Pages

Wednesday, May 8, 2013

ரங்குவின் பிஸினெஸ் ட்ரிப்கள்

ஃபோன் பண்ணி  “இன்னிக்கு lunch சாப்பிட வரமுடியாதும்மா” ன்னு ரங்கு சொல்லும்போது மனசுக்குளே "Yes Yes Yes....”ன்னு வெற்றிக்குறி காட்டிண்டாலும், வெளியே சோகமான முகத்துடன், "ஏன்? அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறேள் " போன்ற சம்பிரதாயக் கேள்விகளை சும்மாங்காச்சுக்கும் கேட்டு வைப்போம்.இந்த பதிவும் அதே மாதிரி தான்!

அதே மாதிரி தான் இந்த ரங்குவின் பிஸினெஸ் ட்ரிப்ஸ்! ஹய்யா ஜாலி, ரெண்டு நாள் சமயல் இல்லை, ரங்கு ஊருக்கு போனா நமக்கு இம்மீடியட்டா வெக்கேஷன் மூட் தானே வரது.. டைம் டேபிள் வாழ்க்கைக்கு ஒரு டாட்டா காட்டிடலாம்! நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்.

அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, அந்த பொற்காலம் மட்டும் என் வாழ்வில இது வரை வந்ததேயில்லை! 

ஒரு வாட்டி அபுதாபியிலேந்து எங்கேயே பக்கத்து ஊருக்கு, சரி சரி.. பக்கத்து நாட்டுக்கு  ரங்ஸ் பிஸினெஸ் ட்ரிப்புன்னு சொன்னார்.. நானும் தலைகாணி பாய், ஃப்ளீஸ் ப்ளான்கெட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு இவரை வழியனுப்பிட்டு தாழ் போட்டுண்டு படுத்தா ஒரு மணி நேரத்துல ஃப்ளைட் கான்ஸெல்ன்னு சொல்லிட்டு திரும்பி வந்துட்டார்! பிஸ்னெஸ் ட்ரிப்பும் இல்லே, என் வெக்கேஷனும் இல்லே! 

அதற்கடுத்த வாட்டி நான் அதே மாதிரி தலைகாணி, பாய், ஃப்ளீஸ் ப்ளான்கேட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு வழியனுப்பினேன். அப்போவும் சீக்கிரம் வேலை ஆயிடுத்துன்னு ரெண்டு நாள் ட்ரிப்பை ஒரே நாளில் முடிச்சுண்டு ஓடி வந்துட்டார்..

 நானும் இவர் கிளம்பும் போது “ஐ மிஸ் யூ” எல்லாம் சொல்லி, கண்ல ஜலம் வெச்சுண்டு சூப்பரா ஆக்ட்டு குடுத்து பார்த்தாச்சு, மசியவே மாட்டேங்கறார்.. நான் தலைகாணியை திருப்பிவெச்சுண்டு அந்தப்பக்கம் புரண்டு படுத்துக்கறதுக்குள்ள குறு குறுன்னு மூக்குல வேர்த்து ஓடி வந்து டிங் டாங்ன்னு பெல் அடிச்சுடுறார்!நற நற! 

போன வருஷம் இப்படித்தான் பிஸினெஸ் ட்ரிப், 8 நாள் ஆகும்(ஹய்ய்ய்ய்ய்ய்யா) பாம்பே போறேன், நீ இருந்துப்பியா?(இதறகாகத்தானே காத்துக்கொண்டிருந்தேன் மஹாதேவா?) பயம் இல்லையே(பயமா எனக்கா? என்னைப்பார்த்து மத்தவா பயந்துக்காம இருந்தா போறாதா?) ஏதாவதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு (என் ஃபோனையே எங்கேன்னு தேடணும், நான் தூங்க போறேன்,நீங்க கொஞ்சம் புறப்பட்டா தேவலை) அப்படீன்னெல்லாம் சொல்லி தாஜா பண்ணி அனுப்பி வெச்சா ரயில்லே பாம்பே போயிட்டு கேளுங்க மக்களே.. 5 நாள்.. அஞ்சே நாள்ல குடுகுடுன்னு ஓடி திரும்ப வந்திருக்கார். போன அலுப்பு கூட தீர்ந்திருக்காது.. அதுக்குள்ள புறப்பட்டு வந்தாச்சு.. அதுக்குள்ளேயுமா வந்துட்டார்ன்னு ஊர்ல இருக்கறவா எல்லாரும் ஃபோன் பண்ணி துக்கம் விஜாரிக்கறா.. பின்னே நான் ஊர்வசி மாதிரி எங்காத்துக்காரர் ஊருக்கு போயிருக்கார்ன்னு ட்ரம்பெட் வாசிச்சு சொல்லியாச்சு. 5 நாள் போன வழி தெரியலை! ரயில்ல போனப்போ வந்த பேண்ட்ரி கார் சர்வீஸ் ஸ்டாஃப் தான் வரும்போதும் வந்தாளாம் (க்கும் ரொம்ப முக்கியம், உங்களை சும்மாவா விட்டா?) அதுக்குள்ளே கிளம்பிட்டேளான்னு கேட்டாளாம் (இருக்காதோ பின்னே? யாராவது மும்பய் மாதிரி ஒரு அழகான நகரை சுத்தி பார்க்காம இப்படி கால்லே வென்னீர் ஊத்திண்டு சென்னைக்கு திரும்ப ஓடி வருவாளோ?)வரும்போது ஃப்ளைட் ட்ரை பண்ணினாராம்(நல்ல வேளை, கிடைக்கலை! அது மட்டும் கிடைச்சிருந்தது, மொத்தமா அந்த ப்ரைவேட் ஏர்லைன்ஸ்களையே நாசம் பண்ணி இருப்பேன்)

போன வாரம் மறுபடியும் என் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கற மாதிரி இருந்தது. 5 நாள் அத்தியாவசிய பிரயாணம். போயே ஆகணும்(பின்னே.. கிளம்பிடுங்கோ) நீ இருந்துப்பியா? (பின்னே செத்துடுவேனா? ) அப்படி இப்படின்னு கேட்டுட்டு 12 மணிக்கு கிளம்புவேன்னு சொன்னார். நானும் ஆ.......வலா பார்த்துண்டு இருந்தேன். ம்ஹும்.. வடிவேல் மாதிரி ”என் நீ க்ளைண்ட்மா..அவர் வந்து கூட்டிண்டு போவார்”ன்னு வெயிட் பண்ணி கடைசியில அவர் 5 மணிக்கு தான் வந்தார். நற நற...பால்கனியில் எட்டிப்பார்த்து டாட்டா சொல்லிட்டு ஜாலியா பாட்டு பாடிண்டே வெளீல கிளம்பி போய்ட்டு வந்தேன். நைட் எப்பையும் போல தூங்கிட்டு கார்த்தால என்னிக்கும் இல்லாம 8.30 வரை தூங்கி எழுந்தேன். (பின்னே பாக்கி நாள் தான் 8 மணிக்கே வெள்ளென எழுந்துடுவேனே! ;-) )நாள் முழுதும் அருண் வருண் கூட ட்ராயிங் பெயிண்டிங் எல்லாம் பண்ணிட்டு பொழுதை போக்கிட்டு நைட் வீட்டுக்கு வந்துட்டு வேணும்னே தூங்காம டீவீ பார்த்து, ஃபேஸ்புக்கில் காணமல் போனவர்க்ளை பற்றிய அறிவெப்பெல்லாம் படிச்சுட்டு, ஒரே விளையாட்டை வித விதமா விளையாடி, பழைய தந்தியால தெலுங்கு படங்களை டவுன்லோடி பார்த்து சிரித்து(அதான் நான் சிரிக்கும் கடைசி சிரிப்புன்னு எனக்கு தெரியாம போயிடுத்து) சிரிச்சுண்டு இருந்தேனா.. அப்போத்தான் அந்த செய்தி வந்தது.. ரங்கு தான், நான் வந்த வேலை முடிஞ்சது (அதுக்குள்ளேயா?) நான் இப்போ கிளம்பறேன்(அடுத்த ஊருக்கு தானே?) இல்லைம்மா, பாலக்காடு ப்ரோக்ராம் கான்ஸெல்(”அட ராமா”) ஆமா, இப்போ சென்னை வண்டிக்கு வெயிட்டிங், கார்த்தால 7 மணிக்கு சென்னை வந்துடும்(7 மணிக்கேவா, இப்போவே 1 மணி ஆச்சே, எப்படி 7 மணிக்கே சென்னை வரும்?) சரி கார்த்தல பார்க்கலாம்ன்னு சொல்லி கட் பண்ணிட்டார்..
நான் உடனே கவுந்தடிச்சு படுத்தும் தூக்கம் வரலை.. அலாம் வெச்சுண்டும் எழுந்து எழுந்து பார்த்தும் விடியாததால் கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். கடைசியில 6.10க்கு எழுந்தேன்.. வேகமா ஃபில்டர் போட்டு வெச்சுட்டு பல்லை தேய்ச்சுட்டு மறுபடியும் படுத்தேனா.. அப்படியே சொர்க்கமா தூக்கம்.. ஆஹா.. ரங்குவின் பஸ் அப்படியே கும்மிடிப்பூண்டி வழியா ஆந்திரா போயிடுத்துன்னா நாளைக்கு நைட்டு தான் வருவார்ன்னெல்லாம் இனிய கனவு..
கடைசியில் 9 மணிக்கு டாண்ணு ரங்கு வந்துட்டார். மேலேயும் கீழேயும் பார்த்தார், ”என்ன இன்னும் குளிக்கலையா?”ன்னு ஒரு லுக் விட்டார். எனக்கு  வந்த கோபத்துக்கு ”நீங்க ஏன் நேத்திக்கு மத்தியானமே என்னைக் கூப்பிட்டு இன்னிக்கி கார்த்தால வரேன்னு அப்டேட் பண்ணலை?  நான் ராத்திரி ஃபுல்லா தூங்கவேயில்லை தெரியுமா? இப்போத்தான் எழுந்திரிச்சேன்.. முடியவேயில்லை”ன்னு ஓன்னு அழுதுட்டேன்.. ”போனாப்போறது.. ஏன் கரையராய், நேக்கம்மா கிடையாது அக்கா கிடையாது தங்கை கிடையாது, ஆருங்கிடையாது”ன்னு ரங்கு தன் பழைய பல்லவியை ஸ்டாட் பண்னி  லவ் டாக்ஸ் ஆரம்பிச்சர் . அப்போத்தான் நான் அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டேன் - ”எப்போன்னா உங்க அடுத்த பிஸ்னஸ் ட்ரிப்? “அடுத்து ஆஸ்திரேலியா போவேண்டி இருக்கும்மா”- வந்ததே எனக்கு கோபம் - “எதுக்கு?  ஒரே நாள்ல திரும்பி வரதுக்கா? கார்த்தால ஃப்ளைட்டுல போயி இறங்கின உடனே, பாக்கேஜ் கலெக்ட் பண்ணீண்டு ஏர்போர்ட்லேந்து ஒரு ஃபோன்.. ஒரே ஃபோன் பண்ணி உங்க பிஸ்னெஸெல்லாம் பேசி முடிச்சு அப்படியே பாகேஜை அடுத்த ஃப்ளைட்டுக்கு செக் இன் பண்ணிடுவேள்? அப்படித்தானேன்னு கேட்டேன்! ஏர்ப்போர்ட்ல காஃபி நன்னால்லை, நேரே  ஆத்துக்கே போய் குடிச்சுக்கலாம்ன்னு புறப்பட்டு டொட்டடொயிங்ன்னு இங்கே வந்து நிப்பேள் இல்லையா?”ன்னு கேட்டுட்டேன்.

23 comments:

Geetha Sambasivam said...

//இவரை வழியனுப்பிட்டு தாழ் போட்டுண்டு படுத்தா ஒரு மணி நேரத்துல ஃப்ளைட் கான்ஸெல்ன்னு சொல்லிட்டு திரும்பி வந்துட்டார்!//


என்ன ஒரு பச்சை, மஞ்சள், சிவப்புனு எல்லாக் கலர்லேயும் துரோகம் அனன்யா அக்கா? பாவம் ரங்கு! உங்களைப் பிரிய முடியாமத் தவிக்கிறச்சே நீங்க அவரை விரட்டறீங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வைச்சுக்கறேன் உங்களை !

Geetha Sambasivam said...

கு.ப.த.வுக்கு துரோகம் பண்ணின அநன்யா அக்காவை வன்மையாய்க் கண்டிக்கிறேன்.

Geetha Sambasivam said...

அநன்யா அக்கா, ஜி+லே கமென்ட் ஆப்ஷனைக் கொஞ்சம் பாருங்க. கமென்டவே முடியறதில்லை. :(

சாந்தி மாரியப்பன் said...

//பாவம் ரங்கு! உங்களைப் பிரிய முடியாமத் தவிக்கிறச்சே நீங்க அவரை விரட்டறீங்க?? //

நான் இதை வன்மையாக..
;
;
;
;
;
;
;
;

;
;
;

;
;
;
;
;

;
;
ஹி..ஹி..ஹி... ஆமோதிக்கிறேன்.

Ananya Mahadevan said...

// உங்களைப் பிரிய முடியாமத் தவிக்கிறச்சே நீங்க அவரை விரட்டறீங்க// க்கும் ! அவருக்கு அவர் ஷெட்யூல் மாறக்கூடாது. அதாக்கும் விஷயம். வெளியில போனா ஜபம் தபம் எல்லாம் முடங்கும், அப்புறம் அவர் யோகா, மூச்சுப்பயிற்சி இப்படி பல வேலைகள் தடை படும். அதான் பிரச்சினை... என்னை பிரிய முடியாம தவிச்சுட்டாலும்!

Ananya Mahadevan said...

அமைதிச்சாரல் அக்ஸ், ஏன் இந்த கொலவெறீஈஈ?

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியும் ஒரு சந்தோசம்... (புரிதல்...?!) வாழ்த்துக்கள்...

Madhavan Srinivasagopalan said...

எங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா மகாதேவன் கிட்ட போகலாம்
அந்த மகாதேவனுக்கே ஒரு பிரச்சனைனா....

ஸ்ரீராம். said...

அடப்பாவமே.... அநன்யாவுக்கு வந்த சோதனை...!

வெங்கட் நாகராஜ் said...

அடப் பாவமே...... ரங்கு ரொம்பவே பாவம். :)

Dubukku said...

:))) சூப்பர். தட் தட் மேன் தட் தட் ஃபீலிங்...அவருக்கு என்ன ஃபீலிங்கோ :))

வல்லிசிம்ஹன் said...

இப்படிக்கூட ப்ரச்சினைகள் வருமா:)

பாவம்மா ரங்ஸ்.மன்னிச்சு விட்டுடுங்கோ.
நீங்க டூர் போயிடுங்கோளேன்!!!!!!

Ananya Mahadevan said...

டுபுக்கு அண்ணாத்தே, ரிஷி முனிகள், கற்கால மனிதர்களுக்கெல்லாம் நோ ஃபீலிங்க்ஸ், அவாள்ளாம் முற்றும் கடந்தவர்களாக்கும்.. நீங்க கேள்விப்பட்டதில்லையா?

Ananya Mahadevan said...

ஸ்ரீராமண்ணா, நீங்க மட்டும் தான் என்னை முழுசா புரிஞ்சுண்டு இருக்கேள்.. பாக்கி எல்லாரும் நண்பர்கள் மாதிரி நடிச்சு என் முதுகுல குத்தியிருக்கா பாருங்கோளேன்? மாதவன் அண்ணா, அவருக்கென்ன பிரச்சினை, நேக்குத்தான் பிரச்சினை. வல்லிம்மா, நான் டூர் போனா, நான் தானே அலையணும், ஆத்துல இருந்தா நன்னா தூங்கலாம், இஷ்டத்துக்கு பசிச்சா ஏதாவது பண்ணி சாப்பிடலாம், இல்லாட்டா அதுவுமில்லை.. ஹாங்.. அந்தக் குடுப்பினையெல்லாம் நேக்கெங்கே?

pudugaithendral said...

ரொம்ப நல்லா இருக்கு. எங்க வீட்டுக்காரர் ஊருக்கு போயிட்டாருன்னு அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் ஸ்டைல்ல சொல்லிக்கறதல்யும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது.

ஒரு வாரம் ஊருக்கு போகலைன்னா நாமளே கேட்டுடறது, “எப்பப்பா உங்க டூர் ப்ளான்னு!!”” :))

pudugaithendral said...

ரொம்ப நல்லா இருக்கு. எங்க வீட்டுக்காரர் ஊருக்கு போயிட்டாருன்னு அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் ஸ்டைல்ல சொல்லிக்கறதல்யும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது.

ஒரு வாரம் ஊருக்கு போகலைன்னா நாமளே கேட்டுடறது, “எப்பப்பா உங்க டூர் ப்ளான்னு!!”” :))

pudugaithendral said...

இஷ்டத்துக்கு பசிச்சா ஏதாவது பண்ணி சாப்பிடலாம், இல்லாட்டா அதுவுமில்லை..//

அது ஒரு தனி சுகம் :))) இதுக்காகத்தானே பல ஷார்ட் கட் சமையல்களை தெரிஞ்சி வெச்சிக்கறது.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஹுஸைனம்மா said...

ஹய்யோ...!! அனன்ஸ்.. கையக் கொடுங்கோ!! நான் அடிக்கடி எங்காத்துல.. .ஐ மீன்.. எங்க வீட்ல சலிச்சுக்கீறது.. “அடுத்த வீட்டுக்காரர் மாசத்துல நாலு நாள் டூர் போறார். எதுத்த வீட்டுக்காரர் வாரத்துக்கு ரெண்டு நாள் டூர் போறார். உங்களுக்கு மட்டும் அந்த மாதிரி டூர் எதும் அனுப்ப மாட்டாய்ங்களா?”ன்னு ... தெனோம் காலையில் 6 மணிக்கு அவர் ஆப்பீஸ் கிளம்பணும் - அதுக்கு நான் 5 மணிக்கே முழிக்கணும்!! லீவு நாள்லயும் ஷெட்யூல் மாறாம, வேளாவேளைக்கு எல்லாம் நடக்கணும் - ராத்திரி 10 மணிக்கே தூங்கறது உட்பட!! அவ்வ்...

பொறுக்காம நானே அடிக்கடி கேட்பேன், ‘இதென்ன ஹாஸ்டலா, ஜெயிலா.. மணியடிச்சா சோறுன்னு இருக்கிறதுக்கு?”ன்னு!! எனக்கெல்லாம் இந்தியாவுக்கு வெகேஷன் போனாலும் இதே ‘மணியடிச்சா சோறு’ கதைதான் - ஏன்னா அவர் குடும்பமே அப்படித்தான்!! :-((((

அப்பாதுரை said...

இப்படி ஒரு சதி நடக்கிறதா?!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//"ஏன்? அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறேள் "//

ரகசியம் ரகசியமாத்தான் இருக்கணும்... இப்படியெல்லாம் புட்டு புட்டு வெச்சா அப்புறம் புட்டுக்கும் யு சி...:)



//நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்.//

உன்கிட்ட நான் கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு போலயே...:)



//இதறகாகத்தானே காத்துக்கொண்டிருந்தேன் மஹாதேவா?//

ஆத்துக்காரர் பேரை சொன்னா அம்பாள் கனவுல கண்ணை குத்துவா தெரியாதோ நோக்கு..:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பயமா எனக்கா? என்னைப்பார்த்து மத்தவா பயந்துக்காம இருந்தா போறாதா//

குட் குட்... உண்மை எல்லாம் சொல்றியே...:)



//ரயில்ல போனப்போ வந்த பேண்ட்ரி கார் சர்வீஸ் ஸ்டாஃப் தான் வரும்போதும் வந்தாளாம்//

இதெல்லாம் நோட் பண்ணி இருக்காரா? என்ன ஏதுனு விஜாரிக்கறத விட்டுட்டு இந்த அசடு போஸ்ட் போட்டுண்டு இருக்கே, நம்மள விட அப்பாவியா இருக்கும் போலயே இந்த அனன்யா... :)



//மும்பய் மாதிரி ஒரு அழகான நகரை சுத்தி பார்க்காம இப்படி கால்லே வென்னீர் ஊத்திண்டு சென்னைக்கு திரும்ப ஓடி வருவாளோ//

உன்னை சுத்தினாலே போதும்னு வந்துட்டார் போல இருக்கு அனன்ஸ்... பிள்ளையார் அம்மை அப்பன சுத்தின மாதிரி...:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பின்னே பாக்கி நாள் தான் 8 மணிக்கே வெள்ளென எழுந்துடுவேனே! ;-)//

ச்சே ச்சே... என்ன பழக்கம் இது?நானெல்லாம் ஏலரைக்கே எழுந்துடுவேன்...:)



//நீங்க ஏன் நேத்திக்கு மத்தியானமே என்னைக் கூப்பிட்டு இன்னிக்கி கார்த்தால வரேன்னு அப்டேட் பண்ணலை//

போன்ல அப்டேட் பண்ணினா பிரியோசனமில்லனு நெனச்சு இருப்பார்... ஒருவேள facebookல போட்டிருந்தா நீ பாக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்லையா?..:)



//”எப்போன்னா உங்க அடுத்த பிஸ்னஸ் ட்ரிப்?//

அடிப்பாவி... ஓய்ஞ்சு போய் வந்த ஆத்துக்காரருக்கு ஆர்லிக்ஸ் கலக்கி தர்றத விட்டுட்டு இப்படியா அடுத்த ட்ரிப் பத்தி கேப்ப...அவ்வ்வ்வ்...:)



// “அடுத்து ஆஸ்திரேலியா போவேண்டி இருக்கும்மா//

எப்போனு சொல்லு... நான் பிளான் பண்ணி சென்னை வந்துடறேன்... நீ மட்டும் எப்படி ஜாலியா இருக்கலாம்...:)

Related Posts with Thumbnails