Pages

Thursday, October 29, 2009

மனம் ஒரு குரங்கு - 8

மனம் ஒரு குரங்கு

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் ..


பாதி காதல் பாட்டு (படம்: மோதி விளையாடு ) எனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் , அதை கேட்கும் பொழுது எனக்கு பழைய indie pop music எல்லாம் நினைவுக்கு வருவதாகவும்  கூறி இருந்தேன் இல்லையா?. நேற்றைக்கு ஒரு மெகா கண்டுபிடிப்பு. அது நான் சொன்ன மாதிரியே Colonial Cousins பேண்டின் ஒரு பழைய tune  reuse தான். Leslie Lewis இசையில் சுனிதா ராவ் பாடிய 'Pari Hoon Main' பாடலின் அச்சு அசலான தமிழ் பதிப்பு தான் இந்த பாம்பே  ஜெயஸ்ரீ  பாடிய 'பாதி  காதல்'  பாட்டு . வழக்கமாக இசைஅமைப்பாளர்கள் மாதிரி ditto வாக reuse பண்ணாமல்   கொஞ்சம் creative ஆக பண்ணி இருக்கிறார்கள். தென்னிந்தியர்கள்  ரசனைக்கேற்ற படி அதை மெருகூட்டி, இங்கே அங்கே கர்நாடக touch ups கொடுத்து ஜெயஸ்ரீ என்ற அருமையான படகியைக்கொண்டு பாட வைத்து இருக்கிறார்கள்.



நிற்க. இந்த 90 களில் வந்த indie pop பாடல்கள் எல்லாம் என்ன கனவா என்று நினைக்கும்படி மாயமாய் மறைந்து விட்டதே? அந்த நாட்கள் திரும்ப கிடைக்கபெருமா என்றெல்லாம் ஏங்கி இருக்கிறேன். தினம் தினம் ஒரு புதிய பாட்டு launch பண்ணுவார்கள்.



 நானும் என் தங்கையும் விடாமல் Mtv Channel V, DD2 பார்ப்போம். Super Hit Muquabla என்ற நிகழ்ச்சியில் இருந்து இந்த trend ஆரம்பம்  ஆயிற்று . இதை பார்த்து சுரேஷ்  பீட்டர்ஸ்  , அனுராதா  ஸ்ரீராம் , தேவன் , பாப்  ஷாலினி ,  யுகேந்திரன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாப் ஆல்பம் தமிழில் ரிலீஸ் செய்தது நினைவிருக்கலாம். இருந்தும் அது எதிர்பார்த்த    அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.




அனைடா, அலிஷா  சினாய் , அனாமிகா , ஸ்வேதா ஷெட்டி , சுனிதா  ராவ் ,ராஜேஷ்வரி, லக்கி  அலி , ஷங்கர்  மகாதேவன் , ரமண  கோகுலா, KK, ஹரிஹரன் , லெஸ்லீ  லூயி, சோனு  நிகம்  ஜோஜோ - : இது போன்ற (முன்பு அறியப்படாத ) பெயர்கள் எல்லாம் எங்களுக்கு பரிச்சயம் ஆயின. தினம் தினம் எதாவது ஒரு புதிய பாடலுக்கு காத்திருப்போம். அம்மா அப்பாவும் கூட விரும்பி பார்க்கும் அளவிற்கு அவற்றில் சில நன்றாக  இருக்கும்.

ஒரு Pop Album Music Video என்பது ஒரு விளம்பரத்தை காட்டிலும் சற்றே நீளமான ஒரு venture ஆகும். அந்த சில நிமிடங்களில் பார்பவர்களை ஈர்க்கும்படி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் almost அனைத்து  டைரக்டர்களும்  தத்தம் கற்பனைத்திறனை நன்கு வெளிப்படுத்தி வெற்றி  பெற்றே  இருந்தனர்  என்பது  என்னுடைய  தாழ்மையான  அபிப்பிராயம் .



 இந்த  பாடல்களில் என்ன விசேஷம் என்றால், எதாவது ஒரு Theme இருக்கும் . பார்ப்பதற்கும் கேட்பதற்கும்  இனிமையாக  இருப்பதோடு , சில  பாடல்கள்  நம்  இதயம்  தொடும்  படி  படம்  எடுத்து  இருப்பார்கள்  . lucky ali யின்  'Anjaane Raahon'  என்ற பாடல்  நம்  கண்களை  குளமாக்கி  விடும் .சில  பாடல்கள்  கிச்சு  கிச்சு  மூட்டும்  படி  இருக்கும். 'Saamne yeh koun aaya'  என்ற பாட்டு Instant Karma என்ற ஆல்பத்தில் இடம் பெற்றது. ஒரு எளிமையான concept ஐ  mid 70s theme கொண்டு  எடுத்து  இருந்தார்கள் .இப்போதுள்ள trend க்கு எல்லாம் முன்னோடியாக இந்த பாட்டை தான் கூற முடியும்.

வித்தியாசமான backdrop பில் படமாக்கப்பட்ட நாட்டுபுற  இசையை  மையமாக  கொண்ட  Euphoria வின் Dhoom Pichak Dhoom பாட்டை மறக்க முடியாது. நல்ல இசை, நல்ல பாடகர்கள், நல்ல லோகேஷன் , நல்ல தீம் இதெல்லாம் இருந்த ஆல்பங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை.

(பின் குறிப்பு : 'ஒஹ் அந்த நாட்கள்' என்று மூக்கை சிந்தி, கர்சீப்பை பிழிபவரா  நீங்கள்? கவலை வேண்டாம் யூ டியூபில் எல்லா பாடல்களும் intact ஆக இருக்கின்றன என்ஜா.........ய்! . ஆனால் அந்த Golden Era மட்டும்  திரும்பி  வரவே  வராது .. )

இந்த சமையல் நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம். எதையும் விடுவதில்லை. புரிகிறதோ புரியவில்லையோ சைவ சாப்பாடு சமைத்து காட்டினால் கட்டாயம் பார்ப்பேன்.

வழக்கமாக நம்மூர் பொதிகை சன் விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் வரும் சமையல்  நிகழ்ச்சிகளில் செய்யும் பதார்த்தத்தை விட அதிகமாக கண்களை கவர்வது செய்பவருடைய கையலங்காரம், மோதிரம்(ங்கள்!!!), வளையல், நெயில் பாலிஷ், மெகந்தி, புடவை, நகைகள், மேக்கப் , உபயோகப்படுத்தபடுகின்ற பாத்திரங்கள், கரண்டிகள், அடுப்பு, blender , Microwave safe dishes போன்ற  விஷயங்களே!


சமீபமாக கைரளியில் ஒளிபரப்பான  சமையல் நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டு இருந்தேன் . Dr லக்ஷ்மி நாயர் என்பவர், ஊர் ஊராக போய் அங்குள்ள சுவைகளை ருசித்து பார்க்கிறார். காரைக்குடி செட்டிநாடு பக்கம் வருவதாக சொன்னவுடன், ஹை என்று பார்க்க ஆரம்பித்தேன். நிஜம்மாகவே சொல்கிறேன், நம்ம வீட்டு சமையலறைக்குள்ளே எட்டிப்பார்த்த மாதிரி இருந்தது அந்த நிகழ்ச்சி. எந்த ஒரு டாம்பீகமும் இல்லாமல் சாதாரணமாக ஒரு நம்மூர் பெண் வெவ்வேறு வண்ணங்களில் புடவையும் ரவிக்கையும் அணிந்து ஒரு குந்துமணி நகை கூட அணியாமல், ஒரு  துளி  talcum powder கூட  போட்டுக்கொள்ளாமல் , வீட்டில்  உபயோகபடுத்துகின்ற மிகச்சாதாரண  பாத்திரங்களில்   விதவிதமாக அருஞ்சுவை உணவு சமைத்து காட்டி அசத்தினார். Dr லக்ஷ்மி சிறு குழந்தையின் ஆர்வத்தோடு அதை உண்டு ரசித்து மகிழ்ந்து பாராட்டினார். சமையல் நிகழ்ச்சின்னா  இப்பிடித்தான் இருக்கணும். பேஷ் பேஷ். Good work guys!.



TV  ரிமோட்டில்  சேனல்களை surf பண்ணிக்கொண்டே  இருந்த  பொழுது  people tv இல break  அடித்து  நின்றேன் . என்  favourite பாடகர் ஷங்கர்  மகாதேவனை ஒருத்தர் பேட்டி கண்டு கொண்டு இருந்தார். நான் பிரேக் அடிக்கத்த சுப லக்னத்தில் பேட்டி முடியபோகிறது என்ற கசப்பான உண்மை தெரிந்தது. ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். Taare Zameen Par என்ற  படத்தில்  இடம்  பெறும்   'Maa' பாடலை  உணர்ச்சிபூர்வமாக  பாடிய  ஷங்கரின்  திறமையை   நான்  பிரமித்த  அதே  நேரம் , பேட்டி எடுப்பவர் அந்த பாடலில் லயித்து ,  வாய்  பிளந்து   'பே ' என்று  பார்த்துக்கொண்டு  இருந்தார் . பாடி  முடித்த  shankar, இவரது  நிலையை  உணர்ந்து , எழுந்து, சுதாரித்து  கொண்டு , கைகொடுத்து , பேட்டியை  நிறைவு   செய்தார் . அப்பொழுதும் பேட்டி எடுப்பவர் புகழ்வதற்கு வார்த்தைளை தேடிக்கொண்டு இருந்தார் Not just breathless, Speechless too .. Kudos Shankar!!!

Tuesday, October 27, 2009

Happy Birthday Naa...

இன்று  இவருக்கு பிறந்த நாள். அதனால் நேற்று இரவே கமலாம்மாவின் அறிவுரைப்படி அதிரசதிற்கு மாவு தயாரித்து விட்டு பயந்து கொண்டே பாகு வைத்து கிளறி எடுத்து வைத்து விட்டேன். காலையில் அரக்க பறக்க ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து (இவர் இன்று அல் எயின் செல்ல வேண்டி இருந்தது அதனால் காலை ஆறரை மணிக்கு புறப்படுவேன் என்று கூறி இருந்தார்) பிறந்த நாள் வாழ்த்திவிட்டு அவசர அவசரமாக குளித்து, சாதம் வைத்து பிள்ளையாரை வேண்டிக்கொண்டு அதிரசம் பண்ணி பொறித்து எடுத்தா.............ல், திடீரென்று சமயலறையில் நுழைந்து, என்ன இது என்று கேட்கிறார்.. என்ன கொடுமை சரவணா.. தூக்கத்தில் எழுப்பி (கண்கள் மூடி இருக்கும்போது கூட) மூக்கின் அருகில் ஒரு அதிரசத்தை கொண்டு போய் வைத்தால்"ஹை அதிரசம் " என்று  வாசனைக்கே பக்கித்தனமாக ஒரே கவ்வாக கவ்வி விடும் இவருக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த அதிரசம் என்ன என்றே தெரியவில்லை ? . உடனே  நீங்க சொல்லுவீங்க,  ஆமாம் மா, நீ அந்த லெட்சணத்துல பண்ணி இருப்பேன்னு .. இத இத இத நான் முன்னாடியே  எதிர்பார்த்தேன். அதான் படம் எடுத்தேன். நீங்களே பாருங்க..




 அவ்ளோ கேவலமாவா   இருக்கு? 'இல்லே ... ஆனா  இருக்கு'ன்னு  சொன்னீங்க, .... அப்புறம் மணிக்கு  ஒரு போஸ்ட் போட ஆரம்பிச்சுருவேன். எப்படி வசதி?


எது எப்படி போனாலும் இவருக்கு பர்த்டே சோ இவரைப்பற்றிய சில நல்ல விஷயங்கள் சொல்கிறேன்




  • என் பொறுமைக்கும்  ஒரு  எல்லை  இருக்குன்னு  நம்ம  நிறைய   dialogues  பேசுவோம்  . but இவருக்கு  அந்த  எல்லை  எல்லாம்  இல்லை . எல்லையற்ற   பொறுமை  நிறைந்தவர் . (அதுனால  தானே  என்னை  கல்யாணம்  பண்ணிண்டு  காலக்ஷேபம்  பண்ணறார்    !)
  • யார்மேலும்  பகை வைத்துக்கொள்ள   மாட்டார்  . (அதுனால  நான்  சூப்பரா  இவரை  வெறுப்பேத்தலாம்  . no backfiring. )
  • எல்லோரிடமும்   இனிமையாக   பழகுவார்  . (இதை  என்  கிட்ட  இருந்து   copy அடிச்சுட்டார் )
  • கடும்சொற்கள்    அறவே   பேச    மாட்டார்  . (யாராவது  ரொம்ப  தப்பு  பண்ணிட்டாங்கன்னா    அவங்களை  உச்சகட்ட   கோபத்தில்   திட்டும்   வார்த்தை   - He/She/It is Hopeless!!!! அவ்ளோ  தான் . )
  • உலகத்துல வாழற மக்கள் எல்லோருமே இரண்டு வகையை சேர்ந்தவர்கள் என்ற தீவிர நம்பிக்கை உடையவர். 1. நல்லவர்கள் 2.மிகவும் நல்லவர்கள் (கஷ்டம்!!!) 
இதெல்லாத்தையும் கண்டுபிடிச்ச மகேஷ், ஆராதனை செய்யவேண்டிய  என்னை புறம்தள்ளிவிட்டு இவரைப்பற்றிய ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை தனது ஒரு பழைய அபுதாபி பதிவில்  போட்டது நினைவிருக்கலாம் .  நன்றி மகேஷ்.


இன்று இனிய   surprise   ஆக   ரகு மாமாவின்   காமெடி   மெயில்   ஒன்று  வந்திருந்தது . அவருடைய  ஈமயிலில்  ஏதோ  பிரச்சனையாம் . doesnt matter.. welcome back mama.. and please start blogging. முக்கியமான  மேட்டர் .. இன்னிக்கி  அவரோட   wedding anniversary.. Wishing you and athai a happy anniversary.. Many more Happy returns of the Day. .

நேற்றைக்கி இரவு "ஆறுநூறு பேரு என் ப்ளாக்கை படிசுட்டான்னா" என்றேன். "லோகத்துல வேலையில்லா திண்டாட்டம் ஜாஸ்திஆயிடுத்து இல்லியோ என்றார்.." நறநறநற...

Many more happy returns of the Day to my dear Husband

Monday, October 26, 2009

மனம் ஒரு குரங்கு- 7

மனம் ஒரு குரங்கு- 7


இப்போதெல்லாம் லூலூ சூப்பர் மார்க்கெட்டில் பூங்கொத்துகள் மற்றும் பூச்செடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதோடு, இந்த இறுக்கமான, complex வாழ்க்கையிலும் நம்மையறியாமல் ஒரு இனிமை நுழைந்துவிடும் படியாக இந்த பூக்கள் புன்முருவலிடுகின்றன. அன்று கடைக்கு போவதற்கு முன்னர் ஏதோ சிறிய மனஸ்தாபம் எனக்கும் என் கணவருக்கும். வழக்கமானது தான் என்றாலும் நான் வழக்கத்துக்கு மாறாக முகத்தை உர்ர் என்று வைத்துக்கொண்டு வாராந்திர shopping சென்றேன். கூட அவரும் வந்தார். Khalidiya Mall இல் ஏதோ வேலை இருப்பதால் அங்கே இருக்கும் லூலூ supermarket இலேயே வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவாயிற்று.

கடையில் காய்கறி பக்கம் போனால் அங்கே வண்ணமயமான அழகழகான பூக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. எடுதுப்பார்த்தபொழுது, அவை பூந்தொட்டிகள். தனியாக பூங்கொத்துகளும் வைத்து இருந்தார்கள்.மனதுக்குள் "வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்" என்று முணுமுணுத்துக்கொண்டே அந்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் நின்று கொண்டு இருந்தேன். வேறு என்ன பாட்டு இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து "வசந்தம் தேடி வர வைகை பாடி வர "என்றெல்லாம் பாடிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.. மனசுக்குள்ள தான். (உரக்க வெளியே பாடினா super market இலிருந்து என்னை வெளியேறும்படி மைக் announcement வந்து விடும்.)

என் இறுக்கம் எல்லாம் தளர்ந்து, தானாக என் முகத்தில் புன்னகை வந்து விட்டு இருந்தது. லூசு மாதிரி தனியாக நின்று கொண்டு பூக்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தேன். நான் மட்டும் தான் அப்படியோ என்று நினைத்த பொழுது தான் அக்கம் பக்கம் பார்த்தேன். பூக்களை பார்த்த மற்றவர்களும் அப்படியே நின்று ரசித்துக்கொண்டு இருந்தார்கள். என்ன பண்ணுவது? இங்கே பூக்களை காண்பதரிதாயிற்றே!

கணவர் வேலையை முடித்து கொண்டு வந்தார். எனக்கு அவர் மேல் வருத்தம் இருந்தது போல அவருக்கும் என் மேல் ஏதோ கோபம். (இதை vice versaa வாக நீங்கள் எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல) இறுக்கமான முகத்துடன் வந்தார். இன்னும் காய் வாங்கலையா என்று கேட்டுவிட்டு நான் எதை பார்த்துக்கொண்டு நிற்கிறேன் என்று அவரும் பூக்களை பார்த்தார். நான் எதிர்பார்த்தபடியே அவரும் இறுக்கம் தளர்ந்து பூக்களை ரசித்து "செடி வாங்கலாம்" என்றார். 'ஹய்' என்று சந்தோஷப்பட்டது தான் தாமதம், "அடுத்த மாதம் " என்று அந்த வரியை முடித்தார். அதானே பார்த்தேன்.வாங்கிக்குடுதுட்டாலும் ...

முன்னெல்லாம் கடைகளுக்கு போனால் யாரவது தமிழில் பேசிக்கொண்டால்,"ஹய் தமிழ்" என்று பேபி ஷாலினி போல் மனம் குதூகலிக்கும். குறிப்பாக இந்த ஊருக்கு வந்த புதிதில் கார் ஜன்னல் வெளியில் எல்லாமே 'நம்மூர்காரங்க ' மாதிரி தான் இருப்பார்கள் பட் பேசுவது தான் புரியாது. மலையாளிகள். அதனால் யாரவது தமிழ் பேசினால், நான் மிகவும் மகிழ்ந்து விடுவேன். இப்போ பழகி விட்டது. தமிழ் பேச்சு கேட்டால் ஓகோ, இவர்களும் தமிழ் தான் என்று நினைத்துக்கொண்டு," சூனா பானா, போ போ போய்கிட்டே இரு" என்று போய் விடுகிறேன்.


TR என்றவுடன் எனக்கு என் தம்பி பாலாஜியின் mimicry யும் அவனுடைய high pitch இல் " ஏ டண்டணக்கா டணக்கு நக்கா" உம் தான் நினைவுக்கு வரும் .


அதென்னமோ தெரியவில்லை இந்த விகடனுக்கும் விஜய டிஆருக்கும் ஆகாது போல இருக்கு. சென்ற ஆண்டு டிசம்பரில் புத்தாண்டு இணைப்பில் இப்படி தான் ஒரு பேட்டி பிரசுரத்திருந்தார்கள். இதை படித்த அனைவரும் வாய் விட்டு சிரித்தோம் . அந்த போட்டோ வேறு பயங்கர comedy யாக கிச்சு கிச்சு மூட்டியது . வெகு நேரம் நானும் என் கணவரும் சிரித்ததுமில்லாமல் அதை screenshot எடுத்து ஈ மெயிலில் கூட அனுப்பி நண்பர்களையும் சிரிக்க வைத்து இருக்கிறேன்.

முதலில் அந்த பேட்டி ...கீழே பார்க்கவும் . பின்னர் அடுத்த செய்தி.
**********************************************************************************


' தம்த தகிட... தம்த தகிட... இது நாட்டுச் சரக்கு. அடுத்ததா வெஸ்டர்ன் வேணுமா? தகஜூம் தும்


தும்... த்தாத்தா'' தலைமுடி துள்ள, அறையே அதிரவாயா லேயே வாத்தியம் வாசிக்கிறார் விஜய டி.ஆர். ''சார்.. நான் ஓர் இசைக்கலைஞன் சார். தோல் வாத்தியம் தெரியும்.எனக்குத் தோளே வாத்தியம் சார்!''என்றபடி வலது கையால் இடது தோளை'ரப் ரப்'என்று அறைந்து தாளம் போடுகிறார். மிரட்டலாக ஆரம்பிக்கிறது விஜய டி.ராஜேந்தரின் பேட்டி.


''வந்திருச்சு சார் இடைத் தேர்தல். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சின்னு அத்தனைக்கும் இது டெஸ்ட்டு சார். இந்த ஆட்சி பற்றி மக்கள் மனதில் பலவிதமான குறைபாடுகள் இருக்குன்னு கலைஞர்கிட்ட சொல்லிட்டுதான், மாநில சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவியை ராஜி னாமா
செஞ்சேன். விலையேற்றம், மின்சாரத் தட்டுப் பாடுன்னு மக்கள் சிரமப்படுறாங்க சார். 'இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும் யுத்தம். தமிழன் சிந்தக் கூடாது ரத்தம். அதற்காக நீங்கள் கொடுக்க வேண்டும் சத்தம்'னு இன்னிக்கு வரைக்கும் சத்தம் போட்டுப் பேசிட்டு இருக்கேன். 'பிரணாப் முகர்ஜி இன்னும் ஏன் இலங்கைக்குப் போகலை?'ன்னு கேட்டா,
கலைஞர் பதில் சொல்ல மாட்டேங்குறாரு. தப்பு நடக் கும்போதெல்லாம் தட்டிக் கேட்டுக்கிட்டே இருக்கேன் சார்!'
'''திருமங்கலம் இடைத் தேர்தலில் உங்க கட்சியோட நிலை என்ன?''

''இந்த இடைத் தேர்தலை ஏன் இப்பவெச்சாங்கன்னு கலைஞரே சந்தேகமாக் கேக்குறாரு. 'தேர்தல் முடிவு பாதகமா இருந்துச்சுன்னா, தி.மு.க-வைக் கழட்டிவிட்டுடலாம்'கிறது காங்கிரஸோட கணக்கு.
திருமங்கலத்தில் நான் போட்டிபோடணும்'னு என் கட்சியினர் எழுதினாங்க சுவர் எழுத்து. எனக்குத் தெரிஞ்சிருச்சு தேர்த லோட தலையெழுத்து. அதனால, லட்சியத் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது. திருமங்கலம் தேர்தல்களமா... ரணகளமா..? அங்கு நடக்கப்போவது ஜனநாயகமா... பண நாயகமான்னு மக்கள்தான் பதில் சொல்லணும். நான் ஆன்மிகவாதி. ஜோதிடம் அறிந்தவன். என் ராசி தனுசுல சூரியனும் செவ்வாயும் சேர்ந்து உட்கார்ந்திருக்காங்க. குரு உச்சத்துல இருக்கான். கூடவே, ராகு இருக்குறான். இந்தக் காலத்தை நான் பார்க்கிறேன். என் கண்ணில் ஒரு ரணகளம் தெரியுது!''


''விஜயகாந்த்தோட அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கு?''

''தமிழ்நாட்டுல போண்டா மணி ஓட்டு கேட்டுவந்தாக் கூட கூட்டம் வரும். திருமங்கலத்துல நின்னா, திருப்பு முனையை ஏற்படுத்துவேன்னு தெருமுனையில பேசு றாரே, ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரலை? ஜெயலலிதா, காங்கிரஸ் இவங்களோட கூட்டணிவைக்க ணும்னா, இலங்கைத் தமிழர் பிரச்னையில அடக்கி வாசிக்கணும்னு விவரமா இருக்கார். (பல்லைக் கடித்தபடி விஜயகாந்த் வாய்ஸில் மிமிக்ரி செய்கிறார்.) விஜயகாந்த்துக்கு முன்னாடியே நான் அரசியல் களம் பார்த்தவன் சார். ஆனா, அவ்வளவா விவரம் இல்லாதவன். நான் வேகமான தமிழன். ஆனா, பிழைக்கத் தெரியாத தமிழன். இதுதான் உண்மை!''

''மாறன் - கலைஞர் குடும்ப இணைப்புபற்றி என்ன நினைக்கிறீங்க?''
''தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டபோது,'மதுரையை கண்ணகி எரிச்சதையெல்லாம் மக்கள் பார்க்கலை. ஆனா, இவங்க எரிச்சதை இப்பதான் பாக்குறாங்க'னு விஜயகாந்த் அன்னிக்குக் கொடுத்தாரு பேட்டி.
இன்னிக்கு அவுந்துடுச்சு பாத்தீங்களா, அவரு வேட்டி. நான் அன்னிக்கு ஏதாவது பேட்டி கொடுத்தேனா? கலைஞர் டிவி. ஆரம்பிச்சப்ப, நான் அங்கே போகாம சன் டி.வி-யிலயே அரட்டை அரங்கம் பண்ணுனேன்
எவன் விவரமானவன், எவன் சிந்திக்கத்தெரிஞ்சவன்னு புரியுதா? ராஜேந்தருக்கு இருக்குறது முடி மட்டுமில்ல... மூளை! (தலையைக் கலைக்கிறார்) இவன்கிட்ட இருக்குறது வேகம் மட்டுமில்ல... விவேகம்.என்கிட்டே துடிப்பும் இருக்கு, படிப்பும் இருக்கு. எனக்காகப்பிரசுரிங்க சார். கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும்அடிச்சுப்பாங்க... ஒண்ணா கூடிப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.நீரடிச்சு நீர் விலகாது.கலைஞர் கதை, திரைக்கதை, வசனம்எப்படி வேணும்னாலும் எழுதுவார்னு எனக்குத் தெரியும் சார்!''


''சிம்பு மேல மட்டும்இவ்வளவு சர்ச்சைகள் வருதே?''


''காய்ச்ச மரம் கல்லடி படத்தான் சார் செய்யும். 'இந்தப் பையன் இப்படி வளர்றானே!'னு சிம்பு மேல பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கு எல்லாம்ஆதங்கம் இருக்கு. என் மகனைப் போல ஒரு நல்லவனை நான் இதுவரைக்கும் பார்க்கலை.எவ்வளவோ பெண்களோட பழக வாய்ப்புள்ள
சினிமாஉலகத் துல, காதல் குறித்த ஒரு மென்மையான இதயத்தோடஇருக் கான். சினிமாவுல இருந்துட்டு, என்னை மாதிரியே அவனும் நல்லவனா இருக்குறது பெரிய விஷயம் சார் இப்படி ஒரு மகனைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுறேன் சார்!''


''தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாரா வர்றதுக்கு யாருக்கு வாய்ப்பிருக்கு?''
''சினிமாவுல திறமைசாலி, புத்திசாலி மட்டும் ஜெயிக்க முடியாத பொறுமைசாலியாவும் அதிர்ஷ்டசாலியாவும் இருக்கணும். இவ்வளவு நடிகர்கள் இருக்குற தமிழ் சினிமாவுல ரஜினி - கமல், விஜய் - அஜீத், சிம்பு - தனுஷ்னு 6 பேருக்குத் தான் ரசிகர்கள் இடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒருபையனா வந்து நிக்கிறான் யாரு..அவனைப் பெத்தது இந்த விஜய டி.ஆரு. 'ஐ யம் எ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்'னு 1989-லயே 'சம்சாரம் சங்கீதம்' படத்தில் நான் ஒரு பாட்டு எழுதிட்டேன் சார். எதிர் காலத்துல என் பையன் எப்படி வளர்ந்து வருவான்னு வெயிட் பண்ணிப் பாருங்க . நான் தலைக்கனத்தோட சொல்லலை, தன்னம்பிக்கையின் இலக்கணத்தோடு சொல்றேன்!''


'' 'வீராச்சாமி'க்கு அப்புறம் என்ன படம் பண்றீங்க?''
'' என்னோட அடுத்த படம் 'ஒருதலைக் காதல்'. 1979-ல் 'ஒருதலை ராகம்' எடுத்தேன். 2009-ல் 'ஒருதலைக் காதல்' எடுக்குறேன். இப்போ உள்ள யூத்து களுக்காக இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக் கேன். டப்பாங்குத்துப்
பாட்டுக்களோட இன்னைய டிரெண்டுக்கு இறங்கி அடிக்கப் போறேன்.இதுல ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல? இப்ப உள்ள ஹீரோக்களை என்னை மாதிரி ஆடிப் பாடச் சொல்லுங்க சார். தம் அடிச்சு யாருக்குமே தம் இல்லை.' வீராச்சாமி'யில நானஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க சார். உங்களை மாதிரி சில பேர்தான் 'ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?'ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்) ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக'டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்'னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல... அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!''
***********************************************************************************
இந்த வாரம் ஜூனியர் விகடனில் மசாலா மிக்ஸ்இல் இதே போல இன்னொரு நியூஸ்."லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' குறித்துப் பேச ஆரம்பித்தால் ஏக குஷியாகி விடுகிறார் விஜய டி.ராஜேந்தர். ஒவ்வொரு ஊருக்கும் பிரசாரத்துக்குப் போன சமாச்சாரங்களை எதுகை மோனையோடு தாளம் போட்டபடி சிலாகித்துப் பேசும் விஜய டி.ஆரிடம், 'உங்க கட்சியில சிம்புக்கு என்ன பதவி கொடுக்கப் போறீங்க?'என ஒரு கேள்வி கேட்டு உசுப்பியதுதான் தாமதம்...''அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு.அவரை எதுக்கு இழுக்குறே வம்பு...'என சாமியாடி அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுகிறாராம்"
***************************************************************************

நான் எப்போதும் படிக்கிற விகடன் வாசகர் கருத்து படிக்கும்பொழுது மோகன்என்ற வாசகர் தம் வலைத்தளமுகவரி கொடுத்து நமக்கு ஒரு புதிய TR ஐ அறிமுகப்படுத்தினார். அவரது வலைப்பதிவில்
போய் பார்த்தபோது TR எவ்வளவு எளிமையான இனிமையான மனிதர் என்பது தெரிந்தது.


From now on, I changed my opinion about TR.
http://msams.blogspot.com/2009/10/t.html


சரி சரி எல்லாரும் கண்ணை துடைச்சுக்கோங்க. போறும் sentiment!
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த எஸ் வி சேகர் ஜோக். யாமிருக்க பயமேன் டிராமாவிலிருந்து:


வழக்கமான சண்டை போடும் ஹீரோயினிடம்,


எஸ் வி சேகர் : ஹே நான் இப்போ தானே உன்னை வெளீல பார்த்தேன்?


ஹீரோயின் : என்னை யா?


எஸ் வி சேகர் : ஆமா , அதான் அந்த ட்ரம்மடிச்சிகினு கம்பி மேல போனீங்களே ஓ, அந்த பார்ட்டி நீ இல்லியா?


ஹீரோயின் : ??????????????????#$%#$%#$%#@$%@#$%@#$%#@$%






அதே டிராமாவில் இன்னொரு ஜோக்.


எஸ் வி சேகர்: ஜட்ஜ் மாமா ஜட்ஜ் மாமா


வக்கீல் : என்னய்யா ஜட்ஜ்ஐ போயி மாமாங்க்றியே?


எஸ் வி சேகர்: இல்லேங்க குடும்ப கோர்ட்ன்னு சொன்னாங்க

Sunday, October 25, 2009

Paadalgal Palakodi





Of late I have been listening to this song called "Paadhi kadhal" from the  movie Modhi Vilaiyadu sung by Bombay Jayasree and Sunitha Sarathy. This song is composed by Leslie Lewis .I just loved it over all. This song almost reminds me of the indi pop songs in the nineties with nice string instruments. The composition is very nice and enthralls me everytime I listen to it. My husband said this song reminds him of 'azhagaana manjal puraa' by IR in the early nineties. He wonders if it was composed in the same raaga. Leslie lewis and carnatic ragaas? we never know, the band is colonial cousins and Hariharan is into Hindustaani, Carnatic and Western too.. I heard he is one of the mosssst talented artists in the music world. We cant miss the classical touches given by bombay jayashree in this song. Sunitha Sarathy adds glory to this song  with her energy. 



Another song I had been looking up over and over again in the net was malai neram sung by Andrea herself in the movie 'Aayiratthil Oruvan'. Again nice strings attached to the song by G V Prakash Kumar. Good things is that her tamil pronunciation is quite good compared to most singers. Beauty accompanies Talent.. good enough Andrea.. I enjoy this song almost everyday. The humming of GVP behind reminds me of ARR for many of his songs like chinna chinna aasai. Andrea sings in both base voice and a cute high pitch with ease without any problems. I liked her singing in base without letting her voice getting transformed. 





I wonder if anyone remembers thalaiyaikuniyum thaamaraiye song sung by SPB and Rajeswari for the movie oru odai nadhiyaagirathu. I went to the extent of recording that song using my mobile voice recorder to listen to that song as I became addicted to it. After the kangal irandaal whirlwind which swept south india, I started looking for songs with reethi gowla. Of course chinna kannan azhaikkiran is there still I was searching for other kinds of songs in the same raaga. In 2003, I was travelling in a bus from Chennai porur to Sriperambudhur. I was standing all the way and to my delight the driver was playing the radio in the bus. They were playing a mix of songs and Thalaiyai kuniyum thamaraiye was being played. I just fell in love with this song so  beautifully rendered by SPB with a smile in his voice.Needless to mention it is IR's mastery.  


Eventually after carefully listening to this song, I found this tune had been used again by Yuvan in Thulluvadho Ilamai song ,being theenda theenda. Excellent rendering by Bombay Jayasri and UnniKrishnan. Later in my music class, My teacher Sri Dhanesh confirmed that it is reethi gowla raagam and  told me that reethi gowla has been used in a very beautiful way by ARR in his Azhagaana Raakshashiye song in Mudhalvan. My teacher was exclaiming that none can think like ARR and declared it was heights of creativity. From what my teacher told me I understand that all the ragaas have a template containing series of aarohana and avarohana. These two steps are formed using fixed  swaras and it is a permutation and combination of these swaras put together to form a certain tune. So, the tune can be formed from any where in the cycle of arohana and avarohana. But in azhagaana raakshashiye, it is quite a novel attempt it seems. Hats off.. It is always my first choice to listen in the car. we have bose speakers installed in our car. Azhagaana Rakshashiye is sheer delight to listen. 


Other songs in my favourites play list are 


1. Kaadhalikkum Pennin Kaigal (Kadhalan-SPB, Udit, Pallavi)
2. Oru Nadhi Oru pournami (Samurai - Nithyasree Mahadevan)
3.Kaatre en Vasal Vandhaai(Rhythm - Kavitha Krishnamurthy, Unni Krishnan)
4.Thottaal Poo Malarum (New-Harini, Hariharan)
5. En Veettu Thottatthil (Gentleman-SPB, Sujatha) 
6. Theendaai(En Swasakkaatre - SPB, Chithra)


Apart from being an ardent fan of SPB I am also a strong fan of Sujatha and Chithra. If I envy someone so badly,it is these two women who are so gifted with immense musical knowledge and a great voice. The best part is both of them sing with a smile that makes the songs come alive with life and energy. For example, Nenjamellam song from Ayudha Ezhutthu by Sujatha is a standing example of how a song can be made distinct by singing it with a smile.Likewise Chithra in most of her songs adds life to it just with her smile. 



On any given day, I am ready to listen to these tunes numerous times over and over again. I have lost track of the latest songs as Shakthi FM is banned in UAE. Due to some violation issues, they have moved to AM broadcast. This transmission is not clearly audible and hence we do not listen to it anymore. Wondering what new songs are impressive now a days.. Btw, no complaints, I am happy the way I am with my set of favourite songs. I have more songs to mention but will do so in various posts. 


Saturday, October 24, 2009

மனம் ஒரு குரங்கு-6



மனம் ஒரு குரங்கு-6

ஹப்பா.. இப்போ தான் இங்கே வெய்யில் சற்று குறைந்துள்ளது. இரவில் ஜிலு ஜிலு காற்று வீசுகிறது. இனி வரும் நாட்களில் பகலிலும் காற்று வீசக்கூடும்.. நிம்மதியாக பால்கனி கதவையும் ஜன்னல் கதவையும் திறந்து வைத்துக்கொள்ளலாம். இது தான் இங்கேத்து வசந்த காலம். இந்த பில்டிங்கில் சென்ட்ரல் ஏ சி இருப்பதால் குளிர் காரணமாக எப்போதும் மக்குத்தனமாக இருக்கும். அதுவும் என்னுடைய பரம பாக்கியத்தினால் நாங்கள் வசிக்கும் பிளாட்டில் மட்டும் எ சி யை அட்ஜஸ்ட் பண்ண முடியாது. permanent ஆக 15 டிகிரி தான் . விறைக்கும் குளிரில் fleece blanket போர்த்திக்கொண்டு சுகமாக சோபாவில் சாய்ந்துகொள்ள தான் தோன்றும். வெளியில் அசுரத்தனமாக வெய்யில் அடித்து கொண்டு இருக்கும். நாமோ வீட்டில் குளிருக்கு போர்த்திக்கொண்டு இருப்போம்.. என்ன ஒரு contradiction. இதற்காக கதவை தப்பிதவறி திறந்து வைத்தோம், செத்தோம். வீடே furnace போல ஆகிவிடும்.

இந்த மாதிரி பாலைவன பிரதேசங்களில் வாழ்வதன் பயன்களை யோசித்துபார்த்தேன். வடாம் வத்தல் அரிசி அப்பளம் எல்லாம் சில மணி நேரத்திலேயே காய்ந்து விடும். அதாவது காலையில் இட்டால், மத்தியானத்திற்கு அவைகளை உரித்து எடுத்து, பொறித்து திங்கலாம் (நம்மூர் மே மாச வெய்யிலில் மினிமம் 4-5 நாட்கள் வத்தல் காய வேண்டும் ).ஆமா, இங்கே அதெல்லாம் யாரு பண்ணறாங்க? சொடுக்கு போடுவதற்குள் துணிகள் எல்லாம் காய்ந்து விடும். இட்லி மாவு பிரெஷ் ஆக அரைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் புளித்துப்போய்விடும். இப்படி பல பயன்கள். ஏன் கேட்கிறீர்கள் போங்கள்! எனக்கு இங்கே மிகவும் அதிகமாக பிடித்த time இந்த நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகும். weather மிகவும் ரம்மியமாக இருக்கும் . welcome spring.

நேற்று மதியம் weekend ஆதலால், மதிய உணவு அருந்தி விட்டு ஏதோ ஒரு டுபாகூர் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம். அது என்ன படம்னா.... நான் இந்த வெளையாட்டுக்கு வரல்ல. அப்புறம் எல்லாரும் turn போட்டுண்டு திட்டரதுக்கா? no ways. சரி. இப்போ விஷயத்துக்கு வர்றேன். இவருடைய ஒன்று விட்ட தம்பி (அடச்சே , அதில்லிங்க , சித்தி பையன்) போன் செய்தான். இங்கே F1 race rehearsal நேற்று நடக்கவிருப்பதாக சொன்னான். அதற்கு அவனிடம் extra passes இருப்பதாக சொன்னான். இவருக்கு அதில் ரொம்ப ஆர்வம் இருப்பது போல தோன்றியது . சரி என்று புறப்பட்டேன் . சாதியத் ஐலன்ட் தாண்டி யாஸ் ஐலன்ட் என்ற இடத்தில் இந்த கார் ரேசிற்கான தளத்தை அமைத்திருந்தார்கள் . இந்த பிரம்மாண்ட event arrangements பார்த்து வாய் பிளந்தேன். ஒரு ஐலன்ட் பூராவும் இவர்கள் ஒரு car race கு அர்ப்பணித்திருக்கிறார்கள். அம்மாடியோவ். இதான் அந்த ஐலன்ட்.




மெயின் ரோடிலிருந்து எடுக்கப்பட்ட படம். அந்த தீவின் நாலா புறமும் விளக்குகள் போடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.



தூரத்திலிருந்து பார்த்த பொழுது fly over போன்றதொரு அமைப்பு தென்பட்டது. அது Ferrari World என்று பிறகு தெரிந்தது. அதை மேலே இருந்து பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று வலையில் தேடி உங்களுக்காக இதோ Ferrari World.

 கார் park செய்து விட்டு வந்தால் அங்கு அரங்கத்துக்குள் செல்ல பஸ்கள் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள் . அவ்வளவு பெரிய இடம் . எங்களுடன் பார்க் பண்ணியவர்களை பின் தொடர்ந்து ஒரு bussil ஏறி அமர்ந்தால், அது அதிவே.........க நத்தை போல சென்று கொண்டு இருந்தது . அந்த யாஸ் ஐலன்ட் பூராவும் எங்களுக்கு சுத்திக்காட்டி கொண்டு தேவையில்லாமல் U turn அடித்துக்கொண்டும் நகர்ந்து சென்று கொண்டு இருந்தது .


 பசுமையோ நீர்பரப்போ இருந்தால் அவ்வளவாக கஷ்டம் தெரியாது . என்னத்தை பார்க்க? மொட்டை வெயில் அதில் பொட்டல் காடு . வரிசையாக பனைமரங்கள் கை தூக்கிக்கொண்டு handsup என்று யாரோ கூரினாற்போல் நின்று கொண்டு இருக்க , வளைந்து வளைந்து ரோடு . இந்த அழகில் சிக்னல்கள் வேறு .

இங்கே பஸ் உள்ளே இருக்கும் மக்கள் எல்லாரும் காட்டுகூச்சல் போட்டு கொண்டு இருந்தார்கள் . முக்கியமாக பிலிப்பிநோக்களில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தத்தலா புத்தலா என்று அதிகம் பேசுபவர்கள் . ஒரு விதத்தில் யோசித்தபொழுது, துபாயில் நான் போன பஸ் பிரயாணங்களை விட இது வித்தியாசமகாவும் குதூகலத்துடனும் இருந்ததாக பட்டது. துபாயில் எல்லா பிரயாணிகளும் பஸ்சில் இறுக்கமாக உட்கார்ந்து இருப்பார்கள் . ஏ சி பஸ் ஆதலால் ஜன்னல் திறக்காது. அதானலோ என்னமோ மனசும் திறக்காது. உர்ர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு போனில் பேசிக்கொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, டிராபிக்கை திட்டிக்கொண்டோ வருவார்கள். அப்படி இல்லாமல் இந்த பஸ்ஸில் எல்லா நாட்டவர்களும் ஒரே நோக்குடன் இந்த பஸ்ஸில் அமர்ந்து இருக்கிறோம் என்று நினைத்த பொது சந்தோஷமாக இருந்தது.

இப்படி ஆலோசித்து கொண்டு இருக்கும்போது தான் தெரிந்தது சுமார் ஒரு மணி நேரமாக அந்த வண்டியில் நாங்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று . Drop off பஸ் நா இப்பிடியா?இதே நம்மூர்ல பஸ் ஏறி இருந்தா இந்நேரம் திண்டிவனம் தாண்டி போயி இருக்கலாம் என்று புலம்பிக்கொண்டோம்.


என்னுடைய ராஜயோகம் பாருங்கள், அந்த பஸ் முதலில் ஓரிடத்தில் நின்றது. பின்னர் ஒரு போலீஸ் அதை வேறு ஒரு இடத்திற்கு செல்லுமாறு கூற, அது ஊர்ந்து போயி ரெண்டுங்கெட்டான் இடத்தில் நின்று விட்டது. டிரைவரிடம் கேட்டால் instructions
வரவில்லை என்று கூறிவிட்டான். security மிகவும் tighten பண்ணி இருந்தார்கள். பயணிகள் அனைவரும் restless ஆகி விட்டார்கள். ஒரு ஐரோப்பிய பெண் படிக்கட்டில் நிற்க ஆரம்பித்து விட்டாள்.வெளியில் நோட்டம் விட்ட பொழுது பழனி பஸ் ஸ்டான்ட் போல ஜகஜ்ஜோதியாக  மக்கள் கூட்டம்.
மேலும் ஒரு பத்து நிமிடம் கழித்து, வெளியிலிருந்து, ஒரு அராபிய பெண்மணி பஸ் கதவைத்தட்ட, டிரைவர் தெரியாமல் கதவை திறந்து விட, போலீஸ் வண்டியில் இருந்து தப்பும் திருடனைபோல எல்லா பயணிகளும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்!! இதை அவன் முன்னாடியே செய்திருக்கலாம்.


சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அரங்கம் இருந்தது. மகராசன் கேட்டு கிட்டக்க இறக்கி விட்டு இருக்க கூடாதா? என்று புலம்பிக்கொண்டே நடந்தோம். போலீஸ் படை திரண்டு எல்லாரையும் செக் பண்ணி கொண்டு இருந்தார்கள். செக்யூரிட்டி செக் முடிந்து அரங்கத்தில் நுழையும் முன்னரே ரேஸ் தொடங்கி விட்டது. அந்த டிரைவருக்கு அஷ்டோத்தர சத நாமாவளி அர்ச்சனை பண்ணிக்கொண்டே படி ஏறி மேலே சென்றோம். அதற்குள் ஒரு போலீஸ் என்னை tag அணிந்து கொள்ளுமாறு எரிந்து விழுந்தான்.


அரங்கத்துக்குள் ஒரே கூட்டம். ஒரு segment மட்டும் திறந்து விட்டு நிறைய அரபியர்கள்,ஐரோப்பியர்கள், பிலிப்பினோக்கள் தென்பட்டனர். Minority Indians and Lebanese என்று சொல்லலாம் . என் வாழ்வில் முதன் முதலில் ஒரு கார் ரேஸ் . பயங்கர thrilling ஆக இருந்தது . கார் திரும்பும்போது கியர் மாற்றும் சத்தம் காதை பிளந்தது . எவ்வளவு சிறிய ஊர்தி.. எப்படி தான் ஓட்டுகிறார்களோ என்று நினைத்துக்கொண்டே ரெண்டு படம் எடுத்தேன். நான் பார்த்த வரையில் கார் ரேஸ் காண வந்ததை விட தன்னை படம் எடுத்துக்கொள் வதிலேயே அதிகம் முனைப்பு காட்டினர் என்றே எனக்கு தோன்றியது.  பலருக்கும் இந்த ரேஸ் பார்க்க பெரிய ரசனை இருக்க வில்லை. கார்கள் விரைந்து பெரும் இரைச்சலுடன் ஓடிக்கொண்டே இருந்தன. பொறுமையாக உட்கார்ந்து கொண்டு அந்த காட்சியை மனதில் பதிய வைத்துக்கொண்டு இருந்தேன்.அதற்குள் என் கணவருக்கு பொறுமை போயி விட்டது. கிளம்பலாமா என்றார். கார் பார்க்கிலிருந்து அரங்கம் வரும் நேரத்தில் ஒரு 5% கூட நாங்கள் அந்த ரேஸ் பார்க்க செலவிடவில்லை. என்னே ஒரு நிலைமை. நல்ல வேளையாக வரும்போது பஸ் விரைந்து கார் பார்க்கில் drop பண்ணிவிட்டு சென்றது.

Friday, October 23, 2009

காமடி டாடி

காமடி டாடி

இந்த வருடம் வெகேஷனில் வந்திருந்த பொழுது, எனக்கு ஷீரடி செல்ல வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. எல்லோரும் கூறுவது போல நாம் நினைத்தல் மட்டும் போறாது, பாபா மனசு வைக்க வேண்டும் என்று பொறுமையாக காத்திருந்தேன். முதலில் என் கணவருடன் செல்லலாம் என்றிருந்தேன். வழக்கம் போல பல்பு அடித்து அவர் லீவு போட முடியாது என்று கூறிவிட, நான் என் அப்பாவுடன் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
இவ்வளவு தூரத்து ரயில் பயணம் மேற்கொண்டு சில வருடங்கள் ஆன காரணத்தினால் ஜாலியாக சென்றோம். எங்களுடன் இன்னொரு குடும்பமும் வந்து இருந்தது. எங்களை அழைத்து செல்ல ஒரு கைடு.

இதற்கு முன்னர் ஒரு முறை ஷிர்டி சென்ற போதிலும் அவ்வளவாக நினைவு வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு அந்த இடம் மாறி இருந்தது. அப்பாவும் ஒரு முறை சென்று இருக்கிறார். ஷீரடி சென்று இறங்கியவுடன் ரூமில் குளித்து நானும் அப்பாவும் மதிய உணவிற்கு ஹோட்டல் தேடி நடந்து இடத்தை பரிச்சய படுத்தி கொண்டோம். மீண்டும் எல்லோருடன் மற்ற இடங்களை எல்லாம் தரிசித்து விட்டு கோவிலுக்கு சென்று கியூவில் நின்று ஆரத்தி பார்க்க காத்திருந்தோம். சுமார் இரண்டு மணி நேரத்திக்கு பின்னர் நன்கு தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் உதி வாங்க வரிசையில் நின்றோம்.

எங்களுடன் வந்த அந்த இன்னொரு குடும்பமும் எங்களுடன்  இருந்தனர். அம்மா, முடிந்த வரையில் இரண்டு மூன்று முறை கியூ வில் சென்று நின்று உதி வாங்கிக்கொள் என்று சொல்லி இருந்தார். ஒரு ஆளுக்கு ஒரு பாக்கெட் தான். அதனால் நான் பெண்கள் கியூ வில் இரண்டாம் முறை நிற்கும் போது அப்பாவை பார்த்துக்கொண்டே போனேன். ஒரு முறை மட்டும் உதி வாங்கிக்கொண்டு அங்கே நின்று கொண்டு இருந்தார். உதி இரண்டாம் முறை வாங்கிக்கொண்டு வந்து பார்த்தல், என்னே மாயம்?!!! அப்பாவைக்காணவில்லை. கோவில் முழுவதும் தேடியாகி விட்டது.. ம்ஹூம். காணோம். எங்களால் கூட வந்த குடும்பத்திற்கும் சங்கடம். கைடு இங்கே அங்கே தேடிக்கொண்டு இருந்தான். நான் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் அழுகையாக வந்தது. அப்பாவுக்கு சர்க்கரை வியாதி. அவரால் செருப்பு அணியாமல் ரொம்ப தூரம் நடக்க முடியாது. என்ன செய்யவார் என்று மிகவும் வருந்தினேன். அன்று வியாழக்கிழமை ஆதலால்  பயங்கரக்கூட்டம். சாயந்திரம் பல்லக்கு சேவை இருக்கும் என்று முன்னமே எங்கள் கைடு கூறி இருந்தமையால் மக்கள் கூட்டம் திரளாக துவாரகமாயி நோக்கி நடந்து கொண்டு இருந்தது. இந்த கூட்டத்தில் எங்கிருந்து இவரை தேட? அடிக்கடி அம்மா, என்னிடம் "அனன்யா, அப்பா பத்திரம், மருந்து கொடுத்து கூடவே இருந்து பார்த்துக்கோ, அவர் முன்னே மாதிரி இல்லை " என்று கூறியது அடிக்கடி நினைவு வந்து கொண்டே இருந்தது. செருப்பில்லாமல் நடக்க முடியாதே என்று நினைத்து நினைத்து அழுகை வந்து கொண்டே இருந்தது. மெதுவாக கோவிலை விட்டு வெளியே வந்த போது, செருப்பு வைத்த  இடத்தில சென்று தேடினேன். ஒரு வேளை செருப்பைதேடி வருவாரோ என்று. ம்ஹூம். அங்கேயும் இல்லை. அவர் MCP செருப்பை இடது கையில் எடுத்துக்கொண்டு ஷீரடி முழுதும் நடந்து தேடிக்கொண்டே இருந்தேன். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் அந்த திருடர்கள் நாலாபுறமும் போய் திருடிக்கொண்டு வருவார்களே, அதே போல நாலாபக்கமும் எங்கள் குருப் தேடிக்கொண்டு இருந்தது. நான் மட்டும் மிகவும் emotional ஆக தேடிக்கொண்டு இருந்தேன். அவருக்கு நிச்சயம் ரூமிற்கு வழி தெரியும் என்ற போதிலும், அவர் பத்திரமாக வரவேண்டுமே சாயி என்று விடாமல் வேண்டிக்கொண்டு இருந்தேன். ஏழரை மணியிலிருந்து சுமார் ஒன்பதரை மணி வரை நான் கூட்டத்தில் தனியாக தேடி அலைந்தேன். கால் வலி ஒரு புறம், பசி இன்னொருபுறம் , அழுகை வேறு . என்ன செய்வதென்று தெரியாமல் ரூமிற்கு வந்து விட்டேன். சாவி அவரிடம் இருப்பது ஒரு ஆறுதல். எப்படியும் வந்து விடுவார் என்று நம்பி பிரார்த்தித்து கொண்டு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன். கைடு வந்தான். பாவம் அவன்  கோவில் முழுவதும் தேடி அலைந்து பல்லக்கு சேவை எங்களால் தவற விட்டு விட்டான். அப்பா வந்துவிட்டாரா என்று கேட்டான். அவன் அப்படி கேட்டுக்கொண்டு இருக்கும்போது அப்பா ஹோட்டல் படியேறி வந்து கொண்டு இருப்பது தெரிந்தது. அழுதே விட்டேன். எங்கப்பா போனீங்க என்று கேட்டால் , கைடு பல்லக்கு சேவை பார்க்க அழைத்து செல்லவதாக கூறினாராம் அதனால் எல்லாருக்கும் முன்னர் அவர் போய் எங்களுக்கோசரம் காத்திருந்தாரம் . பின்னர் தான், தான் தொலைந்து போய் விட்ட உண்மையை உணர்ந்து இருக்கிறார். சரமாரியாக திட்டி விட்டேன். எல்லோரும்  குருப்பில் வரும்போது இவர் மட்டும் ஏன் முன்னர் செல்ல வேண்டும்? இவரால் எல்லோருக்கும் டென்ஷன் . அப்பொழுதும் ஒத்துக்கொள்ளாமல் என்னமோ சாக்கு சொன்னார். அதன் பிறகு,  இனி நீங்கள் வெளீல போனீங்க,அவ்வளவு தான் என்று எச்சரித்து விட்டு  நானே போய் ராத்திரி உண்பதற்கு  சாப்பாடு வாங்கி ரூமில் கொண்டு கொடுத்தேன்.  மறுநாள் காகட ஆரத்திக்கு செல்லும் போது கையைப்பிடித்து கொண்டு கூட்டி போனேன் என்று சொல்லி தெரிய வேண்டாம்.




இப்போ அடுத்த நிகழ்ச்சி. தக்ஷிண பண்டரிபுரம் என்று அழைக்கப்படும் தென்னாங்கூர் என்ற ஸ்தலத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள விட்டல ருக்மாயி கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தோம். வழியில் காஞ்சிபுரத்தில் சரவண பவனில் டிபன் சாப்பிட்டோம். குழந்தைகளை வைத்துக்கொண்டு நானும் அப்பாவும், என் தங்கையும் ஹோட்டலில் சாப்பிட்டோம். அம்மா சுவாமி தரிசனம் பண்ணிவிட்டு தான் காலை உணவருந்துவேன் என்று மறுத்து விட்டார்.


சரியாக ஏழரை மணிக்கு கோவிலில் இறங்கினோம். குழந்தைகளை வைத்துக்கொண்டு தரிசனம் முடித்து விட்டு பிரகாரம் சுற்றினோம். அது வரை  கூட இருந்த அப்பா திடீரெண்டு மீண்டும் காணோம்!!!! இந்த சின்ன ஊர்ல எங்கே போய் விட  போறார் என்று நினைத்தாலும், நிம்மதியாக வந்த இடத்தில சுவாமி கும்பிட முடியாமல் எங்கே போய்விட்டார் என்று நாங்கள் குழம்பினோம். கோவிலுக்கு எதிரில்  ஞானானந்தரின் சமாதி உள்ளது. அங்கே சோடசாக்ஷரி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோவில் தரிசனம் செய்து விட்டு அங்கே போவதாக தான் பிளான் . அம்மாவுக்கு பயங்கர டென்ஷன்.அறையும் குறையுமாக சமாதி பீடத்தை பார்த்து விட்டு திரும்பினோம்.  அம்மாவையும் குழந்தைகளையும் காரில் விட்டு விட்டு என் தங்கை வேகமாக கோவிலுக்குள் அப்பாவை தேட புறப்பட்டாள். நானும் அவள் கூட ஓடினேன். டிரைவர் இருப்பதால் கொஞ்சம் ஹெல்ப் பண்ணி குழந்தைகளை பார்த்துக்கொள்வார்.கோவில் வாசலில் விட்ட  அப்பாவின் செருப்பை காணவில்லை. அப்போ அவர் கோவிலுக்குள் இல்லை என்று கத்திக்கொண்டே நான் என் தங்கையை பின் தொடர்ந்தேன். ரெண்டு பேரும்  தீவிரமாக தேடினோம். ம்ஹூம்.

பாவம் காரில் அம்மாவின் நிலை என்னமோ என்று அறிய ஏமாற்றத்தோடு திரும்பினோம். அம்மா எதைப்பத்தியும் கவலை இல்லாமல் காலை சிற்றுண்டி தின்று கொண்டு இருந்தார். நாங்கள் இருவரும் சிரித்தே விட்டோம். அம்மா டென்ஷனில் அழுது கொண்டிருப்பாரோ என்று நினைத்தோம். ஆனால் வயறு அதையெல்லாம் கண்டுக்காதே என்று சிற்றுண்டியை உள்வாங்கிக்கொண்டு இருந்தது. அப்பா காணாமல்  போன கவலையில் நாங்கள் அம்மா சாப்பிடவில்லை என்பதை மறந்து விட்டோம்.

சிறிது நேரம் காத்திருந்தோம். தூ.........ரத்தில் அப்பா (நடக்க முடியாமல் நடந்து  ) வருவது தெரிந்தது. ஏதோ ஒரு தெருவில் இருந்து வெளிப்பட்டு ரொம்ப தூரம் நடந்து வருவதாக தெரிந்தார். மீண்டும் நான் எங்கேப்பா போனீங்க என்று கேட்டதற்கு அந்த தெருவில் ஒரு சிவன் கோவில் இருக்கே.. நீங்க அங்கே தான் போறீங்கன்னு நெனச்சு போயிட்டேன் என்றார். அம்மா இதையெல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. சாந்தமாக இருந்தார். (வயிறு புல் வேறு) இது தான் சாக்கு என்று,"அம்மா, இப்படிதான் மா ஷிரிடியிலும் இவர் காணமல் போய்ட்டார்" என்று போட்டு கொடுத்து விட்டேன். யாரும் ஒன்றும் பேசாதபோதிலும்  அப்பா மீண்டும் காணமல் போனது எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. இனிமேல் வெளியில் போனால் அப்பாவை கெட்டியாக கைப்பிடித்து கொண்டு தான் போகவேண்டும் என்று அம்மாவிடம் கூறி விட்டேன். பின்னே.. இப்படி அடிக்கடி தொலைந்து போனால் என்ன செய்வது?
எவ்வளவோ தூரத்தில் தனியாக வாழ்ந்து கஷ்டப்பட்டவர், dynamic ஆக இருந்தவர் இன்று மூப்பு காரணமாக இவ்வளவு dependant ஆகி  விட்டாரே  என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அம்மாவிடம் சொல்லி விட்டேன். இனிமேல் மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் மா என்று.
போன வாரம் அம்மா சென்னையிலிருந்து போன் பண்ணினார். உனக்கு தெரியுமா நேத்திக்கி நாங்க ஒரு கோவிலுக்கு போனோம் என்றார். நான் கேட்டேன், "என்னம்மா திருப்பியும் அப்பா தொலைஞ்சு போய்ட்டாரா????"

Wednesday, October 21, 2009

பல்புகள் பலவிதம்





பல்புகள் பலவிதம்













'பல்பு அடிப்பது', 'பழம் சாப்பிடுவது', 'லட்டு சாப்பிடுவது' இப்படி வழக்கில் பல சொற்கள் இருந்த போதிலும் இவை எல்லாமே 'ஏமாந்து போவதையே' குறிக்கும்.

வாழ்க்கையில் பல்பு வாங்குவது மனிதனாக பிறந்தவர்கள் எல்லாருக்கும் பொதுவென்றாலும் , சிலர் அதை நினைத்து வெட்கப்படுவார்கள் , சிலர் அதை கண்டுகொள்ளாமல் போய் விடுவார்கள் . நான் இந்த ரெண்டு வகையிலும் இல்லை. அடிக்கடி நினைத்து சிரித்துக்கொள்வேன். நான் வாங்கின இரண்டு 'சிறந்த' பல்புகளைப்பற்றி சுருக்கமாக இங்கே சொல்கிறேன் . ஒன்று கொசுறு.

எனக்கு ஒரு பதினான்கு வயது இருக்கும். ஒன்பதாவது படித்து கொண்டு இருந்தேன். என் தந்தை பம்பாயில் வங்கியில் பணி புரிந்து வந்தார். எங்களுக்கு தங்குவதற்கு தனியாக குவார்டர்ஸ் கொடுத்து இருந்தார்கள்.நாங்கள் அங்கு ஏழடுக்கு மாடி கட்டிடத்தில் நாங்கள் ஆறாவது மாடியில் இருந்தோம். இதே போல மூன்று கட்டிடங்கள். அம்மாவிற்கு நிறைய நண்பர்கள். ஆண்கள் அலுவலகம் சென்ற பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெண்கள் எல்லாரும் காம்பௌண்டில் இருக்கும் புல்வெளியில் நடக்க செல்வது வழக்கம். நாங்கள் வீட்டில் இருந்து ரேடியோ கேட்போம்.அதில் புதிய ஹிந்தி பாடல்கள் போடுவார்கள். அன்றும் அப்படி தான் அம்மா வாக்கிங் போய் இருந்தார். காலிங் பெல் சத்தம் கேட்டு கதவு திறந்தேன். ஒரு பெண் கையில் ஒட்டடைக்குச்சியுடன் நின்று கொண்டு இருந்தாள்.அவளிடம் ஒரு குழந்தை இருந்தது, அதை ஒரு துணியில் கட்டி முதுகில் சுமந்து கொண்டு இருந்தாள். என்ன வேண்டும் என்று கேட்டேன். கீழே உங்கம்மாவை பார்த்தேன், இந்த ஒட்டடைக்குச்சியை உன்னிடம் கொடுத்து விட்டு 55 ருபாய் வாங்கிக்கொள்ள சொன்னார், என்றாள். என் கெட்ட நேரம் அப்பொழுது நிஜம்மாகவே வீட்டில் ஒரு ஒட்டடைக்குச்சி வேண்டி இருந்தது. இந்த வீடு தான் என்று எப்படி தெரிந்தது என்று கேட்டேன். 604 இல் கொண்டு கொடுக்க சொன்னார் என்று என் வாயை அடைத்தாள். அது 1990 . சத்தியமாக, ஒரு சாதாரண ஒட்டடைக்குச்சி  55 ரூபாய் எல்லாம் இருக்காது என்று ஏனோ எனக்கு தோன்றவில்லை. மடத்தனமாக கைகேயியின்  சொல்பேச்சு கேட்டு ராமன் காட்டிற்கு சென்றார் போல  நானும் அந்த பெண்ணிடம், வீட்டுப்பணத்திலிருந்து ஐம்பத்தி ஐந்து ருபாய் கொடுத்து என் அன்னையின் ஆணையை நிறைவேற்றியதோடு அல்லாமல், அந்த குச்சியை பெருமையாக வாங்கி வைத்தேன். அம்மா வாகிங் போய்விட்டு திரும்பியதும் என்ன இது என்று கேட்டார். நானும் நடந்ததை கூற, ஆடிபோய் விட்டார் அம்மா. எவளோ தெருவில் போகிறவள் ரெண்டு மூன்று நாளாக கவனித்து ஆட்டைய போட்டு இருக்கிறாள் என்ற உண்மை தெரிந்ததும் இந்த விஷயத்தைசும்மா விடக்கூடாது என்று association இல் சொல்ல, அவ்வளவு தான். வீட்டுக்கு வீடு "பல்பு வாங்கிய அருமைச்சிகாமனியே" என்று எனக்கு poster ஒட்டாத குறை தான் தான். corridor எல்லாம் என் 'புகழ்' பாடினார்கள்.காலனியில் உள்ள குழந்தைகள் என் மேல் காமடி வெண்பாவே இயற்றி விட்டார்கள்.கீழே காலனி குழந்தைகளுடன் கூடி கும்மியடித்து விட்டு வந்த என் அருமை தங்கை,என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து," நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா" என்று கேட்கும் அளவிற்கு விஷயம் போய்விட்டது ஒரு வாரம் வெளியில் தலை காட்ட முடியவில்லை. எங்கள் குடியிருப்பில் வேறு எங்கும் அந்த பெண் சென்று ஆட்டைய போட்டார் போல தெரியவில்லை.. நான் தான்  கிடைத்தேனா? நாறிவிட்டது நாறி..


அடுத்தது சமீப காலமாக நான் வேலைக்கு முயன்று வருகிறேன் . ஒன்றும் கிடைத்த பாடில்லை . அதனால் கொஞ்சம் மனம் நொந்து இருந்தேன். ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படித்து முடித்து பூஜை செய்த அன்று துபாயில் இருந்து ஒரு அழைப்பு, என் மொபைல்இல் வந்தது . . எடுத்தால் core elements என்ற கம்பென்யில் இருந்து அழைத்தார்கள் . என் சம்பந்தப்பட்ட விஷயங்களைக தெளிவாக கூறி விட்டு நேர்முகத்தேர்வுக்கு என்னை துபயிற்கு அழைத்தனர் . நான் இருப்பது அபுதாபியில் . சுமார் 200 கி மீ தொலைவில் நேர்முகத்தேர்வு . நான் மிகவும் தயங்கினேன் . ஆனால் என் கணவர் ஊக்கப்படுத்த நன் ஒத்துக்கொண்டேன் . அவர்கள் சரமாரியாக போனில் sms, email இல் location , landmark ஆகியன எல்லாம் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள் . நான் கூட என்ன ஒரு professional approach என்று நினைத்து சிலாகித்தேன் . அங்கே சென்ற போது எனக்கு ஒரே ஆச்சர்யம் . துபையில் வேலையில்லாமல் திண்டாடும் அனைவரும் அந்த சிறிய corridor இல் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர் . உள்ளே அமருமாறு அந்த வரவேற்பாளர் கூறவும் , நன் சென்று அமர்ந்த அறையில் எல்லா நாட்டவரும் வேலைக்கு வேண்டி வந்திருப்பது தெரிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் அவர்கள் யாவரும் என் வயதல்ல . ஏதோ சரவணா ஸ்டோர்ஸ் இல் துணி வாங்க வருவோர் போல பெரியவர்களும் , சிறியவர்களும் இருந்தார்கள் . ஒரு பிலிப்பினோ பாட்டி தட்டுதடுமாறி வந்து அமர்ந்து கொண்டாள். எனக்கு குழப்பமாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் உள்ளே அழைத்தனர் . ஒரு பெண் தான் பேசினாள் . ஏதோ ஒரு multinational கம்பென்யில்  வேலை, இது சம்பளம் , medical benefits, leave package எல்லாம் இருக்கும் என்றெல்லாம் சொன்னாள் . என்னைப்பற்றி   அவள் எதுவும் தெரிந்து கொள்ள விரும்பியதாக தெரியவில்லை . கடைசியில்  வைத்தாள் பாருங்கள் ஒரு ஆப்பு  , நான் ஒரு additional information கொடுக்கபோகிறேன் என்றாள். இங்கே 150 டிராம் கட்டினால் உங்களுக்கு எப்போ வேலை வேண்டுமோ உங்கள் வீட்டிற்கே வந்து appointment order தருகிறோம், இந்த நீங்கள் ஊரில் இருக்கும் வரை வேலைஇல்லா திண்டாட்டம் சுத்தமாக இருக்காது, இந்த சலுகை இன்றுமாலை 5 மணி வரையில் தான். முந்துங்கள் என்றெல்லாம்  பிதற்றினாள் . எனக்கு சிவுக் என்றாகி விட்டது . ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வெளியில் வந்தபொழுது என் கணவர் பணம் தந்து இருக்கலாமே . வேலை கிடைத்தால் போதுமே உனக்கு என்று சொன்னார். நான் மட்டும் ஏனோ  அப்போது , எல்லாம் சாயி பார்த்து கொள்ளவார் என்று கூறி  விட்டு நகர்ந்தேன் . வீட்டிற்கு வந்தபின் google செய்து பார்த்த போது அது ஒரு டுபாக்கூர் கம்பெனி என்பது தெரிய வந்தது. எல்லாவற்றிற்கும் google செய்யும் நான் எப்படியோ இதை செய்யாமல் விட்டு இருந்தேன். பல்பு வாங்கணும் என்று தலையில் எழுதி இருந்தால் யார் மாற்ற முடியும்.? கஷ்டம் .நல்ல வேளை! அந்த நூற்றைம்பது டிராம்  சாயி எனக்கு நஷ்டப்படுத்தவில்லை தப்பித்தேன் . பேக்கு மாதிரி அபுதாபியிலிருந்து துபாய் சென்று ஒரு டுபாகூர் interview attend பண்ணியது நானாக மட்டும் தான் இருக்கும் என்று நினைத்த எனக்கு, complaints board என்ற தளத்தில் நிறைய பேர் என்னை போன்றோ அல்லது பணம் கட்டியோ ஏமாந்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. அதுக்காக வாங்கின பல்பு இல்லேன்னு ஆயிடுமா என்ன?

ஒரு வேளை உக்காந்து யோசிப்பாயிங்களோ? குருப் குருப்பா தான்யா கெளம்பிஇருக்காயிங்க.

இங்கே அபுதாபியில் public transport என்றால் taxi தான் . மிகசமீபமாகத்தான் பஸ்கள் ஓடுகின்றன . சிறிய ஊராதலால் , எல்லாரும் taxi யை தான் விரும்புவார்கள் . அனால் பாருங்கள் taxi க்களின் ratio பத்தாயிரம் பேருக்கு ஒரு taxi என்பது . எப்போதும் taxi drop off (main ரோட்டில் டாக்ஸிக்கள் நிற்குமிடம் ) இல் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் . அனால் டாக்ஸி மட்டும் கிடைக்காது . அவ்வளவு கஷ்டம் . சிக்னல் கிரீன ஆனால் எதாவது ஒரு டாக்ஸி கண்டிப்பாக வரும் என்று நம்பி , விடாமல் கை காட்டி கொண்டே இருப்போம் . கடைசியில் அது "பெப்பே " காட்டி விட்டு போய் விடும் . உள்ளே ஆள் இருப்பார்கள் . இதுவும் ஒரு வித பல்பு அனுபவம் தானே ?






திரைப்படங்களில் பொதுவாக பல்பு அனுபவங்கள் குறைவு . அப்படியே இருந்தாலும் அது ரசிக்கும்படி அமைவது கஷ்டம் . ஆனால்  டிக் டிக் டிக் படத்தில் கமலஹாசன் அசடு வழிவது அக்மார்க் ரகம் . நாட்டியம் பார்க்க வந்து விட்டு அந்த பாடலில் மயங்கி ஸ்வரங்கள் எடுத்து கொடுத்து விட்டு எல்லாரும் திட்டி அமருமாறு கூறும்போது , முகத்தில் டன் கணக்கில் அசடு வழிவார் .. இதுவல்லவோ நிஜம்மான 100 வாட்ட்ஸ் பல்பு!!!

அவ்வை ஷண்முகி படத்தில் குழந்தையை பார்க்க துடிக்கும் தந்தையாக கஷ்டப்பட்டு கேட்டின் மேல் ஏறுவார் . அவர் ஏறியவுடன் கேட் மெதுவ்வாக திறக்கும் . அதற்கொரு வழிசல் வழிவார் .
மகாநதியில் முதல் பாதியில் பல பல்பு காட்சிகள் இருக்கும் ஆனால் சிரிக்க தோன்றாது


குஷி படத்தில் ஜோதிகா பல்பு வாங்கினாலும் கொஞ்சம் overaction தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் . அதற்கு மாயாவி படத்தில் டென்டிஸ்ட் வீட்டில் மீனா படத்தை பார்த்து பல்பு அடிக்கும்போது அவர் நடிப்பு கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும் . சத்ய ன் அவரிடம் நான் எங்க தலைவி சிம்ரன் போச்டேரையே 3 மணி நேரம் பாப்பேன் தெரியும்லா என்று கேட்பதும் அதற்கு ஜோவின் expressions நல்ல கிச்சு கிச்சு தான .




இப்படி வேறு எதாவது காட்சிகள் நச் என்று உங்கள் மனதில் தோன்றினால் பின்னூட்டத்தில் இடுக.


Tuesday, October 20, 2009

None knows about the Persian Cats



I got so excited when my husband got two passes for the Middle East International Festival 2009 (9th oct -17th oct) at Emirates Palace Hotel, Abudhabi. It is not because I have a deep desire to watch and cherish  world cinema, but the anxiety to witness the land mark at abudhabi called as The Emirates Palace Hotel.



 Initially I had only wanted to visit the place as we had the pass to see the Iranian movie called None knows about Persian Cats but later we saw so many people religiously walked into the screening arena that we got into the seriousness of being an audience in an international movie festival. It was my very first experience attending such an occassion.

When I entered the hotel gate, I almost felt the same as I felt in 1995 when I first saw the Taj Mahal at Agra. I stood astonished looking at the majestic beams, the art work, the lighting and the overall appearance of this hotel. As we walked on, I felt as if I am in the shooting spot of some shankar's movie. Every thing was so extravagant and rich that I felt I dint deserve this kind of a place. For example, they had hung a wall carpet which covered two floors of the hotel. Just imagine the dimensions of this beautiful carpet. The carpet had the picture of the hotel itself in it during moonlight. Needless to say it was eye stealing.

We walked all through the corridors of this huge beautifully illuminated place and reached the first floor where they were screening this movie. I wasnt quite happy about the fact that it is an Iranian Movie. All I knew about Iran was it is a place of  civil unrest and the movie must be  some war based action which was definitely not my piece of cake. Let me honestly accept that I went into the cinema hall with disinterest but was curious to know WIIIFM. (What is in it for me?)


No one knows about the Persian Cats is the Title of the movie. It is a Persian film centered on Youth whose musical aspirations are crushed under the name of religion and law. Western forms of music is probably banned in Iran and so the youngsters who are good drummers, singers, guitarists are located in undergrounds so that the noise wouldnt be heard by the dwellers of the neighbourhood. I was startled to see how they had managed to live a life in the basements where there was little air with suffocation and isolation. They dint bother how the place was, or where it was, but just ensured that it was a secured place where they wouldnt be heard by others.

Ashkan and Negar are aspiring to run shows in the abroad but they wont get visas as ashkan was imprisoned for singing once. Both are quite talented and want to get away from Tehran. They get introduced to a small time crook Nader who has a passion for music and movies.Nader watches loads of movies and has a taste for all kinds of movies. He also talks about the Indian  movie sholay where hema malini dances on the glass pieces.


It was a nice experience watching Nader's performance as a smart and an aggressive guy who would persuade the judge to release him for his crimes. His melodramatic approach was tickling and nice. The whole movie is about how Ashkan and Negar are trying to form a band. They go with Nader in his bike  in search of instrumentalists, singers etc around the city of Tehran.
Nader's role was played by Hamed - here is how he looks.

Nader suggests that they should make a local show before proceeding abroad for their talent show. Enthusisastically the trio go in search of all instrumentalists etc.

There are quite a number of songs in it. Despite my knowledge or taste in western music, I found the music was quite convincing along with the use of different musical instruments. The best part was the songs had some theme and were picturised mostly on the City life of Tehran. It was a totally novel experience for me that I am watching Tehran come alive infront of me. If not for this movie, I wouldnt have known about this place or people or the movie making style or the language! So I am totally convinced that such opportunities should never be missed.

The movie had a tragic ending which was disheartening. Nader had tried to get fake passport for Ashkan (since he was imprisoned he wouldnt get his own passport) . The guys who assured a fake passport are caught by the police and nader totally breaks down on this. My question is how come such a smart crook collapses on this issue? He is passionate about music and he himself even sings and tries to amuse them. Still, for his type of nature, such a breakdown was not somehow permissible or justified or I wasnt convinced on this change.


Exactly on the date of the local show, after making all the arrangements,  Ashkan searches for Nader and arrives at a party where nader is drunk and almost unconscious due to depression in the third floor of the building. The party is suddently attacked by police and people start running here and there. Ashkan tries to escape the crowd and jumps out of a window. He gets injured and  dies instantly. Seeing this Negar also dies.

So, thus ends the story. that is why the title none knows about persian cats. The title is justified because they wanted to start off their band go places and perform etc. But ultimately nothing happened and they die.
It was depressing to see nader collapse like that and see them die.

I was in this influence for the next two days that I told my husband not to watch MBC Max or MBC 2 since I became a little allergic to western music totally. The movie was good. I would give a special mention to Nader who had done a good job.

Overall watching this movie was a brand new experience for me. We must continue to dream even though we might find it hard to achieve.


This movie won a "Special Jury Prize" in the uncertain category  at the Cannes Movie Festival. It won the Black Pearl award at the Middle East international Film Festival. The director of this film, Bahman Gobhadi was present on the day of screening and he did a small introduction himself  before we started watching the movie. They said he would be available for a Question Answer session after the screening. We dint stay back for this as we had the diwali preparations the subsequent day.They asked us to rate this movie. I gave it a very good for it being very different! Now I know about these persian cats. :-)

Monday, October 19, 2009

மனம் ஒரு குரங்கு 5




மனம் ஒரு குரங்கு 5

அபுதாபியில் பெண்கள் இப்போதெல்லாம் "பொம்பளைங்கன்னா உங்களுக்கென்ன கிள்ளுக்கீரையா ?" என்று கேட்பதில்லை.ஆண்கள் தப்பித்தவறி அப்படி கிள்ளுக்கீரை என்று கூறிவிட்டாலும் பெண்கள் கோபித்துக்கொள்ள மாட்டர்கள். பின்னே சாதரண கிள்ளுக்கீரை கருவேப்பிலை கன்னா பின்னா என்று விலை ஏறி விட்டதே! நம்மூரில் 2-3 காய்கறிகளை மொத்தமாக வாங்கினால் காய்கறி வண்டிக்காரன் கொசுறாக ஒரு பெரீய கொத்து அழகான அப்போதே பறித்த fresh கருவேப்பிலை கொடுப்பது வழக்கம். இங்கே காட்டு கருவேப்பிலை தான் கிடைக்கும். (காட்டுகருவேப்பிலைக்கு ராட்சத இலைகள் இருக்கும்). இருந்தாலும் இந்த மட்டும் கிடைக்கிறதே என்று திருப்தி அடைந்து கொண்டு இருந்தோம்.இப்பொழுது அதுவும் போயிற்று. சுமார் ஒரு கொத்து காட்டு கருவேப்பிலை ஆக ஒரு சிறிய கவரில் போட்டு சீல் பண்ணி ஒரு திராம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
என்ன ஆயிற்றோ தெரியவில்லை சென்ற மாதம் முழுதும் கருவேப்பிலை கிடைக்கவே இல்லை. பின்னர் இப்போது பார்த்தால், அதே ஒரு திராம் காட்டு கருவேப்பிலை கிட்ட தட்ட மூன்று திராம் ஆகி விட்டது. அதாவது நம்மூரில் கிடைக்கும் அதே கொசுறு இப்போ 36 ருபாய்!!! இப்போவே கண்ணக்கட்டுதே..
இத்தனை நாள் ஒரு திராம்க்கு கருவேப்பிலை வாங்கி முழுவதும் உபயோகப்படுத்தாமல் வீணாக்கி வந்த நான், சரியாக அது இங்கே கிடைக்காத போது அதை மிகவும் மிஸ் செய்தேன். அப்போது தான் எனக்கு கருவேப்பிலை பொடி, கருவேப்பிலை தொகையல் முதலியவை பண்ணி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது.(என் கணவரின் பாட்டியும் இதே போல தானம், கேரளாவில் பந்த அன்று தான் அவருக்கு பால் பாயசம் எல்லாம் பண்ண வேண்டும் என்று தோன்றுமாம்.) கடைசியாக ,விலை அதிகமானாலும் ஒரே ஒரு பாக்கெட் வாங்கி பத்திரமாக air tight containerல் போட்டு வைத்து உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன் இனி கிள்ளுக்கீரை என்றுசொன்னால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்
இங்கே என்ன காரணத்திற்காக கறிவேப்பிலையை ban செய்தார்கள் என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் பல்தியா (இங்கே உள்ள local government body) தான் ban செய்தார்கள் என்று தகவல் கூறுவார்கள். இந்தியக்காய் எல்லாம் இங்கே துபாய் அருகே ஆவீர் என்ற இடத்தில் பயிர் செய்கிறார்களாம். எல்லா காய்கறிகளும் கிடைக்கும் அனால் சுவை நம்மூர் போல இருக்காது. உரத்தால் ஏதோ நச்சுத்தன்மை ஏற்பட்டு விட்டதால் இவர்கள் கருவேப்பிலையை ban செய்து விட்டார்களாம்!!!


மனைவியை வெறுப்பேத்துவது எப்படி என்று என் கணவர் ஸ்பெஷல் கோர்ஸ் படித்து இருப்பார் போல. தொல்லை தாங்கவில்லை . சமயலறையில் நான் வேலை செய்து கொண்டு இருக்கும்போது கூடவே நின்று கொண்டு running commentary குடுப்பார். என்னவென்றால், அவர் சொல்லிக்கொடுத்து தான் நான் எல்லாம் செய்கிறேனாம். அதுவும் எப்படி என்றால் நான் செய்து கொண்டே இருக்கும்போது பார்த்து பார்த்து வேகமாக சொல்லுவார். உதாரணத்திற்கு அடுப்பை சிம் செய்த உடன், ஆங்,சிம் பண்ணு , சப்பாத்தியை கல்லில் போட்டதும் சப்பாத்தியை போடு என்பார். நான் வேண்டுமென்றே செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டால் அதையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வெயிட் பண்ணு அனன்யா என்பார். இங்கே வீட்டில் சில வேலைகள் அவருடையது. குப்பை கொட்டுவார், வாட்டர் கேன் தண்ணீர் மாற்றுவார், இத்யாதிகள். நான், "நா, ட்ராஷ் டிஸ்போஸ் பண்ணிடுங்கோ" என்று கூறினால், வேலை மெனக்கெட்டு வந்து என்னை
தூக்க(முடியாது என்றபோதிலும்) முயற்சி செய்வார். நாங்கள் இது போல் இருப்பதால் எங்கள்
வீட்டில் அனைவரும் எங்களை Tom and Jerry என்று கூறுவது வழக்கம்.

விகடன் பொக்கிஷம் நன்றாக இருக்கிறது என்று சென்ற பதிவில் சொன்னாலும் சொன்னேன், திருஷ்டி மாதிரி ஆகிவிட்டது .இந்த வாரம் பொக்கிஷத்தில் சரக்கே இல்லை.முத்து ராமனின் பேட்டி மட்டுமே கொஞ்சம் பரவாயில்லை.டைரக்டர் சசிகுமாரின் பேட்டியை படிக்க மறக்க வேண்டாம்.. சினிமா சாயப்பூச்சு இல்லாமல் இயற்கையாக பேசும் மனிதர்.
வருண் பாப்பா என்னிடம் தீபாவளிக்கு முதல் நாள் போனில் பேசினான்."Hello பீயம்மா பீயம்மா" என்று அழைத்து" டப்பா டப்பா "என்று சொன்னான். அங்கே ஒரே பட்டாசு சத்தமாம் அவனுக்கு பயமாம். அவன் பேசுவான் என்று நான் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்ததால் அவனுக்கு நான் எதிர்முனையில் இருக்கிறேனா என்று பலத்த சந்தேகம். அடிக்கடி என்னை அழைத்து பார்த்துக்கொண்டான். நான் இருப்பது தெரிந்தே மேற்கொண்டு பேசினான்.
ஒன்றரை மாதங்களில் எத்தனை மாற்றங்கள்? அவன் பேச்சு, புதிய சொற்கள், அவனுடைய புரிந்து கொள்ளும் திறமை.. அப்பப்பா.. அதிசயித்து போனேன்.ஒன்றே ஒன்று மட்டும் தான் மாறவில்லை.. அவன் அன்பு.




Related Posts with Thumbnails