Pages

Tuesday, October 12, 2010

நவராத்திரி கலாட்டா

என் ப்ளாக் ஆரம்பிச்சு சுமார் ஒரு வருஷம் ஒரு வாரம் ஆயிடுத்து. ஆனிவர்ஸரி(?!!?) அன்னிக்கி மறந்துட்டேன்.. அதுக்குள்ளே, ஏகப்பட்ட பொக்கேக்கள், வாழ்த்து அட்டைகள், ஈ மெயில்கள், கிஃப்டுகள் என்று ...... யாருமே எதுவும் அனுப்பலை.. ஹிஹி.. நன்னி ஹை..

அதிருக்கட்டும். என்னத்தை எழுதறதுன்னு ஒண்ணுமே புரியலை. சென்னை புழுக்கத்தை பத்தியா, இல்லை எந்திரனை பத்தியா, இல்லை காமன்வெல்த் போட்டிகளை பத்தியா இல்லை, அமரர் சுஜாதா அவர்களின் ’ஒரே ஒரு துரோக’த்தை பத்தியான்னு குழம்பிண்டு இருந்தேன்.

நேத்திக்கு இந்த குழப்பத்தை தீர்க்க நவராத்திரிக்கு அழைக்க,  குங்குமச்சிமிழை எடுத்துண்டு ஒரு மாமி வந்தா வீட்டுக்கு. உடனே தெரிஞ்சு போயிடுத்து சரி அடுத்த போஸ்டும் அருண் வருண் தான்னு..

மாமி வந்த உடனே, அருண் வருண் மாமியிடம் போய்,” அண்ட அங்கிள் ரோபோ மேல ஜூஸ்(!?) ஊத்திட்டா, அப்போம் என்னாச்சு, ஒடைச்சு தூக்கி டஃப்பின் ல போட்டுட்டா.. உடனே குப்படிக்கிட் வன்னு, ரோபோவை தூக்கிண்டு போயிடுத்து” ன்னு ஆரம்பிச்சு ரொம்ப தெளிவா எந்திரன் கதையை மஹா சுருக்கமாக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. வந்த மாமிக்கு ஒண்ணுமே புரியலை. ”எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் நீங்க கொழந்தைகளையும் கூட்டிண்டு வரணும்”ன்னு சொல்லி, சொந்த செலவுல சூன்யம் வெச்சுண்டு,  குங்குமம் கொடுத்து அழைச்சா.
இதான் சாக்குன்னு அம்மா அந்த மாமியை கோழி அமுக்ற மாதிரி அமுக்கி, ”ஒரே நிமிஷம் ஒக்காருங்கோ இதோ, இப்போ வந்துடறேன்”னு அவசரமா தாம்பூலம் அரேஞ்ச் பண்ண ஆரம்பிச்சுட்டா.. இது ஃப்ளாட்ஸ், இங்கே தாம்பூலம் வாங்கிக்க வாங்கோன்னு போய் கூப்பிட யாரும் இல்லை.. அவங்களே வந்தா நிர்பந்தம் பண்ணி கொடுத்துடலாம்ன்னு அம்மா ஐடியா பண்ணி இருக்காங்க. இங்கேயும் அங்கேயும் ஓடி தேடி ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், ஒரு ரூபாய் எல்லாம் எடுத்து வெச்சா திடீர்ன்னு வருண் அந்த இடத்துக்கு வந்து தன் கைவரிசையை காட்டிட்டான்! என்னவா? அதான் இருந்த ஒரே...... ஒரு ஆப்பிளை நறுக்குன்னு கடிச்சுட்டான்.. அதை சாதாரண நாள்லே எல்லாம் ஏக கருப்பா சுருங்கி, எலந்தைப்பழம் மாதிரி ஆகி தூக்கி போடுற  வரைக்கும் சீந்தினதே இல்லை.. இன்னைக்கு என்னம்மோ கன காரியமா மாமிக்கி தாம்பூலத்துக்கு வெச்சிருந்த ஆப்பிளை கடிச்சு இருக்கான்!
நல்ல வேளை ஒரே ஒரு கொய்யா இருந்ததோ அம்மா தப்பிச்சாங்க. அதை வெச்சு சமாளிச்சோம்.

அடுத்து, நம்ம ஹீரோ அருண் ரேஷன்ல வாங்கிய ஏதோ ஒரு மாவை தூக்க முடியாமல் தூக்கிண்டு போய் ’கன்னானிடி’ன்னு அடித்தொண்டையில் சொல்லி மாமியிடம் காட்டிண்டு இருந்தான்! கன்னானிடின்னா என்னவா?
கருணாநிதியாம்! :))

அந்த மாமியின் வீட்டுக்கு போனோம். இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்கும் ஓடி ஓடி சுத்தி பார்த்துண்டே இருந்தாங்க. இவங்க பின்னாடியே இவங்க பேபிசிட்டரும்! இங்கே பாரு வருண் பொம்மையெல்லாம். எவ்ளோ அழகா இருக்கு பாரேன்னு சொன்னப்போ தான் ஓஹோ இதை பார்க்கத்தான் வந்திருக்கோம் போல இருக்குன்னு புரிஞ்சுண்டு என் பக்கத்துல வந்தான். (உட்காருவதெல்லாம் அவன் டிக்‌ஷனரியிலேயே இல்லை!) ”இடு என்ன?” ”வெளவெளவா?” ன்னான். (நாய்). ”ஆமா இது வெளவெள”ன்னு சொன்னேன். ”இடு”? அப்படீன்னான். ”இது செட்டியார், செட்டியாரம்மா.. கடை வெச்சுண்டு இருக்காங்க”ன்னு சொன்னேன். உடனே, ”இடு?” இது பொண்ணு மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிண்டு இருக்காங்க”ன்னேன். உடனே, ”உனக்கு கல்யாணம் பண்ணலாமா? நீ பண்ணிக்கிறயா”ன்னு கேட்டேன். பண்ணிக்கறேன்னு (அப்பாவியா!!! அப்பாவி ரங்கமணி அல்ல) சொன்னான். உடனே வருண் திருமண மஹோற்சவத்தை கற்பனைக்குதிரையில் தட்டி விட்டு பார்த்தேன்.. என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி!

மாப்பிள்ளையை வரச்சொல்லுங்கோ, மாங்கல்ய தாரண சடங்கு இருக்குன்னு சாவதான் சொல்லிண்டு இருப்பா.. இவன் வேஷ்டியெல்லாம் அவுந்து டயப்பரோட மண்டபம் பூரா பூவை பிச்சு போட்டுண்டு ஓடிண்டே இருப்பான். மையெல்லாம் ஈஷிண்டு வேர்த்து வழியும். இவனுக்கு பின்னாடியே துரத்திண்டு இவனோட பேபி சிட்டர்,” வருண் வாம்மா, மாங்கல்ய தாரணம் இருக்கு கண்ணா.. கூப்படறா பாரு”ன்னு சொல்லிண்டு இருப்பா. இவன் ரகளை பண்ணி தாலி கட்டிட்டு மறுபடியும் பந்தியில் பேப்பர் ரோல் போட்டு இலை போடுறதை ஆவலா பார்க்க போயிடுவான். இல்லையோ பின்னே? இலையெல்லாம் இழுத்து கீழே தள்ள வேண்டாமா?

அடுத்தபடியாக அருண் வந்து,” நானக்கு கல்யாணம்?”ன்னு கேப்பான். உடனே ”இந்தா நீ இந்தப்பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கோ”ன்னு நாம சொல்லுவோம். அதுவும் அழகா பேபி ஷாமிலி மாதிரி மூக்கும் முழியும் ரெண்டு சிண்டு போட்டுண்டு கொழு கொழுன்னு இருக்கும். ஆனா இவன், ”நானக்கு அன்ன பாப்பானா வேணும்”ன்னு உதட்டை பிதுக்கி அழுவான். இவனுக்கும் அதே பொண்ணு தான் வேணுமாம்! எப்போவுமே இப்படித்தான்.. அவன் வெச்சுண்டு இருக்கறதே தான் இவனுக்கும் வேணும்.

இதை அந்த மாமிகிட்டே சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிக்கறா!

அந்த மாமிகிட்டே போய் சுண்டல் வேணும் சுண்டல்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு இருக்காங்க. மொத்தத்தில் செம கலாட்டா நேத்திக்கி.

நாங்க வெளியேறும்போது, மாமி கண்ணில் ஆனந்தம். குழந்தைகள் வந்ததுனாலே ரொம்பவும் சந்தோஷமா இருந்ததுன்னு சொல்லி அருண் வருண் உச்சி முகர்ந்தார். நமக்கு அதானே வேணும். இவங்க ரெண்டு பேரும் தான் பண்டில் ஆஃப் ஜாய் ஆச்சே! எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை ஷேர் பண்ண வேண்டாமோ?

Thursday, September 16, 2010

அருண் மாஞ்சாரோ செல்ல வருண் மாஞ்சாரோ...

பல்லாயிரக்கணக்கான மெயிலின் மூலம் ப்ளீஸ் அநன்யா அருண் வருண் பத்தி இன்னும் நிறைய எழுதுங்கன்னு ரசிகர்கள்(!!??!!) கேட்காததுனால இத்தனை நாள் கழிச்சு இந்த போஸ்டு. இந்தப்பதிவு நம்ம சந்தியாவுக்காக மட்டும்.. ஹிஹி!

சந்தியா நான் எதை விடுவேன் எதைச்சொல்லுவேன்?. நிறைய அழகழகா பண்றாங்க.

ஃபோன்ல இஷ்டத்துக்கு நம்பர் டயல் பண்ணிண்டு இருந்த வருண் திடீர்ன்னு பயந்து அழ ஆரம்பிச்சுட்டான். என்னம்மான்னு ஓடிப்போய் கேட்டா, ”ஆடோ திட்டா” ன்னு சொன்னான்.(அருஞ்சொற்பொருள்= யாரோ திட்றா) ரீஸீவரை எடுத்து காதுல வெச்சுண்டு பார்த்தா, ”திஸ் டெலிஃபோன் நம்பர் டஸ்னாட் எக்ஸிஸ்ட்” னு ஒரு பொண்ணு கொஞ்சம் கடுமையா சொல்லிண்டு இருக்கா!!!

பெய்யம்மா ஹாப்பி பர்த்டே ஆச்சு. அம்மா ஹாப்பி பர்த்டேக்கு கேக் கட் பண்ணி கொண்டாடியாச்சு. கிருஷ்ணா ஜேஜா பர்த்டேக்கு பாட்டி ஏகப்பட்ட பலகாரம் பண்ணினாங்க. அதே மாதிரி பிள்ளையார் ஜேஜா ஹாப்பி பர்த்டேன்னு சொன்னது தான் தப்பா போயிடுத்து.. உஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ன்னு ஊதி, விளக்கை பூஜை நேரத்துல அணைச்சுட்டாங்க..

அன்னிக்கு அப்படித்தான் ஹோட்டலில் இருந்து ஏதோ ஆர்டர் பண்ணி இருந்தா தங்கை மணி. வருண் பாப்பா அவசரமா போய் கதவை திறந்து,” சவரண பவன் சவரண பவன்”னு கத்தி, டெலிவரி பாய்க்கு சிரிச்சு சிரிச்சு, வயித்த வலியே வந்திடுத்து! ஆமாங்க சரவணபவன்ல தான் ஆர்டர் பண்ணி இருந்திருக்கா.

அருண் சாதாரணமா பேசும் போது ரொம்ப energy conservation conscious ஆ இருப்பான். ரொம்பவே சின்ன குரல்ல தான் பேசுவான். அன்னிக்கி அப்படித்தான் ”சோமஸேறி போடிங்க பெய்யம்மா சோமஸேறி போடிங்க”ன்னு சொல்லிண்டு என் பின்னாடியே சுத்திண்டு இருந்தான். அவனை இழுத்து காதுகிட்டே வெச்சுண்டு என்ன அருண்னு கேட்டா சோமசேறின்னு தெளிவா(!!) மழலையில கேக்கறான். ஒரு கட்டத்துல அவனுக்கு பொறுமை போயி அழ ஆரம்பிச்சுட்டான். எனக்கு இன்னும் புரிஞ்சபாடில்லை. அப்புறம் வருண் குத்து மதிப்பா எடுத்து சொன்னப்போ தான் புரிஞ்சது. any guesses? TOM AND JERRY வேணுமாம் டீவீயில.. உஸ்ஸ்!! சிரிச்சு சிரிச்சு முடியலை. எப்போவுமே யுவன் ஷங்கர் ராஜாமாதிரி லேசா அலட்டிக்காம காத்தை மட்டும் உள்வாங்கி வெளியே விட்டு பேசி முடிச்சுடுறானேன்னு ரொம்பவே ஆதங்கப்பட்டேன்!

வருணுக்கு கதை சொல்ற ப்ராஜக்டு இருக்கே, அது ரொம்ப லொள்ளு! இவனுக்கு இப்படித்தான் ஒரே ஒரு வாட்டி Noddy கதை சொல்ல ஆரம்பிச்சேன், அது டெய்லி பழகிடுத்து. முதல்லே ஒரு 10 கதை தான் கேட்டுண்டு இருந்தான். இப்போ தினமும் அது கிராஜுவலா அதிகரிச்சு 289 கதை கேக்கறான். 7 மணிக்கு கதை சொல்ல ஆரம்பிச்சா சுமார் 11.00 மணி வரைக்கும் கேக்கறான். அதுக்கப்புறமும் நாம முழிச்சிருந்தா, ஏதோ அவனாலான உபகாரம், பெய்யம்மா, ட்வாகன் கட சொல்லிங்கன்னு கேக்கறான்! ட்வாகன் அருஞ்சொற்பொருள் = Dragon! என்னால முடியலை!

வருணுக்கு வைப்பர் வருண்ன்னு ஒரு பட்டப்பேரே வெச்சுடலாம் போல இருக்கு! அந்த அளவுக்கு wind shield wipers மேல அவனுக்கு தீவிர லவ்வு. ரெண்டு ஆள்காட்டி விரல்களையும் நேரா வெச்சுண்டு தி வைப்பர்ஸ் ஆன் தி பஸ் கோ வீஸ் வீஸ் வீஸ் (ஸ்விஷ் ஸ்விஷ் ஸ்விஷ்ஆமா!!!, வருணுக்கு ஷ இன்னும் வரலை, ஸவர், கோல்டு ஃபிஸ்) ன்னு பாடும்போது அப்படி ஒரு அழகு. அன்னிக்கு அப்படித்தான் செம தூக்க கலக்கத்தோட கட சொல்லுங்க பெய்யம்மான்னு கேட்டான். நாடி என்ன பண்ணினான்....ன்னு நான் ஆரம்பிக்கும்போதே, ஒரே மழையான்னு கேட்டான். குழப்பத்தோட என்னன்னு கேட்டேன். மழை எதுக்கு வருண்னு கேட்டா, மழை வந்தாத்தான் வைப்பர் போடுவாங்க பெய்யம்மான்னு சொல்றான்!!.

 ஒரு கட்டத்துல செம்ம டென்ஸனாயிட்டேன். மழையெல்லாம் இல்லை வருண், ப்ரைட் சன்னி டே தான்னு சொன்னேனோ இல்லையோ, ஒரே அழுகை.. கட்டாயம் வைப்பர் பத்தி தான் கதை சொல்லணும்ன்னு ஒரே ரகளை! நானும் அழுதுண்டே வைப்பர் துடைச்சான், வைப்பர் ஸ்டக் ஆனது, வைப்பர் ரிப்பேர் ஆன கதை எல்லாம் சொல்லி பார்த்தேன்.. ம்ஹூம்.. அப்போவும் விடலை..கடைசியில தமிழ் சினிமா ரேஞ்சுக்கு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு பிள்ளையார் வாங்கப்போன நாடி ஃப்ரெண்ட்ஸ்கூட கார்ல மழையில மாட்டிண்டு வைப்பர் ரிப்பேர் ஆயி, மெக்கானிக் ஷெட்ல போய் ரிப்பேர் பண்ணி, வீட்டுக்கு ரிட்டன் ஆன கதையை ஃபுல் டால்பி டிஜிட்டல் எஃபக்ஸோட சொன்னேன், திருப்தியா 12.30க்கு தூங்கிட்டான்!

அருணுக்கு சளி ஜாஸ்தி ஆனப்போ ஹாஸ்பிடலுக்கு போய், நெபிலைஸர் வெச்சாங்க, அப்போ அவன் அமைதியா இருந்தானாம், நர்ஸ் அகமகிழ்ந்து, இப்படி ஒரு குழந்தையான்னு ஆச்சரியப்பட்டாளாம்! இதுவே வருணா இருந்தா, அந்த நர்ஸூக்கே நெபிலைஸர் வெக்க வேண்டி வந்திருக்கும்ன்னு தங்கைமணி சொன்னா.. சிரிப்பு தாங்கலை!

கொஞ்ச நேரம் ஹாலில் இருந்துட்டு கிச்சனுக்கு போனால் அங்கே அருணின் கைவண்ணம்! உடனே ஃபோட்டோ எடுத்தேன். நான் போட்ட சத்தத்தில் அவன் மறுபடியும் வந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தான்!
படத்தில் அருண் இட்லி வார்த்த அழகு உங்களுக்காக.

காடாக வளர்ந்துட்ட முடியை வெட்டலாம்ன்னு ஒரு சலூனுக்கு கூட்டிண்டு போனோம். முதன் முறையா ஆண்கள் சலூனில் நானும் அம்மாவும் நுழைஞ்சோம். வருணின் அழுகை, நச்சு எல்லாம் பார்த்து அந்த கடைக்காரர் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டார். எப்படியோ சமாதானப்படுத்தி குத்துமதிப்பா வெட்டி விட்டார். இன்னும் கொஞ்சம்ன்னு கேட்டிருந்தா அவர் சலூனை மூடிட்டு எஸ்கேப்பாகி இருப்பார் என்பது மட்டும் திண்ணமா தெரிஞ்சது!
சலூன்லேயும் பெய்யம்மா ஃபோட்டோ எடுப்பா இல்லே?எப்பூடீ?


டெய்லி ஸ்கூலுக்கு போகும்போது, ஒவ்வொரு பொய்க்கு மசிவதும், அதை நம்புவதும், இவங்களை விட்டுட்டு வெளீல போகும்போது ஏதாவது சொல்லி சமாதானப்படுத்துவதும் இந்த பருவத்துக்கே உரிய அப்பாவித்தனமும் அழகும், அப்பப்பா..

டென்னிஸ் தி மெனஸ் பார்த்துண்டு இருந்தேன்.(அது வேற தனியா எதுக்கு? வீட்டுலேயே டபுள் டென்னிஸ் இருக்காங்களே!!) அதுல ராட்சத ரகளைகள் பண்ணி மிஸ்டர் வில்சன் என்ற பக்கத்துவீட்டுக்காரரை டார்ச்சர் செய்யும் டென்னிஸ், அவர் வீடு காலி பண்ணிண்டு போகும் தருவாயில், ”மிஸ்டர் வில்ஸன், யூ ஆர் மை பெஸ்டெஸ்டு ஃப்ரெண்ட் இன் தி ஹோல் வேர்ல்ட்’ன்னு சொன்னப்போ என்னையும் அறியாமல் வருணை வாரி அணைத்து முத்தம் கொடுத்தேன். சிரிச்சுண்டே, பெய்யம்மா கட (kada) சொல்லுங்க என்றான்!

Saturday, August 28, 2010

மதறாஸப்பட்டினமும் என் கஷ்டகாலமும்!

முதன் முதலாக இந்தப்படத்தின் டிரெயிலரை ஜிகர்தண்டா சொல்லி யூ டியூபில் பார்த்தேன்.. நொந்தேன்.. அதென்னம்மோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை ட்ரெயிலரே பிடிக்கலை.. லகானின் ஜாடைகளுடன், நாடோடித்தென்றல் மாதிரி இருக்கும்ன்னு மனசுக்கு பட்டது.
சரி சென்னை வந்தப்போ எல்லாருமே மதறாஸபட்டினம் ஆஹா ஓஹோன்னு ஒரே பேச்சு. என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக(!!???!!) இருக்கட்டுமேன்னு என் தங்கையும் சேகருமா சேர்ந்து இந்தப்படத்துக்கு கூட்டிண்டு போயிட்டாங்க. காசி தியேட்டர் கூட்டத்தில் நான் நிஜம்மாவே படம் நல்லாத்தான் இருக்கும்போல இருக்குன்னு நம்ப்ப்ப்ப்ப்பி உள்ளே போய் உட்கார்ந்தேங்க..

உஸ்ஸ்... முடியலை..

என்னம்மோ படம் பூராவுமே ஒரு Dejavu effect! இதை எங்கியோ பார்த்திருக்கோமேன்னு தோணிண்டே இருந்தது. ஒரு redundancy! எரிச்சல் தான் வந்தது.. பாட்டுக்கள் முக்கால்வாசி மொக்கை அல்லது அவற்றை ரசிக்கும் திறன் எனக்கில்லை.. கதை = இது வரை வந்த பல படங்களின் பாதிப்பில் இருந்ததால் கதைன்னு ஒண்ணு இருக்கறாப்புல எனக்கு தெரியலை.
நடிக நடிகையர்களுக்குள்ளே அந்த பிரிட்டிஷ் பொண்ணு மட்டும் தான் மனசுல நிக்கறா.. குறிப்பிட்டு சொல்லணும்ன்னா நம்ம வி.எம்.ஹனீஃபா.. மத்தபடி.. சாரி..
அம்மா படம் ஆரம்பிச்சு மூணு வாட்டி குறட்டை விட்டு தூங்கிட்டாங்க.. எழுப்பிண்டே இருந்தோம். எப்போடீ முடியும்ன்னு கேட்டு நச்சரிச்சுண்டே இருந்தாங்க.. நானோ வேற வழியில்லாம உட்கார்ந்து பார்த்தேன்..

தங்கை மணி ஃபுல் ஃபார்ம்ல செம்ம கமெண்ட்ஸ் பாஸ் பண்ணிண்டே இருந்தா.. பின்னாடி ரெண்டு பொடிமாஸ்(அதாவது டீனேஜ் பையன்கள்) உக்காண்டு படுபயங்கர கலாசல்.. முக்கியமா துரையம்மா(!!!???) ஆர்யாவை தண்ணிக்குள்ளே தள்ளிவிடும் காட்சியில் அவர்களையும் அறியாமல், ஜாக்... ரோஸ்..ன்னு டைட்டானிக் ஸ்டையில்ல கத்திட்டாங்க.. அப்படி ஒரு அட்டக்காப்பி அந்த சீன்ல.. அதே ஸ்டயில்ல அங்கே ஒரு நெக்லஸ் மாதிரி இங்கே ஒரு தாலி!!! தமிழ்ப்படம். என்னிக்கு உருப்படும்? தியேட்டரே கொல்ல்!!! அப்புறம் நம்ம ஈரோயினி தமிழ் பேசினப்போ யம்மா தாயீ, நீ இங்கிலீஷ் பேசினாலே பரவாயில்லை எங்களுக்கு சுமாரா புரியும்.. தமிழை வுட்ரும்மான்னு கலாட்டா..

நான் கேக்கறேன் நம்மூர்ல எந்த சலவைக்காரர் ஓவர்கோட் மட்டும் போட்டுண்டு வேலை பண்றாங்க?

எனக்கு தெரிஞ்சு இந்தப்படத்துல ஒரே ஒரு ஆறுதல் தான்.. ஆர்யாவுக்கு ஒரு முறைப்பொண்ணை வெச்சு, அது இவனை ஒரு தலையா லவ்வி, ஆர்யாவை துரத்தி துரத்தி ஒரு பாட்டு,கல்யாணக்கனவோட இன்னொரு பாட்டு, அப்புறம் அவன் கிடைக்கமாட்டான்னு சோகத்துல ஒரு பாட்டு, இவ உயிரைக்கொடுத்து ஆர்யா உயிரை காப்பாத்திட்டு ஒரு பாட்டுன்னு ரேஞ்சுல இன்னும் ஜவ்வா இழுக்காம க்ரிஸ்ப்பா கதையை முடிச்சதுக்கு இயக்குனர் விஜய்க்கு ஒரு ஷொட்டு.

Monday, August 23, 2010

வந்துட்டோம்ல?

இவ்ளோ நாள் கழிச்சு மீண்டும் வந்துட்டேன். அதென்னான்னா, இங்கே எனக்கு நெட் ஆக்ஸஸ் இல்லை. அதோட இந்த அருண் வருண் கூட ரன்னிங் ரேஸுக்கே நேரம் சரியா இருக்கா, அதுனால வாரம் ஒருவாட்டி மெயில்
மட்டும் வந்து பார்த்துக்கறது.

ரெண்டு மாசம் முழுசா சென்னையில அமைதியா எந்த ஊருக்கும் போகாம இருக்கறது பயங்கர ஹேப்பியா இருக்கு.  நல்ல வேளை இன்னும் ரங்கு வெக்கேஷனுக்கு வரலை. அதுவரை ஜாலியா இங்கேயே இருந்துக்கலாம்ன்னு சொல்லி இருக்கார்.

பேசாம சென்னையிலேயே இருந்துட்டா என்னன்னு தோணுது!

சரி எல்லாருக்கும் என்னோட ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்.

முக்கியமா டேரிக்கு வாழ்த்துக்கள். நேர்ல சொல்லியாச்சுன்னாலும் ஒரு பதிவு போடாட்டி எப்படி?

டேரி எப்படீன்னா, அம்மா பண்ணும் பால் போளிக்காகவே ஆவணி அவிட்டம் கொண்டாடுவார். அதாவது புதுப்பூணல் போட்டுண்டு ஒரு ஐஞ்சு நிமிஷம் ஜபம். தட்ஸால்! ஹிஹி!

அம்மா இதுக்காக கார்த்தால் சீக்கிரம் எழுந்து போளி பண்ணிண்டு இருப்பாங்க!
அன்னிக்கி அப்படித்தான், டேரியை கலாட்டா பண்றதுக்காக காயத்ரி சொல்லுங்கப்பான்னு கேட்டுண்டு இருந்தோம், ஓம் பூர் புவஸ்வஹ, பர்கோ என்றாரேப்பார்க்கலாம்!!!! தங்கை மணி கோபத்தில் ஸ்டாப்பிட்ன்னு கத்திட்டா! நைனா உடனே சுதாரிச்சுண்டு,”நான் என்ன பண்றது? எனக்கு வயசாயிடுத்துன்னு ஒரு சமாளிஃபிக்கேஷன் வேற”! நற நற...

ரெண்டு வருஷம் முன்னாடி வரலக்ஷ்மி விரதத்துக்கு நாங்கள் சென்னையில் கேம்ப் அடிச்சிருந்தோம். ஆவணி அவிட்டம் முடிஞ்சு காயத்ரி ஜபத்தன்னைக்கி அப்பா புதுப்பூணல் போட்டுண்டு, மாடிக்கு  போய் ஜபம் பண்ணிட்டு வந்தார். அப்போ தான் கீழ்க்கண்ட சம்பாஷணை நடந்தது

நான்: அப்பா எத்தனை வாட்டி ஜபிச்சீங்க?

நைனா: நான் சாயி அஷ்ட்டோத்திரம் ஜபிச்சாச்சு

நான்: அதில்லைப்பா  காயத்ரி மந்திரம் எத்தனை சொன்னீங்க?

நைனா: நான் காகட ஆரத்தி, ஸத்சரித்திரம் எல்லாம் சொல்லிட்டு வந்தேன்

நான்:(கொஞ்சம் கடுப்புடன்) அதில்லை, காயத்ரி மந்திரம்ப்பா....

நைனா: (ரொம்ப பெருமிதத்துடன்)நான் 18 வாட்டி சொல்லியாச்சு

நான்:!!!???????!!!!! சமாளித்துக்கொண்டு, அப்பா, zeroவுக்கு value இல்லைங்கறதுக்காக இப்புடியா? கொஞ்ச்ச்ச்ச்சம் ஓவரா தெரியலை? 1008 சொல்ல வேண்டிய இடத்துல 18 ஆ? நம்பருக்கு முன்னாடி இருந்தாத்தான் zeroவுக்கு value இல்லை! டூ மச் ஐ ஸே!

தி நைனா இப்படிஎல்லாம் போங்காட்டம் ஆடினாலும் இந்த பண்டிகை மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாள் தான். இன்னும் சில வருஷத்துல அருண் வருண் கூட இதே மாதிரி போங்காட்டம் ஆடுவாங்களோ? யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்!!!

Tuesday, July 13, 2010

குழலினிது யாழினிது என்பர்....

இரண்டரையே வயது தான். குழந்தைகள் எவ்ளோ பேச்சு பேசுறாங்க? ஆச்சரியமா இருக்கு!
அருண் வருண் பேசும் சில பேச்சுக்கள் இங்கே உங்களுக்காக

1.வருண் எப்போவும் டீ.வீ வைத்திருக்கும் டேபிள் மேல் ஏறி துஷ்டத்தனம் செய்வான். அவனை அங்கிருந்து தூக்கி இறக்கிவிட்டுண்டே இருந்தார் என் மச்சினர். ஒரு பொம்மை டெலிஃபோனை எடுத்து, வருண் சொல்றான்,” ஹலோ போலீஸா? எங்கப்பா இங்கே ரொம்ப வெஸனம்(!!!) பண்றார், அவரை வந்து பிடிச்சுண்டு போங்கோ”

அருஞ்சொற்பொருள்:

வெஸனம் = விஷமம்


2.அம்மா:”அருண்,  இப்போ பாரேன், வருண் பாப்பா தோசை சாப்பிட போறான்....”
அருண்: “நானக்கு????”

அருஞ்சொற்பொருள்:
நானக்கு = எனக்கு

3.நான்: “வருண் அதை அங்கே வைக்கக்கூடாது. ”
வருண்: ”அதை அங்கே வைய க்கூடணும்”

4.நான்: ”அருண் அதை எடுக்காதே!!! அங்கேயே வெச்சுடு.
அருண்: ”அதை அங்கே வைக்கக்குடாது”


5.அருண் பாப்பாவுக்கு சட்டை பட்டன் போடுறதுன்னா ரொம்ப பிடித்தமான வேலை. தாத்தா வெளீல கிளம்பினா அவன் தான் சட்டை பட்டன் போட்டு விடுவான். அன்னிக்கி அப்படித்தான் தாத்தாவுக்கு பட்டன் போட்டு விட்டுண்டு இருந்தான். தாத்தா இவனுக்கு உதவிண்டு இருந்தார். இவனுக்கு முன்னாடி தாத்தாவே ஒருவேளை பட்டன் போட்டுடுவாரோன்னு கோவிச்சுண்டு தாத்தாவை, டாய் டாய் டாய்ன்னு கத்திண்டே இவன் பட்டன் போட்டுக்கறான்!!!


6.தாத்தா: ”ஐய்யோ, என் கண்ணாடி.. அதை என்கிட்டே குடுத்துடு வருண், வேண்டாம்மா”
வருண்: இந்த கண்ணாடி வேண்டாம் தாத்தா, இது ஆய், நான் உங்களுக்கு வேற வாங்கித்தரேன். (!!!???!!!)

Monday, July 5, 2010

வருண லீலைகள்

சென்ற பதிவில் என் தங்கை மணியின் ரெட்டை வால்ஸ் அருண் வருண் பத்தி சொல்லி இருந்தேன். ரெண்டரை வயது ரெட்டை வாண்டுக்கள். இவங்களைப்பத்தி ஒரு பழைய பதிவு கூட எழுதி இருக்கேன்.

இந்த ரெண்டு பேருக்கும் என்னிடம் ரொம்ப பிடித்த விஷயமே என்னுடைய எக்கோலேக் பெட்டி தான். அவர்கள் உயரத்தை விட சற்றே உயரமான தள்ளும் வசதியுடன் கூடிய பெட்டி. அதுக்கு பெய்யப்பா பெட்டின்னு பேர் வெச்சிருக்காங்க. .

அந்த பெட்டி மேல வருணுக்கு பயங்கரமான கண். எப்போப்பார்த்தாலும் அதை உருட்டி விளையாடுவான். இல்லாட்டி கீழே படுக்க போட்டு இருந்தா, அதன் மேல ஏறி குதி குதின்னு குதிப்பது. இதே தான் வேலை.
அன்னிக்கு எங்கேயோ போயிட்டு வந்து உடை மாற்றிக்கலாம்ன்னு பெட்டியை திறந்தப்போ ரெண்டு வாண்டும் என்கூடவே வந்திடுத்து. நானும் அதை லாக் பண்ணாம மூடி வெச்சுட்டு, சமர்த்தா இருங்கோன்னு இவர்களை வார்ன் பண்ணிட்டுத்தான் ட்ரெஸ் சேஞ்சு பண்ணிக்க போனேன். வந்து பார்த்தப்போ என் தலை 360 டிகிரியில சுத்திடுத்து!

என் பெட்டி அலங்கோலமா திறந்து கிடக்கு.
ட்ரை வாஷ் பண்ணி வெச்சிருந்த பட்டுப்புடவை எல்லாம் கீழே சிதறி கிடக்கு. மாத்திரைகள் ஒரு பக்கம் இறைஞ்சு கிடக்கு.
துணிகள் எல்லாம் இங்கொண்ணும் அங்கொண்ணுமாக வீடெல்லாம் பரப்பப்பட்டு சிலது நைனா சுருணைத்துணி போல இருக்குன்னு சொல்லிட்டு கொல்லைப்புறத்துக்கு எடுத்துண்டு போயிண்டு இருக்கார்.
பெட்டியை காலி பண்ணின சந்தோஷத்தில் வருண் அதுக்குள்ளே இறங்கி கன கார்யமா மூச்சா போயிண்டு இருந்தான்!!!. அருண் அந்தப்பக்கம் என் நகைப்பெட்டியில் இருந்த மாலையை எடுத்து அழகு பார்த்துண்டு இருந்தான்!!!
எனக்கு அழுகை அழுகையா வந்துடுத்து.
அம்மாஆ.......ன்னு கத்தினேன். என்னாச்சுன்னு அம்மா ஓடி வந்து பார்த்து, ச்சீ அசடு, இதெல்லாம் இவங்க திறமைக்கு ஒண்ணுமே இல்லை. இன்னும் பாருன்னு சொல்லிண்டே குழந்தையை நகர்த்தி டயப்பர் கட்டி மூச்சா துடைத்து, வீடு பூரா இரைஞ்ச துணிகளை எல்லாம் தேடி எடுத்துண்டு வந்து மடிச்சு வைச்சு உஸ்ஸ்ஸ்!! தாவு தீந்து போயிடுத்து!
இதே மாதிரி கிச்சனில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கீழே ஒரு ஸ்வீப்பில் இறைத்தது, அம்மா சாப்பிடும் போது 270 டிகிரியில் கையை சுத்தி தட்டை கீழே தள்ளி விடுவது, பூவை ஒரே செகண்டில் பிய்த்துப்போடுவது, புத்தும் பது சினேகிதி அவள் விகடனைக்கொண்டு எப்படி வீடு துடைப்பது உட்பட பல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தெரிஞ்சு வெச்சிருக்கான் வருண். இதுக்கெல்லாம் சப்போர்டிங் சிங்கிடி அருண். தம்பி செய்யறது எதுவா இருந்தாலும் சரியாத்தான் இருக்கும்ன்னு ஓடி வந்து கூட நின்னுப்பான். ஏதாவது ஹெல்ப் வேணுமா என்பது போல நின்னுண்டு கனகார்யமா துஷ்டத்தனத்துக்கு துணை போவான்.
வருணுக்கு ஷவர், போலீஸ் இது ரெண்டும் தான் பயம். எப்போவும் போலீஸ் வரப்போறதுன்னு சொல்லியாச்சுன்னா போதும், அடங்கி ஒடுங்கி அமைதி ஆயிடுறான். மத்தபடி ஃபுல் ஃபார்ம்ல ரகளை தொடருது!

போன வருஷம் வாஷ் பேசின்கிட்டே மூஞ்சி அலம்பிண்டு இருக்கும்போது எங்கம்மாவின் அழுகுரல் கேட்டது. என்னன்னு கொஞ்சம் காதைத்தீட்டிண்டு கேட்டா, வருண் வருண்ன்னு சொல்லி ஏதோ பேசிண்டு இருக்காங்க.
கிச்சனுக்குள்ளே எட்டிப்பார்த்தா 1 வயசு வருண் பாப்பாவுக்கு இணையா எங்கம்மா கீழே முட்டி போட்டு உக்காந்துண்டு ”என்னால முடியலை டா வருண், நீ ரொம்ப துஷ்டத்தனம் பண்றே”ன்னு சொல்லி கண்ல தண்ணி! என்னம்மா ஆச்சுன்னு கேக்கறேன், பாருடீ, டம்ளர் டம்ளரா  தண்ணி எடுத்துண்டு வந்து திறந்திருக்கும் அரிசி மூட்டைக்குள்ளே கொட்டிண்டு இருக்கான்னு சொன்னாங்க. இதெல்லாம் ஒண்ணுமே புரியாம வருண் திரு திருன்னு முழிச்சுண்டு இருக்கான். இந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் களுக்குன்னு சிரிச்சுடுவேன்.

சென்னை விஜயம்

சென்னைக்கு எப்போடா வருவோம், அருண் வருணை எப்போடா பார்ப்போம்ன்னு துடியா துடிச்சுண்டு இருந்தேன்.நான் சென்னை வருவதே எங்கம்மா அப்பாவுக்கு தெரியாது. தங்கைமணியிடம் அடுத்த வாரம் தான் வரேன்னு சொல்லி இருந்தேன். அதுனால எங்க மாமாவும் பாலாஜியும் என்னை ஏர்ப்போர்ட்டுல வந்து பிக்கப் பண்ணினது இவங்களுக்கு தெரியாது.சென்னை விமான நிலையத்துல இறங்கிட்டு, பயண நேரத்தை விடவும் அதிக நேரம் பேக்கேஜ் க்லெயிமுக்காக காத்துண்டு இருந்துட்டு வெளியே போனப்போ லேசா ஜிலு ஜிலு காத்து. மழையாம். ரோடுகள்ல அங்கங்கே தண்ணி.
"புத்தும் புது காலை பொன்னிற வேளை"ன்னு பாட்டெல்லாம் பாடிண்டே தான் கால் டாக்ஸியிலே ஏறினேன். அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை பாதி வழியிலே கார் நின்னு போயிடுத்து.கொஞ்ச நேரம் அர்த்த ராத்திரி ஏதோ ஒரு பூட்டப்பட்ட கடை வாசல்ல உக்காந்து ராவணனை பத்தி விவாதிச்சுட்டு, மறுபடியும் வண்டியில ஏறினா வீட்டுக்கு ரெண்டு ஃபர்லாங்குக்கு முன்னாடி மறுபடியும் ரிப்பேர். மாமா கோபத்தோட ட்ரைவரை திட்டிட்டு, பெட்டியை இழுத்துண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. தூக்கக்கலக்கம். பாலாஜி (வழக்கம் போல) என் ஹாண்டு பேக்கை (ஹேண்ட் லக்கேஜ் இல்லை, வானிட்டி பேக்)மட்டும் எடுத்துண்டு வந்தான். ஹிஹி.. அவன் என் டைப்பு. நான் அதுவும் இல்லாம நடந்தேன்.

வாசலில் செல்லவ்வா தூக்கம் வராம ஒரு சேர் போட்டுண்டு உக்காந்து இருந்தாங்க. அத்தைக்கு முதல் நாள் ராத்திரி தான் நான் வரதைப்பத்தி  சொல்லி இருக்காங்க. அவ்வாவுக்கு இன்னமும் தெரியாதாம். மாமாவும் பாலாஜியும் தியேட்டரில் ராவணன் பார்க்க போயிருப்பதாக அத்தை அளந்து விட்டு இருந்தார் போல இருக்கு. அவ்வாவுக்கு என்னைப்பார்த்து, ஒண்ணுமே புரியலை. அவ்வா நாங்கள் பெட்டியும் வருவதைப்பாத்துட்டு,  எழுந்து நின்னு கண்ணைச்சுருக்கிண்டு யாரு யாருன்னு பார்த்து இவளா? இவளான்னு ஒரே சந்தோஷக்கூக்குரல். கட்டிண்டு கொஞ்ச நேரம் அவ்வாகிட்டே செல்லம் கொஞ்சிட்டு உள்ளே போனோம். ஒரு அரை மணி நேரம் நாங்க பேசிண்டு இருந்தோம். பாலாஜிக்கு பசி முத்தி வயலின் வாசிக்க ஆரம்பிச்சுட்டான். (அதாவது மூக்குலேயே பேசி புலம்புறது) மெதுவா அவனுக்காக கொண்டு வந்திருந்த வெஜிட்டபிள் புலாவை எடுத்து கொடுத்து சூடாக்கி தர சொன்னேன். நான் பண்ணி எடுத்துண்டு போன பட்சணத்தை எல்லாம் செல்லவ்வாவும் மாமாவும் வேலிடேட் பண்ணிண்டு இருந்தாங்க. இது சூப்பர் இது சுமார் தான்.. இப்படி மாமா சொல்ல, என்ன இருந்தாலும் இவ்ளோ எல்லாம் தனியாளா பண்ணி எடுத்துண்டு வந்திருக்காளே பாவம்ன்னு அவ்வா நெஞ்சுருக, எனக்கு ஒரே ஜாலியா இருந்தது. சுமார் 3.30 மணி அளவுல கண் இதுக்கும் மேல என்னால முடியாதுன்னு கதற, நான் போய் படுத்துண்டேன். இட்லி சாப்பிட சொல்லி தூக்கத்துக்கு நடுவுல கூட அவ்வா எழுப்பினதா நினைவு. சரியா தெரியலை!
படுத்துண்ட உடனே அவ்வா ஸ்கிரீனை ஒரு காரணம் சொல்லி இழுக்க அத்தை, வேறு காரணம் சொல்லி மூட.. ஒரே ரகளை.. கொஞ்ச நேரம் விவாதிச்சுண்டு இருந்தாங்க.. அதுக்குள்ள நான்.. ஹா....வ்...

ஒரு 7 மணி இருக்கும். படார்ன்னு எழுந்தேன். இந்த வீட்டுல இருந்து அங்கே போகணுமே! எத்தனை மணிக்கு புறப்படலாம்னு யோசிச்சு குளிச்சு சாப்பிட்டு வயலின் பாலாஜியை கிளப்பி உஸ்ஸ்....அவ்வா அத்தை தடபுடலா சமைச்சு வெச்சிருந்தாங்க. நான் நினைக்கிறேன் அவங்க 4 மணில இருந்து தூங்கியே இருக்க மாட்டாங்க. முதல் நாள் ராத்திரி ஆரம்பிச்சாக்கூட இவ்ளோ ஐட்டம்ஸ் செஞ்சிருக்க முடியாதுப்பா!

 9.30 மணிக்கு சுபயோக சுப முஹூர்த்தத்திலே கிளம்பினோம். அது ஒரு குட்டியூண்டு இண்டிக்கா வண்டி, பக்கத்து சீட்டில் என் எக்கோலேக் பெட்டியை சாயாம பார்த்துண்டே ஞாயிறு ட்ராஃபிக்கில் பிரேக் போட்டு போட்டு
சுமார் 2 மணி நேரத்துல தங்கை மணி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

மெதுவா வண்டியை லிஃப்டு கிட்டே நிறுத்த சொல்லிட்டு, சாமானத்தை எல்லாம் மெதுவா லிஃப்டுக்குள்ளே ஏத்தி, முதல் மாடியில இறக்கி வெச்சு, சத்தமில்லாம பாலாஜியை அனுப்பினேன். சாமான் எல்லாம் எடுத்து வைக்கும்போதே வீல் வீல்ன்னு வருண் சத்தம் காதைப்பிளந்தது. ஒரே ரகளை போல இருக்குன்னு நினைச்சுண்டேன்.

கதவு திறந்தது, முதல்ல பாலாஜி உள்ளே போயிட்டான். நான் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு, மெதுவா மறுபடியும் தட்ட, தங்கைமணி கணவர் பாலாஜியுடன் யாரோ வந்திருப்பார்களோன்னு நினைச்சுண்டு, சாரி சாரின்னு சொல்லிண்டே கதவை திறக்க, ஆன்னு ஒரு சத்தம் போட்டார்.

எங்கம்மா வந்து எட்டிப்பார்த்து,  நீயான்னு ஒரே கத்தல்! நைனா ஓடி வந்து நீ அடுத்த வாரம் தானே வரேன்னு சொன்னே? எப்படி இப்போவே வந்தேன்னு கேள்வியின் நாயகன் மாதிரி கேக்க ஆரம்பிச்சுட்டார். தங்கை மணி ஏதோ உலக அழகி பட்டம் கிடைச்ச சுஷ்மிதா சென் மாதிரி கைகளை ரெண்டு கன்னத்திலும் வெச்சுண்டு ”ஆ”ன்னு கத்திண்டே இருந்தா.. யாரும் அவளை கண்டுக்கலை.

இவ்ளோ களேபரத்திலும் நான் யாரையுமே பொருட்படுத்தலை. நான் பாட்டுக்க என் கடமையை செஞ்சுண்டு இருந்தேன். நான் வந்ததே அருண் வருணை பார்க்கத்தான். அவங்க ரெண்டு பேரையும் கண்ணிமைக்காமல் பார்த்துண்டு இருந்தேனா, முதல்ல கொஞ்சம் பயம், சந்தேகம், கொஞ்சூண்டு செல்லம், சிரிப்பு, ஒரு வருஷம் கழிச்சு பார்க்கறதுனால ஒரு அன்னிய உணர்வு எல்லாமாக ரெண்டு பேரும் என்னை பார்த்துண்டே இருந்தாங்க.
நான் உள்ளே வரும்போது அதுல ஒருத்தன் சைக்கிளை ஓட்டிண்டு இருந்தான். இன்னொருத்தன் சோஃபா மேல குதிச்சுண்டு இருந்தான். இறங்கி அவங்க அம்மா பின்னாடி ஒளிஞ்சுண்டான். எங்கம்மா விடாம அரிச்சு பிடுங்கி எப்படி வந்தே, எப்போ வந்தே.. என்ன சர்ப்ரைஸ் இப்படி எல்லாம்ன்னு ஒரே நச்சு.

ஒரு பத்து கேள்வி கேட்டுட்டு டேரி மறுபடியும் தன் வேலையை பார்க்க போயிட்டார். என்ன கேள்வியா? அதாங்க என்ன ஃப்ளைட்? கூட எத்தனை பேர் வந்தாங்க?எனக்கு எத்தனாவது ’ரோ’ல சீட்? ஹெட்செட்டுக்கு எவ்ளோ குடுக்கணும், கேபின் க்ரூவுக்கு என்ன கலர் யூனிஃபார்ம் போன்ற அரிய கேள்விகளா தொடுத்து கேட்டுட்டு போயிட்டார்.

ரெண்டு நாள் ஆகியும் அம்மா தான் நம்பவே இல்லை! ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தி அருண் அண்ட் வருண் இப்போ பெய்யம்மா வோட பெஸ்டு ஃப்ரென்ட்ஸ்!!!!

Wednesday, June 23, 2010

I am coming, Chennai....

அன்புப் பெரியோர்களே, அருமை ப்ளாக் வாசகர்களே, புல்லுருவி நண்பர்களே,

இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நான் ஆன்னுவல் வெக்கேஷனுக்கு அடுத்த வாரம் கிளம்பி, ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.


(பலத்த கைதட்டு) அமைதி அமைதி!
சென்னை ரசிகர்கள் ஏர்ப்போர்டுக்கு மாலை மருவாதியுடன் தாரை தப்பட்டை முழங்க என்னை ரிஸீவ் பண்ண வரவேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். , ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.ஏன்னா, சென்னை கமிஷனர் என்கிட்டே ஃபோன் பண்ணி கேட்டுண்டு இருக்கார். சமூக பணியில இருக்கறதுனால தான் இவ்ளோ பாப்புலாரிட்டி. என்ன பண்றது. பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை! (சரி சரி.. அடங்கறேன்!)

சென்னை ரசிகர்களை கலைவாணர் அரங்கிலோ, காமராஜர் அரங்கிலோ சந்திப்பேன்.ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கட்டாயம் எண்ட்ரி டிக்கெட் வசூலிக்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டி இல்லை. அதுக்காக பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகி இருக்கு. நிறைய ஸ்பான்ஸர்ஸ் முன்வந்துள்ளனர். பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். நேரம் கிடைக்குமா தெரியலை. ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். ஏன்னா டைப்படிச்சு அடிச்சு எனக்கு கையெழுத்தே மறந்து போயிடுத்து. ப்ளாக் காட் பாதுகாப்பு வேணுமான்னு இந்திய அரசாங்கம் கேட்டிருக்காங்க.. இப்போதைக்கு ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க ரெண்டு போலீஸ் கேட்டு இருக்கேன். (ஹய்யோ, என்னாலேயே தாங்க முடியலை)

என்னோட வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன். (இதையே தானே ஃபேஸ்புக்லேயும் போட்டு பஜனை பண்ணினேன்னு சொல்றவங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்)

 ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, அவங்களுக்கு கீழ்க்கண்ட எச்சரிக்கை. அநன்யா ஒரு எழுத்தாளினி ஆயாச்சு. யாரு சொன்னா வா? ஹ.. எல்லாம் எனக்கு தெரியும். அதுனால சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன். எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?




அப்புடியே நான் போஸ்டு போடாட்டியும் நீங்க எனக்கு மெயில் அனுப்பணும். உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்னு சொல்லி தெரிய வேண்டாமே.


இப்போ நான் மட்டும் தான் போறேன், ரங்கு அடுத்த மாசம் தான் வர்றார். நான் கிளம்பறதுனாலே சுமார் ஒரு வாரமா அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். ஏர்ப்போர்டுல என்னை ட்ராப் பண்ணிட்டு என் போர்டிங் பாஸை அவர் கையில எடுத்துண்டு, ”என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா”ன்னு கத்திண்டே துபாய் பூரா ரவுண்டடிச்சாலும் ஆச்சிர்யப்படுறதுக்கில்லை!

இந்த நிலமையில நேத்திக்கி என் மச்சினருக்காக சில பெண்கள் ஜாதகத்தை பார்த்துண்டு இருந்தேன். அதுல 67ல பிறந்த சில பெண்கள் கல்யாணம் ஆகாம இருக்காங்கன்னு இவர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டுண்டே பாத்ரூம்ல மூஞ்சி அலம்பிண்டு இருந்தேன். உடனே ஓடி வந்து, தன்னுடைய பிறந்த வருடத்தை சொல்லி, பண்ணிப்பாளா கேட்டு சொல்றியான்னு கொஞ்சம் கூட சலனமே இல்லாம கேக்கறார். வந்த கோபத்துல மூஞ்சியில் இருக்கற சோப்பை அலம்பறதுக்காக ரெண்டு கைகள்ல எடுத்த தண்ணியை அவர் மேல கொட்டிட்டேன். இந்த அழகுல அந்த லேடி இவரை விட சில ஆண்டுகள் பெரியவங்க. பண்ணிப்பாளான்னு கேக்கணுமாம். நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.


நீங்க என்ன சொல்றீங்க?

Friday, June 18, 2010

ஹரா பரா டெர்ரர் கபாப்

ஆடிக்கொரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி இங்கே ரெஸ்டாரண்டுகளுக்கு போனால் ஸ்டார்டருக்கு இதான் ரங்குவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அடைக்கு ஊறவைத்து அரைத்தது போக கொஞ்சம் பாசிப்பயறு ஊறவைத்து வெள்ளி மாலை இந்த கபாப் பண்ணிக்குடுத்துடலாம்ன்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன். எல்லாம் சுய ரெஸிப்பீ தான். கொஞ்சம் ரெஸிப்பீஸ் பார்த்தா ஐடியா கிடைக்கப்போகுது!

கபாப்ன்னா நம்ம தமிழ்ல வடைன்னு அர்த்தம் போல இருக்கு. பச்சையா இருக்கும் இந்த ஹரா பரா கபாப். பாலக்கீரை, கொத்தமல்லி, ப.மிளகாய் எல்லாம் போட்டு ஜீரக வாசனையா இருக்கும். என்ன பெரிய பிரமாதம், வீட்டுலேயே பண்ணிக்குடுத்துடலாம்னு நினைச்சு தான் வேலையை ஆரம்பிச்சேன். காஃபியுடன் வடையை வெச்சு தந்தால் சந்தோஷப்படுவார்ன்னு மெதுவா கிச்சனுக்குள்ளே நுழைஞ்சுட்டேன். ஈஸ்வரோ ரக்ஷது!

முதல்ல லாப்டாப்பை கிச்சன்ல செட் பண்ணி ஒரு ரெசிப்பீ தேடி எடுத்துட்டேன். பார்த்தா, கீரையை சுடுதண்ணியில போட்டு, ஜில் தண்ணியில அலசி , பிழிஞ்சு, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைக்கணும். ஜிம்பிள்! அதுல பாருங்க ஒரே ஒரு ஸ்டெப் தான் மிஸ் பண்ணி இருக்கேன், மொத்தமும் கந்தரகோளம்!

எந்த ஸ்டெப்பா? அதாங்க அந்த பிழியற ஸ்டெப்தான். சுடுதண்ணீயில அலசிட்டு, ஜில்தண்ணியில போட்டு , வெளியில எடுத்து, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைச்சாச்சு.  அரைச்சுட்டு எட்டிப்பார்க்கறேன், கீரை மசியல் மாதிரி இருக்கு! செம்ம ஷாக்! சரி பார்க்கலாம். இன்னும் பாசிப்பயறு இருக்கே.. அதையும் கெட்டியா அரைச்சு பிசைஞ்சுட்டா கெட்டி பட்டுடும்ன்னு நம்பினேன்.


தண்ணி விடாம கரகரப்பா பாசிப்பயிறை அரைச்சாச்சு. பச்சை பட்டாணி கீரை விழுதோட பருப்பை போட்டுட்டு பார்த்தா மொத்தத்துல அது என்னமோ அடை மாவு மாதிரி இருக்கு!!!

சரி போனாப்போறது வேணா ஹரா பரா அடைன்னு பண்ணி கொடுத்துடலாமேன்னு நினைச்சேன்! ரங்கு ஒத்துக்க மாட்டார்.

கவனமா எல்லா மசாலாவும் சேர்த்தேன். உப்பு போட்டு கடைசியா கரண்டி போட்டு கிண்டி பார்த்தேன். அதே அடை மாவு கன்ஸிஸ்டென்ஸியில இருக்கு! சூஃபர்!

இனி இதை எப்படி கெட்டியாக்குறது? மெள்ளமா கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தேன். அடை மாவு ரெண்டு கரண்டி அரிசி மாவை விழுங்கிட்டு கள்ளூளிமங்கன் மாதிரி அப்படியே இருந்தது. சரி வேணா கொஞ்சம் சுவைக்கு கடலைமாவு போட்டா என்ன? எப்படியும் பருப்புக்கள் தானே சேர்த்திருக்கோம்.. ஒரு டேஸ்டு என்ஹான்ஸரா இருக்காது? இந்த மாதிரி ஐடியாவுக்கெல்லாம் இன்னொருத்தி பொறந்துதாண்டீ அநன்யா வரணும். உன்னை மிஞ்ச முடியுமா?ன்னு சந்தோஷமா க.மாவையும் கலந்தாச்சு.. மறுபடியும் கள்ளூளிமங்கன் ஹரா பரா அடைமாவு விழித்தது.. ஒரு நிமிஷம், என்னை விட்டூடு அநன்யான்னு கெஞ்சித்து! ஹ.. என்னிடமா நடக்கும்ன்னு வீர வசனம் பேசிண்டே ஒரு ஸ்பூனால அடை மாவை எடுத்து அரிசிமாவில் போட்டு பிரட்டி,  எண்ணெயில் ஸ்ஸொயீன்னு போட்டு பொறிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அசப்புல பார்க்க அது பச்சை அடை உருண்டை மாதிரியே தான் இருந்தது. ஆனா கரகரன்னு இருக்கவேண்டாமோ? அதென்னமோ சவுக் சவுக்ன்னு இருந்தது. பார்த்தாலே பூலோக பக்கியான தக்குடு கூட வேண்டாம்ன்னு சொல்லிடுவான்னா பாருங்களேன்! (ஹிஹி, இவனை வம்புக்கு இழுத்து ரொம்ப நாளாச்சு!)ஹாம்.. அதுக்கு கொடுத்த வெச்சது அவ்ளோதான்னு மனசைத்தேத்திண்டு பாக்கி எல்லாத்தையும் இதே மாதிரி பொறிச்சுடலாம். இனி இதுக்கு அலங்காரம் பண்ணி மாளாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

இதுக்குள்ளே ரங்கு மூக்குல வேர்த்து கிச்சனுக்கே வந்துட்டார். என்னம்மான்னு ரொம்ப ஆதரவா கேட்டார். எனக்கு அழுகை முட்டிண்டு இருந்தது.  இவ்ளோ ரகளை பண்ணினதுனால கிச்சன்வேற குருக்ஷேத்திரம் மாதிரி ஒரே களேபரமா இருந்தது! வடையும் சொதப்பல் கிச்சனும் கொடூரமா இருந்ததுனால ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். அவர் கிட்டே நடந்ததை சொன்னேன்.

உடனே நம்ம ரங்க்ஸ், இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க? ச்சீ அசடுன்னு(உண்மையைச்) சொல்லி, ஒரு ஹைலி அப்ஸார்பண்ட் டிஷ்யூவை கிழித்து ஒரு தட்டுல வெச்சு அ.மாவை அதில் கொட்டினார். ஏதோ ஒரு படத்துல போண்டா மணி,”மாப்ளை சீப்பை திருடிட்டேன், அவர் எப்படி தலை வாருவார், எப்படி தாலி கட்டுவார்”ன்னு கேப்பாரே அதே பீலிங்கி தான் வந்தது! உஸ்ஸ்ன்னு நினைச்சுண்டே, ”வேற உருப்படியா ஏதாவது ஐடியா தர்றேளா”ன்னு கேட்டேன்.

உள்ளே போய் ஒரு பத்து நிமிஷம் தேடி ஒரு பழைய மயில்கண் வேஷ்டியை கொண்டு வந்து கோமணம் மாதிரி நீளவாக்கில் கிழிச்சார். என்னத்துக்கு இப்படி கிழிக்கறேள்ன்னு கேட்டுண்டே இருக்கேன், உஷ்.. உனக்கு தெரியாது.. இப்போ பார்ன்னு கோ. துணியை சின்க் கிட்டே விரித்து, ஒரு சல்லடையையும் எடுத்துண்டு இந்த அடைமாவை மொத்ததையும் அதில் கொட்டி, அதை சுருட்ட ஆரம்பிச்சார்.

மெதுவா என் ப்ளட் பிரஷர் ஏற ஆரம்பிச்சது.. அதிக தண்ணியை பிழியும் முயற்சியில் ஒரு கரண்டி மாவு சல்லடையில் விழுந்தது. அந்த துண்யின் விளிம்பு ஓப்பன் ஆகி, மாவு வெளியில் பிதுங்க, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டாப்பிட்”ன்னு காதலன் நக்மா மாதிரி கத்திட்டு, அவர் கிட்டே இருந்து அந்த துணியை மாவுடன் வாங்கி அவரை சபை நீக்கம் பண்ணினேன்.

மெதுவா பார்த்து தேங்காய்ப்பால் எடுக்கறமாதிரி எக்ஸஸ் வாட்டரை எடுத்தேன். அந்யாய பொறுமை வேணும் இதுக்குன்னு தோணித்து.. யப்பா.. எவ்ளோ நேரம் மாவும் வெளியேறாம கர்ம சிரத்தையா பண்றது!  அப்புறம் கட்லெட் மாவுமாதிரி கெட்டியா கிடைச்சது. அந்த கபாப்ஸை பொறிச்செடுக்கறதுக்குள்ளே என் தாவு தீந்துடுச்சு!

கிச்சனை க்ளீன் பண்ணிட்டு, எடுத்த 108 பொருட்களை யதாஸ்தானம் பண்ணிட்டு கபாப்ஸுடன் சூடான காப்பியை எடுத்துண்டு ஹாலுக்கு வந்து மணி பார்த்தா 7.15! நான் ஆரம்பிச்ச நேரம் 6! என்ன ஒரு சோதனை!

இவர் உடனே, ”உனக்கு எப்போ என்ன டவுட் இருந்தாலும் உடனே என்னைக்கேளு.. நான் மட்டும் இன்னிக்கி இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!”ன்னு ஓவரா பில்டப்பு ஸ்டார்ட் பண்ணிட்டார்! இங்கே ஒரு முக்கியமான பாயிண்ட் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த ரங்கு கிச்சனுக்கு வர ஒரே ஒரு காரணம் - விபூதி பாடி பேக் (Body pack) போட்டுக்கத்தான். இதுல பெரிய பெரிய டயலாக்ஸ் கற்பனை பண்ணி சொல்ல ஆரம்பிச்சுட்டார்!

“இந்த விஷயத்தை இன்னிக்கி நீ மறக்க நினைச்சாலும், இன்னும் ரெண்டு நாள்ல எப்படியாவது நினைவு வந்துடும்”ன்னார்.” ஏன்னா”ன்னு அப்பாவியா கேட்டேன்.. ”எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்..

கீத்தாமாத்தா சும்மாவா சொன்னார்? சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே புரூட்டஸ்களான்னா இருக்காங்க!

Monday, June 14, 2010

சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்

இந்த டாப்பிக் பத்தி நானும் ரங்குவும் எங்கள் நீளமான அபுதாபி - துபாய் பயணங்களின் போது விவாதிப்பதுண்டு.

முதல்ல சிச்சுவேஷன்னா என்ன? படத்தில் ஒரு முக்கிய நிகழ்வை காட்டும் ஒரு அட்டவணை மாதிரி. இப்போ வரும் படங்களில் பெரும்பாலான படங்கள் டெம்ப்ளேட் சிச்சுவேஷன்களை யூஸ் பண்ணிண்டு இருக்கு. லைக் ஹீரோ இண்ட்ரோடக்‌ஷன், லவ் சாங், லவ் சாங், லவ் சாங், இன்னோரு இத்துப்போன லவ் சாங் கடைசியில க்ளைமாக்ஸ் கிட்டக்க வரும்போது ஒரு அரை குறை குத்து சாங் இப்படி வெச்சுண்டு இருக்காங்க.

சில வருஷங்களுக்கு முன்னாடி வரை, வழக்கமான லவ் சாங், பெத்தோஸ் சாங், அம்மா செண்டிமெண்ட் சாங், நாட்டுப்புற ஃபோக் சாங், ஜெயமாலினி சாங், தத்துவ சாங் இதைத்தவிர தமிழ் சினிமாவுல வேற சாங்கே இல்லையா?ன்னு தமிழ்மக்கள் தவிச்சுண்டு இருக்கும்போது தான் சில வித்தியாசமான சிச்சுவேஷன்களிலும் சாங்ஸ் போடலாம்ன்னு ஒரு புதுமையான கான்செப்டு புகுத்தப்பட்டது.

மறுபடியும் சொல்லிடுறேன்.. இந்தப்பதிவு இசையைப்பத்தியோ பாடலாசிரியரைப்பத்தியோ, பாடகர்களைப்பத்தியோ இல்லை.. எந்த இடத்தில் பாட்டு புகுத்தப்படவேண்டும்னு இருந்த ஒரு விதிமுறையை தகர்த்தெறிஞ்சு, எங்களை கவர்ந்த சில பாடல்களைப்பத்தி மட்டுமே..

இப்படிக்கூட பாட்டுக்கள் சேர்க்கலாமோன்னு எல்லாருக்கு ஒரு ஞானோதயம் வந்ததுன்னு சொன்னா அது மிகையாகாது.தடுக்கி விழுந்தா பாட்டுன்னு இருந்த காலம் மாறினதே பெரிய பாடுதான்னாலும், கொஞ்சம் கூட மாற்றமே இல்லாம எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரியான சிச்சுவேஷன் பாடல்கள் வர ஆரம்பிச்சப்போ கொஞ்சம் அலுப்புத்தான் தட்டித்து. ”வாத்யாரே, இப்போ பாட்டு வரும்பாரு”ன்னு ஜனங்க ஊகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இந்தப்புதுமையான சிச்சுவேஷன் சினேரியோவுல அனேகமாக முக்கால்வாசி எல்லாமே பாலச்சந்தர் கமலஹாசன் கூட்டணியில் வந்திருக்கும் இல்லாட்டி பாலச்சந்தர் படங்களிலா இருக்கும்.

இங்கே இந்தப்பதிவுல் நான் சொல்ல விரும்புவது என்னை மிக மிக கவர்ந்த சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்

அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா?
கம்ப்ளெயிண்ட் பண்ற நோக்கத்தோட எழுதப்பட்ட ஒரு அருமையான காமெடி பாட்டு. செளக்காரின துறு துறு நடிப்பும் ஸ்ரீகாந்தின் அசமஞ்சமான முகபாவங்களும் மிகவும் ரசித்தவை.


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
சினிமாவுல ஒரு ம்யூசிக் டைரக்டரும் ஒரு கவிஞனும் எப்படி ஒரு பாட்டை உருவாக்குறாங்களோ அதே மாதிரி இப்படி ஒரு தீம் வெச்சு,அதன் மூலமா கதாநாயகன் தன் லவ்வை சொல்றா மாதிரி கே.பி இந்த பாட்டை வடிவமைச்சார். புதுமையிலும் புதுமை. ஸ்ரீதேவியின் சூட்டிகையும், கமலின் நிஜக்கவிஞனுக்குரிய கற்பனாசக்தி நடிப்பும் அபாரம்! யாருக்குத்தான் இந்த பாட்டு பிடிக்காது. குலதெய்வம் கமல் காம்பினேஷன்ல அல்ட்டிமேட் பாட்டு. என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்ஸ்ல இடம் பிடிச்சு இருக்கும்.


என்ன சமையலோ?
மறுபடியும் கே.பியின் உக்தி. சமையல் மட்டுமில்லாம அதுக்குள்ளே சங்கீதத்தையும் அழகா சேர்த்து அறுசுவை உணவா பரிமாறி இருப்பாங்க. அந்தந்த ராகம் பேர் வரும்போது அந்த ராகம் உபயோகிச்சு இருக்காங்க. அழகிய தமிழ் மகனில் வரும் வலயபட்டி தவிலே பாட்டுக்கு எல்லாம் இந்தப்பாட்டு தான் முன்னோடியா இருக்கும். இதே மாதிரி அகத்தியர் படத்துல ராவணன் வீணை வாசிச்சுண்டே பாடுற பாட்டு கூட சாலஞ்சிங் தான்னாலும் ஒரு வித ஜனரஞ்சகமான சிச்சுவேஷன் சாங் இது. இசைக்கு இசையாச்சு, காமெடிக்கு கமல் மனோரமா தாரா ஆச்சு. வரிகளை மட்டும் லேசுல விட்டுட முடியுமா என்னா? தன் பங்குக்கு கவிஞர் (வாலி???) புகுந்து விளையாடி இருப்பார். ம ஸ லா... கரம் மசாலா...  ப ப ப ப ப தா? பருப்பு இருக்குதா? த நி த நி த நி த நி தனியா இருக்கா? ஆஹா.. சூப்பர் வரிகள். சில சமயம் தேடி பார்ப்பதுண்டு. அவ்ளோ இஷ்டம். கமலின் வாழையிலை பெயிண்டு ஜோக்கு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்ச ஒண்ணு.


கனாக்காணும் கண்கள் மெல்ல...
இந்தப்படம் ரொம்ப சின்ன வயசுல பார்த்த படம். ஒண்ணும் நினைவில்லை. போன வருஷம் ராஜஸ்ரீயில டவுன்லோடு பண்ணி பார்த்தப்போ இந்த பாட்டு வந்த சிச்சுவேஷன் என்னை ரொம்பவும் பாதிச்சது. ஒரு மனச்சிதைவு ஏற்பட்ட பொண்ணோட எண்ணச்சிதறல்களை அப்படியே படம் பிடிச்சு சொல்லி இருப்பார். இதமான வெல்வெட் குரலில் குலதெய்வம் பாடி இருப்பார். ஒருவர் மற்றவரை மிஞ்சும் நடிப்பு. புகழ வார்த்தைகளே இல்லை.



கவிதை கேளுங்கள் - இது புன்னகை மன்னனில் வரும் இன்னொரு வித்தியாசமான சிச்சுவேஷன் சாங். ரேவதியின் நடனமும், இளையராஜாவின் இன்னிசையும் வாணியின் குரலும் மெய்மறக்கச்செய்யும். அடிக்கடி கெடியாரத்தை காட்டி ராத்திரி பூரா டான்ஸ் ஆடுறான்னு சொல்லி இருப்பாங்க. என்னுடைய மிக முக்கியமான ஃபேவரைட்.




இதே மாதிரி இன்னோரு பாட்டு அழகன்ல மரகதமணி இசையில குலதெய்வமும் சந்தியாவும் பாடிய சங்கீதஸ்வரங்கள் பாட்டு. டி.வி தான் தீம். சாயந்திரம் பேச ஆரம்பிச்சு டெல்லி அஞ்சல் (9.00PM) இத்துடன் நிறைவு 11.00? டீவியில் கிரெய்ன்ஸ், அப்புறம் காலை 7 மணிக்கு மீண்டும் தூர்தர்ஷன் லோகோ வரும் வரை இவர்கள் ஸ்வீட் நத்திங்க்ஸ் தொடருதாம். பாலச்சந்தரைத் தவிர வேற யாராலும் இந்த மாதிரி தின்க் பண்ண முடியாதுன்னு நினைக்கறேன்.

இந்த மாதிரி உங்களைக்கவர்ந்த சிச்சுவேஷன் பாட்டுக்களை பற்றி எனக்கு இங்கே பின்னூட்டமாவோ அல்லது அழகா ஒரு பதிவாவோ தெரிவியுங்களேன்.

Wednesday, June 9, 2010

கிரேஸி கிச்சன் கில்லேடி!

அப்பாவி தங்கமணியின் இட்லி பதிவுக்கு முன்னாடியே இந்தப்பதிவு எழுத ஆரம்பிச்சு பிசுபிசுத்து போயிடுத்து. அதான் பிரசுரிக்காம விட்டுட்டேன்.

சில நாட்கள் சமையல் சமயம் சோதனை சமயம் ஆயிடுறது. ஆமா, என்ன பெரிய  சமையல் . இருக்கறது ரெண்டு பேர். என்ன பெருசா சமைக்க போறேன்?ஒரு சாம்பார் / ரசம் , ஒரு காய், கொஞ்சம் சாதம். ஒரு முக்கால் மணி நேர விஷயம். இதுக்கென்ன இவ்ளோ அலட்டல்ன்னு தானே கேக்கறீங்க?

நானும் அப்படித்தான் அலட்சியமா செய்யுற ஆளு. ஆனா பாருங்க ஒரு நாள் நல்ல ராஹூ காலம்+எமகண்டம் கூடிய சுபயோக சுபலக்னத்துல சமைக்க ஆரம்பிச்சுட்டேன் போல இருக்கு, எல்லாமே தலைகீழ்.


ரங்கு சுபாவம் என்னன்னா, திடீர்ன்னு ஒரு மணிக்கு வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு 3.30 மணிக்குத்தான் வருவார். லேட்டாகும்மான்னு சொல்லி இருந்தார்ன்னா, 100% நிச்சியமா 12 மணிக்கே வந்து ஈன்னு பல்லிளிச்சுண்டு நிப்பார். ”பசிச்சூடுத்தும்மா” அப்படீம்பார். பாவமா இருக்கும்.

அதனால் ஆஃபீஸிலிருந்து ஃபோன் பண்ணி சொன்னால் எனக்கு ஹைய்யா ஜாலின்னு சொல்லி குதூகலிக்கற அளவுக்கு நேரம் இருக்கும். அப்புறம்  சமையல் என்ன பெரிய  சமையல் புடலங்காய்! ஈஸி மேட்டர்!

எப்போவுமே அவசரமா இருக்கற அன்னிக்குத்தான் பல கஷ்டங்கள் வரும். ஒரு நாள் கண்டினூவஸா ஒரே கஷ்டங்கள். எல்லாம் விதவிதமான கஷ்டங்கள்.

பருப்பை குக்கர்ல வெச்சுட்டு புளி ஊறப்போடுறதுக்கு புளி டப்பா எடுத்தா டப்பா காலி. இன்னிக்கித்தானா இது காலி ஆகணும். ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தாலும் மொத்த சாமான்ல இருந்து அதை தேடி எடுத்து பாக்கெட் பிரிச்சு போட்டு... சில சமயம் கடுப்பா இருக்கும். ஆச்சு எடுத்து போடுறதுக்கு 5 நிமிஷம் போயிடுச்சு. இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரெடி பண்ணி வெச்சுக்கவேண்டாமோன்னு கேக்கறவங்க மேற்கொண்டு படிக்கவேண்டாம். ஏன்னா நான் அந்த டைப்பு லேதண்டீ... :))

நெக்ஸ்டு புளி ஊறப்போட்டு வேக வேகமா பீன்ஸ் ஆய்ஞ்சு நறுக்கியாச்சு. நறுக்கிட்டு கொஞ்சூண்டு வெந்நீர் விட்டு காயைப்போட்டு உப்பு மஞ்சப்பொடி போட்டுட்டு பார்க்கறேன் சாந்தமா இருக்கு வாணலி. என்னாச்சுன்னு குனிஞ்சு பார்த்தா, காஸ் எரியலை! ஹய்யோ இந்த லைட்டர் தொல்லை தாங்கமுடியலைன்னு புலம்பிண்டே நேரா சுவாமி கிட்டக்க இருந்த தீப்பெட்டியை எடுத்துட்டு வந்து கேஸ் பத்த வெச்சா, கிணத்துல போட்ட கல்லு மாதிரி கம்முன்னு இருக்கு. கொஞ்சம் உத்து கவனிச்சப்போ உஸ்ஸ்ன்னு கேஸ் சவுண்டைக்காணோம். பேஷ்!!! கேஸ் தீந்து போயாச்சு. விசேஷம்!

பீகாக் குரோஸரி நம்பர் தேடி எடுத்து அவனை புது சிலிண்டர் கொண்டு வரச்சொல்லிட்டு அதுவரைக்கும் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன்.

சரி புளி வெந்திருக்கும், கரைச்சுடலாம்ன்னு புளி கரைச்சு, அந்த கரைசலை ஈயசொம்பில் விட்டு பெருங்காயம், ரசப்பொடி, உப்பு, தக்காளி எல்லாம் போட்டு ரெடியா வெச்சேன். அப்போத்தான் பார்த்தேன் பருப்பு வெச்ச குக்கர்ல ஒரு விசில் கூட வரலை.அது எங்கேந்து வரும்? அதான் கேஸ் ஆஃப் ஆயாச்சே?

 சூப்பர். இன்னிக்கி  சமையல் பண்ணிடுவோமா?

ரைஸ் குக்கர்ல சாதம் வைக்கலாம்ன்னு பார்த்தேன்.ப்ளக் வெச்சு, தண்ணி விட்டு, செப்பரேட்டர் ல அரிசி கழுவி, ரெடி பண்ணிட்டு வெச்சு மூடினேன். ஒண்ணுமில்லாட்டி ஒரு வாய் தயிர்சாதமாவது சாப்பிட்டு போகலாமேன்னு ஒரு நப்பாசை.

அதுக்குள்ளே டிங் டாங் சத்தம். ஒரு நிமிஷம் ரங்கு தானோன்னு பயந்து நடுங்கி அப்புறம் இல்லே காஸ் சிலிண்டராத்தான் இருக்கும்ன்னு சுதாரிச்சுகிட்டு கதவைத்திறந்தேன். நம்ம ஹீரோ கடைக்கார பையன் வந்தாச்சு.

சிலிண்டரை மாட்டி கொடுத்தான். ஆன் பண்ணினப்போ கேஸ் சஞ்சீவனி மருந்து சாப்பிட்ட லக்ஷ்மணன் மாதிரி உயிர்த்தது! அப்பாடி நிம்மதி.

வேக வேகமா குக்கர் ஆன் பண்ணி ஹை ல வெச்சேன். ரைஸ் குக்கர் மேல ஸ்டீமரில் காயை வேகப்போட்டு, இன்னொரு கேஸில் ரசத்துக்கு கரைச்சு வெச்சு இருக்கும் ஈயச்சொம்பை ஏத்தினேன். இனி  சமையல் ஆயிடும்ன்னு திடமா நம்பினேன்.

பருப்புசிலிக்கி ஊறப்போட்ட து.பருப்பு நல்லா ஊறியாச்சு. சரின்னு எடுத்து மிக்ஸி ஜாரில இன்ன பிற சாமான்களுடன் போட்டு வெச்சு மிக்ஸி கேபிளை சொருகி, ஆன் பண்ணினேன். வழக்கமா டுர்ர்ர்ர்ர்ர்ர்னு சத்தம் வரும் மிக்ஸி அன்னிக்கீன்னு பார்த்து சன் பிக்சர்ஸ் எடுத்த படத்தை பார்த்து நட்டு கழண்ட புதுப்பைத்தியம் மாதிரி ”உய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்”ன்னு சத்தம். கஷ்டம்.. வெளியில எடுத்துட்டு அடியில ஒரு டிஷ்யூ வெச்சு சுத்தமா துடைச்சுட்டு மறுபடியும் ட்ரை பண்ணேன். ”உய்ய்ய்ய்ய்ய்ங்க்” தான்.. கூடவே மைக்கேல் மதன் காமராஜனின் திருட்டுப்பாட்டி க்ளைமேக்ஸ் ல சொல்ற மாதிரி என்னது? கரியற நாத்தம்?ன்னு சொல்ற அளவுக்கு அந்த ஜாரின் அடிப்பகுதியில் என்னமோ ஸ்மெல்! சந்தோஷம்.. ரொம்ப டாங்கீஸ்ன்னு கீத்தா மாத்தா மாதிரி சொல்லிட்டு,  பாதி அரைபட்ட பருப்பை கையால வழிச்சு வேற ஒரு நீளமான ஜாரில் போட்டு அரைச்சேன். சமர்த்தா அரைச்சு கொடுத்துடுச்சு. ஒரு கிண்ணத்தில போட்டு காய் வெந்துகிட்டு இருந்த ஸ்டீமரில போடலாம்ன்னு ரைஸ் குக்கர் மூடியைத்திறந்தா சில்லுன்னு அப்படியே இருக்கு குக்கர்!

தூக்கி வாரி போட்டது. அய்யோ என்ன இது? இப்போத்தான் கேஸ் தீந்து போச்சு, இப்போ கரண்டும் தீந்து போயிடுச்சான்னு அதிர்ச்சியில ப்ளக்கை சரி பண்றதுக்கு எக்ஸ்டென்ஷன் பக்கத்துல போய் இழுத்து பார்த்தேன். சுரீர்ன்னு தோள் வரைக்கும் ஷாக் அடிச்சுடுச்சு.. சரியான எமகண்டத்துல தான் நாம  சமையல் ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் தாளிச்சு கொட்டறதுக்குள்ளே என்னெல்லாம் நடக்கப்போகுதோ, கடவுளேன்னு ஒரு ரூபா குலதெய்வத்துக்கு முடிஞ்சு வெச்சேன்னா பார்த்துக்கோங்க!

ரைஸ் குக்கர்ல கரெண்டெல்லாம் ஒழுங்காத்தான் வந்துகிட்டு இருந்தது. சுவிட்சு போடாட்டி அதெப்படி ஆன் ஆகும்? ஹிஹி..அடிக்கடி கிட்னி யூஸ் பண்ணாட்டி இப்படித்தான் ஆகும்ன்னு நினைச்சுகிட்டு, சுவிட்சு போட்டு ஆன் பண்ணி லைட்டு எரியுதான்னு பார்த்தேன். சமர்த்தா யெல்லோ லைட்டு வந்தாச்சு. அடுத்து என்னன்னு யோசிச்சேன்..

பருப்பு வெச்ச குக்கர் மெதுவா ரெண்டாவது விசில் வரவும், எப்படியாவது ரசம் நல்ல படியா அமையணுமேன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்த சமயம், டிங் டாங் சத்தம்! ரங்கு வந்தாச்சு!!  வயித்துல புளிக்கரைசல், அமிலக்கரைசல், பல வித பட்டாம்பூச்சிகள், போதாக்குறைக்கு பசியில எலிகள் எல்லாம் ஓடிச்சு. இவ்ளோ சொதப்பு சொதப்பிட்டு உனக்கென்ன பசி வேண்டிக்கெடக்குன்னு என் மனசாட்சி நாக்குல நரம்பில்லாம் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி திட்டினது.

ஓடிப்போய் கதவைத்திறந்தால் ஏதோ ஒரு அரேபியப்பெண் அரபியில் என்னமோ சொல்ல முயற்சி பண்ணிண்டு இருந்தா. வாடீம்மா உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்னு நினைச்சுகிட்டேன். அரபியில் பேசினப்போ திரு திருன்னு முழிச்சேன். நான் இருந்த நிலமையில அந்த லேடி,   தமிழ்ல பேசியிருந்தாக்கூட புரிஞ்சிருக்காது போல இருந்தது. இல்லைன்னு கையால ஏதோ ஒரு சமிக்ஞை பண்ணிட்டு கதவை சாத்திட்டு மறுபடியும் கிச்சனுக்கு ஓடினேன். இவங்க வர்ற நேரத்தைப்பாரு.. க்கும். உஸ்ஸ்,..

மறுபடியும், இன்னிக்கி சமைச்சுடுவோமான்னு என்னை நானே கேட்டுண்டு அடுக்களைக்குள்ள புகுந்தேன். துளி எண்ணெய் விட்டு தாளிச்சுட்டு வெந்த காயும் பருப்பையும் வெதுப்பி எடுத்தாச்சுன்னா வேலை முடிஞ்சுடும். காய், பருப்பை எடுத்து வெச்சுட்டு, எண்ணெய்க்கிண்டியை பக்கத்துல எடுத்துண்டேன்.

அடுப்பை மூட்டிட்டு பின்னாடி திரும்பி அஞ்சரைப்பெட்டியை எடுக்கறதுக்குள்ளே, 'ட்டோய்ன்'னு ஒரு சத்தம். எண்ணெய்க்கிண்டி தானா குடை சாய்ஞ்சு ’ஞ’ன்னு கவுந்து கிடக்கு. கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு தோணினது. துக்கம் தொண்டையடைச்சு, எம்பெருமானே, ஏன் இவ்ளோ சோதனைன்னு கதறி, சொல்லடி அபிராமின்னு கத்தினேன். அதாவது பாடினேன்.

எண்ணெய்க்கிண்டியை என்ன பண்ணினேன்? அது எப்படி விழுந்திருக்கும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண நேரமில்லை. சீக்கிரம்  சமையல் முடிக்கணும்ன்னு பர பரன்னு டிஷ்யூக்களை உருவி துடைச்சுட்டேன்.

க்ளிங்க்ளிங்ன்னு எஸ்.எம்.எஸ் வந்தது. ஆமா, ரொம்ப முக்கியம் இப்போ.. இந்த ஜாய் ஆலுக்காஸ், தமாஸ் இவங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது, நேரங்கெட்ட நேரத்துல இவங்க பண்ற லொள்ளை கன்ஸ்யூமர் கோர்டுல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேட்டே ஆகணும்ன்னு மனசுக்குள்ளேயே முணுமுணுத்துண்டு, தாளிச்சு காயைப்போட்டு, பருப்பையும் போட்டு திருப்பினேன். பீன்ஸ் பருப்புசிலி ஆச்சு,  சாதம் வெந்தாச்சு,  ரசம் நுரைச்சு, தாளிச்சுக்கொட்டியாச்சு.

ஒரு சொம்பு நிறைய தண்ணியை குடிச்சேன். மூச்சு வந்தது! அப்பாடீ! சோஃபாவுல போய் செளகரியமா உக்காந்து மொபைலை எடுத்துப்பார்த்தேன். ரங்கு தான்.
"Dear, Sudden client meeting , will have lunch outside with them. You have food on time. "

Saturday, June 5, 2010

எண்ணச்சிதறல்கள்

கோவிலில் நல்ல கூட்டம். எந்தக்கோவில்ன்னு சரியாத்தெரியலை. உள்ளே நுழைந்ததும் ஜில்லுன்னு ஏசி, மக்கள் சலசலப்பு. கணீர்ன்னு தீபாராதனை காட்டிண்டு இருந்தாங்க. ஆஹா.. கற்பகவல்லித்தாயார். அப்போ இது மைலாப்பூராச்சே? மனமுருகி பிரார்த்திச்சுண்டேன். வழக்கமான பட்டர் தான். எனக்கு அரக்கு குங்குமமும் பூவும்  தந்தார். பிரகாரம் சுத்தும்போது தானா சப்தஸ்லோகி மந்திரத்தை வாய் சொல்லித்து. வெளீல வந்து பார்த்தா, அடேடே, இது மாங்காடு. ஆனா எப்படி உள்ளே கற்பகவல்லி இருந்தா? நடக்க ஆரம்பித்தேன். செருப்பு கவுண்டர் எங்கேன்னு தெரியலை. வரும்போது எங்கே வெச்சேன்னு தெளிவா நினைவில்லை. அப்படியே வெள்ளீசுவரையும்...

இன்னிக்கு பரீட்சை இருக்கு. ஆங், என்ன பேப்பர்? ஏன் தெரியவே மாட்டேங்குது? கொஞ்சம் பயம் இருந்தது. ரோட்டில் ஏன் இவ்ளோ கூட்டம்? எப்படி ஹாலுக்கு போறது? யாரோ துரத்துறாங்க. ஓடு ஓடுன்னு ஓடுறேன். நடுவுல பரீட்சை நினைவு. ஒரு அரைமணி நேரம் லேட்டானாலும் பரவாயில்லை, முடிஞ்ச வரை எழுதலாம். இவன் எதுக்கு நம்மை துரத்தறான்? பிரும்மஹத்தி. மூச்சிரைக்க ஓடுறேன். ஏதோ ஒண்ணு என் முதுகைக் கவ்வி பிடுங்கியது.

எனக்கு பிடிச்ச பிரம்பு நாற்காலி, 80களில் இருந்த ரவுண்டு பிரம்பு டீப்பாய். தந்தியாலா படங்களில் வருவது மாதிரி ராஜமுந்திரியோ வைஸாக்கோ இந்த இடம். நல்லா இருக்கு இல்லே? எனக்கே எனக்குங்கற மாதிரி போய் உக்காந்தேன். ஒரு சின்னப்பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான்.  ஹய்யோ.. இவன்.. இவன்... இவன் அந்த வீட்டு வேலைக்கார பையனாச்சே? இவனுக்கு.. ஆ......... கண்ணு.. கண்ணு வந்து வெள்ளையா இருக்கே.. இவனுக்கும் பேய் பிடிச்சுடுச்சா? ஹைய்யோ..ன்னு அலறிண்டே ஓட ஆரம்பிச்சேன். மஹா விகாரமா முகம் மாறி அந்த சின்ன பையனும் என்னை விறட்ட ஆரம்பிச்சான். மறுபடியும் ஓட்டம் ஓட்டம்.

ராதாநகரில் காஸெட் ரிக்கார்ட் பண்ண கொடுத்து ஒரு வாரமாச்சு. இன்னிக்கு தரேன்னு சொல்லி இருக்கான். வாங்கிடணும். அதுக்குள்ளே இவ்ளோ ரகளை.
அம்மா கூர்க் காபிப்பொடி வாங்க சொல்லி இருக்காங்க. அப்படியே நாடார் கடையில என்னமோ வாங்க சொல்லி.... மறந்துடுத்தே?

இவ்ளோ கூட்டத்துல அருண் பாப்பா என்ன தனியா நடந்து போயிண்டு இருக்கான்? அம்மா எங்கே? அம்மா.. அம்மா.. கூப்பிட்டு பார்க்கறேன்.. யாரையும் காணோம். கூட்டத்தில் குழந்தையை நழுவ விட்டுட்டேனே.. அருண்ன்னு கத்தி கத்தி பார்க்கறேன்.. காணோம். குறுகலான பாதை தாண்டி, சைக்கிள் தள்ளிண்டு போறேன். சத்குரு சாயினாத் மஹராஜ்கீ ஜெய்ன்னு கோஷங்கள் கேக்கறது. யாரோ கோயில்ல ஆரத்தி நடக்கறது. எட்டிப்பார்க்கறேன். ஒரே புகை. ஒண்ணுமே தெரியலை. சைக்கிளோடு நான் அங்கே நுழையறேன், காலுக்கு கீழே தரையில்லை.. அப்போத்தான் அது மலை உச்சியில இருந்து கீழே.. கீ....................................ழே விழுந்துண்டே...... அம்ம்ம்ம்ம்மா........ன்னு கத்திண்டே..  ரங்கு உலுக்கி விழுந்து எழுந்து, ”என்னம்மா?”ன்னு கேக்கறார். அம்மா எங்கேன்னு கேக்கறேன். படுத்துக்கோன்னு ரங்கு ஆசுவாசப்படுத்தறார்.

ப்ச்.. என்ன கனவுகள். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா எதுவும் நினைக்காம தூங்க முடியறதா.. சின்ன வயசுல இருந்து எல்லாமும் ரீவைண்டு ஆகுது. இந்த லஷணத்துல பரீட்சை, மத்தியானம் பார்த்த பேய்ப்படத்தின் மிச்ச சொச்சம் எல்லாம் வருது. என்னத்த சொல்ல?நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா மாதிரி யாரோ என்னை துரத்துவதும், என் முதுகைக்கூச வைக்கும் பிளக்கும் உணர்வும் எப்போத்தான் போகுமோ? விபூதியை வெச்சுண்டு மறுபடியும் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் கனகதுர்க்கம்மா கோவில் படிகளில் ஏறிண்டு இருக்கேன்.

Monday, May 31, 2010

நைனா நைனா ஓ மை நைனா!!!

இந்தக்கட்டுரைக்கு ஏன் இந்த தலைப்புன்னா எங்கப்பாவுக்கு நைனான்னு கூப்பிட்டால் கெட்ட எரிச்சல் வரும். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவரை வெறுப்பேத்துவதே என் தலையாய கடமையாக இருந்திருக்கு. அதான் இப்படி வெச்சுட்டேன். சரிதானே?

அப்படி என்ன வெறுப்பேத்தி இருக்கேன்னு கேக்கலாம். அதையெல்லாம் சொல்றதுக்குத்தானே இந்த பதிவே!

அப்பாவுக்கு காலை சீக்கிரம் எழுந்து பழக்கம். எப்போவுமே எல்லாருக்கும் முன்னாடி எழுந்து ஹிண்டுவை மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சுடுவார். நான் வழக்கம்போல எல்லாருக்கும் அப்புறமா எழுந்து அப்பாவை பார்த்து ”யாரங்கே?” ரேஞ்சுக்கு கைதட்டுவேன். ஹிண்டுவில் மூழ்கி இருக்கும் டேரி மெதுவாக என்புறம் திரும்பிப்பார்ப்பார். அவசரமாக என் படுக்கையை காட்டி ‘இதையெல்லாம் எடுத்து வெச்சுடுங்க’ன்னு கைஜாடை காட்டிட்டு நான் பல் தேய்க்கப்போயிடுவேன். அப்பா கோபத்துல கண்டபடி திட்டோ திட்டுன்னு திட்டிண்டு இருப்பார். அப்பாடி! எனக்கு அப்போத்தான் காலை எழுந்த பயனை அடைஞ்சாப்புல ஒரு திருப்தி இருக்கும். ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுண்டே . கிச்சன்ல போய் அம்மாகிட்டே ஒரு குட்டி டோஸ் வாங்கிண்டு மரியாதையா என் படுக்கையை நானே எடுத்து வெச்சுடுவேன். இருந்தாலும் நைனா நான்ஸ்டாப்பா ஒரு அரைமணி நேரம் அஷ்டோத்திரம் வாசிப்பார். அதைஎல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா என்ன? காமெடியா இருக்கே?

எனக்கு ரொம்ப பெரிய குரல்ன்னு பாட்டி எல்லாம் டீஸண்டா சொல்லுவாங்க. உண்மை என்னான்னா, ரொம்ப ஹை டெஸிபெல் வாய்ஸ். கொஞ்சம் சந்தோஷம் ஆனேன்னா கத்தி தீத்துடுவேன். எல்லார் காதுலேயும் ரத்தம் வர அளவுக்கு. நான் பெங்களூர்ல இருந்தப்போ ஹாஸ்டல்ல இருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணேன். நீ என்னத்துக்கு எஸ்.டீ.டீ பண்ணி காசைக்கரியாக்கறே? பேசாம மாடியில நின்னு சாதாரணமா பேசினாலே போறும். எங்களுக்கு கேட்கும்ன்னு சொன்னார்னா பார்த்துக்கோங்க. அவ்ளோ அலறல்! ஒரு வாட்டி சில நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தாங்க. நானும் வழக்கம்போல ஆம்ப்ளிஃபையர் மாதிரி கத்திண்டே இருந்தேன். நைனா செம்ம டென்ஷன் ஆயிட்டார். ”ஏய், என்ன தொண்டை?”ன்னு ரொம்ப கோபமா கத்தினார். நான் உடனே சுதாரிச்சுண்டு மேலே பார்த்துண்டே, கழுத்தைக்காட்டி, ”தெரியலையேப்பா, மனுஷத்தொண்டை தான், வேணாப்பாருங்க”ன்னு அப்பாவியா சொன்னேன்.. வெறுத்துட்டார்.

அப்பா பேங்க்ல வேலை பார்த்ததால பண விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்டு. வெட்டிச்செலவு பண்ணமாட்டார். அவருக்கு பணத்தை அங்கே இங்கே வெச்சா பிடிக்காது. சிஸ்டமேட்டிக்கா தன் கைப்பையில் தான் வெச்சுப்பார். பத்திரமா செலவு பண்ணுவார்.

டீவீ விஷயத்துல தான் எனக்கும் அப்பாவுக்கும் அதிகபட்ச சண்டை வரும். ஒண்ணு டிஸ்கவரி ம்யூட்ல பார்ப்பார் இல்லாட்டி படமே தெரியாத, அல்லது குத்துமதிப்பா அவுட்லைன் மட்டுமே தெரியக்கூடிய அளவுல இருக்கும் அதரப்பழைய மூக்காலேயே பேசி/பாடும் பாடாவதி படங்களையெல்லாம் ரொம்ப ரசனையோட உக்காந்து பார்த்துண்டு இருப்பார். ஒரு வாட்டி அப்படித்தான், எனக்கு இருப்பு கொள்ளலை, எப்படி இவர் கவனத்தை திசை திருப்பறதுன்னு யோசிச்சுண்டே இருந்தேன். மெதுவா, இன்னோரு ரூமுக்குள்ளே போய், என்னப்பா இங்கே 100 ரூபாய் இருக்கே? யாருதுன்னு சும்மாங்காச்சுக்கு கேட்டேன். நைனா ”எங்கே டீ”ன்னு ஸ்லோ மோஷன்ல ரிமோட்டை வெச்சுட்டு ஓடிவர, நான் நைஸா ஹாலுக்கு ஓடிப்போய் ரிமோட்டை கபளீகரம் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் சுமார் ரெண்டு மணி நேரம் (அந்த டுபாக்கூர் பழைய படம் முடியுற வரைக்கும்) எனக்கு அஷ்டோத்திர அர்ச்சனை பண்ணிண்டு இருந்தார். ஹூ கேர்ஸ்!!

சும்மா தேமேன்னு உக்காண்டு இருந்தாலும் அவரை வம்புக்கு இழுக்கறது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.ஒரு வம்பும் இல்லேன்னு வெச்சுக்கோங்க, பெரிய தொண்டையில தெலுங்குல ஏதாவது தப்பும் தவறுமா வேணும்னே உளறிக்கொட்டுவேன், செம டென்ஸ்ன் பார்ட்டியாகி, ருத்ரதாண்டவம் ஆடிடுவார். மீண்டும் எனக்கு பிறந்த பயனை அடைஞ்ச சந்தோஷம் கிடைக்கும். ஹிஹி!

பொழுதுபோகாத இன்னொரு சமயம், ”டாரி, அன்னிக்கு எனக்கு 500 ரூபாய்க்கி செக்(Cheque) குடுக்கறேன்னு சொன்னீங்களே? என்னாச்சு?”ன்னு கேட்டேன்னு வையுங்க? ஆராரோ ஆரிரரோ படத்துல வர்ற அதிர்ச்சி பைத்தியத்தை விட அதிகமான அதிர்ச்சி எஃபக்டு கொடுத்து,”நான் எப்போடீ சொன்னேன்? நான் சொல்லவே இல்லை”ன்னு ஒரு முக்கா மணி நேர சஹஸ்ரநாம அர்ச்சனை எல்லாம் நடக்கும். ஹைய்யா ஜாலி!

ஒரு வாட்டி அப்பாவுக்கு செம்ம கோபம். என்ன சண்டைன்னு நினைவில்லை. மத்யானம் சாப்பிடாம பாய்காட் பண்ணிட்டு உக்காண்டு சக்தி விகடனை பரீட்சைக்கு படிக்கற மாதிரி தரோவா கரைச்சு குடிச்சுண்டு இருந்தார். அம்மாவுக்கும் கோபம். ”சாப்பிட வரச்சொல்லு”ன்னு என்கிட்டே சொன்னாங்க. நான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு, ஒரு குட்டித்தட்டுல சந்தனம், வெத்தலை பாக்கு ஒரு பழம் எல்லாம் அரேஞ்சு பண்ணிண்டு, ”அப்பா எடுத்துக்கோங்க”ன்னு ரொம்பவும் பவ்யமா சொன்னேன். ”ஹ? என்னது? எதுக்கு”ன்னு அப்பாவியா கேட்டார். எடுத்துக்கோங்கப்பா, சொல்றேன்னு சொன்னேன். குழப்பத்தோட சந்தனத்தை எடுத்து நெத்தியில இட்டுண்டார். சிரிச்சுண்டே, ”சாப்பிட வர்றீங்களாப்பா? வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்”ன்னு சொன்ன உடனே டன் டன்னா அப்பா மூஞ்சியிலே அசடு வழிஞ்சுது. அம்மா தங்கைமணி கிட்டே சொன்னப்போ எல்லாரும் விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு!

நைனா எப்போவுமே பயங்கரமா மிகைப்படுத்துவார். எனக்கு 15 வயசா இருக்கும்போது, ரொம்ப ஓவரா மிகைப்படுத்தி இவளுக்கு 30 வயசாச்சு, இன்னும் இப்படி எல்லாம் பண்றான்னு எதையோ சுட்டிக்காட்டினார்! ஆடிப்போயிட்டேன்.
6.15 ஆகி இருக்கும் மணி, 8 மணி வரைக்கும் தூங்கறான்னு ஒரே காட்டுக்கத்தல் கத்துவார். எனக்கு கத்தல் கூட ப்ராப்ளம் இல்லே, 8மணின்னு பொய் சொல்லுவாரே, அதான் என் மனசு கேக்காது. உண்மை தான் எப்போவும் வெல்லும். நான் மறுபடியும் படுத்து தூங்கிடுவேன்! 8 மணி ஆகலையே.. நான் எழுந்துட்டா அப்பா சொன்னது பொய் ஆயிடாது? அதான்..  ஹி ஹி!

எங்க குடும்பத்துல இருந்து தெலுங்கை ஒழிச்சு கட்டுறேன்னு தெலுங்கு மொழிக்கு ban போட்டவரும் இவரே. இதுனால் நாங்க தெலுங்கும் இல்லாம தமிழும் தெரியாம ஒரு மாதிரி அரைவேக்காட்டுத்தனமா ஆயிட்டோம்ங்கறது இன்னோரு விஷயம்.

ஆயிரம் தான் நைனாவை வெச்சுண்டு காமெடி பண்ணினாலும் நைனா இஸ் நைனா.. பணத்தோட முக்கியத்துவம் அவர்கிட்டே இருந்து தான் படிச்சுண்டேன். கஷ்டப்பட்டு தானா முன்னேறிய ஆள்.குடும்பத்தையும் ஓரளவுக்கு செட்டில் பண்ணினார். எதுவா இருந்தாலும் பெர்ஃபெக்‌ஷன், பார்ப்பார், சிஸ்டமேட்டிக் லைஃப் இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்.

கொஞ்ச நாளா இந்த போஸ்டு எழுதணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.. இன்னிக்கி தான், எழுதிடணும்ன்னு ஒரு பிடிவாதமா எழுதறேன். ஏன்னா இன்னிக்கி மே 31st. Happy Birthday darry..

Saturday, May 29, 2010

செல்லப்பன் பெரியப்பா..


சக்ரபாணி. அதான் அவர் பேர். இருந்தாலும் வீட்டுல செல்லப்பன்னு கூப்பிடுவாங்க. இன்னிக்கி கார்த்தால அவர் இறந்துட்டார்ன்னு செய்தி வந்தது. அதிர்ந்தோம். செல்லப்பன் பெரியப்பா ரங்குவின் சொந்த பெரியப்பா. ஜாலியான மனுஷர். அவர்கிட்டே ஏகப்பட்ட விஷயம் இருக்கும். பேசிண்டே இருப்பார். நிறைய புஸ்தகங்கள் படிப்பார். ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. 4-5 வாட்டி பார்த்திருக்கேன். கொட்டிவாக்கத்துக்கு போகும்போது பிரியமா உபசரிப்பார். எனக்கு மாமனார் இல்லாததால் அவர் மேல ரொம்ப மரியாதை. அதே ஜாடையிலும் இருப்பார். கொஞ்சம் பூசினாற்போல முகம். தீர்க்கமான கண்கள். சிவந்த நிறம். சின்ன வயதில் ரொம்பவும் ஸ்மார்ட்டாக இருந்திருக்கக்கூடும்.
78 வயதில் கொஞ்சம் உடல் உபாதைகள் இருக்கத்தான் செய்யும், செய்தது. இருந்தாலும் இவருடைய நகைச்சுவை உணர்ச்சியே இவருக்கு இத்தனை நாள் எக்ஸ்டென்ஷன் பெற்று கொடுத்ததுன்னு தான் நான் நினைப்பேன்.

செல்லப்பன் பெரியப்பாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்திருக்கு. ஒரு வாட்டி டாக்டர் கிட்டே போனப்போ டாக்டர், அவர் உடம்பை பரிசோதனை பண்ணிட்டு சொல்லி இருக்கார், "Mr Chakarapani, it is high time you stop smoking. you are slowly dying" கொஞ்சம் கூட யோசிக்காம செல்லப்பன் பெரியப்பா பதில் சொன்னாராம், “I am not in a hurry doctor"

இப்போ அவர் அவசரமா எங்க கிட்டே சொல்லிக்காம போயிட்டார்! We miss you பெரியப்பா.. May your soul rest in peace.

Friday, May 21, 2010

பன்னீர் சோடாஆஆஆ.......

முதன் முதலா எப்போ பன்னீர்ஜோடா குடிச்சேன்னு சரிய நினைவில்லை. 1985 -கொண்டித்தோப்புல இருந்தப்போ ரவி மாமா மெரீனா பீச்சுக்கு கூட்டிண்டு போகும்போது பஸ்ல எனக்கு வாந்தி வராப்ல இருந்தது. உடனே ஏதோ ஒரு ஸ்டாப்புல எல்லாரும் இறங்கி, பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்தார்.
இந்த மாதிரி ஒரு ட்ரிங்க் இருக்குன்னு அப்போத்தான் தெரிஞ்சது. அப்போ ஆரம்பிச்ச பன்னீர் சோடா பைத்தியம், சமீபத்துல ஏதோ ஒரு பொட்டிக்கடையில பன்னீர்சோடா வாங்கிக்குடிச்சு அதுல என்னென்னமோ குப்பை எல்லாம் விழுந்திருக்க, நைனாவிடம் திட்டு வாங்கினாலும் பன்னீர் சோடா பன்னீர் சோடாதான்னு சூளுரைக்கிற அளவுக்கு எனக்கு இஷ்டம்!

எங்கே போனாலும், ஏதாவது ஒரு பெட்டிக்கடையில பன்னீர் சோடா குடிக்காம இருந்ததே இல்லை! குறிப்பா பன்னீர் சோடா  ரொம்ப ரொம்ப ரசிச்சுக்குடிச்சது திருப்பரங்குன்றத்துலன்னு நினைவு. ப்ராண்ட் - மாப்பிள்ளை விநாயகர். ஆஹா.. அப்படி ஒரு சுவை. தரமான சோடா, தரமான இனிப்பு, தரமான பன்னீர் இதையெல்லாம் கலக்கினா அருமையான பன்னீர்சோடா!

சில இடங்கள்ல கன்வென்ஷனல் பாட்டில்கள்ல பன்னீர்சோடான்னு லேபிள் ஒட்டி வரும்! அநியாய டேஸ்டா இருக்கும். ஏன்னா சோடா ரொம்ப காட்டா இருக்கும். இனிப்பும் போடுவாங்க. ஆனா முக்கால்வாசி இடங்கள்ல பன்னீர்சோடா வெறும் சர்க்கரை+அழுக்குத்தண்ணி தான். அட்லீஸ்டு எனக்கு தெரிஞ்ச மட்டில், என்னுடைய பெர்ஸனல் எக்ஸ்பீரியன்ஸ்!

மாப்பிள்ளை விநாயகர் மாதிரியான் ஒரு சோடாவை அடுத்து நான் எங்கேயும் குடிக்கலை. சிதம்பரம் கோவில் கிட்டே ஏதோ ஒரு கடையில் யானை விலை கொடுத்து வாங்கி குடிச்சோம். அந்த சுவைக்கு யானை விலை கூட கொடுக்கலாம். அதான் சட்டுன்னு மனசுல நிக்கிது. எங்க மாமியாருக்கு முதல்முறையா பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்ததும் சிதம்பரத்துல தான். மேல்மருத்துவரில் வாங்கிக்கொடுத்தப்போ நல்லா இருக்கலை! சிதம்பரத்துல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது!

(படத்துக்கு புதுகைத்தென்றல் அக்காவுக்கு நன்றி, கூகிள்ல தேடினப்போ அவங்க தளத்துல இருந்து தான் கிடைச்சது! அடுத்த வெக்கேஷன் போனா மா.வி சோடாவை படமெடுத்து அப்லோடு பண்ணனும். படமே இல்லை! )

கண்ட கண்ட ’கலர்’களை விட இது எவ்வளவோ பெட்டர்ங்கறது என் கருத்து.
முன்னக்காலத்துல எல்லாம் யாராவது விருந்தாளி வந்தா போய் கலர்வாங்கிட்டு வான்னு தான் சொல்லுவாங்க!

தொண்ணூறுகள்ல திடீர்ன்னு ஒரே நெருக்கடி வந்துடுத்து. மார்க்கெட்ல பன்னீர் சோடாவுக்கு பதிலா அல்ப்பமா ரஸ்னா வந்திடுத்து. சர்க்கரையே பத்தாம, வெறும் ஆரஞ்சு கலருக்காக ரஸ்னாவை பாட்டில் பாட்டிலா 2 ரூபாய் கொடுத்து மக்கள்ஸ் குடிச்சுண்டு இருந்தாங்க! மேங்கோ தான் இருக்குன்னு சில சமயம் சொல்லுவாங்க. மேங்கோவாவது, ஆரஞ்சாவது, ரெண்டுமே மஹாக்கேவலமாத்தானிருக்கும் .

அம்மா பண்ற ரஸ்னா நாங்க ரசிச்சு குடிப்போம். எல்லா ஃப்ளேவரும் அம்மா 80ஸ்லேயே பண்ணிக்கொடுத்தாச்சு. அதைக்குடிச்ச நா, இதெஇயெல்லாம் ரசிக்கலை! நானும் கடைகடையா கேட்டு கேட்டு பார்க்கறேன் பன்னீர்ஜோடா இல்லேன்னு தான் எல்லா இடத்துலேயும் சொன்னாங்க!

94ல கோக் வந்தது. ஐஞ்சே ரூபாங்கறதால மெதுவா பன்னீர் சோடா எல்லாம் நலிஞ்ச தொழில் ஆயிடுத்து!

இன்னிக்கு எம்.பீஸி2 வில் சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் படந்த்தின் அடுத்த பார்டு ‘ ரெட் டிராகன்’ போட்டு இருந்தான். அதுல ஒரு டிட்டெக்டிவ் ஏதோ ஒரு பானத்தை குடிச்சுண்டே ஆராய்ச்சி பண்ணிண்டு இருந்தான். நான் ரங்குவை கேட்டேன் இவாள்ளாம் என்ன குடிப்பா? ரங்கு சும்மா இருக்காமல் “ஆங்.. பன்னீர்சோடா ! கேக்குற கேள்வியைப்பாரு? ”ன்னு சொல்லிட்டார். எனக்கு கை கால் புரியாம பன்னீர்சோடா சபலம் வந்திடுத்து.

ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்தை எல்லாம் விட்டுட முடியுமா சொல்லுங்க?

வீட்டுல பன்னீர்சோடா எல்லாம் பண்ண முடியும்ன்னு நான் நினைச்சதே இல்லே! பன்னீர்சோடா உடனே தயாரிச்சுட்டேன். போன மாசம் சத்யநாராயண பூஜைக்காக வாங்கின பன்னீர் இருந்தது. இதோ பன்னீர்சோடா செய்யும் முறை

பன்னீர் -கால் டம்ளர்
சர்க்கரை (அ) ஆர்ட்டிஃபீஷியல் ஸ்வீட்னர் -Sugar Substitute -2 ஸ்பூன்
சோடா-1 கேன்
ரோஸ் எஸன்ஸ் - 2-3துளிகள்

முதல்ல பன்னீர்ல சர்க்க்ரையை நல்லா கலந்துண்டு, எஸன்ஸ் விட்டு ஸ்பூனால கொஞ்ச நேரம் கலக்கணும். அடுத்து ஸ்பூனால கலக்கிண்டே சோடா விட்டு உடனே சர்வ் பண்ணனும். ஆச்சு பன்னீர் சோடா ரெடி!

இந்த சோடாவை சம்மர்ல எஞ்சாய் பண்ணுங்க! முக்கியமா வெளிநாட்டுல இருக்கறவங்க ரொம்ப ரசிப்பாங்கன்னு நம்பறேன். எங்கே போறீங்க நீங்களும் மாப்பிள்ளை விநாயகரை வீட்டுலேயே பண்ணப்போறீங்களா?

Monday, May 17, 2010

பதிவர்கள் சிந்தனை

(எனக்கு தெரிஞ்ச)எந்தெந்தபதிவர், இன்நேரம் எப்படி எழுதுவாங்க (அ) எழுதும்போது என்ன யோசிச்சுண்டு இருப்பாங்கன்னு சும்மா ஒரு கற்பனை

எல்.கே:
இன்னைக்கு நான் உங்களுக்கு புதுசா சொல்லிக்கொடுக்கப்போற ரெசிப்பீ கொத்தவரங்கா ரைஸ்

முதல்ல கொத்தவரங்காயை பச்சையா மிக்ஸியில நல்லா அரைச்சுக்கோங்க. 1ஸ்பூன் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணி விட்டு சாதம் ‘வடிச்சு’ வெச்சுக்கோங்க. இப்போ அந்த அரைச்ச விழுதை அந்த குழைசல்ல போட்டுக்கோங்க.  இதுல இப்போ உப்பு, சர்க்கரை போட்டுக்கோங்க. ஒரு 30-35 மிளகை நல்லா மிக்ஸியில போட்டு பொடிச்சுக்கோங்க. (கவனிக்க: காரம் அதிகமா விரும்பாதவங்க 29 (அ) 34 மிளகு மட்டும் போட்டுக்கோங்க, அப்புறம் எல்.கே ரொம்ப காரம்ன்னு பின்னூட்டம் போட்டு மைனஸ் வோட்டு போட்டுடாதீங்க ஆமா)அந்த கலவை சாததுல போட்டு சொதக் சொதக்ன்னு கையால பிசைஞ்சீங்கன்னா அருமையான சுவையான கொத்தவரங்காய் சாதம் (பேஸ்டு!!!) ரெடி. இதை குழந்தைகள் ஃபெவிக்காலுக்கு பதிலா விரும்பி யூஸ் பண்ணுவாங்க. சில சமயம் உங்க தங்கமணிகள் வாய்ல போட்டுட்டீங்கன்னா அவங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க. அப்புறம், அவங்க புலம்பல் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.


தக்குடு:
(சிவப்பு மையில் இருப்பது தக்குடுவின் சிந்தனை)
குருநாதா சரணம்!
இப்போ எழுதப்போற கதைக்கு ஒரு டைட்டில் வெச்சுடறேன்.
வைஷ்ணவியின் குண்டலம்.
ச்சே.. சரியா இல்லையே... ஹ்ம்ம்..
காயத்ரியின் குண்டலம்.
இதுவும் நன்னாயில்லையே... 
ஸ்ரீவித்யாவின் குண்டலம்..
என்னமோ இடிக்குது.. 
சரி வேண்டாம்.. 
வைஷ்ணவியின் ஜிமிக்கி.
பரவாயில்லை.. 
காயத்ரியின் ஜிமிக்கி.
இல்லையே.. என்னம்மோ இடிக்குதே...
ஸ்ரீவித்யாவின் ஜிமிக்கி...

என்னம்மோ குழப்பமா இருக்கே.. .
சரி.. மறுபடியும் யோசிக்கறேன்.. ஃப்ரெஷ்ஷா ஒரு ஐடியா வேணும்.. 
குண்டலமும் ஜிமிக்கியும்..

தன்னைத்தானே தட்டிக்கொடுத்துண்டே,”ஆஹா.. தக்குடு,,, அருமைடா கண்ணா.. இப்போ பாரு.. ஒரு 300 பின்னூட்டத்தை அள்ளப்போறே... ”


பத்மநாபன் அங்கிள்:
ஸ்ஸ்ஸ்பா... ஒரு தொடர் பதிவு ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகப்போகுது.. என்னமா வேலை இழுக்குது! மருதமலை முருகா.. இன்னிக்கி நல்ல படியா அருளுப்பா.. எப்படியாவது இன்னிக்கி... சொல்லிட்டா ஒரு வேளை நடக்காம போயிட்டா? . ப்ளீஸ் முருகா.. என்னை கை விட்டுடாதே.. எப்படியாவது ஜஸ்டு ஒரே ஒரு..
ஈச்சனாரி பிள்ளையாரப்பா.. நீயாவது உதவுப்பா.. பேரூர் சிவபெருமானே.. உன்னையும் நான் முழுமையா நம்புறேன்.. குலதெய்வம் சுஜாதா.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம ஜவஹராய. ஓம் நம ஜவஹராய.. எல்லாரையும் வேண்டிண்டாச்சு..
எப்படியாவது இன்னிக்கு ஒரு வரி தமிழ்ல டைப்படிச்சுட வேண்டியது தான்.. எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள பிடித்த ஐந்து பாடகர் தொடர் பதிவை எழுதி முடிச்சுட முடியாது??? இந்தக்கஷ்டத்துக்கு பின்னூட்டம் போடுறதே எவ்ளோவோ பெட்டர்டா சாமி!!!

மாத்தா கீத்தானந்த மயி:


(எழுதுகிறார்)க...
(இன்னோரு விண்டோவில் போய் கூகிள் பஸ்ஸில்)

க்ர்ர்... ஏய் தக்குடு, நீ கிடையாது..
ண்...
க்ர்ர்ர்.. திவா அண்ணா, ஒரு கமெண்டு போட்டேனே, எங்கே போச்சு..
ண...
க்ர்ர்... அநன்யா அக்கா, கு.ப.த எங்கே?
ன்...
க்ர்ர்... கூகிளின் சதி...
வ...
க்ர்ர்...
ரு...

ஹூஸைனம்மா:
ட்ரங்குப்பெட்டி சாவியை எங்கியோ வெச்சுட்டேனே.. காணோம்.. அப்போ அவசரத்துக்கு ஒரு பாலித்தீன் பையில பேக் பண்ணிக்கலாமே.. எப்படியும் மாசத்துக்கு ஒரு பதிவு தானே.. பரவாயில்லை.. அதுக்குள்ளே வேறு ஏதாவது மீட்டிங் கோஆர்டினேட் செஞ்சுட வேண்டியது தான்.

ஜெகநாதன்:
முதல்ல படம் வரைஞ்சு ரெடி பண்ணிடுறேன். நெக்ஸ்டு கதை எழுதிடுறேன். அதுக்கப்புறம் இந்த படத்துக்கும் கதைக்கும் ஏற்றார்போல ஒரு கவிதை எழுதிடுறேன். நெக்ஸ்டு ஒரு ட்யூன் போட்டு பேக்கிரவுண்டு மீசிக் போட்டு பாட்டு பாடி ரெக்காட் பண்ணிட வேண்டியது தான்.

அப்பாவித்தங்கமணி:
ஒரு வழியா பிரியமானவளே முடிச்சாச்சு. இப்போ என்ன பண்றது? தக்குடு, அநன்யா ப்ளாக்ல போய் கும்மி அடிக்க வேண்டியது தான். இல்லாட்டி ஒரு கவுஜ எழுதலாமே.. இல்லாட்டி இட்லிக்கு ஊறவெச்சு அரைச்சு பண்ணிப்பார்க்கலாம்!

பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா:
என்ன தான் எழுத? நமக்கு எழுத்து ஒத்து வரமாட்டேங்குதுன்னு நினைச்சா யாராவது விடுறாங்களா? சும்மா தொடர்பதிவுக்கு கூப்பிடுறாங்களே? பேசாம நாட்டாமையா ஒரு அரச மரத்தடியில சொம்போட உக்காந்து 4-5 இத்துப்போன பெருசுங்களை உக்கார வெச்சு பஞ்சாயத்து.ப்ளாக்ஸ்பாட்.காம்ன்னு ஒரு சைட் ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

பொற்கொடி:
கருப்பு நிலா முஞ்சு போச்சு.. வேணா ப்ளூ எர்த்ன்னு புச்சா ஒரு கதை ஸ்டார்ட் பண்ணிக்கலாம். ஃப்ர்ஸ்டு எப்பிசோடு தானே வேணும்? எப்படியும் ரெண்டு மாசம் கழிச்சு தான் செக்கண்டு எப்பிசோடு போடணும். நோ ப்ராப்ளம் .. ஸ்டார்ட் மீஜிக். ப்ளூ எர்த். பாகம்-1....

ட்ரீமர்:
எப்புடியோ ஹார்ரர், த்ரில்லர் எல்லாம் சேர்த்து கதை எழுதி கல்லா கட்டியாச்சு. இப்போ செண்டிமெண்ட், ஆக்‌ஷன்,ஹார்ரர் & த்ரில்லர் எல்லாம் சேர்த்து ஒரு நகுலன் கதை எழுதிட வேண்டியது தான்.

ஜிகர்தண்டா:
வேறு யாராவது நம்மை ஏதாச்சும் தொடர் பதிவுக்கு கூப்பிட்டா பரவாயில்லை.. ஹ... யாருமே நம்மளை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!!எவ்ளோ நேரந்தான் விட்டத்தையே வெறிச்சு பார்த்துட்டு இருக்கறது?


அநன்யா:
ஹ்ம்ம்ம்.. எவ்ளோ யோசிச்சாலும் ஒண்ணுமே தோணமாட்டேங்குதே! என்ன எழுதறது? மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாட்டி ப்ளாக் எக்ஸ்பயர் ஆயிட்டா? யாரை மொக்கை போடுறது?

Wednesday, May 12, 2010

பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு

பிடித்த 10 படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த ட்ரீமருக்கு மிக்க நன்றி.
(இதென்ன தொடர் பதிவு சீஸனா???!!!தொடர் பதிவு ஒரு விதத்துல ரொம்ப நிம்மதி! என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்க வேண்டாமே!!ஹீ ஹீ)

எப்போவுமே, சினிமாவா இருந்தாலும் சரி, சில பாட்டுக்களா இருந்தாலும் சரி அதை மீண்டும் பார்க்கும்போதோ கேட்கும்போதோ,  சில நல்ல நினைவுகளை கொண்டு வரும். அந்த நிமிடங்களை மறுபடியும் வாழ வழி வகுக்கும். சினிமாவை ரசிக்க ஆரம்பிச்சது சில வருஷங்களுக்கு முன்னாடி தான்னாலும், சின்ன வயசுல இருந்து கேட்ட, பார்த்த சினிமா இந்த லிஸ்டில் அடக்கம்.
இது பெஸ்டு லிஸ்டு இல்லாம இருக்கலாம். ஆனா என் குழந்தைப்பருவ நினைவுகளை எல்லாம் திருப்பி தருவதாக அமைவதால் இது என்னுடைய பெர்ஸனல் ஃபேவரைட்டாக இருக்கிறது.

1.சங்கராபரணம் (தெலுங்கு - 1979)
கே.விஸ்வநாத்தின் அற்புதமான காவியம் என்றே சொல்லலாம். சோமையாஜூலுவின் நடிப்பும் மஞ்சுவின் பக்தியும் இசையும் நடனமும் பேபி துளசியின் சூட்டிகையும் இந்த படத்தின் ஹைலைட்டு. எல்லா கே.விஸ்வநாத்தின் படங்களிலும் நம் நாட்டு கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துச்சொல்வது மாதிரி தான் கதையம்சம் இருக்கும். சங்கராபரணம், சாகர சங்கமம்,ஸ்ருதிலயலு, ஸ்வர்ணகமலம் இப்படி எல்லா படங்கள்லேயும் இசை நடனத்துக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். குறிப்பா ஏன் இந்த படம்ன்னா, நான் குழந்தையா இருந்தப்போ, எங்க வீட்டுல ஒரு புஷ் டேப்ரிக்கார்டர் இருந்தது. அதுல சதா இந்த பாட்டுக்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து. இந்தப்படத்தை ரெண்டு வருஷம் முன்னாடி
ராஜஸ்ரீயில் டவுன்லோடு பண்ணி வெச்சுண்டு அப்பப்போ பார்ப்பதுண்டு. சமீபத்தில் விஷுவுக்கு Ntvயில் போட்டு புண்ணியம் கட்டிண்டாங்க. பேபி துளசியுடன் மஞ்சு பார்க்க,  கோதாவரிக்கரையில் ஸ்நானம் பண்ண சங்கர சாஸ்த்திரிகள் வர்றார். அதுல இருந்து தான் பார்க்க முடிஞ்சது. இருந்தாலும் அந்த காட்சிகளில் இருந்த அழுத்தம், அந்த பக்தி பாவம், அந்த நெகிழ்ச்சி அப்படியே என்னை அழ வெச்சுடுத்து. கண்ல தாரைதாரையா
கண்ணீரோடு பார்த்தேன். சாகர சங்கமமும் எத்தனை வாட்டி போட்டாலும் பார்ப்பேன்.


2.தில்லு முல்லு (தமிழ் 1981)
அருமையான டைரக்‌ஷன், சூப்பர் பாடல்கள், ரஜினியின் டைமிங் எல்லாமா சேர்த்து இந்தப்படமும் என் ஆல் டைம் ஃபேவரைட்ஸ் லிஸ்டுல வரும். இண்டெர்வியூ காட்சியும் ஃபுட்பால் மேட்ச் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியும் யாராலும் மறக்க முடியாது. தேங்காய் ஸ்ரீநிவாசன் மாதிரி இந்த பாத்திரத்தை வேறு யாராலையும் நடிச்சிருக்க முடிஞ்சிருக்காதுன்னு தான் நான் நினைக்கறேன். ஸ்பெஷல் மென்ஷன் டு செளகார் ஜானகி! எனக்கு பொதுவே உத்பல் தத்னா ரொம்ப இஷ்டம். ஆனா அவரை மிஞ்சிட்டார் தேங்காய்ன்னே சொல்லலாம். அவ்ளொ கலக்கான ஆக்டிங். 



3.மணல் கயிறு (தமிழ் 1982) 
நாடகத்தனமா இருந்தாலும் எஸ்.வீ.சேகரின் 8 கண்டிஷன்களும் விசுவின் ராகம்போட்ட பேச்சும் இருந்தாலும் பலவாட்டி பார்த்து பார்த்தும் போரே அடிக்காத படம் இது. ஆல் டைம் ஃபேவரைட். சமீபத்துல ராஜ்ஸ்ரீயில் பார்த்தோம். ரசித்தோம். இப்போவும் நல்லாத்தான் இருக்கு. இந்தப்படத்தின் ஹைலைட் & ஒரிஜினல் ஹீரோன்னு கேட்டா அது வேறு யாருமில்ல, கிஷ்மூ தான். அவ்ளோ அருமையான உடல்மொழி. தலையை முன்னாடி துருத்திண்டு, துர்கா துர்கான்னு புலம்பிண்டு, சூப்பர்.நீங்களே பாருங்களேன்.. ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும். ராயல் சல்யூட் கிஷ்மூ சார். 

4.அஹா நா பெள்ளண்ட்டா (தெலுங்கு 1986)
ஜந்தியாலா டைரக்‌ஷனில் அல்ட்டிமேட் காமெடியாக எடுக்கப்பட்ட சூப்பர் படம் இது. சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்துடுத்து. அவ்ளோ காமெடி இந்தப்படம். ராஜேந்திரப்பிரசாத் தான் ஹீரோ. இந்த ஜந்தியாலாவோட ஸ்பெஷாலிட்டியே சில குறிப்பிட்ட குணாதிசியங்களோட பாத்திரப்படைப்பு இருக்கும். உதாஹரணத்துக்கு இந்த படத்தில் வரும் அப்பா பாத்திரம் (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) மஹா கஞ்சன், பேசுறதுக்கே காசு கேக்குற ஆளு.
நம்ம ஹீரோவோட அப்பா மரண மொக்கை போடுற கேசு. யாரைப்பார்த்தாலும் தன் ஆட்டோ பயோகிராஃபியை சொல்ல ஆரம்பித்து விடுவார். கேக்கறவங்க மண்டை காய்ஞ்சு நொந்து போயிடுவாங்க. அந்த அளவுக்கு நச்சு கேஸ். இந்தப்படத்தில் தான் பிரும்மானந்தம் வெளிச்சத்துக்கு வந்தார். இவர் ’மொழி’படத்துலஅபார்ட்டுமெண்ட் செக்கரெட்டரியா வருவாரே!







5.க்ஷணக்க்ஷணம் (தெலுங்கு 1991)

ராம் கோபால் வர்மாவின் டைரக்‌ஷனில், வெங்கடேஷ்,ஸ்ரீதேவி,பரேஷ் ராவல் நடித்த ஒரு சூப்பர் படம். இதன் மெயின் ஹைலைட் ஸ்ரீதேவி. எத்தனையோ தமிழ்ப்படங்களில் ஸ்ரீதேவியைப் பார்த்திருந்தாலும், இந்த படமும் இவர் நடிப்பும் அந்த விறுவிறுப்பும் அலுக்கவே இல்லை. நல்ல ஜாலி படம். எம்.எம்.கீரவாணியின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள். எனக்கும் தங்கைமணிக்கும் ஆல்டைம் ஃபேவரைட்ஸ்!



6.Forrest Gump (ஆங்கிலம் 1994)
முதல் முறையா ஒரு ஹாலிவுட் படம் பார்த்து ரொம்ப ரொம்ப அழுதேன்னா அது இந்தப்படம் தான். என்ன உணர்ச்சின்னு சரியாச்சொல்ல தெரியலை. ஒரு வித பரிதாபமா, ஒரு நெகிழ்ச்சியா அது என்னவா வேணா இருக்கட்டும். அருமையான நடிப்பு(ஆஸ்கர் கிடைச்சது) என்னை மொத்தமா கவர்ந்தார் டாம் ஹான்க்ஸ். தனியா வீட்டுல இருந்தப்போ அமைதியா உக்காந்து பார்த்தேன். எவர் லாஸ்டிங் இம்பாக்டுன்னு சொல்லலாம். அவ்ளோ ஒரு அருமையான படம். அமெரிக்க வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அழகாக படத்தில் கோர்வையாக சேர்த்திருப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு ஜர்னல் போல ஒரு டயரி போல எடுத்திருப்பார்கள். இந்த காவியத்தின் தழுவல் தான் மிகப்பரிதாபமாக தமிழில் வாரணம் ஆயிரம் & ஹிந்தியில் மை நேம் இஸ் கான். சாரி.. ரெண்டும் மெகா சொதப்பல். நீங்க இன்னும் பார்க்கலையா? அப்போ கட்டாயம் பாருங்க. மேலதிக விவரத்துக்கு இங்கே க்ளிக்கவும்.



7.பம்பாய் (தமிழ் 1995)
1995இல் இந்தப்படம் மவுண்டு ரோடு தேவி தியேட்டருக்கு அப்பா கூட்டிண்டு போனார். நான் தங்கைமணி, N.K.ஸ்ரீவித்யா, கண்ணா அண்ணா, லதா எல்லாரையும் கூட்டிண்டு போனார்.  மறக்க முடியாத படம்.
முக்கியமா, மறக்க முடியாத இசை. பாம்பே ரயட்ஸில் ஏ.ஆர்.ஆரின் இசையில் நான் உணர்ந்த வைப்ரேஷன்ஸ் என்னால என்னிக்குமே மறக்க முடியாது. படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. அந்த ட்ரம்ஸ் சில சமயம் இப்போகூட கேக்கும் என் காதுல. முக்கியமா க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப பாதிச்சது. பாட்டு எல்லாமே செம அல்ட்டிமேட் ரகம்! இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரு சுவையான  நிகழ்வு தியேட்டரில். மனிஷா அரவிந்த் தம்பதியின் இரட்டைக்குழந்தைகளை காணோம்! மனீஷா தேம்பித்தேம்பி அழுதுண்டே எங்கே?... என் குழந்தைங்க எங்கே?ன்னு கேக்கறாங்க. உடனே தியேட்டரில் ஏதோ ஒரு விஷமி,” இரும்மா டீ சாப்பிட போயிருக்காங்க வந்துருவாங்க”ன்னு சொல்ல, படத்தை உருக்கமா
பார்த்துண்டு இருந்த கூட்டம் ஒரு நிமிஷம் கொல்லுன்னு சிரிச்சுடுத்து. எதுக்கு சொல்ல வர்றேன்னா அவ்ளோ நிசப்தம் தியேட்டர்ல. படம் முடிஞ்சதுக்கப்புறம் கார்னெட்டோ ஐஸ்கிரீம் கூட மறக்க முடியவில்லை .. மறக்க முடியவில்லை!


8.தெனாலி(தமிழ் 2000)
மைக்கல் மதன காமராஜனைப்பத்தி ஒரு தனி பதிவு போட்ட நிலையில் இன்னோரு வாட்டி அதைப்பத்தியே எழுத வேண்டாம்ன்னு தான் இந்தப்படத்தை பத்தி எழுதறேன். கமலின் க்ரேஸி காம்பினேஷனில் வந்த எல்லாப்படங்களுமே என் ஃபேவரைட் என்றாலும் இலங்கைத்தமிழ் பேசும் (கொஞ்சம் கிழடு தட்டினாலும்)தாமரைப்போன்ற அகன்ற கண்களுடன் கமலஹாசனின் அப்பாவித்தனமான நடிப்பு அப்படி ஒரு ஈர்ப்பு. மதன்பாப், டெல்லி, சுரேஷ்க்கிருஷ்ணா, இவங்க கூட சேர்ந்துண்டு ஜெயராம் அடிக்கிற லூட்டி பயங்கர ரசனை. டீ.வீ.டீ இருக்கு. அடிக்கடி பார்க்கறேன். எத்தனை வாட்டி பார்த்தாலும் ஏதாவது ஒரு புதிய ஜோக் அகப்படாம இருந்ததில்லை. அவ்ளோ டைமிங். பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம்,காதலா காதலா, அபூர்வ 
சகோதரர்கள், சிங்காரவேலன் இதெல்லாம் கூட எனக்கு பிடிக்கும். தெனாலி என்னிக்கும் கொஞ்சம் அதிக இஷ்டம். 








9.அன்பே சிவம் (தமிழ் 2003)
ஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும். காட்சிக்கோர்வையும் சரி, மதனின் வசனங்களும் சரி, கமலின் நல்லா கெட்டப்பும் நடிப்பும், முதிர்ச்சியும், கெட்டிக்காரத்தனமான 
பேச்சும் எதை எடுக்க எதை விடுக்க. சந்தேகமே இல்லை. ஆல்டைம் ஃபேவரைட்ஸ் இது. 


10.தன்மாத்ரா (மலையாளம் 2005)
மோஹன்லாலின் நடிப்பாற்றலில் இந்தப்படம் பார்த்த ஒரு வாரம் அப்படியே ஸ்தம்பிச்சு போயிட்டேன். அவ்ளோ மன பாரம். சோகமான படங்கள் இனிமே பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப்படத்துல சோகம்ங்கறதை விட யதார்த்தம் நிறைய இருக்கும். நல்லா இருக்கற ஒரு மனுஷன் ஒரு கொடிய மனநோய் தாக்குறதுனால எப்படி அவன் குடும்பமும் அவனும் கஷ்டப்படுறாங்கங்கறது தான் கதைன்னாலும் மோஹன்லாலின் கண்ணிமைகள் கூட நடிச்சு இருக்கறது ரொம்ப ஆச்சிர்யம் எனக்கு. மறக்க முடியாத ஒரு படம். ரெண்டாவது வாட்டி பார்க்க தைரியம் இருக்கலை. 






  1. நந்தனார்
  2. ஹரிதாஸ்
  3. சிவகவி
  4. பக்த மீரா
  5. சக்ரதாரி
  6. ஒளவையார் (கே.பி.சுந்தராம்பாள்)
  7. பராசக்தி
  8. வியட்நாம் வீடு
  9. கொஞ்சும் சலங்கை
  10. கர்ணன்
  11. தில்லானா மோஹனாம்பாள்(வைத்தி)
  12. கெளரவம்
  13. பாலும் பழமும் 
  14. பாகப்பிரிவினை
  15. ஆயிரத்தில் ஒருவன் (பழைய எம்.ஜி.ஆர் படம்)
  16. அன்பே வா
  17. அவள் ஒரு தொடர்கதை 
  18. தனியாவர்த்தனம்



ஓ, இதுவா? இது என்னை போஸ்டு எழுத விடாமல் நச்சு பண்ணி ரங்கு தந்த லிஸ்டு. நான் சொல்லியாச்சு இது எனக்கு பிடிச்ச படங்கள் லிஸ்டுன்னு.நான் சொன்னேன் நான் வேணா உங்களுக்கு ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணிக்குடுக்கறேன்னு.  ரங்கு கேட்டாத்தானே? நானும் இதுல தான்  சொல்லுவேன்னு அடம் பிடிச்சு குடுத்து இருக்கார், இந்த கற்கால மனிதன். சில படங்கள் வந்தப்போ இவர் பிறக்கக்கூட இல்லை. ஏன் தான் இப்படியோ.. நான் என்ன பண்ணட்டும்? 10 படங்கள் தான்னு சொல்லியாச்சு. கேட்டாத்தானே? சொல்லிண்டே போறார். அப்புறம் மாடிஃபிக்கேஷன் வேற.. இது வேண்டாம். அது. அது வேண்டாம் இதுன்னு. இதான் ஃபைனல் லிஸ்டுன்னு எல்லாம் சொல்ல முடியாது. சாயங்காலம் வந்து உக்காண்டு வேற பேரெல்லாம் சொல்லப்போறார்.  உடனே எல்லாரும் ஜால்ரா அடிச்சுண்டு ரங்கு லிஸ்டு தான் பெஸ்டுன்னு பின்னூட்டம் போடுவீங்களே? இதே வேலையாப்போச்சுப்பா..

குறிப்பா நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது
ஜிகர்தண்டா கார்த்திக்
எல்.கே
பாஸ்டன் ஸ்ரீராம் (ஒரே ஒரு கண்டிஷன் கமல் படங்களை தவிர்த்து மற்றவை, ஹீ ஹீ எங்களுக்கு தெரியாதா?)
பொற்ஸ்
சித்ரா
முகுந்தம்மா
புதுகைத்தென்றல்
முத்துலெட்சுமி
ஸாதிகா அக்கா
மிஸ் சிட்சாட்

குறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.

Sunday, May 9, 2010

மனம் ஒரு குரங்கு - 13

ச்சும்மா கொஞ்சம் வம்பு!

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு. அதான் ஒரு போஸ்டு வெட்டி வம்புக்கு டெடிக்கேட் பண்ணிடுறேன்.

எல்லா இடத்துலேயும் அன்னையர் தினம் ஸ்பெஷல் பதிவு போடுறாங்க. சாரி. எனக்கு இந்த அமெரிக்க கலாச்சார தாக்கம் கிடையாது. நான் டிப்பிக்கல் மருதைக்காரி. அதும் கிராமத்துக்காரி. ஸோ, நீங்க எதிர்ப்பார்க்குற அளவுக்கு எனக்கு சோஃபிஸ்டிக்கேஷன் எல்லாம் போறாது.

நான் காற்றை உணர்ந்து சுவாஸிக்கறது உண்மையானா, இனி வருங்காலம் நல்லா இருக்கும்ன்னு நான் நம்புறது உண்மையானா,  பகவத் ஸ்மரணையில் நான் சஞ்சரிக்கறது உண்மையானா, நிச்சியமா எங்கம்மாவை ஒரு க்ஷண நேரம் கூட மறக்கலைங்கறது தான் உண்மை. நான் மட்டுமில்லை எல்லோருமே அப்படித்தான்.  அவங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி செலெப்ரேட் பண்ணி கார்டு குடுக்கறது, பாட்டு டெடிக்கேட் பண்றது, பதிவு போடுறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. வியாபார நோக்கோடு செய்யப்பட்ட இந்த மாதிரி முட்டாள்த்தனமான அமெரிக்க கலாச்சாரம் எனக்கு தேவையில்லை. இதை நான் நிராகரிக்கறேன்.  இன்னும் சொல்லப்போனா இதெல்லாம் எங்கம்மாவை நான் கேவலப்படுத்தற மாதிரி தோணறது. மேற்கத்திய கலாச்சாரம் என்னிக்கும் என்னை பாதிக்காது.
மாத்ருதேவோ பவ. சதாஸ்ம்ருதிஹி!


இப்பெல்லாம் அபுதாபி வாழ்க்கையே மாறிப்போச்சு. முன்னே மாதிரி வருத்தமோ வெறுப்போ இருக்கறதில்லை. அப்படி என்ன மாற்றம்ன்னு யோசிச்சப்போ ரெண்டு விஷயங்கள். ஒண்ணு புது நட்பு. புதுத்தோழிகள் கிடைச்சிருக்காங்க. ரெண்டு சென்னை ரேடியோ. ஆஹா.. ஹலோ எஃப்.எம். கேட்டுண்டே வேலையேல்லாம் நிமிஷமா ஆயிடுறது. சதா வளவள பேச்சுன்னு மக்கள்ஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் என் சுபாவத்துக்கு இந்த ரேடியோ ரொம்பவே பொருத்தம் தான்.குறிப்பா சென்னை விளம்பரங்கள் எல்லாம் வர்றது. ராஜா பாதர் ஸ்ட்ரீட் ரத்னா ஃபேன் ஹவுஸ்,லேட்டஸ்டு சினிமா, லேட்டஸ்டு பாட்டு  இதெல்லாம் கேக்கும்போது சென்னையில இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்கி! ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி கார்த்தால சுசித்ரா குரல் கேக்காட்டி விடிஞ்சதா அர்த்தமே இல்லை. அந்த அளவுக்கு ரேடியோ கேட்டு இருக்கேன்.  அதுலேயும் அந்த நாலு மணி வாலு அலோஷியஸும் சாயந்திரம் ப்ரைம் டைம் ஷோ நடத்தும் சுரேஷும் சூப்பர். ரொம்ப நல்லா எனர்ஜிட்டிக்கா நடத்துறாங்க. குரல் மட்டும் நல்லா இருந்தா போறாது நல்லா சுவாரஸ்யமா நிகழ்ச்சி நடத்த தெரியணும். நிறைய விஷயங்கள் இருக்கு. இங்கே துபாயில் சக்தி எஃப்.எம். ஆர்.ஜேஸ் கேட்டப்போ நான் அப்ளை பண்ண ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அவங்க அலுவலகம் வேற ஊர்ல இருந்ததால அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன்.
யாருக்காவது சென்னை ரேடியோ கேக்கணும்ன்னா இங்கே க்ளிக்கவும்.


மெதுவாக இங்கே வெயில் காலம் ஆரம்பமாயிடுத்து. பகல்லே ஃபுல் டைம் ஏசீ போட்டுக்க வேண்டி இருக்கு. போன மாசம் வெளியே போகும் போது ஈச்சமரத்தில துளிர் விட்டுண்டு இருந்தது. ஈச்சந்தளிர் (சொற்றொடர் சரியான்னு தெரியாது) முதல் முறையா ரொம்ப கவனிச்சு பார்க்க முடிஞ்சது. இங்கே சாலையோர குட்டை மரங்கள்ல இருந்து தென்னந்துளிர் மாதிரி பச்சையா வந்ததை கவனிச்சேன்.

இங்கே எல்லாம் இது சர்வ சாதாரணம். இந்த ஈச்சந்துளிர் வந்த உடனே, வலை கட்டி விட்டுடுவாங்க. பேரீச்சைப்பழங்கள் எல்லாம் அந்த வலையில கனிஞ்சு தானா சேர்ந்துடும்.உங்களுக்காக ஒரு 3டைமென்ஷனல் ஈச்சமரம்.



 நல்லா இருக்கு இல்லே? :-)


UAE யில் மட்டும் 4 கோடி ஈச்ச மரங்கள் இருக்காம்! ஜபலாலியில வேலை செய்ஞ்சப்போ எங்க ஆபீஸ் வாசல்ல ஒரு 10 மரங்கள் இருந்தது. எல்லா மரங்கள்ல இருந்தும் இந்த பழங்கள் கீழே விழுந்து இருக்கும். கனிஞ்சு தொங்கிண்டு இருக்கும் பேரீச்சை பழங்களை உயரமான ஒருத்தரை பறிச்சுத்தரச்சொல்லி க்கேட்டப்போ அவருக்கு பயங்கர ஆச்சரியம்! இங்கே இருக்கும் அரபியர்கள், மற்ற நாட்டவர்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி நான் பண்ணினதுல ரொம்ப ஆச்சிரியம். இவங்களுக்கு அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு தோணலை போல இருக்கு! நான் தான் ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயிலைக் குடிக்கிற கேஸு. அதுமட்டுமில்லை, ஆனஸ்டா சொல்லணும்னா,  ஃப்ரெஷ்ஷா பறிச்ச ஈச்சம்பழம் எப்படி இருக்குன்னு பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆர்வம். அதான் அப்படி கேட்டேன். ஹீஹீ.. என்னதான் நாம பூசி மொழுகினாலும் நம்ம உண்மை எல்லாம் வெட்ட வெளிச்சம்தானே?


சைனீஸ் சால்டு எனப்படும் அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்லூடமேட்) பொட்டலத்துல கட்டி வாங்காதீங்கன்னு இப்போ விழிப்புணர்வு கொண்டு வந்திருக்காங்க. என்ன ப்ரயோஜனம்? நாள்பட அதை சாப்பிட்டா நல்லதில்லைன்னு படிக்கறேன்.ஏகப்பட்ட சைடு எஃபக்ட்ஸ் இருக்குன்னு பக்கம் பக்கமா எழுதறாங்க.

சைனீஸ் ஃபுட் சிண்ட்ரோம்ன்னு எல்லாம் சொல்லிக்கறாங்க. இவ்ளோ ரிஸ்க் எடுத்து அதை சமைக்கணுமா? அவாய்டு பண்றது தான் நல்லதுன்னு நான் அதையெல்லாம் உபயோகிக்கறதில்லை. நம்ம ஊர்ல இருக்கற ஸ்பைஸஸ் போறுமே.. என்னத்துக்கு நாடு விட்டு நாடு வந்ததெல்லாம் சமைச்சு பிரச்சினையை விலை கொடுத்து வாங்கணும்? தேவையா?  நல்லதுன்னு பரவலா விளம்பரப்படுத்தினாலும் வேண்டாம்ன்னு ஒரு சாராரும் சொல்றாங்களே? இப்படி ஒரு காண்ட்ரவர்ஷியல் ஐட்டத்தை சமைச்சே ஆகணுமா? உங்க கருத்தை சொல்லுங்க.

இந்த அக்ஷ்ய த்ருதீயை லொள்ளு தாங்க முடியலை! புதுசா காழியூர் நாராயணன் ரேடியோல வந்து ப்ளாட்டினம் நல்ல எனர்ஜியாக்கும் அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு எல்லாம் உதார் வுட்டு, இந்த அக்ஷ்யதிருத்தியைக்கு கண்டிப்பா எல்லோரும் ப்ளாட்டினம் வாங்குங்கன்னு சொல்லிட்டு எஸ் ஆயிட்டார். இந்த மனுஷனாலத்தான் சில வருஷம் முன்னாடி இந்த அக்ஷய த்ரிதியை இப்படி கன்னா பின்னான்னு பாப்புலர் ஆச்சு. ஜீ.ஆர்.டிக்குள்ளே கடுகு போட இடம் இல்லை!!!! மன்ச்சி யாவாரம் எல்லாருக்கும். மூணுவருஷம் முன்னாடி தமாஸ்ல கூட செம்ம கூட்டம். பேசாம வேற ஏதாவது டுபாக்கூர் ஜோஸியரை கூப்பிட்டு உப்பு, சர்க்கரை, தண்ணி இதெல்லாம் வாங்கினா வருஷம் பூரா மங்களகரமா இருக்கும்ன்னு  ஒரு திரியை கொளுத்தி போட சொல்லணும். எரிச்சல் தாங்க முடியலை! X-(

போன வாரம் ஷார்ஜா போயிருந்தோம். குழந்தைகளுடன் கீதா மன்னி வந்திருந்தார். ரங்குவுக்கு அங்கே போனா குளிர் விட்றும்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கேனே.. ஹீ ஹீ.. எனக்கும் தான்.. செம்ம கலாட்டா கச்சேரி நடக்கும். அதுலேயும் அண்ணா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்பேன். அன்னிக்கி அண்ணாவுக்கு ட்யூட்டி. விடிய விடிய கலாட்டா கச்சேரி. ரங்கு என்னை ஓட்ட நான் ஓட்டப்பட.. (ஹிஹி) இப்படி தொடர்ந்தது.
“மன்னி ஹலோ எஃப்.எம் ல சாயந்திரம் 7-9 எனக்கு பிடிச்ச பாட்டா போடுவான் மன்னி, அது கழிஞ்சு இவருக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் வரும். அதாவது பி.யூ சின்னப்பா, எம்.கே.டீ, கே.பீ. சுந்தராம்பா, கிட்டப்பா இப்படி போடுவான் மன்னி” ”அப்படியா மோஹன், அவ்ளோ பழைய பாட்டெல்லாம் நோக்கு டேஸ்டுண்டா?-” இது மன்னி. ரங்கு, சதாரம், சாந்த சக்குபாய்,சிவகவி,ஹரிதாஸ், அரிச்சந்திரா இப்படி எது போட்டாலும் கேட்டுண்டு இருப்பார். கொஞ்சம் மிகைப்படுத்த நினைச்ச நான் சொன்னேன்,”
நீங்க வேற மன்னி, இவர் ஆலம் ஆரா பாட்டு போட்டா கூட விசில் அடிச்சுண்டு ரசிச்சு கேப்பார்” .(புரியலையா? ஆலம் ஆரா இந்தியாவின் முதல் டாக்கி - பேசும் படம்.)

சினிமா பாட்டுல இருந்து டிஸ்கஷன் மெதுவா எனக்கு பிடிக்காத டாப்பிக் பக்கம் வந்தது. என்ன டாப்பிக்கா? படிப்பு. அடுத்து என்ன படிக்கலாம்ன்னு லக்ஷ்மி கேட்டுண்டு இருந்தா. எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம், நம்ம மொக்கை ரங்கு மைக்கில்லாம பிரசங்கம் நடத்திண்டு இருந்தார். கடுப்புல நான் கேட்டுண்டு இருந்தேன். ”கோந்தே, காமர்ஸ் தான் இந்த காலத்துக்கு ஏத்த படிப்பு. காமர்ஸ் மெயின் கோர்ஸா படிச்சுட்டு மேற்கொண்டு எம்பிஏ, ஃபைனான்ஸ், ஸிஸ்டம்ஸ் இப்படி படிச்சா இந்த காலத்து சர்வைவலுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். மத்த படி வெறும் காமர்ஸ் மட்டும் படிச்சுட்டு சும்மா இருந்தா வேஸ்டுன்னு மெதுவா என் பக்கம் ஒரு திருட்டு முழி வீசினார். ருத்ர தாண்டவம் ஆட ஏதுவா ஒரு இடத்தை தேடிண்டு இருந்த நான், ”ஹான்?”ன்னு உரக்க கத்தினேன். உடனே அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!
மன்னி & குழந்தைகள் தேடினேன் காணோம். பின்னே? கீழே விழுந்து புரண்டு சிரிச்சுண்டு இருந்தாளே!
Related Posts with Thumbnails