Pages

Monday, June 27, 2011

ரங்குவின் வழி கேட்கும் யுக்திகள்

இந்த ரங்கு இருக்காரே..... ஒரு இடத்துக்கு போகணும்னா 1008 டவுட்டு வரும். கிளம்பினோம், யாராவது தெரிஞ்சவா கிட்டே வழி கேட்டுக்கலாம்ன்னு வந்தா தேவலை.. எதிர்ல வரவா எல்லார் கிட்டேயும் கேட்டுண்டே வருவார்.. 

அதுவும் மாயவரம்ன்னா கேட்கவே வேண்டாம். பஸ்ஸ்டாண்டுலே இறங்கினா கடைத்தெரு, எதிர்லே மணிக்கூண்டு. எதிர்லே இருக்கற மணிக்கூண்டுக்கு எப்படி சார் போறதுன்னு ஒரு கடைக்காரன் விடாம கேட்கறார். நேக்கே மானம் போறது! ஒரு கடைக்குள்ளே போய் வழி கேட்டுட்டு வெளியே வந்து, ரொம்ப தூரம் வந்துட்டோமே.. இன்னும் மணிக்கூண்டு வரலையேன்னு அடுத்த கடைக்குள்ளே போறார்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சரி முதல் வாட்டி தான் அப்படி கேட்டாரா, எல்லாரும் சளைக்காம தோ... இதான் சார் மணிக்கூண்டுன்னு சொல்லிண்டே இருந்தா. மாயவரம் ‘சிட்டி’யில் இருக்கறதே ஒரேயொரு ஹிஸ்டாரிக்கல் லேண்டு மார்க் அந்த மணிக்கூண்டு தான். அதைச்சுற்றித்தான் ஊர் விரியும்.. சுற்றும் 2கிமீ ரேடியஸில் வீடுகள் ரோடுகள் எக்ஸட்ரா... 

இதுல டவுட்டு வருது பாருங்க.. உஸ்ஸ்ஸ்... 

சரி முதல் வாட்டி எல்லாக்கடையிலும் ஏறி டவுட்டு கேட்டு மணிக்கூண்டை கண்டு பிடிச்சு காளியாக்குடியில் கொட்டிண்டு கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சோல்லியோ... அடுத்த வாட்டியாவது தானா போகலாம் இல்லே? பஸ்டாப்புலே இறங்கின உடனே ஆரம்பிச்சுட்டார்.. மறுபடியும் அதே கேள்வி , ”மணிக்கூண்டுக்கு எப்படி போறது சார்?” அந்த ஊர்க்காராளை சம்மதிக்கணுங்கேட்டேளா... அவ்ளோ எக்ஸைட்மெண்டு அவாளுக்கு.. இதோ.. இப்படி மெயின்ரோடுல திரும்பினீங்கன்னா...ன்னு அவாளும் சொல்ல ஆரம்பிச்சுடுவா.. நேக்கு தான்ப்ளட் பிரஷர் கூடும்.

“அது ஏன்னா தெரிஞ்ச இடத்துக்கே வழி கேக்கறேள்?”ன்னு கேட்டா எல்லாம் ஒரு கன்ஃபர்மேஷன் தாண்டீன்னு ஒரு சப்பைக்கட்டு.. நான்ஸன்ஸ்... இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... 

சில முக்கியமான நேரங்கள்லே ரங்கு கேனத்தனமா.. அதாவது எப்போவும் போலவே...வழி கேப்பாரா... அங்கே சொல்லிவெச்சமாதிரி ஒரு பதில் வரும். அது என்ன போன ஜென்மத்து பாவமோ எதிரிங்களோட சாபமோ தெரியாது.. ரங்குவோட அஜாக்கிரதை தான். சரியாக ஒரு மாங்கா மண்டையனை செலக்டு பண்ணி வண்டியை நிறுத்தி, வணக்கம் வெச்சு”சார்.... மேடவாக்கம் எப்படி போறது?” ன்னு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டா .. நடுமண்டையில நச்சுன்னு அடிச்சாப்புலே ”தெரியாதுங்க.. நான் ஊருக்கு புதுசு.“ ன்னு கூலா சொல்லிட்டுப் அவா அவா வேலையப்பார்த்துண்டு போயிடுறா.. 

பாலச்சந்தர் படத்துல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஜெயசித்ரா ஒரு சிரிப்பு சிரிப்பாளே... அதே மாதிரி சிரிச்சுடுவேன். 

அன்னிக்கி ஃப்ரைடே.. இளம் கணவன் மனைவிக்கு (அட நாங்க தேன்)வீக்கெண்டு மூடு.சரி மாயாஜால் போய் ஆரண்ய காண்டம் பார்க்கலாம்ன்னு சொன்னார். நேக்கு மாயாஜால், கீயாஜால் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்.இடம் தெரியாட்டி ரங்கு பண்ணும் ஹோம்வொர்க் இருக்கு பாருங்கோ.. ஜஸ்டு டயல் கூப்பிட்டு மணிக்கணக்கா லேண்டு மார்க் லேட்டிட்யூட் லாஞ்சிட்யூட் எல்லாம் கேட்டுண்டு இருப்பார். இது போறாதுன்னு கூகிள் எர்த்தில் தேடி கண்டிபிடித்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு ஒரு பழம்பொருள் ஆராய்ச்சியாளர் தோர்த்துப்போகும் ரேஞ்சுக்கு பில்டப்பு கொடுப்பார்.கண்ல கண்ணாடி,முதுகுல பை, தலையிலே க்ளிண்ட் ஈஸ்டுவுட் தொப்பி எல்லாம் போட்டுண்டு தான் கிளம்புவார்ன்னா பார்த்துக்கோங்களேன்.

  நேக்கு எல்லாம் தெரியும்ன்னு ரங்கு சொன்னப்போவே நான் சுதாரிச்சு இருந்தேன்னா கெட்டிக்காரி.. அதான் இல்லையே.. அப்புறம் புலம்பி என்னத்த ப்ரயோஜனம்? வண்டியை எடுத்துண்டு ஈஸீஆர்ல போனோம்.. போனோம்.. போயிண்டே இருக்கோம்... வாழ்க்கையின் ஓரத்துக்கே போனோம்.. ஆனா இந்த பிரும்மஹத்தி மாயாஜால் எங்கே போய் உக்காண்டிருக்குன்னு ஒரு ஐடியாவும் இல்லை.நடுக்காட்டில் ஒரு சில சம்பந்தமேயில்லாத ரெஸ்டாரண்டுக்கள், பேக்கரிகள், துணிக்கடைகள்(யாரு வருவாங்க இங்கெல்லாம்ன்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி!) அங்கே இடம் பார்த்து பல்பு வாங்க ரங்கு காத்துக்கொண்டு இருந்தார். இப்போ பாருங்கோ டெம்ப்ளேட் பதில் தான் வரப்போறது.. ”தெரியாதுங்க நாங்க ஊருக்கு புதுசு”ன்னு சொல்லி கேலி பண்ணீண்டே வந்தேனா.. ரங்கு ரெண்டு யூத்து பாய்ஸ் கிட்டே நிறுத்தி, இவாளுக்கு கட்டாயம் தெரிஞ்சுருக்கும். ஏங்க மாயாஜால் எங்கே இருக்குன்னு தைரியமா கேட்க, அவர்களும் வழக்கமாக,”தெரியாதுங்க, நாங்க இங்கே புதுசா வந்திருக்கோம்”ன்னு சொல்லிட்டாங்க! நான் மறுபடியும் ஜெயசித்ரா ஸ்டையில் கிக்கீ...புர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கொஞ்சம் வண்டியை தள்ளி நிறுத்திவிட்டு இந்த வாட்டி ரங்குவும் சிரிச்சுட்டார்.

என் கிட்டே என்ன ஒரு பிரச்சினைன்னா... அளவுக்கு அதிமான சூட்சுமம் நேக்கு.. ஸோ.. ஈவென் சின்னச்சின்ன கடைகள் கூட பளிச்சுன்னு என் நினைவுல நிக்கும் பார்த்துக்கோங்கோ.. என்னை பிக் பண்ணுவதுக்கு ரங்ஸ் ஃபோன் பண்ணி,”நீ எங்கே நிக்கறாய்”ன்னு ஒரு வேளை கேட்கிறார்ன்னு வெச்சுக்கோங்களேன்.. நானும் ரொம்ப பெரிய போர்டு இருக்கும் ”பாஷாபாய் பேக் ஒர்க்ஸ்”, ”மெஜஸ்டிக் ஜூஸ் கடை”, ”ராம் தையலகம்”, ”பத்ரினாத் பாதாம் மில்க்” , ” பேரூனாத் குல்ஃபி”, சாய்பாபா வண்டி, ”பனாரஸ் பான் ஸ்டால்”,  இப்படி மல்டி நேஷனல் ப்ராண்டு நேம்ஸ் இருக்கும்படியா கடைகளைத்தான் லேண்டு மார்க்காக சொல்லுவேன்.. காரணம் அவ்ளோ கவனம். எல்லாத்தையும் பார்த்து வெச்சுப்பேனாக்கும். அது இவரோட மரமண்டைக்கு தெரியாது.

ஆனா இவருக்கோ ஐஸி ஐ ஸி ஐ பேங்க்,ஷெல் பெட்ரோல் பங்க், ஹோண்டா ஷோரூம், வோடாஃபோன் ஸ்டோர் இப்படி துக்கடா லேண்டு மார்க் தான் பிடிக்கும்.

அன்னிக்கி அப்படித்தான்,”அந்த அஜித் ரசிகர் மன்றம் இருக்குமேன்னா அந்த வழியா போயிடுங்கோ”ன்னு சொன்னேனா.. ரங்கு செம்ம டென்ஷன்.. சரின்னு இடப்பக்கம் வலப்பக்கம்ன்னு வழி காட்டினா.. ”எங்கேடீ ரசிகர் மன்றம்”ன்னு கேட்கறார்.உடனே நான் அந்த போர்டை காட்டினேன்.. திட்டோ திட்டுன்னு வண்டியை நிறுத்திட்டு அரை மணி நேரம் திட்டினார்ன்னா பார்த்துக்கோங்களேன்.அதென்னன்னா, நல்லையா தெருன்னு மஞ்ச போர்டு எழுதியிருப்பாளே.. அப்படி சின்னதா தான் எழுதியிருக்காம். இதையெல்லாம் அடையாளமா சொல்லக்கூடாதாம்.. நான்ஸன்ஸ்! இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி மோசம்!


Monday, June 13, 2011

திருச்சி திக் திக் விஜயம்.

எனக்கும் பஸ்ஸுக்கும் இருக்கும் ராசியை பத்தி ஒரு பழைய பஜிவு எழுதியிருக்கேன்னு உங்களுக்கு நினைவிருக்கலாம். இதை வேணா அதன் ரெண்டாவது பார்ட்ன்னு வெச்சுக்கலாமே?

போன வாரம் ஸ்ரீரங்கம் போகலாம்ன்னு ஒரு திடீர் திட்டம் போட்டோம். (தேவை இருக்கலை தான், இருந்தாலும் விதி யாரை விட்டது?) மத்தியானம் ஆஃபீஸில் இருந்த போது ரங்குவின் எஸ்.எம்.எஸ். ராக்ஃபோர்ட்டில் ஏஸி கோச்சில் டிக்கெட் கிடைச்சதுன்னு. என்ன தான் ஏஸியெல்லாம் டாம்பீகம்ன்னு நினைச்சாலும் மனசுக்குள்ளே ஒரு சின்ன அல்ப சந்தோஷம். சரி இருக்கட்டும். நாள் பூரா உழைக்கறோமே.. ஒரு வாட்டி ஏஸி கோச்ல போனாத்தான் என்னன்னு தோணித்து. சாயந்திரம் வீட்டுக்கு வந்து அரக்கப்பறக்க தோசை வார்த்து டிஃபன் முடித்து, 2 செட் துணிகளை அள்ளி திணித்துக்கொண்டு ஏஸி கோச் பிரயாணத்துக்காக ஆசையுடன் காத்திருந்தேன். கடைசியா எப்போ ஏஸி கோச்ல போனோம்ன்னு யோசிச்சேன்..  நொய்டாவுல இருந்து திரும்பி வந்தப்போ சுகமான ஜில் ஜில் ஏசியிலே கம்பெனி செலவில் 2 நாளும் தின்னுண்டு, போர்த்திண்டு தூங்கிண்டே வந்தேனே அதான் நினைவுக்கு வந்தது.

ஹை ஜாலின்னு மனசுக்கு பிடிச்ச ஒரு பாட்டை பாடிண்டே சோப்பு, சீப்பு இத்யாதிகளை பேக் பண்ணியாச்சு. பேக்கிங் எல்லாம் ஆச்சு. ரங்க்ஸ் 8 மணிக்கி வந்தார். ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டார். ஏஸி கோச் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டாம்! அதை ஏன் எஸ்.எம்.எஸ்ஸில் நீங்க சொல்லலைன்னு கேட்டா, கிடைச்சுடும்ன்னு அந்த பிரும்மஹத்தி ஏஜெண்டு சொல்லியிருக்கான்னு சொல்றார்!

 என்ன தான் இருந்தாலும் இவ்ளோ அப்பாவியா ரங்கு இருக்காரேன்னு நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். சாதா கோச் வெயிட்டிங் லிஸ்டு கிடைச்சாலும் கிடைக்குமேயொழிய, ஏசி கோச்ல எல்லாம் கேன்ஸலேஷன் சான்ஸஸ் கம்மி! அதுவும் பெட்டிகளும் கம்மி!

ரங்குவும் ஜஸ்டு டயல் ஃபோன் பண்ணி, கே.பி.என்/பர்வீன்/ஷர்மான்னு பலப்பல ப்ரைவேட்டு பஸ் எல்லாத்துலேயும் கேட்டு பார்த்தாச்சு. எதுலேயும் கிடைக்கலை.

சரி அப்போ ஸ்ரீ ரங்கனை அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்ன்னு மனசை தேத்தினா, மனசு கேக்கவே மாட்டேங்கிறது! இல்லை, நான் கோவில் பிரகாரத்துல எப்படி எல்லாம் கற்பனை பண்ணினேன்? ஸ்ரீரங்கனின் கண் தரிசனத்தையும் அவன் பாத தரிசனத்தையும் எவ்ளோ ஆவலுடன் எதிர்பார்த்தேன்னு மனசு புலம்பி தீர்க்க ஆரம்பிச்சுடுத்து.

பெரிய பெரிய தோல்விகளையெல்லாம் தாங்கின மனசு, இந்த சின்ன ஏமாற்றத்தை ஏற்க மறுத்தது. அதுனால செமத்தியாக ஜகா வாங்கிய ரங்குவை பயங்கரமா தாஜா பண்ணி கிளம்ப வைச்சாச்சு.

ரங்குவும் மிகவும் சுறுசுறுப்பாக, மெயில் செக் பண்ணி, ஒரு 10 மெயில்களை அனுப்பி, ஒரு நாலு ஃபோன்கால்களை நிதானமாக பேசி, தோசை சாப்பிட்டு, மாம்பழம் வேணும்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு, காஃபி கேட்டு குடிச்சுட்டு, விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி ஒரு எஃபெக்ட்டுடன் கிளம்பினார். அதுக்குள்ள இந்த நேரத்துக்கு என்ன அவசரமோ, 9.30 மணியாயிடுத்து.

கழுதை பரதேசம் போன மாதிரி அடையார் டிப்போ போய், மத்ய கைலாஷ் போய், கிண்டி போய், தாம்பரம் ட்ரெயினில் போறதுக்கு 11 மணி!

உஸ்ஸ்ஸ்! தாம்பரத்திலே கடல் போல மக்கள் வெள்ளம். நான் என்னமோ எனக்கு ரொம்ப பஸ் கிடைச்சுட்டாப்புல ஒரு இறுமாப்பில், ஹய்யோ இவங்கள்ல்லாம் ரொம்ப பாவம். என்னிக்கி பஸ் கிடைச்சு என்னிக்கி ஊர் போய் சேரப்போறாங்களோன்னு அனாவஸ்யமா கவலைப்பட்டேன்.

நான் எதிர்ப்பார்த்த மாதிரியே திருச்சிக்கி ஒரு பஸ் முன்னாடி நின்னுண்டு இருந்தது. ரெண்டு டிக்கெட் இருக்காம், போயிடலாமான்னு கேட்டார். நான் தான் ”நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்ன்னா, உங்களுக்கு சாமர்த்தியம் போறாது”ன்னு இவரை தரதரன்னு இழுத்துண்டு வந்தேன். பின்னாடி வந்து பார்த்தா, ஒரேயொரு பஸ் இருந்தது. அதுவும் மதுர மதுரன்னு கத்திண்டு இருந்தான். குடுகுடுன்னு ஓடிப்போய் அந்த திருச்சி வண்டியிலே கேட்டா அவன் டிக்கெட் இல்லைன்னு சொல்லிட்டான். நான்ஸென்ஸ்!

10 மணிக்கி கோயம்பேட்டிலிருந்து கிளம்பின ‘அதி வேக’ வால்வோ பஸ்ஸெல்லாம் 11 மணிக்கித்தான் தாம்பரத்துக்கு ஒவ்வொண்ணா வந்திண்டு இருந்தது. ஒரு நாலு பஸ்ல பல்பு தான்.

சரின்னு ஐஞ்சாவதா ஒரு பஸ்ல கேட்டப்போ சீட் இருக்கறதா ஒரு புண்ணியவான் காதுல தேன் வார்த்தான். அதோட வயித்துல பால் வார்த்தான். ”எப்படி பார்த்தேளா, சாமர்த்தியமா சீட் வாங்கிட்டேன். கேட்டாத்தான் கிடைக்கும். இதெல்லாம் நீங்க எப்போத்தான் கத்துக்கப்போறேளோ?”ன்னு அலுத்துண்டே பஸ்ஸுக்குள்ளே ஏறினா, கட்டக்கடைசி சீட்டு மட்டும் தான் காலியா இருந்தது!

எல்லாரையும் தாண்டிப் போய் கடைசி சீட்டைப் பிடிச்சு ஜன்னலோரத்தில் உக்காண்டப்போ ஹைட்டெக் பஸ் தான். கடைசி சீட்டானாலும் ஜெர்க் அதிகம் இருக்காதுன்னு ரங்கு சமாதானம் சொன்னார்.

எங்களுக்கு முன்னாடி ஒரு அங்கிளும் ஒரு 30 வயசு ஆசாமியும் ஒரு குழந்தையுடன் உக்காண்டிருந்தாங்க. இதை எதுக்கு சம்மந்தமேயில்லாம இங்கே சொல்றேன்னா, அந்த பஸ்ஸின் அருமை பெருமைகளை விவரிக்கும்போது இந்த உபரித்தகவல் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்குமே, அதுக்குத்தான்.

பஸ் கிளம்பித்து. தாம்பரம் தாண்டும்போது ஜில்லுன்னு காத்து வந்து மூஞ்சில வருட, இது போறும், தூங்கிண்டே திருச்சி போயிடலாம்ன்னு நம்பினேன்.

கொஞ்ச நேரத்துல விஷயம் புரிஞ்சுடுத்து. முன்னாடி உக்காந்திருந்த அந்த பையன் குழந்தையோட சீட்டோட என் முட்டி மேல படுத்துண்டு இருந்தான். விஷயம் என்னன்னா, அந்த சீட்டுக்கு புஷ்பேக் அட்ஜெஸ்டுமெண்ட் எதுவும் இல்லை. பை டீஃபால்டு, அது பின்னாடி சீட்டின் மேல தான் இருக்கும்ன்னு. ஹைட்டு கம்மியானதுனால அது என் முட்டியில் சாய்ஞ்சுண்டு இருக்கு.
பக்கத்தில் இருந்த ரங்குவின் நிலமை இன்னும் மோசம். அந்த குண்டு அங்கிள் மொத்த பார்த்தையும் ரங்குவின் முட்டியில் போட்டுவிட்டு அக்கடான்னு குறட்டை விட்டுண்டு தூங்கிண்டு இருக்கார்!!!

உக்காரவும் முடியாமல், எனக்கு வந்த கோபத்தில் போய் நடுவில் கீழே உக்காந்துக்கலாமான்னு இருந்தது. ரங்குவுக்கு தர்மசங்கடமாக போயிடுத்து. எத்தனை வாட்டி தான் குண்டு அங்கிளை எழுப்ப முடியும்? அவரும் எழுந்து பார்த்துவிட்டு மறுபடியும் குறட்டை விட்டுண்டு தூங்கறார்!

நயம் ராஹு காலத்துலேயா புறப்பட்டோம்ன்னு நினைக்கும் |அளவுக்கு எங்கள் நிலமை  கொடுமையா இருந்தது. ரங்குவும் கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, த்ரிவிக்ரமஅவதாரம் மாதிரி ரெண்டு காலையும்  தூக்கி, அங்கிளின் சீட்டுக்கு அந்தண்டை போட்டுண்டு தூங்க ஆரம்பிச்சார்.

ரங்கா, உன் ரகளைக்கு அளவே இல்லையா?ன்னு நினைச்ச படியே காற்றில் அப்படியே கண்ணசந்தா, அந்தப்பையன் குழந்தையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றி போட்டுண்டு கொஞ்சம் சீட்டின் மேலே அட்ஜெஸ்டு பண்ணிண்டு படுத்துக்கறான்!எனக்கு முட்டியில் மரண வலி!  உலுக்கி விழுந்து எழுந்தாச்சு. ஒரு பத்து நிமிஷம் தூங்கினோமான்னு மணியை பார்த்தா ஒரு ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கு! சந்தோஸமா???

 மொத்தத்துலே சுத்தமா தூங்க முடியாம அந்த பையன் குழந்தையும் வெச்சுண்டு என்னை படுத்தி எடுத்துட்டான்.

ரங்கு பக்கத்துல ஒரு இளசு விடிய விடிய கேள்பிரண்டு கூட கடலை போட்ட வண்ணம் வந்திருக்கான். ரங்குவுக்கு கொஞ்சம் நற நற.

இது போறாதுன்னு அந்த இளசுக்கு அந்தப்பக்கம் உக்காண்டிருந்த ஒரு பிரும்மஹத்தி அர்த்த ராத்திரி 1 மணிக்கி செல்ஃபோன்ல பாட்டை பெரூசா போட்டு எல்லாரையும் எழுப்பியூடுத்து. ஏதாவது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா இருந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டா. ஏதோ ஒரு அசுரக்குரல்லே நாட்டுப்பாட்டாம். கேட்டாலே நாராசம்! இருந்தாலும் அர்த்த ராத்திரியிலும் அவன் இசையார்வத்தை என்னால் ரசிக்காமல் இருக்க முடியலை. அந்த அளவுக்கு வால்யூம் ஹை! எல்லாரும் முறைக்க ஒரு வழியா தேடி(அவனுக்கே அவன் ஃபோனை ஆப்பரேட் பண்ண தெரியலை) ஏதோ ஒரு சுவிட்சை அமுக்கி காதில் அந்த இன்னிசையை வெச்சுண்டு கேட்க ஆரம்பிச்சுட்டான். மறுபடியும் மூணு மணிக்கி அதே பாட்டு, அதே குரல், அதே சவுண்டு. தூங்க முயற்சித்துக்கொண்டிருந்த எனக்கு வந்த கோபத்தில் “ சவுண்டு ரொம்ப தொந்திரவா இருக்கு ஆஃப் பண்ணுங்க”ன்னு சொல்லவே சொல்லிட்டேன். எல்லாரும் அதை ஆமோதிப்பதுபோல பார்த்தாங்க.
முட்டி வலி ஒரு புறம், தூக்கமின்மை மறு புறம்.. ரங்குவும் த்ரிவிக்ரம அவதாரம் ஒரு புறம்.. ரொம்ப கஷ்டம்!

இந்த அழகுல ஏஸி கோச், தலைகாணி, வெள்ளை போர்வை, அமைதியான உறக்கம், திருச்சியில ஃப்ரெஷ்ஷா போய் இறங்கலாம்ன்னு என்னெல்லாம் நினைச்சுண்டோம்? நமக்கு? ஏஸி கோச்? இதெல்லாம் நடக்குமா என்ன? ஹைய்யோ ஹய்யோ!வசதி இருந்தாலுமே திண்டாடி தெருப்பொறுக்கி கஷ்டப்பட்டு அடிவாங்கின வடிவேலு மாதிரி தான் ஊர் போய்ச்சேரணும்ன்னு என் தலையிலே உளியால பிரும்மா செதுக்கியிருக்காரே? என்ன பண்ண?

கடவுள் புண்ணியத்துல ஒரு வழியா 5 மணிக்கு திருச்சில கொண்டு விட்டுட்டான். அப்பப்பா.. என்ன ஒரு நைட்மேர் ஜர்னின்னு புலம்பிண்டே நடந்தோம். யப்பா இனிமே ப்ரை’வேட்டு’ பஸ்ஸா? வேணாஞ்சாமீயோவ்!!!


நேரா குளிச்சு ரங்கனை தரிசனம் பண்ணினப்போ அலுப்பும் சலிப்பும் ஒரே நேரத்துல போயே போச்சு.. பட்ட கஷ்டமெல்லாம் மாயமா மறைஞ்சுடுத்து.


  
Related Posts with Thumbnails