Pages

Monday, May 31, 2010

நைனா நைனா ஓ மை நைனா!!!

இந்தக்கட்டுரைக்கு ஏன் இந்த தலைப்புன்னா எங்கப்பாவுக்கு நைனான்னு கூப்பிட்டால் கெட்ட எரிச்சல் வரும். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவரை வெறுப்பேத்துவதே என் தலையாய கடமையாக இருந்திருக்கு. அதான் இப்படி வெச்சுட்டேன். சரிதானே?

அப்படி என்ன வெறுப்பேத்தி இருக்கேன்னு கேக்கலாம். அதையெல்லாம் சொல்றதுக்குத்தானே இந்த பதிவே!

அப்பாவுக்கு காலை சீக்கிரம் எழுந்து பழக்கம். எப்போவுமே எல்லாருக்கும் முன்னாடி எழுந்து ஹிண்டுவை மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சுடுவார். நான் வழக்கம்போல எல்லாருக்கும் அப்புறமா எழுந்து அப்பாவை பார்த்து ”யாரங்கே?” ரேஞ்சுக்கு கைதட்டுவேன். ஹிண்டுவில் மூழ்கி இருக்கும் டேரி மெதுவாக என்புறம் திரும்பிப்பார்ப்பார். அவசரமாக என் படுக்கையை காட்டி ‘இதையெல்லாம் எடுத்து வெச்சுடுங்க’ன்னு கைஜாடை காட்டிட்டு நான் பல் தேய்க்கப்போயிடுவேன். அப்பா கோபத்துல கண்டபடி திட்டோ திட்டுன்னு திட்டிண்டு இருப்பார். அப்பாடி! எனக்கு அப்போத்தான் காலை எழுந்த பயனை அடைஞ்சாப்புல ஒரு திருப்தி இருக்கும். ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுண்டே . கிச்சன்ல போய் அம்மாகிட்டே ஒரு குட்டி டோஸ் வாங்கிண்டு மரியாதையா என் படுக்கையை நானே எடுத்து வெச்சுடுவேன். இருந்தாலும் நைனா நான்ஸ்டாப்பா ஒரு அரைமணி நேரம் அஷ்டோத்திரம் வாசிப்பார். அதைஎல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா என்ன? காமெடியா இருக்கே?

எனக்கு ரொம்ப பெரிய குரல்ன்னு பாட்டி எல்லாம் டீஸண்டா சொல்லுவாங்க. உண்மை என்னான்னா, ரொம்ப ஹை டெஸிபெல் வாய்ஸ். கொஞ்சம் சந்தோஷம் ஆனேன்னா கத்தி தீத்துடுவேன். எல்லார் காதுலேயும் ரத்தம் வர அளவுக்கு. நான் பெங்களூர்ல இருந்தப்போ ஹாஸ்டல்ல இருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணேன். நீ என்னத்துக்கு எஸ்.டீ.டீ பண்ணி காசைக்கரியாக்கறே? பேசாம மாடியில நின்னு சாதாரணமா பேசினாலே போறும். எங்களுக்கு கேட்கும்ன்னு சொன்னார்னா பார்த்துக்கோங்க. அவ்ளோ அலறல்! ஒரு வாட்டி சில நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தாங்க. நானும் வழக்கம்போல ஆம்ப்ளிஃபையர் மாதிரி கத்திண்டே இருந்தேன். நைனா செம்ம டென்ஷன் ஆயிட்டார். ”ஏய், என்ன தொண்டை?”ன்னு ரொம்ப கோபமா கத்தினார். நான் உடனே சுதாரிச்சுண்டு மேலே பார்த்துண்டே, கழுத்தைக்காட்டி, ”தெரியலையேப்பா, மனுஷத்தொண்டை தான், வேணாப்பாருங்க”ன்னு அப்பாவியா சொன்னேன்.. வெறுத்துட்டார்.

அப்பா பேங்க்ல வேலை பார்த்ததால பண விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்டு. வெட்டிச்செலவு பண்ணமாட்டார். அவருக்கு பணத்தை அங்கே இங்கே வெச்சா பிடிக்காது. சிஸ்டமேட்டிக்கா தன் கைப்பையில் தான் வெச்சுப்பார். பத்திரமா செலவு பண்ணுவார்.

டீவீ விஷயத்துல தான் எனக்கும் அப்பாவுக்கும் அதிகபட்ச சண்டை வரும். ஒண்ணு டிஸ்கவரி ம்யூட்ல பார்ப்பார் இல்லாட்டி படமே தெரியாத, அல்லது குத்துமதிப்பா அவுட்லைன் மட்டுமே தெரியக்கூடிய அளவுல இருக்கும் அதரப்பழைய மூக்காலேயே பேசி/பாடும் பாடாவதி படங்களையெல்லாம் ரொம்ப ரசனையோட உக்காந்து பார்த்துண்டு இருப்பார். ஒரு வாட்டி அப்படித்தான், எனக்கு இருப்பு கொள்ளலை, எப்படி இவர் கவனத்தை திசை திருப்பறதுன்னு யோசிச்சுண்டே இருந்தேன். மெதுவா, இன்னோரு ரூமுக்குள்ளே போய், என்னப்பா இங்கே 100 ரூபாய் இருக்கே? யாருதுன்னு சும்மாங்காச்சுக்கு கேட்டேன். நைனா ”எங்கே டீ”ன்னு ஸ்லோ மோஷன்ல ரிமோட்டை வெச்சுட்டு ஓடிவர, நான் நைஸா ஹாலுக்கு ஓடிப்போய் ரிமோட்டை கபளீகரம் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் சுமார் ரெண்டு மணி நேரம் (அந்த டுபாக்கூர் பழைய படம் முடியுற வரைக்கும்) எனக்கு அஷ்டோத்திர அர்ச்சனை பண்ணிண்டு இருந்தார். ஹூ கேர்ஸ்!!

சும்மா தேமேன்னு உக்காண்டு இருந்தாலும் அவரை வம்புக்கு இழுக்கறது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.ஒரு வம்பும் இல்லேன்னு வெச்சுக்கோங்க, பெரிய தொண்டையில தெலுங்குல ஏதாவது தப்பும் தவறுமா வேணும்னே உளறிக்கொட்டுவேன், செம டென்ஸ்ன் பார்ட்டியாகி, ருத்ரதாண்டவம் ஆடிடுவார். மீண்டும் எனக்கு பிறந்த பயனை அடைஞ்ச சந்தோஷம் கிடைக்கும். ஹிஹி!

பொழுதுபோகாத இன்னொரு சமயம், ”டாரி, அன்னிக்கு எனக்கு 500 ரூபாய்க்கி செக்(Cheque) குடுக்கறேன்னு சொன்னீங்களே? என்னாச்சு?”ன்னு கேட்டேன்னு வையுங்க? ஆராரோ ஆரிரரோ படத்துல வர்ற அதிர்ச்சி பைத்தியத்தை விட அதிகமான அதிர்ச்சி எஃபக்டு கொடுத்து,”நான் எப்போடீ சொன்னேன்? நான் சொல்லவே இல்லை”ன்னு ஒரு முக்கா மணி நேர சஹஸ்ரநாம அர்ச்சனை எல்லாம் நடக்கும். ஹைய்யா ஜாலி!

ஒரு வாட்டி அப்பாவுக்கு செம்ம கோபம். என்ன சண்டைன்னு நினைவில்லை. மத்யானம் சாப்பிடாம பாய்காட் பண்ணிட்டு உக்காண்டு சக்தி விகடனை பரீட்சைக்கு படிக்கற மாதிரி தரோவா கரைச்சு குடிச்சுண்டு இருந்தார். அம்மாவுக்கும் கோபம். ”சாப்பிட வரச்சொல்லு”ன்னு என்கிட்டே சொன்னாங்க. நான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு, ஒரு குட்டித்தட்டுல சந்தனம், வெத்தலை பாக்கு ஒரு பழம் எல்லாம் அரேஞ்சு பண்ணிண்டு, ”அப்பா எடுத்துக்கோங்க”ன்னு ரொம்பவும் பவ்யமா சொன்னேன். ”ஹ? என்னது? எதுக்கு”ன்னு அப்பாவியா கேட்டார். எடுத்துக்கோங்கப்பா, சொல்றேன்னு சொன்னேன். குழப்பத்தோட சந்தனத்தை எடுத்து நெத்தியில இட்டுண்டார். சிரிச்சுண்டே, ”சாப்பிட வர்றீங்களாப்பா? வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்”ன்னு சொன்ன உடனே டன் டன்னா அப்பா மூஞ்சியிலே அசடு வழிஞ்சுது. அம்மா தங்கைமணி கிட்டே சொன்னப்போ எல்லாரும் விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு!

நைனா எப்போவுமே பயங்கரமா மிகைப்படுத்துவார். எனக்கு 15 வயசா இருக்கும்போது, ரொம்ப ஓவரா மிகைப்படுத்தி இவளுக்கு 30 வயசாச்சு, இன்னும் இப்படி எல்லாம் பண்றான்னு எதையோ சுட்டிக்காட்டினார்! ஆடிப்போயிட்டேன்.
6.15 ஆகி இருக்கும் மணி, 8 மணி வரைக்கும் தூங்கறான்னு ஒரே காட்டுக்கத்தல் கத்துவார். எனக்கு கத்தல் கூட ப்ராப்ளம் இல்லே, 8மணின்னு பொய் சொல்லுவாரே, அதான் என் மனசு கேக்காது. உண்மை தான் எப்போவும் வெல்லும். நான் மறுபடியும் படுத்து தூங்கிடுவேன்! 8 மணி ஆகலையே.. நான் எழுந்துட்டா அப்பா சொன்னது பொய் ஆயிடாது? அதான்..  ஹி ஹி!

எங்க குடும்பத்துல இருந்து தெலுங்கை ஒழிச்சு கட்டுறேன்னு தெலுங்கு மொழிக்கு ban போட்டவரும் இவரே. இதுனால் நாங்க தெலுங்கும் இல்லாம தமிழும் தெரியாம ஒரு மாதிரி அரைவேக்காட்டுத்தனமா ஆயிட்டோம்ங்கறது இன்னோரு விஷயம்.

ஆயிரம் தான் நைனாவை வெச்சுண்டு காமெடி பண்ணினாலும் நைனா இஸ் நைனா.. பணத்தோட முக்கியத்துவம் அவர்கிட்டே இருந்து தான் படிச்சுண்டேன். கஷ்டப்பட்டு தானா முன்னேறிய ஆள்.குடும்பத்தையும் ஓரளவுக்கு செட்டில் பண்ணினார். எதுவா இருந்தாலும் பெர்ஃபெக்‌ஷன், பார்ப்பார், சிஸ்டமேட்டிக் லைஃப் இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்.

கொஞ்ச நாளா இந்த போஸ்டு எழுதணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.. இன்னிக்கி தான், எழுதிடணும்ன்னு ஒரு பிடிவாதமா எழுதறேன். ஏன்னா இன்னிக்கி மே 31st. Happy Birthday darry..

Saturday, May 29, 2010

செல்லப்பன் பெரியப்பா..


சக்ரபாணி. அதான் அவர் பேர். இருந்தாலும் வீட்டுல செல்லப்பன்னு கூப்பிடுவாங்க. இன்னிக்கி கார்த்தால அவர் இறந்துட்டார்ன்னு செய்தி வந்தது. அதிர்ந்தோம். செல்லப்பன் பெரியப்பா ரங்குவின் சொந்த பெரியப்பா. ஜாலியான மனுஷர். அவர்கிட்டே ஏகப்பட்ட விஷயம் இருக்கும். பேசிண்டே இருப்பார். நிறைய புஸ்தகங்கள் படிப்பார். ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. 4-5 வாட்டி பார்த்திருக்கேன். கொட்டிவாக்கத்துக்கு போகும்போது பிரியமா உபசரிப்பார். எனக்கு மாமனார் இல்லாததால் அவர் மேல ரொம்ப மரியாதை. அதே ஜாடையிலும் இருப்பார். கொஞ்சம் பூசினாற்போல முகம். தீர்க்கமான கண்கள். சிவந்த நிறம். சின்ன வயதில் ரொம்பவும் ஸ்மார்ட்டாக இருந்திருக்கக்கூடும்.
78 வயதில் கொஞ்சம் உடல் உபாதைகள் இருக்கத்தான் செய்யும், செய்தது. இருந்தாலும் இவருடைய நகைச்சுவை உணர்ச்சியே இவருக்கு இத்தனை நாள் எக்ஸ்டென்ஷன் பெற்று கொடுத்ததுன்னு தான் நான் நினைப்பேன்.

செல்லப்பன் பெரியப்பாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்திருக்கு. ஒரு வாட்டி டாக்டர் கிட்டே போனப்போ டாக்டர், அவர் உடம்பை பரிசோதனை பண்ணிட்டு சொல்லி இருக்கார், "Mr Chakarapani, it is high time you stop smoking. you are slowly dying" கொஞ்சம் கூட யோசிக்காம செல்லப்பன் பெரியப்பா பதில் சொன்னாராம், “I am not in a hurry doctor"

இப்போ அவர் அவசரமா எங்க கிட்டே சொல்லிக்காம போயிட்டார்! We miss you பெரியப்பா.. May your soul rest in peace.

Friday, May 21, 2010

பன்னீர் சோடாஆஆஆ.......

முதன் முதலா எப்போ பன்னீர்ஜோடா குடிச்சேன்னு சரிய நினைவில்லை. 1985 -கொண்டித்தோப்புல இருந்தப்போ ரவி மாமா மெரீனா பீச்சுக்கு கூட்டிண்டு போகும்போது பஸ்ல எனக்கு வாந்தி வராப்ல இருந்தது. உடனே ஏதோ ஒரு ஸ்டாப்புல எல்லாரும் இறங்கி, பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்தார்.
இந்த மாதிரி ஒரு ட்ரிங்க் இருக்குன்னு அப்போத்தான் தெரிஞ்சது. அப்போ ஆரம்பிச்ச பன்னீர் சோடா பைத்தியம், சமீபத்துல ஏதோ ஒரு பொட்டிக்கடையில பன்னீர்சோடா வாங்கிக்குடிச்சு அதுல என்னென்னமோ குப்பை எல்லாம் விழுந்திருக்க, நைனாவிடம் திட்டு வாங்கினாலும் பன்னீர் சோடா பன்னீர் சோடாதான்னு சூளுரைக்கிற அளவுக்கு எனக்கு இஷ்டம்!

எங்கே போனாலும், ஏதாவது ஒரு பெட்டிக்கடையில பன்னீர் சோடா குடிக்காம இருந்ததே இல்லை! குறிப்பா பன்னீர் சோடா  ரொம்ப ரொம்ப ரசிச்சுக்குடிச்சது திருப்பரங்குன்றத்துலன்னு நினைவு. ப்ராண்ட் - மாப்பிள்ளை விநாயகர். ஆஹா.. அப்படி ஒரு சுவை. தரமான சோடா, தரமான இனிப்பு, தரமான பன்னீர் இதையெல்லாம் கலக்கினா அருமையான பன்னீர்சோடா!

சில இடங்கள்ல கன்வென்ஷனல் பாட்டில்கள்ல பன்னீர்சோடான்னு லேபிள் ஒட்டி வரும்! அநியாய டேஸ்டா இருக்கும். ஏன்னா சோடா ரொம்ப காட்டா இருக்கும். இனிப்பும் போடுவாங்க. ஆனா முக்கால்வாசி இடங்கள்ல பன்னீர்சோடா வெறும் சர்க்கரை+அழுக்குத்தண்ணி தான். அட்லீஸ்டு எனக்கு தெரிஞ்ச மட்டில், என்னுடைய பெர்ஸனல் எக்ஸ்பீரியன்ஸ்!

மாப்பிள்ளை விநாயகர் மாதிரியான் ஒரு சோடாவை அடுத்து நான் எங்கேயும் குடிக்கலை. சிதம்பரம் கோவில் கிட்டே ஏதோ ஒரு கடையில் யானை விலை கொடுத்து வாங்கி குடிச்சோம். அந்த சுவைக்கு யானை விலை கூட கொடுக்கலாம். அதான் சட்டுன்னு மனசுல நிக்கிது. எங்க மாமியாருக்கு முதல்முறையா பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்ததும் சிதம்பரத்துல தான். மேல்மருத்துவரில் வாங்கிக்கொடுத்தப்போ நல்லா இருக்கலை! சிதம்பரத்துல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது!

(படத்துக்கு புதுகைத்தென்றல் அக்காவுக்கு நன்றி, கூகிள்ல தேடினப்போ அவங்க தளத்துல இருந்து தான் கிடைச்சது! அடுத்த வெக்கேஷன் போனா மா.வி சோடாவை படமெடுத்து அப்லோடு பண்ணனும். படமே இல்லை! )

கண்ட கண்ட ’கலர்’களை விட இது எவ்வளவோ பெட்டர்ங்கறது என் கருத்து.
முன்னக்காலத்துல எல்லாம் யாராவது விருந்தாளி வந்தா போய் கலர்வாங்கிட்டு வான்னு தான் சொல்லுவாங்க!

தொண்ணூறுகள்ல திடீர்ன்னு ஒரே நெருக்கடி வந்துடுத்து. மார்க்கெட்ல பன்னீர் சோடாவுக்கு பதிலா அல்ப்பமா ரஸ்னா வந்திடுத்து. சர்க்கரையே பத்தாம, வெறும் ஆரஞ்சு கலருக்காக ரஸ்னாவை பாட்டில் பாட்டிலா 2 ரூபாய் கொடுத்து மக்கள்ஸ் குடிச்சுண்டு இருந்தாங்க! மேங்கோ தான் இருக்குன்னு சில சமயம் சொல்லுவாங்க. மேங்கோவாவது, ஆரஞ்சாவது, ரெண்டுமே மஹாக்கேவலமாத்தானிருக்கும் .

அம்மா பண்ற ரஸ்னா நாங்க ரசிச்சு குடிப்போம். எல்லா ஃப்ளேவரும் அம்மா 80ஸ்லேயே பண்ணிக்கொடுத்தாச்சு. அதைக்குடிச்ச நா, இதெஇயெல்லாம் ரசிக்கலை! நானும் கடைகடையா கேட்டு கேட்டு பார்க்கறேன் பன்னீர்ஜோடா இல்லேன்னு தான் எல்லா இடத்துலேயும் சொன்னாங்க!

94ல கோக் வந்தது. ஐஞ்சே ரூபாங்கறதால மெதுவா பன்னீர் சோடா எல்லாம் நலிஞ்ச தொழில் ஆயிடுத்து!

இன்னிக்கு எம்.பீஸி2 வில் சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் படந்த்தின் அடுத்த பார்டு ‘ ரெட் டிராகன்’ போட்டு இருந்தான். அதுல ஒரு டிட்டெக்டிவ் ஏதோ ஒரு பானத்தை குடிச்சுண்டே ஆராய்ச்சி பண்ணிண்டு இருந்தான். நான் ரங்குவை கேட்டேன் இவாள்ளாம் என்ன குடிப்பா? ரங்கு சும்மா இருக்காமல் “ஆங்.. பன்னீர்சோடா ! கேக்குற கேள்வியைப்பாரு? ”ன்னு சொல்லிட்டார். எனக்கு கை கால் புரியாம பன்னீர்சோடா சபலம் வந்திடுத்து.

ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்தை எல்லாம் விட்டுட முடியுமா சொல்லுங்க?

வீட்டுல பன்னீர்சோடா எல்லாம் பண்ண முடியும்ன்னு நான் நினைச்சதே இல்லே! பன்னீர்சோடா உடனே தயாரிச்சுட்டேன். போன மாசம் சத்யநாராயண பூஜைக்காக வாங்கின பன்னீர் இருந்தது. இதோ பன்னீர்சோடா செய்யும் முறை

பன்னீர் -கால் டம்ளர்
சர்க்கரை (அ) ஆர்ட்டிஃபீஷியல் ஸ்வீட்னர் -Sugar Substitute -2 ஸ்பூன்
சோடா-1 கேன்
ரோஸ் எஸன்ஸ் - 2-3துளிகள்

முதல்ல பன்னீர்ல சர்க்க்ரையை நல்லா கலந்துண்டு, எஸன்ஸ் விட்டு ஸ்பூனால கொஞ்ச நேரம் கலக்கணும். அடுத்து ஸ்பூனால கலக்கிண்டே சோடா விட்டு உடனே சர்வ் பண்ணனும். ஆச்சு பன்னீர் சோடா ரெடி!

இந்த சோடாவை சம்மர்ல எஞ்சாய் பண்ணுங்க! முக்கியமா வெளிநாட்டுல இருக்கறவங்க ரொம்ப ரசிப்பாங்கன்னு நம்பறேன். எங்கே போறீங்க நீங்களும் மாப்பிள்ளை விநாயகரை வீட்டுலேயே பண்ணப்போறீங்களா?

Monday, May 17, 2010

பதிவர்கள் சிந்தனை

(எனக்கு தெரிஞ்ச)எந்தெந்தபதிவர், இன்நேரம் எப்படி எழுதுவாங்க (அ) எழுதும்போது என்ன யோசிச்சுண்டு இருப்பாங்கன்னு சும்மா ஒரு கற்பனை

எல்.கே:
இன்னைக்கு நான் உங்களுக்கு புதுசா சொல்லிக்கொடுக்கப்போற ரெசிப்பீ கொத்தவரங்கா ரைஸ்

முதல்ல கொத்தவரங்காயை பச்சையா மிக்ஸியில நல்லா அரைச்சுக்கோங்க. 1ஸ்பூன் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணி விட்டு சாதம் ‘வடிச்சு’ வெச்சுக்கோங்க. இப்போ அந்த அரைச்ச விழுதை அந்த குழைசல்ல போட்டுக்கோங்க.  இதுல இப்போ உப்பு, சர்க்கரை போட்டுக்கோங்க. ஒரு 30-35 மிளகை நல்லா மிக்ஸியில போட்டு பொடிச்சுக்கோங்க. (கவனிக்க: காரம் அதிகமா விரும்பாதவங்க 29 (அ) 34 மிளகு மட்டும் போட்டுக்கோங்க, அப்புறம் எல்.கே ரொம்ப காரம்ன்னு பின்னூட்டம் போட்டு மைனஸ் வோட்டு போட்டுடாதீங்க ஆமா)அந்த கலவை சாததுல போட்டு சொதக் சொதக்ன்னு கையால பிசைஞ்சீங்கன்னா அருமையான சுவையான கொத்தவரங்காய் சாதம் (பேஸ்டு!!!) ரெடி. இதை குழந்தைகள் ஃபெவிக்காலுக்கு பதிலா விரும்பி யூஸ் பண்ணுவாங்க. சில சமயம் உங்க தங்கமணிகள் வாய்ல போட்டுட்டீங்கன்னா அவங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க. அப்புறம், அவங்க புலம்பல் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.


தக்குடு:
(சிவப்பு மையில் இருப்பது தக்குடுவின் சிந்தனை)
குருநாதா சரணம்!
இப்போ எழுதப்போற கதைக்கு ஒரு டைட்டில் வெச்சுடறேன்.
வைஷ்ணவியின் குண்டலம்.
ச்சே.. சரியா இல்லையே... ஹ்ம்ம்..
காயத்ரியின் குண்டலம்.
இதுவும் நன்னாயில்லையே... 
ஸ்ரீவித்யாவின் குண்டலம்..
என்னமோ இடிக்குது.. 
சரி வேண்டாம்.. 
வைஷ்ணவியின் ஜிமிக்கி.
பரவாயில்லை.. 
காயத்ரியின் ஜிமிக்கி.
இல்லையே.. என்னம்மோ இடிக்குதே...
ஸ்ரீவித்யாவின் ஜிமிக்கி...

என்னம்மோ குழப்பமா இருக்கே.. .
சரி.. மறுபடியும் யோசிக்கறேன்.. ஃப்ரெஷ்ஷா ஒரு ஐடியா வேணும்.. 
குண்டலமும் ஜிமிக்கியும்..

தன்னைத்தானே தட்டிக்கொடுத்துண்டே,”ஆஹா.. தக்குடு,,, அருமைடா கண்ணா.. இப்போ பாரு.. ஒரு 300 பின்னூட்டத்தை அள்ளப்போறே... ”


பத்மநாபன் அங்கிள்:
ஸ்ஸ்ஸ்பா... ஒரு தொடர் பதிவு ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகப்போகுது.. என்னமா வேலை இழுக்குது! மருதமலை முருகா.. இன்னிக்கி நல்ல படியா அருளுப்பா.. எப்படியாவது இன்னிக்கி... சொல்லிட்டா ஒரு வேளை நடக்காம போயிட்டா? . ப்ளீஸ் முருகா.. என்னை கை விட்டுடாதே.. எப்படியாவது ஜஸ்டு ஒரே ஒரு..
ஈச்சனாரி பிள்ளையாரப்பா.. நீயாவது உதவுப்பா.. பேரூர் சிவபெருமானே.. உன்னையும் நான் முழுமையா நம்புறேன்.. குலதெய்வம் சுஜாதா.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம ஜவஹராய. ஓம் நம ஜவஹராய.. எல்லாரையும் வேண்டிண்டாச்சு..
எப்படியாவது இன்னிக்கு ஒரு வரி தமிழ்ல டைப்படிச்சுட வேண்டியது தான்.. எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள பிடித்த ஐந்து பாடகர் தொடர் பதிவை எழுதி முடிச்சுட முடியாது??? இந்தக்கஷ்டத்துக்கு பின்னூட்டம் போடுறதே எவ்ளோவோ பெட்டர்டா சாமி!!!

மாத்தா கீத்தானந்த மயி:


(எழுதுகிறார்)க...
(இன்னோரு விண்டோவில் போய் கூகிள் பஸ்ஸில்)

க்ர்ர்... ஏய் தக்குடு, நீ கிடையாது..
ண்...
க்ர்ர்ர்.. திவா அண்ணா, ஒரு கமெண்டு போட்டேனே, எங்கே போச்சு..
ண...
க்ர்ர்... அநன்யா அக்கா, கு.ப.த எங்கே?
ன்...
க்ர்ர்... கூகிளின் சதி...
வ...
க்ர்ர்...
ரு...

ஹூஸைனம்மா:
ட்ரங்குப்பெட்டி சாவியை எங்கியோ வெச்சுட்டேனே.. காணோம்.. அப்போ அவசரத்துக்கு ஒரு பாலித்தீன் பையில பேக் பண்ணிக்கலாமே.. எப்படியும் மாசத்துக்கு ஒரு பதிவு தானே.. பரவாயில்லை.. அதுக்குள்ளே வேறு ஏதாவது மீட்டிங் கோஆர்டினேட் செஞ்சுட வேண்டியது தான்.

ஜெகநாதன்:
முதல்ல படம் வரைஞ்சு ரெடி பண்ணிடுறேன். நெக்ஸ்டு கதை எழுதிடுறேன். அதுக்கப்புறம் இந்த படத்துக்கும் கதைக்கும் ஏற்றார்போல ஒரு கவிதை எழுதிடுறேன். நெக்ஸ்டு ஒரு ட்யூன் போட்டு பேக்கிரவுண்டு மீசிக் போட்டு பாட்டு பாடி ரெக்காட் பண்ணிட வேண்டியது தான்.

அப்பாவித்தங்கமணி:
ஒரு வழியா பிரியமானவளே முடிச்சாச்சு. இப்போ என்ன பண்றது? தக்குடு, அநன்யா ப்ளாக்ல போய் கும்மி அடிக்க வேண்டியது தான். இல்லாட்டி ஒரு கவுஜ எழுதலாமே.. இல்லாட்டி இட்லிக்கு ஊறவெச்சு அரைச்சு பண்ணிப்பார்க்கலாம்!

பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா:
என்ன தான் எழுத? நமக்கு எழுத்து ஒத்து வரமாட்டேங்குதுன்னு நினைச்சா யாராவது விடுறாங்களா? சும்மா தொடர்பதிவுக்கு கூப்பிடுறாங்களே? பேசாம நாட்டாமையா ஒரு அரச மரத்தடியில சொம்போட உக்காந்து 4-5 இத்துப்போன பெருசுங்களை உக்கார வெச்சு பஞ்சாயத்து.ப்ளாக்ஸ்பாட்.காம்ன்னு ஒரு சைட் ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

பொற்கொடி:
கருப்பு நிலா முஞ்சு போச்சு.. வேணா ப்ளூ எர்த்ன்னு புச்சா ஒரு கதை ஸ்டார்ட் பண்ணிக்கலாம். ஃப்ர்ஸ்டு எப்பிசோடு தானே வேணும்? எப்படியும் ரெண்டு மாசம் கழிச்சு தான் செக்கண்டு எப்பிசோடு போடணும். நோ ப்ராப்ளம் .. ஸ்டார்ட் மீஜிக். ப்ளூ எர்த். பாகம்-1....

ட்ரீமர்:
எப்புடியோ ஹார்ரர், த்ரில்லர் எல்லாம் சேர்த்து கதை எழுதி கல்லா கட்டியாச்சு. இப்போ செண்டிமெண்ட், ஆக்‌ஷன்,ஹார்ரர் & த்ரில்லர் எல்லாம் சேர்த்து ஒரு நகுலன் கதை எழுதிட வேண்டியது தான்.

ஜிகர்தண்டா:
வேறு யாராவது நம்மை ஏதாச்சும் தொடர் பதிவுக்கு கூப்பிட்டா பரவாயில்லை.. ஹ... யாருமே நம்மளை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!!எவ்ளோ நேரந்தான் விட்டத்தையே வெறிச்சு பார்த்துட்டு இருக்கறது?


அநன்யா:
ஹ்ம்ம்ம்.. எவ்ளோ யோசிச்சாலும் ஒண்ணுமே தோணமாட்டேங்குதே! என்ன எழுதறது? மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாட்டி ப்ளாக் எக்ஸ்பயர் ஆயிட்டா? யாரை மொக்கை போடுறது?

Wednesday, May 12, 2010

பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு

பிடித்த 10 படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த ட்ரீமருக்கு மிக்க நன்றி.
(இதென்ன தொடர் பதிவு சீஸனா???!!!தொடர் பதிவு ஒரு விதத்துல ரொம்ப நிம்மதி! என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்க வேண்டாமே!!ஹீ ஹீ)

எப்போவுமே, சினிமாவா இருந்தாலும் சரி, சில பாட்டுக்களா இருந்தாலும் சரி அதை மீண்டும் பார்க்கும்போதோ கேட்கும்போதோ,  சில நல்ல நினைவுகளை கொண்டு வரும். அந்த நிமிடங்களை மறுபடியும் வாழ வழி வகுக்கும். சினிமாவை ரசிக்க ஆரம்பிச்சது சில வருஷங்களுக்கு முன்னாடி தான்னாலும், சின்ன வயசுல இருந்து கேட்ட, பார்த்த சினிமா இந்த லிஸ்டில் அடக்கம்.
இது பெஸ்டு லிஸ்டு இல்லாம இருக்கலாம். ஆனா என் குழந்தைப்பருவ நினைவுகளை எல்லாம் திருப்பி தருவதாக அமைவதால் இது என்னுடைய பெர்ஸனல் ஃபேவரைட்டாக இருக்கிறது.

1.சங்கராபரணம் (தெலுங்கு - 1979)
கே.விஸ்வநாத்தின் அற்புதமான காவியம் என்றே சொல்லலாம். சோமையாஜூலுவின் நடிப்பும் மஞ்சுவின் பக்தியும் இசையும் நடனமும் பேபி துளசியின் சூட்டிகையும் இந்த படத்தின் ஹைலைட்டு. எல்லா கே.விஸ்வநாத்தின் படங்களிலும் நம் நாட்டு கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துச்சொல்வது மாதிரி தான் கதையம்சம் இருக்கும். சங்கராபரணம், சாகர சங்கமம்,ஸ்ருதிலயலு, ஸ்வர்ணகமலம் இப்படி எல்லா படங்கள்லேயும் இசை நடனத்துக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். குறிப்பா ஏன் இந்த படம்ன்னா, நான் குழந்தையா இருந்தப்போ, எங்க வீட்டுல ஒரு புஷ் டேப்ரிக்கார்டர் இருந்தது. அதுல சதா இந்த பாட்டுக்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து. இந்தப்படத்தை ரெண்டு வருஷம் முன்னாடி
ராஜஸ்ரீயில் டவுன்லோடு பண்ணி வெச்சுண்டு அப்பப்போ பார்ப்பதுண்டு. சமீபத்தில் விஷுவுக்கு Ntvயில் போட்டு புண்ணியம் கட்டிண்டாங்க. பேபி துளசியுடன் மஞ்சு பார்க்க,  கோதாவரிக்கரையில் ஸ்நானம் பண்ண சங்கர சாஸ்த்திரிகள் வர்றார். அதுல இருந்து தான் பார்க்க முடிஞ்சது. இருந்தாலும் அந்த காட்சிகளில் இருந்த அழுத்தம், அந்த பக்தி பாவம், அந்த நெகிழ்ச்சி அப்படியே என்னை அழ வெச்சுடுத்து. கண்ல தாரைதாரையா
கண்ணீரோடு பார்த்தேன். சாகர சங்கமமும் எத்தனை வாட்டி போட்டாலும் பார்ப்பேன்.


2.தில்லு முல்லு (தமிழ் 1981)
அருமையான டைரக்‌ஷன், சூப்பர் பாடல்கள், ரஜினியின் டைமிங் எல்லாமா சேர்த்து இந்தப்படமும் என் ஆல் டைம் ஃபேவரைட்ஸ் லிஸ்டுல வரும். இண்டெர்வியூ காட்சியும் ஃபுட்பால் மேட்ச் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியும் யாராலும் மறக்க முடியாது. தேங்காய் ஸ்ரீநிவாசன் மாதிரி இந்த பாத்திரத்தை வேறு யாராலையும் நடிச்சிருக்க முடிஞ்சிருக்காதுன்னு தான் நான் நினைக்கறேன். ஸ்பெஷல் மென்ஷன் டு செளகார் ஜானகி! எனக்கு பொதுவே உத்பல் தத்னா ரொம்ப இஷ்டம். ஆனா அவரை மிஞ்சிட்டார் தேங்காய்ன்னே சொல்லலாம். அவ்ளொ கலக்கான ஆக்டிங். 



3.மணல் கயிறு (தமிழ் 1982) 
நாடகத்தனமா இருந்தாலும் எஸ்.வீ.சேகரின் 8 கண்டிஷன்களும் விசுவின் ராகம்போட்ட பேச்சும் இருந்தாலும் பலவாட்டி பார்த்து பார்த்தும் போரே அடிக்காத படம் இது. ஆல் டைம் ஃபேவரைட். சமீபத்துல ராஜ்ஸ்ரீயில் பார்த்தோம். ரசித்தோம். இப்போவும் நல்லாத்தான் இருக்கு. இந்தப்படத்தின் ஹைலைட் & ஒரிஜினல் ஹீரோன்னு கேட்டா அது வேறு யாருமில்ல, கிஷ்மூ தான். அவ்ளோ அருமையான உடல்மொழி. தலையை முன்னாடி துருத்திண்டு, துர்கா துர்கான்னு புலம்பிண்டு, சூப்பர்.நீங்களே பாருங்களேன்.. ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும். ராயல் சல்யூட் கிஷ்மூ சார். 

4.அஹா நா பெள்ளண்ட்டா (தெலுங்கு 1986)
ஜந்தியாலா டைரக்‌ஷனில் அல்ட்டிமேட் காமெடியாக எடுக்கப்பட்ட சூப்பர் படம் இது. சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்துடுத்து. அவ்ளோ காமெடி இந்தப்படம். ராஜேந்திரப்பிரசாத் தான் ஹீரோ. இந்த ஜந்தியாலாவோட ஸ்பெஷாலிட்டியே சில குறிப்பிட்ட குணாதிசியங்களோட பாத்திரப்படைப்பு இருக்கும். உதாஹரணத்துக்கு இந்த படத்தில் வரும் அப்பா பாத்திரம் (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) மஹா கஞ்சன், பேசுறதுக்கே காசு கேக்குற ஆளு.
நம்ம ஹீரோவோட அப்பா மரண மொக்கை போடுற கேசு. யாரைப்பார்த்தாலும் தன் ஆட்டோ பயோகிராஃபியை சொல்ல ஆரம்பித்து விடுவார். கேக்கறவங்க மண்டை காய்ஞ்சு நொந்து போயிடுவாங்க. அந்த அளவுக்கு நச்சு கேஸ். இந்தப்படத்தில் தான் பிரும்மானந்தம் வெளிச்சத்துக்கு வந்தார். இவர் ’மொழி’படத்துலஅபார்ட்டுமெண்ட் செக்கரெட்டரியா வருவாரே!







5.க்ஷணக்க்ஷணம் (தெலுங்கு 1991)

ராம் கோபால் வர்மாவின் டைரக்‌ஷனில், வெங்கடேஷ்,ஸ்ரீதேவி,பரேஷ் ராவல் நடித்த ஒரு சூப்பர் படம். இதன் மெயின் ஹைலைட் ஸ்ரீதேவி. எத்தனையோ தமிழ்ப்படங்களில் ஸ்ரீதேவியைப் பார்த்திருந்தாலும், இந்த படமும் இவர் நடிப்பும் அந்த விறுவிறுப்பும் அலுக்கவே இல்லை. நல்ல ஜாலி படம். எம்.எம்.கீரவாணியின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள். எனக்கும் தங்கைமணிக்கும் ஆல்டைம் ஃபேவரைட்ஸ்!



6.Forrest Gump (ஆங்கிலம் 1994)
முதல் முறையா ஒரு ஹாலிவுட் படம் பார்த்து ரொம்ப ரொம்ப அழுதேன்னா அது இந்தப்படம் தான். என்ன உணர்ச்சின்னு சரியாச்சொல்ல தெரியலை. ஒரு வித பரிதாபமா, ஒரு நெகிழ்ச்சியா அது என்னவா வேணா இருக்கட்டும். அருமையான நடிப்பு(ஆஸ்கர் கிடைச்சது) என்னை மொத்தமா கவர்ந்தார் டாம் ஹான்க்ஸ். தனியா வீட்டுல இருந்தப்போ அமைதியா உக்காந்து பார்த்தேன். எவர் லாஸ்டிங் இம்பாக்டுன்னு சொல்லலாம். அவ்ளோ ஒரு அருமையான படம். அமெரிக்க வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அழகாக படத்தில் கோர்வையாக சேர்த்திருப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு ஜர்னல் போல ஒரு டயரி போல எடுத்திருப்பார்கள். இந்த காவியத்தின் தழுவல் தான் மிகப்பரிதாபமாக தமிழில் வாரணம் ஆயிரம் & ஹிந்தியில் மை நேம் இஸ் கான். சாரி.. ரெண்டும் மெகா சொதப்பல். நீங்க இன்னும் பார்க்கலையா? அப்போ கட்டாயம் பாருங்க. மேலதிக விவரத்துக்கு இங்கே க்ளிக்கவும்.



7.பம்பாய் (தமிழ் 1995)
1995இல் இந்தப்படம் மவுண்டு ரோடு தேவி தியேட்டருக்கு அப்பா கூட்டிண்டு போனார். நான் தங்கைமணி, N.K.ஸ்ரீவித்யா, கண்ணா அண்ணா, லதா எல்லாரையும் கூட்டிண்டு போனார்.  மறக்க முடியாத படம்.
முக்கியமா, மறக்க முடியாத இசை. பாம்பே ரயட்ஸில் ஏ.ஆர்.ஆரின் இசையில் நான் உணர்ந்த வைப்ரேஷன்ஸ் என்னால என்னிக்குமே மறக்க முடியாது. படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. அந்த ட்ரம்ஸ் சில சமயம் இப்போகூட கேக்கும் என் காதுல. முக்கியமா க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப பாதிச்சது. பாட்டு எல்லாமே செம அல்ட்டிமேட் ரகம்! இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரு சுவையான  நிகழ்வு தியேட்டரில். மனிஷா அரவிந்த் தம்பதியின் இரட்டைக்குழந்தைகளை காணோம்! மனீஷா தேம்பித்தேம்பி அழுதுண்டே எங்கே?... என் குழந்தைங்க எங்கே?ன்னு கேக்கறாங்க. உடனே தியேட்டரில் ஏதோ ஒரு விஷமி,” இரும்மா டீ சாப்பிட போயிருக்காங்க வந்துருவாங்க”ன்னு சொல்ல, படத்தை உருக்கமா
பார்த்துண்டு இருந்த கூட்டம் ஒரு நிமிஷம் கொல்லுன்னு சிரிச்சுடுத்து. எதுக்கு சொல்ல வர்றேன்னா அவ்ளோ நிசப்தம் தியேட்டர்ல. படம் முடிஞ்சதுக்கப்புறம் கார்னெட்டோ ஐஸ்கிரீம் கூட மறக்க முடியவில்லை .. மறக்க முடியவில்லை!


8.தெனாலி(தமிழ் 2000)
மைக்கல் மதன காமராஜனைப்பத்தி ஒரு தனி பதிவு போட்ட நிலையில் இன்னோரு வாட்டி அதைப்பத்தியே எழுத வேண்டாம்ன்னு தான் இந்தப்படத்தை பத்தி எழுதறேன். கமலின் க்ரேஸி காம்பினேஷனில் வந்த எல்லாப்படங்களுமே என் ஃபேவரைட் என்றாலும் இலங்கைத்தமிழ் பேசும் (கொஞ்சம் கிழடு தட்டினாலும்)தாமரைப்போன்ற அகன்ற கண்களுடன் கமலஹாசனின் அப்பாவித்தனமான நடிப்பு அப்படி ஒரு ஈர்ப்பு. மதன்பாப், டெல்லி, சுரேஷ்க்கிருஷ்ணா, இவங்க கூட சேர்ந்துண்டு ஜெயராம் அடிக்கிற லூட்டி பயங்கர ரசனை. டீ.வீ.டீ இருக்கு. அடிக்கடி பார்க்கறேன். எத்தனை வாட்டி பார்த்தாலும் ஏதாவது ஒரு புதிய ஜோக் அகப்படாம இருந்ததில்லை. அவ்ளோ டைமிங். பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம்,காதலா காதலா, அபூர்வ 
சகோதரர்கள், சிங்காரவேலன் இதெல்லாம் கூட எனக்கு பிடிக்கும். தெனாலி என்னிக்கும் கொஞ்சம் அதிக இஷ்டம். 








9.அன்பே சிவம் (தமிழ் 2003)
ஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும். காட்சிக்கோர்வையும் சரி, மதனின் வசனங்களும் சரி, கமலின் நல்லா கெட்டப்பும் நடிப்பும், முதிர்ச்சியும், கெட்டிக்காரத்தனமான 
பேச்சும் எதை எடுக்க எதை விடுக்க. சந்தேகமே இல்லை. ஆல்டைம் ஃபேவரைட்ஸ் இது. 


10.தன்மாத்ரா (மலையாளம் 2005)
மோஹன்லாலின் நடிப்பாற்றலில் இந்தப்படம் பார்த்த ஒரு வாரம் அப்படியே ஸ்தம்பிச்சு போயிட்டேன். அவ்ளோ மன பாரம். சோகமான படங்கள் இனிமே பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப்படத்துல சோகம்ங்கறதை விட யதார்த்தம் நிறைய இருக்கும். நல்லா இருக்கற ஒரு மனுஷன் ஒரு கொடிய மனநோய் தாக்குறதுனால எப்படி அவன் குடும்பமும் அவனும் கஷ்டப்படுறாங்கங்கறது தான் கதைன்னாலும் மோஹன்லாலின் கண்ணிமைகள் கூட நடிச்சு இருக்கறது ரொம்ப ஆச்சிர்யம் எனக்கு. மறக்க முடியாத ஒரு படம். ரெண்டாவது வாட்டி பார்க்க தைரியம் இருக்கலை. 






  1. நந்தனார்
  2. ஹரிதாஸ்
  3. சிவகவி
  4. பக்த மீரா
  5. சக்ரதாரி
  6. ஒளவையார் (கே.பி.சுந்தராம்பாள்)
  7. பராசக்தி
  8. வியட்நாம் வீடு
  9. கொஞ்சும் சலங்கை
  10. கர்ணன்
  11. தில்லானா மோஹனாம்பாள்(வைத்தி)
  12. கெளரவம்
  13. பாலும் பழமும் 
  14. பாகப்பிரிவினை
  15. ஆயிரத்தில் ஒருவன் (பழைய எம்.ஜி.ஆர் படம்)
  16. அன்பே வா
  17. அவள் ஒரு தொடர்கதை 
  18. தனியாவர்த்தனம்



ஓ, இதுவா? இது என்னை போஸ்டு எழுத விடாமல் நச்சு பண்ணி ரங்கு தந்த லிஸ்டு. நான் சொல்லியாச்சு இது எனக்கு பிடிச்ச படங்கள் லிஸ்டுன்னு.நான் சொன்னேன் நான் வேணா உங்களுக்கு ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணிக்குடுக்கறேன்னு.  ரங்கு கேட்டாத்தானே? நானும் இதுல தான்  சொல்லுவேன்னு அடம் பிடிச்சு குடுத்து இருக்கார், இந்த கற்கால மனிதன். சில படங்கள் வந்தப்போ இவர் பிறக்கக்கூட இல்லை. ஏன் தான் இப்படியோ.. நான் என்ன பண்ணட்டும்? 10 படங்கள் தான்னு சொல்லியாச்சு. கேட்டாத்தானே? சொல்லிண்டே போறார். அப்புறம் மாடிஃபிக்கேஷன் வேற.. இது வேண்டாம். அது. அது வேண்டாம் இதுன்னு. இதான் ஃபைனல் லிஸ்டுன்னு எல்லாம் சொல்ல முடியாது. சாயங்காலம் வந்து உக்காண்டு வேற பேரெல்லாம் சொல்லப்போறார்.  உடனே எல்லாரும் ஜால்ரா அடிச்சுண்டு ரங்கு லிஸ்டு தான் பெஸ்டுன்னு பின்னூட்டம் போடுவீங்களே? இதே வேலையாப்போச்சுப்பா..

குறிப்பா நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது
ஜிகர்தண்டா கார்த்திக்
எல்.கே
பாஸ்டன் ஸ்ரீராம் (ஒரே ஒரு கண்டிஷன் கமல் படங்களை தவிர்த்து மற்றவை, ஹீ ஹீ எங்களுக்கு தெரியாதா?)
பொற்ஸ்
சித்ரா
முகுந்தம்மா
புதுகைத்தென்றல்
முத்துலெட்சுமி
ஸாதிகா அக்கா
மிஸ் சிட்சாட்

குறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.

Sunday, May 9, 2010

மனம் ஒரு குரங்கு - 13

ச்சும்மா கொஞ்சம் வம்பு!

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு. அதான் ஒரு போஸ்டு வெட்டி வம்புக்கு டெடிக்கேட் பண்ணிடுறேன்.

எல்லா இடத்துலேயும் அன்னையர் தினம் ஸ்பெஷல் பதிவு போடுறாங்க. சாரி. எனக்கு இந்த அமெரிக்க கலாச்சார தாக்கம் கிடையாது. நான் டிப்பிக்கல் மருதைக்காரி. அதும் கிராமத்துக்காரி. ஸோ, நீங்க எதிர்ப்பார்க்குற அளவுக்கு எனக்கு சோஃபிஸ்டிக்கேஷன் எல்லாம் போறாது.

நான் காற்றை உணர்ந்து சுவாஸிக்கறது உண்மையானா, இனி வருங்காலம் நல்லா இருக்கும்ன்னு நான் நம்புறது உண்மையானா,  பகவத் ஸ்மரணையில் நான் சஞ்சரிக்கறது உண்மையானா, நிச்சியமா எங்கம்மாவை ஒரு க்ஷண நேரம் கூட மறக்கலைங்கறது தான் உண்மை. நான் மட்டுமில்லை எல்லோருமே அப்படித்தான்.  அவங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி செலெப்ரேட் பண்ணி கார்டு குடுக்கறது, பாட்டு டெடிக்கேட் பண்றது, பதிவு போடுறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. வியாபார நோக்கோடு செய்யப்பட்ட இந்த மாதிரி முட்டாள்த்தனமான அமெரிக்க கலாச்சாரம் எனக்கு தேவையில்லை. இதை நான் நிராகரிக்கறேன்.  இன்னும் சொல்லப்போனா இதெல்லாம் எங்கம்மாவை நான் கேவலப்படுத்தற மாதிரி தோணறது. மேற்கத்திய கலாச்சாரம் என்னிக்கும் என்னை பாதிக்காது.
மாத்ருதேவோ பவ. சதாஸ்ம்ருதிஹி!


இப்பெல்லாம் அபுதாபி வாழ்க்கையே மாறிப்போச்சு. முன்னே மாதிரி வருத்தமோ வெறுப்போ இருக்கறதில்லை. அப்படி என்ன மாற்றம்ன்னு யோசிச்சப்போ ரெண்டு விஷயங்கள். ஒண்ணு புது நட்பு. புதுத்தோழிகள் கிடைச்சிருக்காங்க. ரெண்டு சென்னை ரேடியோ. ஆஹா.. ஹலோ எஃப்.எம். கேட்டுண்டே வேலையேல்லாம் நிமிஷமா ஆயிடுறது. சதா வளவள பேச்சுன்னு மக்கள்ஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் என் சுபாவத்துக்கு இந்த ரேடியோ ரொம்பவே பொருத்தம் தான்.குறிப்பா சென்னை விளம்பரங்கள் எல்லாம் வர்றது. ராஜா பாதர் ஸ்ட்ரீட் ரத்னா ஃபேன் ஹவுஸ்,லேட்டஸ்டு சினிமா, லேட்டஸ்டு பாட்டு  இதெல்லாம் கேக்கும்போது சென்னையில இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்கி! ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி கார்த்தால சுசித்ரா குரல் கேக்காட்டி விடிஞ்சதா அர்த்தமே இல்லை. அந்த அளவுக்கு ரேடியோ கேட்டு இருக்கேன்.  அதுலேயும் அந்த நாலு மணி வாலு அலோஷியஸும் சாயந்திரம் ப்ரைம் டைம் ஷோ நடத்தும் சுரேஷும் சூப்பர். ரொம்ப நல்லா எனர்ஜிட்டிக்கா நடத்துறாங்க. குரல் மட்டும் நல்லா இருந்தா போறாது நல்லா சுவாரஸ்யமா நிகழ்ச்சி நடத்த தெரியணும். நிறைய விஷயங்கள் இருக்கு. இங்கே துபாயில் சக்தி எஃப்.எம். ஆர்.ஜேஸ் கேட்டப்போ நான் அப்ளை பண்ண ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அவங்க அலுவலகம் வேற ஊர்ல இருந்ததால அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன்.
யாருக்காவது சென்னை ரேடியோ கேக்கணும்ன்னா இங்கே க்ளிக்கவும்.


மெதுவாக இங்கே வெயில் காலம் ஆரம்பமாயிடுத்து. பகல்லே ஃபுல் டைம் ஏசீ போட்டுக்க வேண்டி இருக்கு. போன மாசம் வெளியே போகும் போது ஈச்சமரத்தில துளிர் விட்டுண்டு இருந்தது. ஈச்சந்தளிர் (சொற்றொடர் சரியான்னு தெரியாது) முதல் முறையா ரொம்ப கவனிச்சு பார்க்க முடிஞ்சது. இங்கே சாலையோர குட்டை மரங்கள்ல இருந்து தென்னந்துளிர் மாதிரி பச்சையா வந்ததை கவனிச்சேன்.

இங்கே எல்லாம் இது சர்வ சாதாரணம். இந்த ஈச்சந்துளிர் வந்த உடனே, வலை கட்டி விட்டுடுவாங்க. பேரீச்சைப்பழங்கள் எல்லாம் அந்த வலையில கனிஞ்சு தானா சேர்ந்துடும்.உங்களுக்காக ஒரு 3டைமென்ஷனல் ஈச்சமரம்.



 நல்லா இருக்கு இல்லே? :-)


UAE யில் மட்டும் 4 கோடி ஈச்ச மரங்கள் இருக்காம்! ஜபலாலியில வேலை செய்ஞ்சப்போ எங்க ஆபீஸ் வாசல்ல ஒரு 10 மரங்கள் இருந்தது. எல்லா மரங்கள்ல இருந்தும் இந்த பழங்கள் கீழே விழுந்து இருக்கும். கனிஞ்சு தொங்கிண்டு இருக்கும் பேரீச்சை பழங்களை உயரமான ஒருத்தரை பறிச்சுத்தரச்சொல்லி க்கேட்டப்போ அவருக்கு பயங்கர ஆச்சரியம்! இங்கே இருக்கும் அரபியர்கள், மற்ற நாட்டவர்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி நான் பண்ணினதுல ரொம்ப ஆச்சிரியம். இவங்களுக்கு அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு தோணலை போல இருக்கு! நான் தான் ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயிலைக் குடிக்கிற கேஸு. அதுமட்டுமில்லை, ஆனஸ்டா சொல்லணும்னா,  ஃப்ரெஷ்ஷா பறிச்ச ஈச்சம்பழம் எப்படி இருக்குன்னு பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆர்வம். அதான் அப்படி கேட்டேன். ஹீஹீ.. என்னதான் நாம பூசி மொழுகினாலும் நம்ம உண்மை எல்லாம் வெட்ட வெளிச்சம்தானே?


சைனீஸ் சால்டு எனப்படும் அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்லூடமேட்) பொட்டலத்துல கட்டி வாங்காதீங்கன்னு இப்போ விழிப்புணர்வு கொண்டு வந்திருக்காங்க. என்ன ப்ரயோஜனம்? நாள்பட அதை சாப்பிட்டா நல்லதில்லைன்னு படிக்கறேன்.ஏகப்பட்ட சைடு எஃபக்ட்ஸ் இருக்குன்னு பக்கம் பக்கமா எழுதறாங்க.

சைனீஸ் ஃபுட் சிண்ட்ரோம்ன்னு எல்லாம் சொல்லிக்கறாங்க. இவ்ளோ ரிஸ்க் எடுத்து அதை சமைக்கணுமா? அவாய்டு பண்றது தான் நல்லதுன்னு நான் அதையெல்லாம் உபயோகிக்கறதில்லை. நம்ம ஊர்ல இருக்கற ஸ்பைஸஸ் போறுமே.. என்னத்துக்கு நாடு விட்டு நாடு வந்ததெல்லாம் சமைச்சு பிரச்சினையை விலை கொடுத்து வாங்கணும்? தேவையா?  நல்லதுன்னு பரவலா விளம்பரப்படுத்தினாலும் வேண்டாம்ன்னு ஒரு சாராரும் சொல்றாங்களே? இப்படி ஒரு காண்ட்ரவர்ஷியல் ஐட்டத்தை சமைச்சே ஆகணுமா? உங்க கருத்தை சொல்லுங்க.

இந்த அக்ஷ்ய த்ருதீயை லொள்ளு தாங்க முடியலை! புதுசா காழியூர் நாராயணன் ரேடியோல வந்து ப்ளாட்டினம் நல்ல எனர்ஜியாக்கும் அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு எல்லாம் உதார் வுட்டு, இந்த அக்ஷ்யதிருத்தியைக்கு கண்டிப்பா எல்லோரும் ப்ளாட்டினம் வாங்குங்கன்னு சொல்லிட்டு எஸ் ஆயிட்டார். இந்த மனுஷனாலத்தான் சில வருஷம் முன்னாடி இந்த அக்ஷய த்ரிதியை இப்படி கன்னா பின்னான்னு பாப்புலர் ஆச்சு. ஜீ.ஆர்.டிக்குள்ளே கடுகு போட இடம் இல்லை!!!! மன்ச்சி யாவாரம் எல்லாருக்கும். மூணுவருஷம் முன்னாடி தமாஸ்ல கூட செம்ம கூட்டம். பேசாம வேற ஏதாவது டுபாக்கூர் ஜோஸியரை கூப்பிட்டு உப்பு, சர்க்கரை, தண்ணி இதெல்லாம் வாங்கினா வருஷம் பூரா மங்களகரமா இருக்கும்ன்னு  ஒரு திரியை கொளுத்தி போட சொல்லணும். எரிச்சல் தாங்க முடியலை! X-(

போன வாரம் ஷார்ஜா போயிருந்தோம். குழந்தைகளுடன் கீதா மன்னி வந்திருந்தார். ரங்குவுக்கு அங்கே போனா குளிர் விட்றும்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கேனே.. ஹீ ஹீ.. எனக்கும் தான்.. செம்ம கலாட்டா கச்சேரி நடக்கும். அதுலேயும் அண்ணா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்பேன். அன்னிக்கி அண்ணாவுக்கு ட்யூட்டி. விடிய விடிய கலாட்டா கச்சேரி. ரங்கு என்னை ஓட்ட நான் ஓட்டப்பட.. (ஹிஹி) இப்படி தொடர்ந்தது.
“மன்னி ஹலோ எஃப்.எம் ல சாயந்திரம் 7-9 எனக்கு பிடிச்ச பாட்டா போடுவான் மன்னி, அது கழிஞ்சு இவருக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் வரும். அதாவது பி.யூ சின்னப்பா, எம்.கே.டீ, கே.பீ. சுந்தராம்பா, கிட்டப்பா இப்படி போடுவான் மன்னி” ”அப்படியா மோஹன், அவ்ளோ பழைய பாட்டெல்லாம் நோக்கு டேஸ்டுண்டா?-” இது மன்னி. ரங்கு, சதாரம், சாந்த சக்குபாய்,சிவகவி,ஹரிதாஸ், அரிச்சந்திரா இப்படி எது போட்டாலும் கேட்டுண்டு இருப்பார். கொஞ்சம் மிகைப்படுத்த நினைச்ச நான் சொன்னேன்,”
நீங்க வேற மன்னி, இவர் ஆலம் ஆரா பாட்டு போட்டா கூட விசில் அடிச்சுண்டு ரசிச்சு கேப்பார்” .(புரியலையா? ஆலம் ஆரா இந்தியாவின் முதல் டாக்கி - பேசும் படம்.)

சினிமா பாட்டுல இருந்து டிஸ்கஷன் மெதுவா எனக்கு பிடிக்காத டாப்பிக் பக்கம் வந்தது. என்ன டாப்பிக்கா? படிப்பு. அடுத்து என்ன படிக்கலாம்ன்னு லக்ஷ்மி கேட்டுண்டு இருந்தா. எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம், நம்ம மொக்கை ரங்கு மைக்கில்லாம பிரசங்கம் நடத்திண்டு இருந்தார். கடுப்புல நான் கேட்டுண்டு இருந்தேன். ”கோந்தே, காமர்ஸ் தான் இந்த காலத்துக்கு ஏத்த படிப்பு. காமர்ஸ் மெயின் கோர்ஸா படிச்சுட்டு மேற்கொண்டு எம்பிஏ, ஃபைனான்ஸ், ஸிஸ்டம்ஸ் இப்படி படிச்சா இந்த காலத்து சர்வைவலுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். மத்த படி வெறும் காமர்ஸ் மட்டும் படிச்சுட்டு சும்மா இருந்தா வேஸ்டுன்னு மெதுவா என் பக்கம் ஒரு திருட்டு முழி வீசினார். ருத்ர தாண்டவம் ஆட ஏதுவா ஒரு இடத்தை தேடிண்டு இருந்த நான், ”ஹான்?”ன்னு உரக்க கத்தினேன். உடனே அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!
மன்னி & குழந்தைகள் தேடினேன் காணோம். பின்னே? கீழே விழுந்து புரண்டு சிரிச்சுண்டு இருந்தாளே!

Tuesday, May 4, 2010

துபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்



போன திங்கள் கிழமை தான் ஹூஸைனம்மா கூப்பிட்டு ஸாதிகா அக்கா துபாய் வந்திருப்பதாக சொன்னாங்க. எல்லாரையும் சந்திக்க ஆவலா இருக்கறதா சொன்னாங்க. வியாழன் மீட் பண்ணலாம்ன்னு ஒரு பேச்சு இருக்கறதா சொன்னாங்க.  நான் ப்ளாகுலகத்துக்கு புதுசு. எனக்கு இங்கே யாரையும் தெரியாதே. அதுனால எல்லாரையும் சந்திச்சு பரிச்சயப்பட்டுக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஆனா பாருங்க ரங்குவுக்கு ஏதோ மீட் அன்னிக்கி. ஸோ, சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு, நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். ஹூஸைன்னம்மா ரொம்ப பெருந்தன்மையா பிக்கப் பண்ணி ஷார்ஜாவில ட்ராப் பண்றேன்னு சொன்னாங்க. சரி பார்க்கலாம்ன்னு சொல்லி இருந்தேன்.அதுக்குள்ளே ரெண்டு மூணு கெஸ்டு வராப்ல எல்லாம் சொல்லி இருந்தாங்க. அப்படியே வேலையில மூழ்கிட்டேன். புதன் அன்னிக்கு ரங்கு கிட்டே விஷயத்தை சொன்னப்போ, துபாய் தானே? கூட்டிண்டு போறேன்னு சொல்லிட்டார். எனக்கு ஒரே குஷி.

புதன் அன்னிக்கு வல்லிம்மா ஜிங்குன்னு துபாய் வந்துட்டாங்க. அவங்க கிட்டே பேசினப்போ உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே தித்திப்பா இருந்தது. அழகா அன்பா அவங்க பேச்சு ரொம்ப ரிஃப்ரெஷிங்கா இருந்தது. எப்[படியும் இவங்களையும் இந்த மீட்ல சேர்த்துக்கணும்ன்னு ஹூஸைனம்மா கிட்டே தெரியப்படுத்தினேன். உடனே எல்லாரும் மெயில் மூலமா கோஆர்டினேட் செஞ்சு, பேசி, டேட், டைம், லொக்கேஷன் எல்லாம் ஃபைனலைஸ் பண்ணி ஹூஸைனம்மா தெரிவிச்சாங்க. நாங்களே வல்லிம்மாவை பிக்கப் பண்ணி மீட்டிங்குக்கு அப்புறமா ட்ராப் பண்றதா ஏற்பாடு. 7.30 ஆகும்ன்னு சொல்லி இருந்தேன்.

முதன் முறையா ப்ளாக் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் சில இணைய தோழிகளை சந்திக்கப்போறோம்ன்னு எனக்கு ரொம்ப குதூகலமா இருந்தது. இல்லையோ பின்னே? இங்கே வந்ததுக்கப்புறம் எனக்குன்னு இருக்கறது ஒரு சின்ன வட்டம் தானே. அதை விரிவு படுத்திய ஹூஸைன்னம்மாவுக்கு பல நன்றிகள்.

வியாழக்கிழமை சாயந்திரம் எப்போ வரும்ன்னு ஒரே ஆவலா இருந்தது. ப்ளாக்கர்ஸ் மீட்டுக்கப்புறமா நாங்க ரெண்டு பேரும் நேரே ஷார்ஜா போறதா ப்ளான். ரங்கு 5.30க்கு வரேன்னு சொல்லி இருந்தார். நான் 5 மணிக்கே ரெடி. துணிஎல்லாம் எடுத்து வெச்சுண்டு காத்துண்டு இருந்தேன். ரங்கு வழக்கம் போல 6.15க்கு வந்தார். அவர் அன்னிக்கு கார்த்தால 6 மணிக்கே கிளம்பி போனதுனால ரொம்ப களைப்பா இருந்தார். அதுனால போனாப்போகட்டும்ன்னு ட்ரெஸ் சேஞ்சுக்கு பெர்மிஷன் குடுத்தேன். ஒரு டம்ளர் ஜூஸ் குடிச்சுட்டு ஜிங்குன்னு கார் ஆக்ஸிலரேட்டரை அழுத்த, கார் ஆன்ந்தமா பறந்தது. முதல்ல எல்லாம் பேசிண்டே போனோம். போகப்போக ட்ராஃபிக் வேலையக்காட்ட ஆரம்பிச்சது. ஜபலாலி வந்தப்போ, மெதுவா ரங்குவை பிறாண்ட ஆரம்பிச்சேன். பின்னே, ரொம்பவே மெதுவா போக ஆரம்பிச்சது. 7.15 ஆயிடுத்து அப்போவும் நாங்க ஷேக் ஸாயத் ரோட்டில் தான் ஊர்ந்துண்டு இருந்தோம்.

வல்லிம்மா 9 மணிக்கு படுத்துக்கறவங்க.ரொம்ப லேட் ஆகிடுத்துங்கறதுனால அவங்களுக்கு அசெளகரியமா இருக்குமே. அதுனால அவங்களை மீட்டுக்கு கூட்டிண்டு போகாட்டியும் அட்லீஸ்டு பார்க்கணும்ன்னு எனக்கு ஒரே ஆவல். 8 மணிக்கு மக்தூம் பக்கத்துல இருக்கற அவங்க பில்டிங் வாசலுக்கு போனப்போ படபடப்பா இருந்தது. இதுக்குள்ளே ஹூஸைனம்மா அங்கே குரூப்பை குழுமப்படுத்திட்டாங்க. வல்லிம்மா கீழே இறங்கி வந்தாங்க. ரங்கு கார் பார்க்கிங் கிடைக்காம எமர்ஜென்ஸி போட்டுண்டு காத்திருக்க, நான் ஓடியே போய் வல்லிம்மாவை பார்த்து கட்டிண்டு அவங்க பொழிஞ்ச அன்பு மழையில நனைஞ்சேன். சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவங்களை பிரிய மனசே இல்லை. அவங்களை அபுதாபிக்கு அழைச்சுட்டு டைம் ஆயிடுத்துன்னு கிளம்பினேன். ஒரு தாயிடம் கிடைக்கும் அன்பும் ஆதுரமும் அவங்க கிட்டே கிடைச்சதுன்னா,  அது மிகையில்லை.

ஐஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்னு சொன்னேன் ஹூஸைனம்மா கிட்டே.அவசர அவசரமா ரங்கு ஓட்டினாலும் க்ளாக்டவர் கிட்டே நல்ல ட்ராஃபிக். ஆனா முன்னைக்கு இப்போ துபாய்ல ட்ராஃபிக் ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. அப்படி இப்படி புகுந்து லுலு கிட்ட வந்தப்போ ஹூஸைனம்மா கோசம் காத்துண்டு இருந்தேன். ரங்குவை கழட்டி விட்டுட்டுடலாம்ன்னு பார்த்தா என்கிட்டே வந்து நின்னுண்டே இருக்கார். க்ர்ர்.. அப்புறம் ஒரு பத்து நிமிஷம் காத்திருந்ததுக்கப்புறம் ஹூஸைனம்மா வேர்த்து விறுவிறுத்துண்டு வந்தாங்க. அந்த இடத்துல என்னமோ குழப்பம். எனக்கு அதெல்லாம் சந்தோஷத்துல பிடிபடலை! பின்னே? எல்லாரையும் பார்த்துட்டு ஒரே சிரிப்பு சந்தோஷம். நிறைய பேர் பர்தா போட்டுண்டு இருந்ததுனால எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம் ஆச்சு.

வாயெல்லாம் 32முமாய் ஓடிப்போய் ஒரு பெண்ணைப்பிடித்தேன். இவங்க தான் ஜலீலான்னு யாரோ திரியை கொளுத்திபோட, கெக்கே பிக்கேன்னு ஒரு 10 வரி அவங்க ப்ளாக் பத்தி புகழ்ந்து பேசினேன். அவங்க திருதிருன்னு முழிச்சாங்க. அப்புறம் அந்த ’எட்டப்பி’ யாருன்னு தேடினேன். யார்ன்னு தெரியல. எட்டப்பியா என்ன சொல்றீங்கன்னு தானே கேக்கறீங்க? ஏன்னா இவங்க தான் ஜலீலாக்கான்னு காட்டப்பட்டது ஜலீலா இல்லையாம். சும்மாங்காச்சுக்கும் யாரோ சொல்லி இருக்காங்க. அவங்க ஆஸியாவாம். கஷ்டம்.வந்த உடனே ’அநன்யா ட்ரேட்மார்க் பல்பு’ வாங்கியாச்சு. இதே தானே வேலையா அலையுறேன். ‘சந்தோஸமா’ன்னு கஞ்சா கருப்பு மாதிரி கேட்டுண்டே அடுத்த ஆளை பரிச்சயப்படுத்திண்டேன்.

நான் யாருன்னு சொல்லுங்கன்னு ஒரு பெண் ரொம்ப அன்பா கையைப்பிடிச்சுண்டு கேட்டப்போ சத்தியமா தெரியாதுன்னு சொன்னேன். இல்லை உங்களுக்கு தெரியும். உங்க ப்ளாக் வந்திருக்கேன்னு சொன்னப்போ நாம் மறுபடியும் பழம் சாப்பிட்டேன்.  அவங்க ஸாதிகா அக்கா. ரொம்ப அழகு, வல்லிமா மாதிரியே ஒரு கருணையான கண்கள், சிரித்த முகம்.

ஹலோன்னு சொல்லி மலர் கை குடுத்தாங்க. இவங்க நம்ம ப்ளாக் வந்திருக்காங்கன்னு நினைச்சு புக்மார்க் பண்ணிண்டேன்.

பிரியாணி நாஸியா அறுந்த வாலு போல இருக்கு. சிரிச்சுண்டே ரொம்ப ஜாலியா பேசினாங்க. ஜலீலா அக்கா பயங்கர காஷுவல்.பொறுமையா ஏகப்பட்ட ஐட்டம்ஸ் பண்ணி சாப்பிட எடுத்துண்டு வந்திருக்காங்க.
மொத்த குரூப்பையும் ஆசுவாசப்படுத்திண்டு இருந்தாங்க. இடைக்கி அப்பப்போ வந்து  என்னையும் கவனிச்சுண்டாங்க. அவங்க அன்புல திக்கு முக்காடி போயிட்டேன். அந்த செயல்ல நம்ம நாட்டு விருந்தோம்பல் தான் தெரிஞ்சது.

(எனக்கும் தோணிச்சு, ஒரு க்ரூப் மீட்ன்னா, கண்டிப்பா ஏதாவது ’இன்புட்ஸ்’ இருக்கணுமே.  நானும் ஏதாவது பண்ணி எடுத்துண்டு போய் இருப்பேன். அன்னைக்கு ஃபுல்லா செம்ம தலைவலி, அதான் வெறுங்கையோடு போயிட்டேன்)

திருமதி மனோ சுவாமினாதனை பார்த்தது பெரும் பாக்கியம் தான். எவ்ளோ இன்ஃபர்மேஷன். நான் நினைக்கறேன் இவங்க விக்கிப்பீடியா மாதிரி மனோபீடியான்னு ஒரு சைட் ஆரம்பிக்கலாம். மல்டி ஃபேஸட்ட் பெண்மணி. ஏகப்பட்ட திறமைகளை வெச்சுண்டு இருக்காங்க.

ஹூஸைனம்மா எல்லாரையும் பத்து வாட்டிக்கு மேல காட்டிக்குடுத்தப்போ தான் எல்லாரையும் ஓரளவுக்கு அடையாளம் தெரிஞ்சது.

நம்ம காமெடி ஃப்ரீக்வென்ஸி வேவ்லெங்க்துக்கு ரொம்ப சூப்பரா ஒத்து போனது மலிக்கா தான். ஊசிப்பட்டாசு மாதிரி ஒரே பேச்சு.. சிரிப்பு.

சுந்தராங்கர பதிவரை தான் சந்திக்க முடியல. அடுத்த வாட்டி எப்படியும் மீட்டிடுவோம்ல?

நீங்க கமெண்டுக்கு பதில் போடவே மாட்டேங்கிறீங்கன்னு மலர் என்னை சாடினாங்க. உண்மைதான். நான் ரொம்ப டிலே பண்றேன். பதிவு போடுறதுல இருக்குற சுறுசுறுப்பு கமெண்ட்ஸுக்கு ரெஸ்பாண்டு பண்றதுல இருக்க மாட்டேங்கறது. ஹ்ம்ம்.. பாயிண்டு நோட்டட் மேடம்.

அப்படியே டெம்ப்ளேட்ஸ், போஸ்ட்ஸ், அவார்ட்ஸ் & ரிகக்னிஷன்ஸ் இதைப்பத்தி எல்லாம் ஒரு பத்து நிமிஷம் விவாதிச்சோம். (பின்னே ப்ளாக்கர்ஸ் மீட்னா டெக்னிக்கலா ஏதாவது பேச வேண்டாமா?ஹீ ஹீ, மேற்கொண்டு விவரம் அறிய மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்கி நம்ம ஹூஸைன்னம்மாவை கேட்கவும்.)

ஆஸியாக்கா வந்ததுல இருந்து ஒரே டென்ஷன். அதுனால சீக்கிரம் கிளம்பிட்டாங்க. எல்லாரும் அந்த கனோபிக்குள்ளே உக்காண்டு பேசலாம்ன்னு செட்டில் ஆறதுக்குள்ளே நம்ம ரங்ஸ்”ஆச்சாம்மா”ன்னு ஃபோன் பண்ணிட்டார். ”இருங்கோன்னா, இப்போத்தான் எனக்கு முகங்கள் அடையாளம்  தெரிஞ்சு இருக்கு இனிமேத்தான் பேச ஆரம்பிக்கணும்”ன்னு சொல்லிட்டு திரும்பினா எல்லாரும் கொல்லுன்னு சிரிக்கறாங்க. ரெம்ம்ப வெக்கமா போச்சு

யாரும் யாரையும் அக்கான்னு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு நடுவுநிலையுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்புறம் அவங்க சமைச்சு கொண்டு வந்ததெல்லாம் சுடச்சுட சேல்ஸ் ஆச்சு. நானும் வேக வெச்ச வேர்க்கடலையும் சுவையான மசால் வடையும் சாப்பிட்டேன். ”அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?” வருந்தி வருந்தி ஜலீலாக்கா பண்ணின உபச்சாரத்துல அசந்துட்டேன்.

இப்பிடியா சிரிச்சு சிரிச்சு பேசிண்டு இருக்கும்போதே ரங்கு ஃபோன் பண்ணியாச்சு. 9.53ன்னு பாழாப்போன மொபைல் மணி காட்ட ஒரே பதபதைப்பு. மனசே இல்லாமல் பிரிஞ்சேன். அந்த சிரிப்பும் கும்மாளமும் இன்னும் மனசுக்குள் எதிரொலிச்சுண்டு இருக்கு. காருக்குள்ளே ரங்கு அரைத்தூக்கத்துல உக்காந்து இருந்தார். பாவம் அவருக்கும் பசிச்சு இருக்குமே.

மறக்கமுடியாத இந்த சந்திப்பை ஏற்படுத்தித் தந்த ரங்குவுக்கும், இதை கோ-ஆர்டினேட் செய்த ஹூஸைனம்மாவுக்கும், மூல காரணமான ஸாதிகா அக்காவுக்கும் பலப்பல நன்றீஸ். இல்லாட்டி இங்கே நான் பாலைவன ஒட்டகமாகவே இருந்திருப்பேனே. பின்னே எத்தனை நாளைக்கு தான் கிணற்றுத்தவளைன்னு சொல்லிண்டு இருக்க? அதான் ஒரு சேஞ்சுக்கு. ஹீ ஹீ!

Saturday, May 1, 2010

பிடித்த பாடகர்கள்

உங்க எல்லோருக்குமே தெரியும் என் குலதெய்வம் SPBன்னு. இவருடைய பல பாடல்கள்ன்னா எனக்கு உயிர். மண்ணில் இந்த காதல், அழகான ராட்சசியே, தீண்டாய் இப்படி லிஸ்டு போயிண்டே இருக்கும். இருந்தாலும் ஒரு பாட்டு மட்டுமே போடக்கூடிய சூழல். அதுனால என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டுன்னு சொல்லக்கூடிய இந்த பாட்டை போட்டுடறேன். ஃபேவரைட் சிங்கர், ஃபேவரைட் ஆக்டர்,  இப்படி எல்லாமா சேர்ந்து அமைஞ்ச பாட்டு தான் நீல வான ஓடையில்... ஆஹா..  கங்கை அமரன் இசைன்னு சமீபமாத்தான் தெரிஞ்சது. கலக்கிட்டார் போங்க.




ஷங்கர் மஹாதேவன். இவர் மிக அருமையான  பாடகர். இருந்தாலும் பாவம் இப்போதெல்லாம் குத்து பாட்டு ஹீரோ இண்ட்ரோ சாங்குக்கு தான் இவரை அணுகுகிறார்கள். அது எனக்கு வருத்தமே. குலதெய்வம் மாதிரி மூச்சு விடாமல் இவர் பாடிய ப்ரெத்லெஸ் என்ற ஆல்பம் கேட்டு வாய்பிளந்தேன். நல்ல ஒரு தனித்துவம் வாய்ந்த குரலின் சொந்தக்காரர். எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் இந்த பாட்டு தான்.




சின்னக்குயில் சித்ராவின் பல பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். இருந்தாலும் இந்த பாட்டு அவங்க பாடுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டாங்களாம். நந்தனம்ன்னு ஒரு மலையாளப்படம் பாட்டும் அப்படித்தான். இருந்தாலும் இதுல இருக்கற மெலடி எனக்கு ரொம்ப இஷ்டம். நல்ல குரல் வளம், அருமையான பாவம், செழிப்பான இசையறிவு இதெல்லாம் மட்டும் இல்லாம, தன்னடக்கம், எப்போவும் சிரித்த முகம் இதெல்லாம் பார்க்கும்போது இவங்களை பொறாமைப்படாத பெண்களே இருக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லலாம். 




சுஜாதா. இவங்க குரல் தேன்ல குழைச்ச பலாச்சுளை மாதிரி அப்படி ஒரு தித்திப்பு. இவங்களும் இதே டைப்பு சிரிச்ச முகம், அருமையான குரல் வளம், இசையறிவு, பாவத்துடன் பாடும் திறன் எல்லாம் படைத்தவர். என்னுடைய பெர்சனல் ஃபேவரைட்” உண்மை சொன்னால் நேசிப்பாயா” என்ற ஆய்த எழுத்து பாடல். இருந்தாலும் இவர் பாடினாலே ஒரு தனி ரிச்னஸ் கிடைத்து விடும் எந்த பாட்டுக்கும். எல்லாத்துக்கும் மேலே சிரிச்சுண்டே பாடுற மாதிரி இருக்கும். கேட்கும்போதே புத்துணர்ச்சி கிடைக்கும்.

 
 



உன்னிக்கிருஷ்ணன் இவர் பாட்டை முதன் முதலா கேட்டது காதலன் படத்தில் தான். கர்நாடக இசையிலிருந்து மிக எளிமையாக சினிமா இசைக்கு வந்து கோலோச்சியவர். காதலன் படத்துல வரும் ’என்னவளே’ பாட்டு சூப்பர் ஹிட் ஆனாலும் சுப்புடு போன்ற இசை விமர்சகர்களிடம் ரொம்ப கெட்ட பேர் வாங்கித்து. கடுமையான விமர்சனத்தால் பாதிப்படையாமல், உன்னி தன் சினிமா பாட்டு வாழ்க்கையும் கர்நாடக சங்கீத வாழ்க்கையும் நன்றாக சமன் செய்தார். அருமையான பாவங்கள், தேர்ந்த தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் இந்த பாடகரின் சொத்து. ஏ.ஆர்.ஆரின் இசையில் இது எப்போதும் நான் விரும்பிக்கேட்கும் பாடல்களின் ஒன்று. சில சமயம் அழுவதுமுண்டு. வைர வரிகளாச்சே!


என்ன தான் ஐஞ்சு பாட்டு தான் போடலாம்னாலும் என்னால இந்த பாட்டு போடாம இருக்க முடியலை. அருமையான இசை, உன்னி பாம்பே ஜெயஸ்ரீ குரலில் குறுந்தொகை மாதிரியான பாடல் வரிகள் ரசிக்காமல் இருக்க முடியாது.



இத்துடன் இந்த பகுதி நிறைவடைந்தாலும் இன்னும் பல பாடகர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும். இந்த் மாதிரி ஐஞ்சே ஐஞ்சு பாடகர்களையும் பாடல்களையும் தொகுத்து வழங்கச்சொன்ன கார்த்திக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :)) இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)

நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது,

பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா
எங்கள் ஸ்ரீராம் அண்ணா
பொற்கொடி
ஜெகன் நாதன்
ட்ரீமர்
பத்மனாபன் அங்கிள் ச்சே ச்சே, அண்ணா
திருமதி கீதா சாம்பசிவம்
அப்பாவி தங்கமணி
R.கோபி

மீண்டும் இதே மாதிரி ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடை & வடை பெறுவது உங்கள் அநன்யா... அநன்யா... அநன்யா............
Related Posts with Thumbnails