர்கள்,ஐரோப்பியர்கள், பிலிப்பினோக்கள் தென்பட்டனர். Minority Indians and Lebanese என்று சொல்லலாம் . என் வாழ்வில் முதன் முதலில் ஒரு கார் ரேஸ் . பயங்கர thrilling ஆக இருந்தது . கார் திரும்பும்போது கியர் மாற்றும் சத்தம் காதை பிளந்தது . எவ்வளவு சிறிய ஊர்தி.. எப்படி தான் ஓட்டுகிறார்களோ என்று நினைத்துக்கொண்டே ரெண்டு படம் எடுத்தேன். நான் பார்த்த வரையில் கார் ரேஸ் காண வந்ததை விட தன்னை படம் எடுத்துக்கொள் வதிலேயே அதிகம் முனைப்பு காட்டினர் என்றே எனக்கு தோன்றியது.  பலருக்கும் இந்த ரேஸ் பார்க்க பெரிய ரசனை இருக்க வில்லை. கார்கள் விரைந்து பெரும் இரைச்சலுடன் ஓடிக்கொண்டே இருந்தன. பொறுமையாக உட்கார்ந்து கொண்டு அந்த காட்சியை மனதில் பதிய வைத்துக்கொண்டு இருந்தேன்.அதற்குள் என் கணவருக்கு பொறுமை போயி விட்டது. கிளம்பலாமா என்றார். கார் பார்க்கிலிருந்து அரங்கம் வரும் நேரத்தில் ஒரு 5% கூட நாங்கள் அந்த ரேஸ் பார்க்க செலவிடவில்லை. என்னே ஒரு நிலைமை. நல்ல வேளையாக வரும்போது பஸ் விரைந்து கார் பார்க்கில் drop பண்ணிவிட்டு சென்றது.

Monday, October 19, 2009

மனம் ஒரு குரங்கு 5




மனம் ஒரு குரங்கு 5

அபுதாபியில் பெண்கள் இப்போதெல்லாம் "பொம்பளைங்கன்னா உங்களுக்கென்ன கிள்ளுக்கீரையா ?" என்று கேட்பதில்லை.ஆண்கள் தப்பித்தவறி அப்படி கிள்ளுக்கீரை என்று கூறிவிட்டாலும் பெண்கள் கோபித்துக்கொள்ள மாட்டர்கள். பின்னே சாதரண கிள்ளுக்கீரை கருவேப்பிலை கன்னா பின்னா என்று விலை ஏறி விட்டதே! நம்மூரில் 2-3 காய்கறிகளை மொத்தமாக வாங்கினால் காய்கறி வண்டிக்காரன் கொசுறாக ஒரு பெரீய கொத்து அழகான அப்போதே பறித்த fresh கருவேப்பிலை கொடுப்பது வழக்கம். இங்கே காட்டு கருவேப்பிலை தான் கிடைக்கும். (காட்டுகருவேப்பிலைக்கு ராட்சத இலைகள் இருக்கும்). இருந்தாலும் இந்த மட்டும் கிடைக்கிறதே என்று திருப்தி அடைந்து கொண்டு இருந்தோம்.இப்பொழுது அதுவும் போயிற்று. சுமார் ஒரு கொத்து காட்டு கருவேப்பிலை ஆக ஒரு சிறிய கவரில் போட்டு சீல் பண்ணி ஒரு திராம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
என்ன ஆயிற்றோ தெரியவில்லை சென்ற மாதம் முழுதும் கருவேப்பிலை கிடைக்கவே இல்லை. பின்னர் இப்போது பார்த்தால், அதே ஒரு திராம் காட்டு கருவேப்பிலை கிட்ட தட்ட மூன்று திராம் ஆகி விட்டது. அதாவது நம்மூரில் கிடைக்கும் அதே கொசுறு இப்போ 36 ருபாய்!!! இப்போவே கண்ணக்கட்டுதே..
இத்தனை நாள் ஒரு திராம்க்கு கருவேப்பிலை வாங்கி முழுவதும் உபயோகப்படுத்தாமல் வீணாக்கி வந்த நான், சரியாக அது இங்கே கிடைக்காத போது அதை மிகவும் மிஸ் செய்தேன். அப்போது தான் எனக்கு கருவேப்பிலை பொடி, கருவேப்பிலை தொகையல் முதலியவை பண்ணி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது.(என் கணவரின் பாட்டியும் இதே போல தானம், கேரளாவில் பந்த அன்று தான் அவருக்கு பால் பாயசம் எல்லாம் பண்ண வேண்டும் என்று தோன்றுமாம்.) கடைசியாக ,விலை அதிகமானாலும் ஒரே ஒரு பாக்கெட் வாங்கி பத்திரமாக air tight containerல் போட்டு வைத்து உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன் இனி கிள்ளுக்கீரை என்றுசொன்னால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்
இங்கே என்ன காரணத்திற்காக கறிவேப்பிலையை ban செய்தார்கள் என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் பல்தியா (இங்கே உள்ள local government body) தான் ban செய்தார்கள் என்று தகவல் கூறுவார்கள். இந்தியக்காய் எல்லாம் இங்கே துபாய் அருகே ஆவீர் என்ற இடத்தில் பயிர் செய்கிறார்களாம். எல்லா காய்கறிகளும் கிடைக்கும் அனால் சுவை நம்மூர் போல இருக்காது. உரத்தால் ஏதோ நச்சுத்தன்மை ஏற்பட்டு விட்டதால் இவர்கள் கருவேப்பிலையை ban செய்து விட்டார்களாம்!!!


மனைவியை வெறுப்பேத்துவது எப்படி என்று என் கணவர் ஸ்பெஷல் கோர்ஸ் படித்து இருப்பார் போல. தொல்லை தாங்கவில்லை . சமயலறையில் நான் வேலை செய்து கொண்டு இருக்கும்போது கூடவே நின்று கொண்டு running commentary குடுப்பார். என்னவென்றால், அவர் சொல்லிக்கொடுத்து தான் நான் எல்லாம் செய்கிறேனாம். அதுவும் எப்படி என்றால் நான் செய்து கொண்டே இருக்கும்போது பார்த்து பார்த்து வேகமாக சொல்லுவார். உதாரணத்திற்கு அடுப்பை சிம் செய்த உடன், ஆங்,சிம் பண்ணு , சப்பாத்தியை கல்லில் போட்டதும் சப்பாத்தியை போடு என்பார். நான் வேண்டுமென்றே செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டால் அதையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வெயிட் பண்ணு அனன்யா என்பார். இங்கே வீட்டில் சில வேலைகள் அவருடையது. குப்பை கொட்டுவார், வாட்டர் கேன் தண்ணீர் மாற்றுவார், இத்யாதிகள். நான், "நா, ட்ராஷ் டிஸ்போஸ் பண்ணிடுங்கோ" என்று கூறினால், வேலை மெனக்கெட்டு வந்து என்னை
தூக்க(முடியாது என்றபோதிலும்) முயற்சி செய்வார். நாங்கள் இது போல் இருப்பதால் எங்கள்
வீட்டில் அனைவரும் எங்களை Tom and Jerry என்று கூறுவது வழக்கம்.

விகடன் பொக்கிஷம் நன்றாக இருக்கிறது என்று சென்ற பதிவில் சொன்னாலும் சொன்னேன், திருஷ்டி மாதிரி ஆகிவிட்டது .இந்த வாரம் பொக்கிஷத்தில் சரக்கே இல்லை.முத்து ராமனின் பேட்டி மட்டுமே கொஞ்சம் பரவாயில்லை.டைரக்டர் சசிகுமாரின் பேட்டியை படிக்க மறக்க வேண்டாம்.. சினிமா சாயப்பூச்சு இல்லாமல் இயற்கையாக பேசும் மனிதர்.
வருண் பாப்பா என்னிடம் தீபாவளிக்கு முதல் நாள் போனில் பேசினான்."Hello பீயம்மா பீயம்மா" என்று அழைத்து" டப்பா டப்பா "என்று சொன்னான். அங்கே ஒரே பட்டாசு சத்தமாம் அவனுக்கு பயமாம். அவன் பேசுவான் என்று நான் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்ததால் அவனுக்கு நான் எதிர்முனையில் இருக்கிறேனா என்று பலத்த சந்தேகம். அடிக்கடி என்னை அழைத்து பார்த்துக்கொண்டான். நான் இருப்பது தெரிந்தே மேற்கொண்டு பேசினான்.
ஒன்றரை மாதங்களில் எத்தனை மாற்றங்கள்? அவன் பேச்சு, புதிய சொற்கள், அவனுடைய புரிந்து கொள்ளும் திறமை.. அப்பப்பா.. அதிசயித்து போனேன்.ஒன்றே ஒன்று மட்டும் தான் மாறவில்லை.. அவன் அன்பு.




Wednesday, October 14, 2009

மனம் ஒரு குரங்கு - 4












மனம் ஒரு குரங்கு - 4


ஒரு 2 மணிநேரத்தில் சுஜாதா அவர்களின் "ஐந்தாவது அத்யாயம்" படித்தேன். அவர் இறப்புக்கு சில ஆண்டுகள் முன்பு எழுதி இருப்பார் என்று நினைக்கும்படியாக அதில் நிறைய technical விஷயங்கள் . கதையைப்பொருத்த வரை மிகவும் சாதரணமாக இருந்தது . கொஞ்சம் அதிகமாக எதிர்
பார்த்துவிட்டேன். சில இடங்களில் ஏனோ தெரியவில்லை , தவிர்க்க முடியாமல் இதற்கு முன்னர் நான் படித்த "விரும்பிசொன்ன பொய்கள் " என்ற கதையின் ஒரு சாயல் . இந்த கதையுடைய முடிவும் சற்று வித்தியாசமாக இருந்தது . பலருக்கு புரியவில்லையாம். அதனால் மீண்டும் படித்தனராம். மிக கவனமாக படிக்கும் படி சுஜாதா அவர்களின் முன்னுரைப்படி படித்தேன். எனக்கு புரிவதில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை..இருந்தாலும் ஏனோ சப்பென்றாகி விட்டது.. Dil hai ke maantha naheen.


விசாகா என்னை அவள் வீட்டில் அகோயீ மாதா பூஜைக்கு அழைத்து இருந்தாள் . இந்தியா முழுவதும் தொன்று தொட்டு ஒரே விதமான ஆசார அனுஷ்டானங்கள் தான் இருந்து வந்து இருக்கின்றன என்பது புரிந்தது . நாம் அரிசி மாவில் கோலம் போடுவது போல அவர்கள் (வட நாட்டவர் ) கோதுமை மாவில் கோலம் போடுகிறார்கள் . என்னை ஹிந்தியில் இரண்டு நோன்புக்கதைகள் படிக்க சொல்லிவிட்டு கையில் ஒரு நோன்பு சரடு கட்டி விட்டாள். அவர்கள் முறைப்படி இதையெல்லாம் அறிவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது .



அன்று பூஜையில் அவள் எனக்கு பிரசாதம் கொடுக்க மறந்தாளாம். அதனால் அடுத்த நாள் அதே பிரசாதத்தை(??!!!) கொண்டு வந்து கொடுத்து விட்டு , எங்கள் வீட்டில் ஒரு ராமாஞ்சநேய ஆலிங்கன படம் உள்ளது . அதை காண்பித்து அவளுடைய ஒன்றரை வயது குழந்தையிடம் "ஹன்னுமாமா தேகோ பேட்டா "என்று சொல்லிக்கொண்டு இருந்தாள் . நான் கேட்டபோது , ரக்ஷா பந்தன் அன்று ராகீ கட்ட தம்பி அண்ணா இருக்கவில்லையாம் . அதனால் ஆஞ்சநேயருக்கு ராக்கி கட்டினாளாம் அதனால் , கடவுள்களை எல்லாம் காட்டி உறவு முறை கூறிக்கொண்டு இருந்தாள் .. இதே போல gannu bhayya, mata rani என்றெல்லாம் பிதற்றி கொண்டு இருந்தாள் ..அதை நான் ரசித்து சிரித்தேன் .


வடநாட்டவர் திருமணப்படி விதாயி என்ற ஒரு முறை உண்டு. அதன் படி பெண்கள் வீட்டை விட்டு அனுப்பும் போது மிகவும் உணர்ச்சிபூர்வமாக எல்லாரும் அழுவதை பல படங்களில் பார்த்து இருப்போம். விஷாகா வின் தம்பி திருமண வீடியோ சீடீ எடுத்து வந்து காட்டினாள். அதில் அந்த விதாயி சமயத்தில் ஒரே உணர்சிமயமாய எல்லாரும் அழுதுகொண்டு இருந்த போது என் கணவர் மதிய உணவு அருந்த வீட்டுக்கு வந்து இருந்தார். விஷாகா அந்த காட்சியை பார்த்து சோகமாக இருப்பதை பார்த்து விட்டு என் கணவர் சொல்கிறார். "விஷாகா , எங்கள் கல்யாணத்தின் போதும் என் மாமியார் இதே போல் கண்ணீர் விட்டார்", உடனே விஷாகா பழைய படி "ஆமாம் , பின்னே? பெற்ற மகள் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டுக்கு போகும் போது எல்லா தாய்மார்களுக்கும் அப்படி தானே இருக்கும் " என்று கூறி மூக்கை உறிஞ்சினாள். படாரென்று என் கணவர் போட்டார் ஒரு போடு.. என் மாமியார் அதற்கு அழவில்லை "மாப்பிள்ளை, நீங்கள் பத்திரமாக உங்களை பார்த்துக்கோங்கோ " என்று கூறி அழுதாள் என்று.. இதை சற்றும் எதிர்ப்பார்த்திராத விஷாகா தன்னையும் மறந்து ரசித்து சிரித்தாள்.அதுக்கு அப்புறம் அவருக்கு சூப்பர் டோஸ் கிடைத்தது என்று நான் சொல்லி தெரிய வேண்டாம்..



வெட்டியாக இருந்த படியால் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு நல்ல படங்கள் பார்த்தேன். முதலில் பைத்ருகம் என்ற மலையாளப்படம்.
என்னைப்போன்ற ஆத்திகர்களுக்கு இந்த படம் மிகவும் விரும்படியாக இருக்கும். ஒரு சிறந்த நம்பூதிரியின் வீட்டில் இரண்டு மகன்கள். ஒருவன் கோவில் குருக்கள், மற்றவன் நாஸ்திகன், டைம்ஸ் ஆப் இந்தியாவில் journalist. தீவிர ஆஸ்திகனும் நாஸ்திகனும் ஒரே வீட்டில் தத்தம் கொள்கைகளோடு வாழ்கிறார்கள் . அன்பில் ஒரு குறைவும் இல்லை . திடீரென்று தம்மை நாஸ்திகன் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஊழல் அரசியல் வாதிக்கு தன் தந்தை ஏதோ ஹோமம் செய்து கொடுத்தது குறித்து மனஸ்தாபத்தில் நாஸ்திகம் பாராட்டும் மகன் தந்தையிடம் மரியாதை குறைவாக பேசபோக, தந்தை அவனை வீட்டை விட்டு போகும்படி சொல்லிவிடுகிறார். தனிமையை விரட்ட மூத்த மகன் தான் காதலித்த பெண்ணை ஆதர்ச திருமணம் புரிந்து கொள்கிறான். கிராமத்தில் தீய சக்திகள் இருப்பதாக கருதப்பட்ட ஒரு வீட்டில் வீம்புக்காக தான் கொள்கை நிலைநாட்டும் நோக்கத்தோடு குடி போகிறான். கதை இப்படியாக விறுவிறுப்பாக போகிறது . நிச்சயமாக ஆஸ்திகர்கள் விரும்புவார்கள். எனக்கு பிடிக்காத ரெண்டு விஷயங்கள்.
1. ஏன் படம் முழுவதும் இவ்வளவு இருட்டு? நல்ல விஷயத்தை கூறும்போது பளிச் என்றல்லவா கூறி இருக்க வேண்டும்.. கிளைமாக்ஸ் தவிர படம் முழுதும் ஒரே இருட்டுகசம். அப்பப்பா ..
2. பைத்ருகம் என்று பெயர் வைத்ததற்காக கடைசியில் அந்த மகா நம்பூதிரியை கொல்ல வேண்டுமா? நரேந்திர பிரசாத் என்ற அந்த நடிகரின் நடிப்பும் பாத்திரப்படைப்பும் மிகவும் பாரட்டபடவேண்டியவை. ஆங் சொல்ல மறந்துட்டேன் இந்த படத்தின் டைரக்டர் ஜெயராஜ் ஆம்..


side line போல இந்த படத்தில் ஜெயராமின் பாத்திர படைப்பு இருந்தாலும் இந்த பையனும் நடிப்பான் என்று திட்டவட்டமாக அழுத்தி கூறும்படி அமைந்து இருந்தது. ஜெயராமின் முகத்தில் எவ்வளவு பாவங்கள். பத்திரிக்கையில் தமது கவிதை வராதபோதிலும், கோவிலுக்கு வரும் பெண்ணை சைட் அடிக்கும் போதிலும், தமது ஆயுள் முடிவடையும் சமயம் வந்து விட்டது என்று அறியும் போதிலும்.. பையன், விளாசி தள்ளி இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.எந்த ஹைப்பும் இல்லாமல் எடுக்கபட்டுள்ளதற்கு hats off...( ஒரே ஒரு காட்சியில் hospital காட்டுகிறார்கள்.. மற்றபடி எல்லாமே கிராமத்து சூழல் தான்). எங்கேயும் டெக்னாலஜி ஊடுருவல் இல்லை..இந்த படம் வெளி வந்த ஆண்டு1993. வாழ்க இதுபோன்ற கதைகள்..இதைபார்த்த போது ஆஹா.. நமது கலாச்சாரம் எப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்தது என்றே என்ன தோன்றுகிறது. அதும் கேரளத்து ஜோசியம் எத்தனை சக்திவாய்ந்தது அதில் அவர்களுக்கு எவ்வளளவு தேர்ச்சி ..மொத்தத்தில் நல்ல ஒரு படம் மற்றும் பாடம் இந்த பைத்ருகம். Thank you hubby dear for hiring this movie.



அடுத்ததா நான் பார்த்த படம் Angels and Demons. வழக்கம் போல Dan Brown ஏடாகூடமான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு சாமர்தயமாக கையாண்டு இருக்கிறார் . வாடிகன் சிட்டி யில் போப் உடல் நிலை கோளாறு காரணமாக இறக்கிறார். அடுத்த போப் யார் என்ற தேர்வுக்கு மக்கள் காத்து இருக்கும் வேளையில் திடீரென்று வரும் மிரட்டல், கடத்தல், கொலை இத்யாதிகளுக்குள் விறுவிறுப்பாக உண்மையை கண்டுபிடிக்கும் cryptologist Professor Robert Langdon. இதான் கதை . இம்முறை Church இன்கொள்கைகளை எதிர்த்தவர்கள் Illuminatists என்ற தலைப்பை வைத்துக்கொண்டு பின்னி இருக்கிறார். வழக்கம் போல நம்ம ஹீரோ Tom Hanks தான் professor langdon.. பாவம், தனியாக அவரால் இயங்க முடியாத காரணத்தினாலும் ஒரு சின்ன பொண்ணு கூட வந்தால் தான் puzzles எல்லாம் solve பண்ண முடியும் என்பதாலும் ஒரு project research scientist பாத்திரத்தில் Ayelet Zurer .வாடிகன் சிட்டி பூராவும் சுற்றி திரிந்து தேவதைகள் காட்டும் திசையில் இருக்கும் clueகளை கண்டுபிடித்து, தாவு தீந்து விடுகிறது.மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான படம்.
The best part is so much of Historic information. வெட்டிதனமாக பேசிக்கொண்டிருக்காமல் உபயோகமான வரலாற்று விஷயங்களை தருகிறார்கள். நல்ல விஷயம்
நானும் என் கணவரும் இந்த படத்தை 'சோபா நுனியில்' இரவு 12 மணி வரை பார்த்தோம்.. நடுவில் என் கணவருக்கு தூக்கம் சொக்கி 'லொட்டு' என்று விழுந்த நொடியில் நான் அந்த படத்தின் mysteryஐ கண்டுபிடித்து விட்டேன். நான் போட்ட சதத்தின் விளைவாக அவர் பயந்து போய் எழுந்து விட்டார். சிறிது நேரம் "ஞ" என்று விழித்து விட்டு rewind பண்ண சொன்னார். ஏன் எதற்கு என்று புரியாவிட்டாலும், நான் என் 'ஆழ்ந்த அறிவாற்றல்' கொண்டு கண்டுபிடித்த விஷயத்தை நம்ப மறுத்தார். பின்னர் படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து விட்டு அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். என் பாதங்களில் வீழ்ந்து சரண் அடைந்தார். யாமும் அபயம் அளித்தோம்.. ஹீ ஹீ...என்ன ஒரே குழப்பமாக இருக்கா? படத்தை பாருங்க புரியும்.








Related Posts with Thumbnails