Pages

Saturday, March 27, 2010

திவாகர ப்ரத்யக்ஷ மஹிமை

தொடர்பதிவுக்கு அழைத்த அப்பாவி தங்கமணிக்கு நன்றிகள்.

டிஸ்கி: திவாகரன் அ திவாகர் என்ற பெயருடைய எவரையும் இந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுமார் எட்டு வருடங்களாக எனக்கு வரன் தேடித்தேடி நொந்து போன என் பெற்றோர் எப்படியாவது கல்யாணம் ஆனா சரின்னு முடிவு பண்ணிவிட்டார்கள்.

குப்பை பொறுக்கும் பையனிலிருந்து வேர்க்கடலை மடிக்கும் வண்டிக்காரன் வரை எல்லோருக்கும் பல்க்காக கிடைத்த ஒரே பேப்பர்க்கத்தை என் ஜாதகம்! எங்கப்பா ஒரு பிரிண்டிங் ப்ரெஸ் வெச்சா சீப்பா இவ ஜாதகம் சர்குலேட் பண்ணலாம் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. சுமார் நூற்றுக்கும் மேல பையன் வீட்டார் வந்து பார்த்தாச்சு. இருநுறுக்கும் மேல ஃபோட்டோக்கள் விதவிதமான புடவைகள் கட்டி, சுடிதார் போட்டும், சிரித்தும், முறைத்தும். லொக்கேஷன் சேஞ்சு பண்ணியும், ஃபோட்டோகிராஃபர்கள் ராசி பார்த்தும், சில சமயம் தலையை வழித்து வாரியும். சில சமயம் தூக்கி வாரியும். சில சமயம் குங்குமம் வைத்தும், சில சமயம் விபூதி வைத்துக்கொண்டும், என்னென்னமோ பரீக்ஷ்ணம் எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. ஒண்ணுமே நடக்கலை. செல்லவ்வா சில சமயம் செடியை குறை சொல்லுவார் சில சமயம் புடவையை குறை சொல்லுவார். மொத்தத்தில ஜிப்ஸி ட்ரெஸ் அணிந்து கொண்டு நடராஜர் மாதிரி போஸ் கொடுக்காதது தான் பாக்கி. அந்த அளவுக்கு வரைட்டி பண்ணியாச்சு என்னை எடுக்கப்பட்ட ஃபோட்டோகள் எல்லாமே ஏனோ தெரியவில்லை சொல்லி வைத்தாற்போல கண்றாவியாய் தான் இருக்கும்..



பல பிருஹஸ்பதிகள் வந்து என்னை பார்த்திருக்கிறார்கள். சிலருக்கு என்னை மிகவும் பிடித்து விடும் பார்த்தால் அதுகள் 10வது பாஸ் என்றிருக்கும். பலருக்கு பாவம், வந்து பார்த்துவிட்டு ஜாதகம் பொருந்தவில்லையாம். பெரும்பாலானவர்களுக்கு பாருங்கள், ஹைட் கம்மி, கலர் கம்மி போன்ற கம்ப்ளெயிண்டுகள். எல்லோருக்கும் அவரவர் விருப்பு வெறுப்பு இருக்குமே.



அப்பா அம்மாவின் கஷ்டம் தான் மனதை மிகவும் பாதித்தது. சரி நாமே தேடுவோம் என்று தங்கைமணி ஏற்படுத்திய மேட்ரிமோனி ஐடி கொண்டு தேட ஆரம்பித்தேன். ஒரு மாதத்தில சுத்தமாக வெறுத்து விட்டது. எல்லோருமே வெறும் டைம்பாஸூக்காகத்தான் இந்த தளத்தில இருப்பது போன்ற ஒரு பிரமை. யாருமே சீரியஸாக பெண்ணோ பையனோ தேடுவதில்லை என்று தோன்றியது.



போகட்டும் விடுங்கள் என்று பெற்றோரை சமாதானப்படுத்தி விட்டு தேமே என்று கால் செண்டரில் ஃபோன் கால்கள் மானிட்டர் செய்து கொண்டு இருந்தேன்.

2005 ஜனவரியில் ஏதோ எதேச்சையாக மேட்ரிமோனியல் ஐடியை திறந்து பார்த்த போது ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு என் ப்ரொஃபைல் மிகவும் பிடித்து இருக்கிறதாம். ஜாதகம் வேணுமாம். ஆஹா.. ஜாதகம் கேட்கிறார்களே என்று அம்மாவை அழைத்தேன். மேற்கொண்டு முன்னேறியது ஆனால் அவர்களுக்கு ஜாதகப்பொருத்தம் இல்லை என்று கூறிவிட அது இல்லை என்று ஆயிற்று.



இதற்குள் நான் வேறு வேலை மாறி பெங்களூர் சென்று குடியேறி விட்டேன். நல்ல வேலை அமைதியான வாழ்க்கை என்று இருந்த எனக்கு இதே வருட ஜூன் மாதம் ஒரு ஈ மெயில். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு வரன் திகைந்து விட்டதா என்று கேட்டிருந்தார் அந்த பழைய புரொஃபைல் காரர். அதான் ஜாதகம் பொருந்த வில்லையே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்றேன். தலைகீழாக நின்றாவது நான் உங்களை தான் திருமணம் புரிவேன் என்று ஒற்றைக்காலில் நின்றார். வீட்டில் தெரிவித்து மேற்கொண்டு ஏற்பாடுகள் ஆயின. சரி ஒரு வழியாக எனக்கு திருமணம் ஆகும் போல இருக்கிறதே என்று பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி.



கிட்டத்தெட்ட இது தான் என்று முடிவு ஆகி விட, ஜூலை மாதம் நான் மீண்டும் சென்னையில் தஞ்சம் புகுந்தேன். இவருடன் ஒரு மணி நேரம் சாட் பெர்மிஷன் தந்திருந்தார் அம்மா. அவர் துபாயில் வேலை, ஷார்ஜாவில் குடியிருந்தார். வார இறுதியில் ஒரு முறை வெப்காமில் வந்தார். ஆக, நான் அவரை ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். என்னுடைய பழைய ஆல்பத்தில் சில பல போட்டோக்கள் இவருக்கு அனுப்பி இருந்தேன்.



ஒரு நாள் இவரிடம் இருந்து வீட்டு நம்பருக்கு ஃபோன்.”எனக்கு லேபர் பெர்மிட் கிடைச்சாச்சு, எக்ஸிட் பண்ணனும் நான் பெஹ்ரைன்ல இருக்கிற என் ஃப்ரெண்டாத்துக்கு போறேன் ” என்றார். அடுத்த நாள் நான் பாஸ்போர்ட்டு ஆபீஸ் போவதாக இருந்தது. என்னை பாஸ்போர்டு எடுக்கச்சொல்லி இவர் சொல்லி இருந்தார்.” அப்போ நீ நாளை பாஸ்போர்டு ஆபீஸ் போகறியா” என்றார். ஆமாம் என்றேன். ”என் ஃப்ரெண்டு திவாகர் இருக்கான் அங்கே. அவனை போய் பார். உனக்கு வேண்ட ஹெல்ப் பண்ணுவான்” என்றார். ”சரி அந்த திவாகர் நம்பர் குடுங்கோ ”என்றேன். ”இல்லை, நான் அவன் கிட்டக்க உன் நம்பர் கொடுத்து இருக்கேன் அவனே உன்னை கூப்பிடுவான்” என்றார்.



மறு நாள் எனக்கு தெரியாது என் வாழ்விலேயே மறக்க முடியாத வெள்ளிக்கிழமை அது என்று . ஜூலை மாத வெயிலுக்கு ஏற்றார்போல ஒரு காட்டன் புடவையை சுற்றிக்கொண்டு நான் பாஸ்போர்டாபீஸூக்கு போனேன். கியூவில் நின்றப்போ ஒரு ஃபோன் திவாகர் தான். ”எங்கே இருக்கிறீர்கள்? மஹாதேவன் உங்களைப்பற்றி சொல்லி இருக்கிறார். நீங்கள் இம்மிக்ரேஷன் ப்ளாக்குக்கு வாருங்கள் இப்போது” என்றார். அடடே, நமக்கு இன்னிக்கி டைம் நன்னா இருக்கு என்றவாரே, இம்மிக்ரேஷன் ப்ளாக்குக்கு நடந்தேன். மீண்டும் திவாகர் விளித்தார். ஹலோ ”நீங்க வந்தாச்சா” என்று.. எனக்கு ஏதோ சந்தேகம்.. எதுக்கு ரெண்டு வாட்டி ஃபோன் பண்றார் என்று. குரல் வேறு எங்கேயோ கேட்ட மாதிரி... என்று யோசனையில் ஆழ்ந்த்தேன்.



பின்பக்கமாக ஹலோ என்ற குரல்.. திரும்பினால் இரண்டு கைகளையும் ஷாருக்கான் மாதிரி விரித்துக்கொண்டு ரொமாண்டிக் ஹீரோ போல ஒரு யுவன். ”இவன் தானா இவன் தானா” என்ற பாட்டு சம்பந்தமே இல்லாமல் என் மண்டையில் ஒலித்தது. முகம் கூட எங்கேயோ பார்த்தமாதிரி..... ”ஹய்யோ... நீங்களா? நீங்க பெஹ்ரைன் போகலியா?” என்று அலறினேன்.



”இல்லை நான் இண்டியா தான் வந்தேன். இங்கே வந்ததே உன்னை பார்க்க தான். சர்ப்ரைஸ் ” என்றார் கண்சிமிட்டிய படியே. இவரை வெப்காமில் ஒரு வாட்டி பார்த்திருக்கிறேன். தலையே சுற்றி விட்டது. விட்டால் இவர் டூயட் பாடி விடுவார் போல இருந்தது. வேகமாக நகர்ந்து வெளியே வந்தோம். எனக்கு ஆச்சர்யம் அதிர்ச்சி, அவமானம், எல்லா ரசமும் ஒன்றாக சேர்ந்து முகத்தில டன் டன்னாக அசடு வழிந்த படியே நடந்தேன். இவரும் சிரித்துக்கொண்டே சிறு குழந்தை போல பேசிக்கொண்டு நடந்தார். நேச்சுரலா நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்ன்னு தான் இந்த ஐடியா.அப்படீன்னார். " ஓஹோ, சரி, எப்படி இருக்கேன்?” என்று சும்மாங்காச்சுக்கும் கேட்டேன். வழிந்த வழிசலிலேயே தெரிஞ்சதே.. இருந்தாலும் புகழ்ச்சின்னா யாருக்கு தான் பிடிக்காது..” ஜோரா இருக்காய்” என்றார். ஹப்பா நிம்மதி .. பெண் பார்க்க வந்தவங்க கிட்டே நான் பாஸ்.. என்ன ஒண்ணு சூழல் தான் வேறு.. சடங்கெல்லாம் ஒண்ணு தானே. அப்படியா ரெண்டு குடும்பமும் பேசியும் பரஸ்பரம் விரும்பியும் எங்க கல்யாணம் இனிதே நடந்தது.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே... கெட்டி மேளம் கெட்டி மேளம்!!!!

சுபம்!

தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது

அண்ணாமலையான்

துபாய்ராஜா

ஸ்டார்ஜன்

ஹுஸைனம்மா

முகுந்தம்மா

Friday, March 26, 2010

நன்றி சொல்லவே....


நன்றி சொல்லவே, உனக்கு... என் நண்பனே வார்த்தை இல்லையே...

முதலில் ஸ்டார்ஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு.. வெரி வெரி வெரி ஆஃப் த தாங்க்ஸ், சார்.

அடுத்து, வேழம் பத்திரிக்கையின் என் பழைய பதிவு ஒன்றை பிரசுரித்திருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி என்றால், ரொம்ப அதிரிச்சி அடைந்து நான் எழுதி இருக்கும் இந்த பதிவு காமெடி(படிக்க, சிரிக்க) பகுதிக்கு போய்விட்டது!!!!

எப்படியோ நான் எழுதியது வலைப்பத்திரிக்கைக்கு வந்தது குறித்து எனக்கு மிக்க  மகிழ்ச்சி. இதை பிரசுரித்தமைக்கு கார்த்திக்குக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

Wednesday, March 24, 2010

குருவிக்காலும் நானும்

என் வீட்டு ரங்குவுக்கு அந்தக்கால நடிகைகள் என்றால் கொள்ளை பிரியம். சாவித்திரி சரோஜாதேவி தேவிகா செளகார்ஜானகி இவர்களையெல்லாம் பார்தால் ரெண்டு ரெக்கை சைடில் ஆட்டோமேட்டிக்காக அட்டாச் ஆகி விடும். பறபறவென்று பறப்பார். துபாயில் வாழ்ந்த போது ஜெயா டீவியில் வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியை நான் வெறுக்க காரணம் இவருடைய இந்த பறக்கும் டெக்னிக் தான். மோவாக்கட்டையில் ரெண்டு டயப்பர் கட்டிவிட்டாலும் பத்தாமல் ஜொள் விட்டு டீவீயை பார்த்துக்கொண்டு இருப்பார்.

இதை இப்போ என்னத்துக்கு சொல்றேன்னு கேக்கறீங்களா? அபுதாபி வாழ்க்கை இப்புடி மெகா சீரியல் மாதிரி போரா போயிண்டு இருக்கே ஒரு ஸ்பைஸப் பண்ணலாமேன்னு நான் பண்ணின ஒரு காரியத்துக்கு தான் இந்த பீடிகை. அப்படி ஒண்ணும் மோசமா பண்ணலை. இருந்தாலும் டைமிங் சரிப்படலை!

இன்னிக்கி வழக்கத்துக்கு மாறாக ரொம்ப சீக்கிரமே சாயந்திர நேர வேலையெல்லாம் முடிச்சு, தலை வாரிண்டு, மூஞ்சி அலம்பிண்டு, வெளக்கேத்தி, ஜபம் முடிச்சு ரெடி ஆயிட்டேன். கண்ணாடி கிட்டே போனப்போ ஏதாவது டிஃபரெண்டா பண்ணலாமான்னு ஒரு குறுகுறுப்பு.. ஆயின்மெண்டு ட்யூப் மாதிரி ஒரு கண்மை ஊர்ல வித்தாங்க. வாங்கிண்டு வந்து சுமார் ஒரு வருஷம் ஆச்சு. திறந்து கூட பார்க்கலை. சரி இப்போ இன்னிக்கி ஃப்ரீதானேன்னு ஓப்பன் பண்ணிட்டேன். அதுல ஈர்க்குச்சி மாதிரி ஒரு லாங் ஸ்டிக். அப்படியே கண்ல ஒரு இழு இழுத்தேன். அப்போ தான் அந்த விபரீத சிந்தனை வந்தது. அந்தக்கால நடிகைகள் எல்லாம் இந்த குருவிக்கால் மை இட்டுப்பாங்களே, அதே மாதிரி நாமளும் இன்னிக்கி ட்ரை பண்ணி ரங்குவை இம்ப்ரஸ் செஞ்சுட வேண்டீது தான்னு டிசைடு பண்ணேன்.



கொஞ்சமா இன்னொரு வாட்டி ட்யூப்புக்குள்ளே இருந்து மையை எடுத்து மெதுவா இமைக்கும் கண்ணுக்கு நடுப்பட்ட ஏரியாவுல அப்பினேன். ”ஆஹா என்ன ஒரு அழகு.. மீனம்மா மீனம்மா...”ன்னு பாடிண்டே நெஸ்டு ஸ்டெப்பு. மெதுவா கீழ ஒரு இழுவை, கண்ணுக்கு மேல ஒரு இழுவை. அப்படியே இழுத்துண்டு போய் புருவம் முடியும் இடத்தில் நிறுத்தணும். இதான் குருவிக்கால்.. சிம்பிள். ”அம்மால்லாம் நமக்கு சின்ன வயசுல வெச்சு விடுவாங்களே!! அதே தான். யெஸ் யூ கான் டூ இட். கோ அஹெட்”ன்னு கன்னா பின்னான்னு மனசு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுக்க, குரங்கு பன்னு தின்ன கதையா ”இங்கே கொஞ்சம். இப்படி இல்லே அப்படீ”ன்னு அப்பி அப்பி கடைசியில கதகளி மேக்கப் மாதிரி ஆயிடுச்சு கண்ணு. ஆனது ஆயிப்போச்சு இனி ஒண்ணும் பண்ண முடியாது.. எப்படியாவது இந்த கெட்டப்புல ரங்கு ரீயாக்‌ஷன் என்னான்னு பார்த்துடணும்னு ரொம்ப மெனக்கெட்டு மறுபடியும் மறுபடியும் கண்ணாடியே பார்த்துண்டு நின்னேன்.

ஒரு ஸ்டேஜுல இன்னொரு தூள் ஐடியா..  சரோஜாதேவிக்கு கன்னத்துல ஒரு மச்சம் இருக்குமே அதே மாதிரி ஒரு மச்சம் வெச்சுக்கலாமேன்னு தோணிச்சு. அதையும் உடனே செயல் படுத்தியாச்சு. ஓஹோஹோ.. வாட் ஆஃப் ஏ பீட்டிபுள் கேள்ன்னு நானே அசந்துட்டேன்னா பார்த்துக்கோங்க!

 வாசல்ல போய் நின்னா காரிடார்ல லீவுல என்ன பண்ணறதுன்னு தெரியாம கண்டபடி சத்தம் போட்டு விளையாடும் குழந்தைகள் எல்லாம் பேஸ்த்தடிச்சு ஓடிப்போயிடுவாங்க.கட்டாயம் வேப்பிலை அடிக்க வேண்டி இருக்கும். நிச்சியம் அவங்க அம்மாப்பா சண்டைக்கு வருவாங்கன்னு தோணித்து. அதுனால வெளீல ரங்குவுக்கோசம் வெயிட் பண்ற ஐடியாவை கைவிட்டுட்டேன். (இல்லாட்டி மட்டும்!!!!)



எதிர்பார்த்த நேரத்தில் ரங்கு வரவில்லை. இவருக்காக காத்திருந்து களைத்துப்போன நான் யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே சிங்குன்னு புலம்பிண்டே என் ப்ளாக் கமெண்டுக்களை பப்ளிஷ்(!!!!!!???) பண்ண ஆரம்பித்தேன். சுமார் ஒரு மணி நேரம் லேட்டாக வந்தார். வழக்கத்துக்கு மாறா இருக்கற என்னை ஒரு வாட்டி உற்றுப்பார்த்தார்.அவ்ளோ தான். நோ ரீயாக்‌ஷன். நான் காப்பி கலக்க போய்ட்டேன். இவர் வர்றதுக்குள்ள என் மேக்கப் மேட்ட்ரை மறந்துட்டேன். சோபாவில் உட்கார்ந்துகொண்டு நாளைக்கி இன்னின்ன மீட்டிங்ஸ் இருக்கு, ஆப்பிள் ஒயிட் சட்டை ஐயன் பண்ணியாச்சா, பாலக்காட்டுல ஒரு மாமி டிக்கெட் வாங்கியாச்சு தெரியுமோ?ஏர் அரேபியால ஆஃபர் போட்டு இருக்கான், காப்பி ஏன் இவ்ளோ கண்றாவியா இருக்கு? போன்ற ரொம்ப உபயோகமான விஷயங்களைப்பற்றி பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு எரிச்சலான எரிச்சல். நானும் முடிந்த வரையில் பொடியை குற்றம் சொல்லி, ஃபில்டரை குற்றம் சொல்லி, பாலை குற்றம் சொல்லி கடைசியில் ஒத்துக்கொண்டேன்.


அப்படியே ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு லாப்டப்பை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டோம். நாங்கள் எங்கள் லாப்டாப்பை முறைக்க நடுவில் சம்பந்தமே இல்லாமல் விவேக் வடிவேலு கவுண்டர் ஆகியோர் வந்து அலறிக்கொண்டு இருப்பார்கள். இல்லாட்டி மலையாளச்சேட்ட்ன்கள் பிதற்றுவார்கள்! அதே மாதிரி தான் நாங்கள் டீவீயை ஆன் பண்ணிவிட்டு உட்கார்ந்து இருந்தோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இவருக்கு ஒரு ஃபோன். ”ஓ அப்படியா, வா வா.. ”என்று இவருக்கு ஒரே குதூகலம்!!!



இரவு ஆகிவிட்டதே என்று தஸ்புஸ் நைட்டி அணிந்த எனக்கு ஒரே பீதி கிளம்ப, யாருன்னா என்றேன். ரகுடீ வர்றானாம் என்றார். ஒரே ஷாக்!ஐய்யயோ, இப்போவா என்று எழுந்து ஓடினேன். உடை மாற்றிக்கொண்டு கண்னாடியை பார்த்தால் குருவிக்க்கால் கோழிக்கால், ஆகி இருந்தது! ஈஷ் பூஷ் என்று கண்ணைச்சுற்றிலும் மையான மை. எப்படி ரங்கு தைரியமா என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாருன்னு ஒரே ஆச்சரியம் எனக்கு. அது மட்டுமில்லை குருவிக்கால் புருவத்தோடு மிக்ஸ் ஆகி மஹாக்கேவலமாக காட்சி அளிக்க, என் முகத்தில் வழிந்த எண்ணைப்பசை சரோஜாதேவி மச்சத்தை கோடாக மாற்றி இருந்தது. மையெல்லாம் வழிய கோரஸ்வரூபிணியாய் கண்ணாடிமுன் நின்றேன்.. ஹய்யய்யோ இதை எல்லாம் இப்பொ அழிக்கணுமா? அதற்குள் சரியாக லிஃப்டு மணி அடிக்க.. எனக்கு பீ.பீ எகிறியது! ”இப்போ போயா இந்தப்பைய்யன் வரணும்? இன்னிக்கீன்னு பார்த்து நான் குருவிக்கால் எல்லாம் போட்டுண்டு இருக்கேன் பாருங்கோ” என்று குட்டை உடைக்க அப்போது தான் ரங்குவுக்கு உதயமாயிற்று.. ஓஹோ இவள் இன்று குருவிக்கால் போட்டுண்டு இருக்காளான்னு. ஈ என்று பல்லிளித்துவிட்டு, ”நான் கவனிக்கலைம்மா” என்றார்! ரொம்ப சந்தோஷம். இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். இதே பார்த்த முதல் நாளே பாட்டுல கமலினி முகர்ஜி என்ன கலர் புடவை உடுத்திண்டு இருப்பான்னு கேட்டு பாருங்கோ, சூப்பரா டாண் டாண்னு பதில் வரும்! க்கும்.

அந்த கந்தரகோளத்தை எல்லாம் தேங்காய் எண்ணைபோட்டு அழித்து 10 டிஷ்யூவை உருவி முகம் துடைத்து வெள்யே வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது..



கட்டுரை முடிப்பதற்கு முன் ஒரு ஜோக்கு, நம்ம ரகு சொன்னது. அவன் ஆபீஸில் மேனேஜர்கள் எல்லாம் இப்போது லேட்டஸ்டாக புலம்பும் புலம்பல் என்ன தெரியுமா? ”ஆப்பிள், ப்ளாக்பெர்ரி எல்லாம் பழங்களாகவே இருந்திருக்க கூடாதா? இந்த டெக்னாலஜி படுத்துகிற பாடு தாங்க முடியலைடா சாமி ”என்கிறார்களாம்!

ஹூஸ்ஸைனம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க, இங்கே குருவிக்கால் மை மேக்கப்புடன் இங்கே நான். இஹ்கி இஹ்கி!!

Monday, March 22, 2010

டாஷோபோர்டியாவும் தமிழ் ப்ளாக்கர் லிங்கோவும்

பதிவு போடத்தொடங்கிய புதிதில் ஒரே த்ரில்லிங்காக இருக்கும். யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று அறிவதில் அப்படி ஒரு சுவாரஸ்யம்! அந்த காலகட்டத்தில் தான் நெருங்கிய தோழிக்கு டாஷோபோர்டியா என்ற கொடிய நோய்.. ஹீ ஹீ.. பின்னே? எனக்குன்னு நினைச்சுட்டீங்களா? ஹய்யோ ஹய்யோ..
டாஷோபோர்டியா என்ற நோயின் அறிகுறிகள் மிகப்பயங்கரமானவை.

1.இந்த நோயாளிகளின் ஹோம்பேஜ் அவர்கள் டாஷ்போர்டாகத்தான் இருக்கும்.

2.சாஷ்ட்டாங்கமாக இவர்கள் டாஷ்போர்டைத்தான் தன் இஷ்டதெய்வமாக நமஸ்கரிப்பவர்கள். இவர்கள் சதா டாஷ்போர்டே கதி என்று இருப்பார்கள்.

3.மற்ற வலைத்தளங்களில் இவர்களுக்கு அமைதியாக படிக்க இயலாது. அதற்குள் யாராவது கமெண்டு எழுதிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை தான் இதற்கு காரணம் என நிரூபித்துள்ளார்கள்.

4.புதிய போஸ்டு போட்டுவிட்டால் இவர்களுக்கு தூக்கம் அவுட். சதா டாஷ்போர்டு நினைவு தான். ஒரு கமெண்டு கூட ரெண்டு நாள் வரைக்கும் வராத நிலமையாக இருப்பினும் அதை பார்த்துக்கொண்டே தான் இருப்பார்கள்.

5.ஒரு 2 நிமிடம் பாத்ரூம் போய்விட்டு வருவதற்குள் 1000 கமெண்டுக்கள் வந்து குவிந்துவிட்ட மாதிரி துடியாய்த்துடிப்பார்கள்

6.ஒரு பத்து நிமிடம் டாஷ்போர்டு பார்க்காவிட்டால் இவர்கள் கைகால்கள் நடுங்கும். முகம் இஞ்சி தின்ன குரங்கு போலாகிவிடும். அரை மணி நேரமெல்லாம் ஆச்சுன்னா இவர்கள் கைகால்கள் காக்காய் வலிப்பு மாதிரி இழுத்துக்கொள்ளும்.சாவிக்கொத்தெல்லாம் வேண்டாம். டாஷ்போர்டு போதும்.

7.அப்படி டாஷ்போர்டில் கமெண்டுகள் வராத பட்சத்தில் இவர்கள் எடிட் போஸ்டுவில் போய் கமெண்டு மாடரேஷனில் போய் எட்டிப்பார்த்துவிட்டு வருவார்கள்.

8.இவர்களை, ஒருவேளை பத்து நாள் டாஷ்போர்டு பக்கம் வராமல் யாராவது சதி செய்தால், இவர்களுக்கு சுமார் 300 கமெண்டுகள் வந்திருக்கும். அதில் 295 , இவரது முத்தான தமிழ்ப்பதிவை படித்து ரசித்த, இவர்களது சீன நண்பர்கள்(!!!) போட்டு இருப்பார்கள். பாக்கி 5 இவர்கள் பதிவு போடாததற்காக நன்றி தெரிவித்து இவர்கள் இம்சையால் பாதிப்பிற்குள்ளான மக்கள்ஸ் போட்டு இருப்பார்கள். இப்படி போடும் ப்ரும்மஹத்திகள் இவர் ப்ளாகை தீவிரமாக பிந்தொடர்ந்து சபாஷ் என்று ஒற்றைவரி பின்னூட்டமும் ஸ்மைலியும் போடுபவர்கள் என்பதை மறக்கக்கூடாது!


9.இந்த சீன நண்பர்களை ஹாண்டில் செய்கிறேன் பேர்வழி என்று அதையும் தாண்டி அவர்களுக்கு அவர் மொழியிலேயே பின்னூட்டம் எல்லாம் போட்டால் அவர்கள் விடாமல் நம்மை பழிவாங்கும் நோக்கோடு அடுத்த நாள் காலை டாஷ்போர்டில் 3000 கமெண்டுக்கள் மாடரேஷனுக்கு அனுப்புவார்கள்!

10. அப்படி ஒரு கமெண்டு கூட வராத பட்சத்தில் தான், தான் ஃபாலோ செய்யும் வேறு ப்ளாக்குகளை படிப்பார்கள்.



இந்த டாஷோபோர்டியா நோய் வந்து தாக்குவதற்கு சற்றே முன்னால் நான் ப்ளாகோமேனியா என்ற நோய்வாய்ப்பட்டு இருந்தேன்.
இந்த நோய் தாக்கப்பட்டு நான் ஆஸ்பத்திரியில் கிடந்த போது பலவிதமான ப்ளாகுகளை சம்பந்தா சம்பந்தமில்லாமல் படித்தும் பின்னூட்டம் போட்டும் வந்தேன். ஒன்றுமே கிடைக்காவிடில் ராண்டமாக எதையாவது கூகிளாண்டவரை வேண்டி எடுத்து படித்து மறக்காமல் பின்னூட்டம் போட்ட படியே இருப்பேன். அந்த ப்ளாக் அம்போவென்று இருந்தாலும், ஆள் அரவமே இல்லாமல் ராரா என்ற ஹம்மிங் கேட்டுக்கொண்டும் ஹாண்டடாக இருந்தால் கூட பயப்படாமல் முன்சென்று பின்னூட்டம் இட்ட போது தான் இந்த நோய் முற்றிவிட்டதாக டாக்குடர்கள் தெரிவித்தார்கள்.
 இந்த காலகட்டத்தில தான் புதிய வார்த்தைகள் பல நான் கண்டேன். அவற்றின் தாத்பர்யங்களை கண்டறிய சில காலம் பிடித்தாலும் அவற்றின் பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது! இந்த வார்த்தைகளுக்கான இன்புட்ஸ் தந்த பாஸ்டன் ஸ்ரீராமண்ணாவிற்கு என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.



சொற்றொடர்   : வடை    பொருள்ஒரு பதிவின் முதல் பின்னூட்டம் யார் போடுகிறார்களோ, அவர்களுக்கு வடை கிடைத்ததாக ஐதீகம். அனேகமாக எல்லா ப்ளாகிலும் ஒரு பெண்மணி சென்று இதை வாங்கி விடுவார். உங்களுக்கே தெரியும். அவர் ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிந்தாமணி! வடை வைத்தீஸ்வரி! இந்த பதிவில் கூட அவருக்குத்தான் ஃபர்ஸ்டு வடை தருவதில் என் ப்ளாக் பெருமைப்படுகிறது!

 தங்கம்ணி :  (ப்ளாகரின் ஐயோ பாவம் )மனைவி

ரங்கமணி : (ப்ளாகரின் அப்பாவி)கணவர்

ஆணி - வகைதொகையில்லாமல் வாங்கப்படும் ஆபீஸ் வேலை. இந்த (இல்லாத) ஆணி தான் பல ப்ளாக்கர்களை புது பதிவு போடாமல் இருக்கவும், மற்ற பதிவர்களின் புதிய பதிவுகளின் பக்கம் போகாமலும் இருக்க உதவும் அரிய சாக்கு.


கவுஜ : சுத்தமாக புரியவே புரியாத கவிதை

மீ த ஃபர்ஸ்ட் பக்கித்தனமாக ஒரு பதிவை முற்றுகையிட்டு இடும் பின்னூட்டம்

ஆஜர் பின்னூட்டம்: பதிவை  படிக்கவே படிக்காமல் நான் பொன்னுரங்கம் வந்திருக்கேன்னு அட்டெண்டன்ஸ் போடுற பின்னூட்டம்

உள்ளேன் ஐயா:  மீண்டும் பொன்னுரங்கப்பின்னூட்டம்

கவிதை:  பாதி புரியும் தன்மையுடைய சொற்கள்

கவுஜ : பின்னவீனத்துவ கோட்பாடுகளுடன் கூடிய புரியாத புதிர்

பின் நவீனத்துவக் கவுஜ: சுத்தமாக புரியாத சொற்களாலான புதிர்

பின்னவீனத்துவம்: யாருக்குமே பொருள் தெரியாத சொற்றொடர்

கட்டுடைத்தல் : இதுக்கும் யாருக்கும் பொருள் தெரியாது, ஆனா ஜரூரா உபயோகப்படுத்துவார்கள்.

சேட்டைக்காரன்
லாரிக்காரன்
ஆட்டோக்காரன்  : ப்ளாக்கரின் பெயர்

ஜிகர்தண்டா
கலர்சோடாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஜூஸ் பக்கங்கள்  : ப்ளாக்கரின் பெயர்

டுபுக்கு
தக்குடு
டுபாக்கூர்
கெக்கேபிக்கே          :  ப்ளாக்கரின் பெயர்



:-)
:-))
:-)))))))))))))))))))))))))))))))
:-o
X-(                                    : இவையெல்லாம் தாராளமாக உபயோகப்படுத்தப்படும் பின்னூட்டங்கள், தொல்லை விட்டுதுன்னு போட்டுட்டு போயிண்டே இருக்கலாமே???


இதையெல்லாம் கூட பரவாயில்லை, ஷைலஜாக்காவின் கவிதைகளை பின்னவீனத்துவக்கவிதைகள்ன்னு பாஸ்டன் ஸ்ரீராமண்ணா சொன்னதை நான் கன்னா பின்னாவென்று நிராகரிக்கிறேன்.

Tuesday, March 16, 2010

சில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்

டிஸ்கி: இந்த போஸ்டு எழுத ஐடியா கொடுத்த அன்புத்தம்பி நாஞ்சில் பிரதாப்புக்கு சமர்ப்பணம்.





வெட்டி: ”ஹலோ ஜஹாலக்ஷ்மியாங்க?” ஸ்லர்க்(ஜொள்)

ஜஹா: ”ஆமாங்க, சொல்லுங்க யார் பேஸ்றீங்க”

வெட்டி: ”நான் தாங்க வெட்டிச்சாமி பேசறேன், சோம்பேறிபுரத்துல இருந்துங்க”

ஜஹா: ”என்ன பன்றீங்க(இது எழுத்துப்பிழை அல்ல, அவர்களின் நுனிநாக்குத்தமிழ்) வெட்டிச்சாமி?”

வெட்டி: ”நான் வெட்டியாத்தான் இருக்கேனுங்க. ஸ்லர்க், இப்போ உங்க கிட்டே பேசிகிட்டு இருக்கேங்க” ஸ்லர்க்.
ஜஹா: ”ஹா ஹா ஹா.. ”

வெட்டி: ஸ்லர்க் ஸ்லர்க், ”ஹே ஹே..நீங்க இன்னிக்கி ரொம்ப க்யூட்டா இருக்கீங்க” (என்னான்னா ஜோக் சொல்லிட்டாராம்)

ஜஹா: (இப்போ இவங்களும்) ஸ்லர்க் ஸ்லர்க் ”ரொம்ப தாங்க்ஸ்ங்க

வெட்டி: ”இந்த இயர்ரிங் உங்களுக்கு ரொம்ப சூட் ஆகுதுங்க

ஜஹா:”ஒ, ரொம்ப தாங்கஸ்ங்க

வெட்டி:”இந்த பேங்கிள் எங்க ரங்கனாதன் ஸ்ட்ரீட்லேயா வாங்கினீங்க?”

ஜஹா: ” இல்லேங்க, புரசைவாக்கத்துல. ”

வெட்டி:”ரொம்ப அருமையா இருக்கு உங்க கைக்கு. (ஸ்லர்க் ஸ்லர்க்)

ஒவரா ஜொள் விட்டதுல எங்க லாண்ட் லைன் ஃபோன் ரிசீவர் ஈரமாயிடுச்சு. நான் கார்டுலெஸ் எடுத்துக்கறேன். ப்ளீஸ் வெயிட்.

ஹலோ, ஹான், என் தம்பி ஜொள்ளணும்ங்றான், ச்சே ச்சே, இல்லே, பேசணும்ங்கிறான் மேடம். ”

ஜஹா: ”சரி குடுங்க”


வெ.த:”ஹலோ ஜஹாவா.. எப்படி இருக்கீங்க?”

ஜஹா”ஆமாங்க, சொல்லுங்க உங்க பேரென்னங்க?”


வெ.த:”நான் சாப்பிட்டாச்சு மேடம், இப்போத்தான் இட்லி சாப்டேன், நீங்க என்ன சாப்பிட்டீங்க?”

“!!!!, அதில்லீங்க, உங்க பேரென்னங்க?”



வெ.த:”என் பேரு வெட்டித்தம்பிங்க. நானும் வெட்டியாதான் இருக்கேங்க. எங்களுக்கு உங்களை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்ங்க”.

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்லர்க்)

ஜஹா:”சரி வெட்டித்தம்பி, உங்க டீவீ வால்யூம் கம்மி பன்றீங்களா?”



வெ.த::”கேக்லைங்க.. ஹலோ”

ஜஹா:சற்று உரக்க, “உங்க டீவீ வால்யூம், கம்மி பன்றீங்களா?”



வெ.த::”கேக்கலைங்க.. என்னாங்க சொல்றீங்க? ஹலோ”

ஜஹா:இன்னும் உரக்க,”உங்க டீவீ சவுண்டு கம்மி பன்னுங்க”



வெ.த:: ”எங்க வீட்டுல டீவீயே இல்லைங்க எங்கேந்து வால்யூம் கம்மி பண்றது?”

ஜஹா:@#$@!#$!@#$@!#$@!#$@!#$@#$@#$@#$

(கடைசி வரி மட்டும் விவேக்கின் ஒரு ஜோக்கிலிருந்து எடுத்திருந்தாலும், பாக்கி எல்லாம் நான் பார்த்த நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப்பட்டவையே)

ஹப்பா, கான்வர்ஸேஷன் முடிஞ்சிருச்சு. இப்போ மைக் எனக்குத்தான்..ஹய்யா ஜாலி!

காதில் ராட்சத வளையங்கள் போட்டுக்கொண்டு, கிட்ஸ் செக்‌ஷனில் வாங்கிய துணிமணி அணிந்து, இடமும் வலமும் முன்னும் பின்னும் ஆடிய படி கெக்கே பிக்கே என்று பிதற்றும் வீடியோ ஜாக்கிகள்(ஹய்யயே, ஜட்டி இல்லீங்க, தொகுப்பாளர்களை சொல்றேன்) ஒரு புறமென்றால், இன்னொறுபுறம் வேலையில்லாமல் அல்லது வேலை இருந்தாலும் அதையெல்லாம் விட்டு இவர்களுக்கு ஃபோன் செய்ய தேவுடு காக்கும் மக்கள்ஸ் இன்னொறு பக்கம். பெண்கள் ஆண்கள் இருபாலாரும் இதில் அடக்கம்.



இந்த நிகழ்ச்சி நடத்துவது மிகவும் ஒரு போரான விஷயம். பின்னே ஃபோன் செய்பவர்களிடம் எல்லாம் ஒரே கேள்வியைத்தான் கேட்கணும். என்ன பண்றீங்க? சாப்டீங்களா? காலைக்கடன்கள்(!!!!) முடிச்சாச்சா இப்படி கேக்கணும். இது இல்லேன்னு வெச்சுக்கோங்க, ஏதாவது ஒரு பாடாவதி கான்செப்டு வெச்சிருப்பாங்க. மடத்தனமான ஒரு சினாரியோ குடுப்பாங்க. இந்த முகவுரை எல்லாம் சுருக்கமா முடிச்சுண்டு அதுக்கு தாவிடுவாங்க!

அவர்கள் தரும் சினாரியோ மிகவும் பரிதாபமா இருக்கும். நீங்க சமயல் பண்ணும்போது உப்பு குறைந்து விடுகிறது. உங்கள் மனைவி அவசரத்திற்கு எடுப்பது பூரிக்கட்டையா விளக்குமாறா என்ற ரேஞ்சில் போகும்! இதையும் பொறுமையாக கேட்டு கணவன்மார்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்!

அதுல பாருங்க பெண்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தால், ஆண் காலர்ஸ் முன்னெச்சரிக்கையாக கழுத்தில் ஒரு பக்கேட் அணிவது உத்தமம். இல்லாவிடில் கீழே அண்டா வைத்துக்கொள்ளலாம்.(சில நிமிடங்களிலேயே அந்த ஆள் அழைத்திருந்த) கொசப்பேட்டையில் கடும் வெள்ளம் என்று ஸ்க்ரால் நியூஸூம் போட்டு விடுவார்கள்.

சில ஆண் பிருஹஸ்பதி காலர்கள், பெண்கள் மட்டும் பேசும்  நிகழ்ச்சியாக இருந்தாலும் குரலை மாத்தி பேசும் அளவுக்கு தொகுப்பாளினி மீது மோகம் கொண்டு இருக்கும்.

பெண்களுக்கான ஸ்பெஷல் நிகழ்ச்சி என்றால், கேட்கவே வேண்டாம், அவர்கள் வீட்டுக்குறிப்புடன் தான் ஃபோன் செய்யணுமாம். எனக்கு குறிப்பெல்லாம் ஒண்ணும் தெரியாதுங்கன்னு ஒரு பெண் கதறக்கதற, இந்த தொகுப்பாளினி விடாமல் குறிப்பு கேட்டு கடைசியில் அந்தப்பெண், முகம் பளபளப்பாக இருக்க, கடுகு மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றை சம அளவில் எடுத்து பொடித்து, காலை மாலை இருவேளை ,முகத்தில் பூசி வர, மாசு மருக்கள் மறையும், முகம் பொலிவு பெறும்ன்னு சொல்லி விட்டு அப்பீட் ஆவார். இந்த மாதிரி டுபாக்கூர் குறிப்பெல்லாம் என்னிக்காவது அந்த தொகுப்பாளினி ட்ரை பண்ணி இருப்பாரா? இல்லை நான் கேக்கறேன், நம்ம பார்வையாளர்களோ மிகப்பெரிய தில்லாலங்கடிகள். இதில் ஏதாவது ஒன்றை முயற்சி பண்ணி பார்த்தா, அதன் கொடூரமான விளைவுகளுக்கு பொறுப்பேற்பது யாருங்க? குறிப்பு தெரியாதுன்னு சொன்ன காலரா, இல்லே, குறிப்பு சொல்லியே ஆகணும்னு வற்புறுத்திய அந்த தொகுப்பாளினியா? இல்லே நிகழ்ச்சி தயாரிக்கும் சானலா? இல்லே அந்த ப்ரொட்யூசரா? நான் கேட்கிறேன் இந்த அராஜகத்துக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா?



இந்த நிகழ்ச்சியில் கேட்ட இன்னும் சில வீட்டுக்குறிப்புகள்:


உதடுகள் சிவப்பாக இருக்க, பிளேடால் உதட்டை கீறவும், ரத்தம் பீறிடும், உதடுகள் தானாக சிவப்பாக மாறும்..

வீட்டில் இருக்கும் துர்திருஷ்டி அகல, வீட்டு வாசலில் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும்.

வீடு துடைக்கும் தண்ணீரில் கொஞ்சம் ரோஸ் எசன்ஸ் விட்டு துடைத்தால் வீடே ரோஜாப்பு மணமாக இருக்கும்

டூத்பேஸ்டால் கக்கூஸ் கழுவ, கிருமிகள் மாயும். கக்கூஸும் கண்ணாடி போல் மின்னும்!

மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்தவிர பாக்கி எல்லாத்துக்கும் யூஸ் பண்ணச்சொல்லுவாய்ங்க!

ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல!

சில காலர்ஸ் பாட்டு பாடுறேன்னு சொல்லி .. ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சுக்கு பாடி டார்ச்சர் பண்ணுவார்கள். சிரிப்பை அடக்கிக்கொள்ள தொகுப்பாளர்கள் படும் அவஸ்த்தையை சொல்லி மாளாது!

போன போஸ்டுல கமெண்டி இருந்த அனுஷா சித்ரா சொன்னாப்புல ஒவ்வொரு காலரும் ஒவ்வொரு விதம்! சில காலர்ஸ் ரெகுலரா கூப்பிடுவாங்க. வீ. ஜேயை பயங்கரமா சொந்தம் பண்ணிப்பாங்க.  இந்த தொகுப்பாளினி நினைவு வெச்சுக்காட்டி கோவிச்சுப்பாங்க. யாரும் கால் பண்ணாட்டி என்ன பண்றதுன்னு டீவீக்காரங்க, சில காலர்ஸை ஏற்கனவே செட் பண்ணி வெச்சு இருப்பாங்களோன்னு தோணும் அளவுக்கு இருக்கும் சில காலர்ஸ் தோரணை. ஏய், அந்த பாட்டு போடு என்று அதிகாரம் தூள் பறக்கும்.

பிரபலங்களுடன் வரும் நிகழ்ச்சிகளில் அதெப்படீன்னே தெரியாது சரியா அந்த பிரபலத்தோட பொண்டாட்டிக்கோ, புருஷனுக்கோ, அம்மா, நைனாவுக்கோ லைன் ஆப்டுடும். நாமெல்லாம் இங்கே ட்ரை பண்ணினா, எங்கேஜ்டா இருக்கும். அவங்களும் குரலை மாத்தி பேசுவாங்க. இந்த பிரபலங்களுக்கும் தெரியவே தெரியாது. தமிழ்ப்படத்துல சிவா கன்னத்துல மச்சம் வெச்சுண்டா மத்தவளுங்கு இவர் யாருன்னே அடையாளம் தெரியாதே அதே மாதிரி!


இதென்னங்க டெடிக்கேட் பண்ணும் கலாச்சாரம்? யார் கண்டு பிடிச்சு இருப்பா? இந்த பாட்டு என் ஃப்ரெண்டுக்கு டெடிகேட் பண்றேன்னு ஒரு பிரஹஸ்பதி சொல்லும். அதைப்பிடிச்சு, டாய், உண்மைய சொல்லு, டெடிக்கேட்ன்னா என்ன அர்த்தம்ன்னு கேட்டு பாருங்க, அது பேந்த பேந்த முழிக்கும்!


இருக்கறதுலேயே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நாராசமா இருக்கறது காதலர்களுக்காக வரும் பாட்டு நிகழ்ச்சி.. ரொம்ப கொடுமையா இருக்கும். அந்த கொடுமையை விவரிக்க என்கிட்ட வார்த்தைகள் இல்லாததால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

பி.கு:-உனக்கெப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு இருக்கு, அப்டீன்னா நீயும் தானே இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து இருக்கேன்னு நீங்க கேட்கலாம். எனக்கு அப்போ தனிமை, பெங்களூரு வாசம், வேற சானல்கள் ல மெகா சீரியல் பிடுங்கல், அதான் இதில் வரும் பாடல்களுக்கோசம் இந்த கொடுமைகளை எல்லாம் சஹித்துக்கொண்டு இருந்தேன். இல்லாட்டி அன்னிக்கே ஒரு போஸ்டு போட்டு இருப்பேனாக்கும்.

Tuesday, March 9, 2010

இம்சையான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள்

டிஸ்கி: இந்தப்பதிவு என் தங்கைமணிக்கு சமர்ப்பணம். ஏன்னா அது தான் இந்த மாதிரி ஸ்க்ரால் எல்லாம் தேடித்தேடி படிக்கும். மியூசிக் சானல்களில் வரும் ஒரு எஸ்.எம்.எஸ்ஸைக் கூட விடாமல் படித்து ’ரசிக்கும்’ அசகாய சூரி.



அன்புத்தங்கையே, என் ரத்தத்தால் எழுதிய (ஹீ ஹீ) இந்தப்பதிவை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன். (சமர்ப்பிச்சுட்டு ஓடிடுறேன்)
ஜோக்ஸ் அபார்ட், இந்த பதிவை எழுதும்படி ஐ.எஸ்.டீ கால் பண்ணி சொல்லிய தங்கை மணியே, நீ ஒரு ஐடியா மணி. வாழி உன் புகழ்!
இந்த மியூசிக் சானல்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் கோஷ்டியில் நீங்கள் இருந்தால், தயவு செய்து இதற்கு மேல் படிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே கேக்கப்போறீங்க? இது கண்டிப்பாக உங்களைக் குறிப்பிட்டு எழுதியது இல்லை என்று ஆணித்தனமாக கூறிக்கொள்கிறேன். (அப்பா, தப்பிச்சாச்சு!)

ரிமோட் இல்லாத காலத்தில் எல்லாம் டீவீ ஆன் பண்ணினால் சானல் மாற்றுவதென்பதே இருக்காது. முதலில், வேறு சானலே இருக்காது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நமக்கு தூர்தர்ஷன் மட்டும் தான். அதுவும் 9 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் டில்லி அஞ்சல். பகல் பூரா யூ ஜீ ஸீ போட்டுத்தாக்குவார்கள். மொக்கையாக இருக்கும். சில காலத்தில் சாட்டிலைட் டீவீ வந்தது. அத்துடன் ரிமோட் ராஜ்ஜியம். ஃபிஷ்க் ஃபிஷ்க் என்று சானலை மாற்றிக்கொண்டே இருப்போம். ஆனால் சானலை மாற்றினாலும் டீவீ ஸ்கிரீன் முழுவதும் படம் வருமே.


இப்போ பாருங்கள். டீவீயை ஆன் பண்ணினால், ஒண்ணு ஃப்ளாஷ் நியூஸ் ஸ்க்ரால் ஓடும் இல்லாட்டி வேலையத்த வெட்டி மக்கள்ஸ் அவங்கவங்க கேர்ள்பிரண்ட்ஸ் பாய்ஃப்ரெண்ட்ஸுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி நம்மளை டார்ச்சர் பண்ணுகிறார்கள். முதலில் இந்த மியூசிக் சானல்களில் வரும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளைப்பார்ப்போம்.

எழவெடுத்த மாதிரி இந்த கலாச்சாரம் 2004ல் தான் வந்த மாதிரி இருக்கு. யாருக்காவது சரியான வருஷம் தெரிந்தால் பின்னூட்டம் போடவும். நான் கவனிக்க ஆரம்பித்தது 2004ல் தான். வெட்டித்தனமாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்குற பாலன்ஸ் எல்லாம் ஸ்வாஹா பண்ணிவிடும் இந்த தண்ட மெஸ்ஸேஜூகளை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அனேகமாக ஸ்கூல் (அ) கல்லூரியில் (நிச்சியமாக படிக்காமல்) ஓபியடிக்கும் இனமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

அந்த எஸ்.எம்.எஸ்ஸாவது ஒழுங்கா அனுப்புகிறார்களா? அதில் ஒரு 1008 தப்பும்தவறுமா தட்டி விடறது! யாரு திருத்தப்போறான்னு ஒரு தெனாவெட்டு! இந்த அழகுல கேர்ள்பிரண்டு வீட்டில் கண்டுபிடிக்க முடியாத படி கோடு வேர்டு வேற வெச்சுக்குவாங்க. ”டி.கே, ஐ லெள யூம்மா” ன்னு அடிப்பாங்க. அப்புடி தில்லாலங்கிடித்தனமா எஸ் எம் எஸ் லவ்வாம். ஐ மிஸ் யூ டா செல்லம், ப்ளீஸ் கால் மீ. இந்த இழவை நேரடியா அந்த பொண்ணு போனுக்கே அனுப்பக்கூடாதா? மொபைல் இல்லாத மாணவிகளா? எந்த ஏஜ் ல இருக்கீங்க?

வாட் டூயிங்ன்னு சில நாதாரிகள் கேட்கும். டீவீல பாட்டு பாக்க முயற்சி பண்ணறேண்டா எருமை, விடாம நீ இம்சை பண்றே, மவனே உன்னை.ன்னு நம்ம ப்ளட் பிரஷர் எகிறும்!


சில வானரங்கள் வீட்டுல இருக்கும் நெருங்கிய உறவினர்களை எல்லாம் பற்றி தம் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டு இருப்பார்கள்.” ஐ லெள மை மதர், ஐ லெள் மை டாட்டர் ” இந்த ரேஞ்சில் இருக்கும். இந்த எழவுக்கு 4 ரூபாய் செலவு பண்ணாம நேரடியா சொன்னா என்ன? அப்புடி எல்லாருக்கும் தெரியும் படியா அவங்க அன்பை வெளிப்படுத்தறாங்களாம்!!


சில கேனைகள் தம் நம்பரைக்கொடுக்கும்! ”கால்மீ, ஐ வாண்ட் டு ஃப்ரெண்ட்ஷிப் நியூ ஃப்ரெண்டு”ன்னு தப்புத்தப்பா ஸ்பெல்லிங் எல்லாம் எழுதி எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கும். உன் ஸ்பெல்லிங்கை பார்த்தாலே உன்னை எல்லாரும் ப்ளாக் பண்ணிடுவாங்க லூஸூன்னு நினைச்சுப்பேன்.

இதெல்லாம் பத்தாதுன்னு கம்பேட்டபிலிட்டி (compatiability) பார்த்து சொல்றாங்களாமா. நாம பேரும் நம்ம பார்ட்னர் பேரும் எழுதிவிட்டா, அவங்க நமக்குள்ள பொருத்தம் எப்புடீன்னு பார்த்து சொல்லுவாங்களாம். எல்லாம் நம்ம நேரம்.ஒரு ஜோஸியர்கிட்ட ஜாதகத்தை எடுத்துண்டு போனாலும் உபயோகமா இருக்கும். அந்த பிரடிக்‌ஷன்ஸ் எல்லாம் பார்க்கணுமே! மஹா அபத்தமா இருக்கும். ”நீங்கள் இருவரும் ஒருவருக்கோசம் ஒருவர் பிறந்தவர்கள்”ன்னு பேத்தும்!.அதுவும் ரெண்டாவது வாட்டி இதே பேர்களை அனுப்பினா, அது இப்போ ”உங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஒர்க்கவுட் ஆவாது, அனேகமா இந்த மெஸ்ஸேஜ் படிக்கறதுக்குள்ளேயே பிரிஞ்சுடுவீங்க”ன்னு சொல்லித்தொலைக்கும்! அதுவும் புருஷன் பொண்டாட்டியா இருந்தா கேக்கவே வேண்டாம். இவங்க சொல்ற எந்த ஒரு பிரடிக்‌ஷனுமே வேலை செய்யாது. காசைக்குடுத்து இப்படி குடும்ப மானம் கப்பல்ல போகணுமா? இதுக்கெதுக்கு மாங்கு மாங்குன்னு உக்காந்து பாலன்ஸை தொலைக்கணும்?

சில ப்ருஹஸ்பதிகள் போஸ்டு பெயிட் கனெக்‌ஷன்ல இருந்து மெஸ்ஸேஜுகளை ஃப்ள்ட் பண்ணிண்டு இருக்கும்! இல்லே, தெரியாமத்தான் கேக்குறேன், நாங்க டீவீ பாக்குறதா இல்லே நீ அனுப்புற டுபாக்கூர் எஸ்.எம்.எஸ் படிக்கறதா?



இது ஆச்சா, இப்போ நியுஸ் சேனல்களில் வரும் இம்சைகளைப் பார்ப்போம்! சில சானல்களில் 3 ஸ்க்ரால்கள் ஓடிக்கொண்டு இருக்கும். அடியிலிருந்து ஏதாவது ஒன்று பங்குச்சந்தை நிலவரமா இருக்கும். ஒண்ணு ஏதாவது ஒரு இ.வா ஸ்பான்சர் பிடித்து அவர்கள் கொம்பேனி விளம்பரமா இருக்கும். (இதுவே சன் தொலைக்காட்சின்னா தீராத விளையாட்டுப்பிள்ளையாத்தான் இருக்கணும்!)மேல் மோஸ்டு ஸ்க்ரால் வில் பீ ஃபார் ஃப்ளாஷ் நியூஸ். இப்போதைக்கி ஹாட் செல்லிங் நம்ம சாமியார் சங்கதி தான். சோ, பை டீஃபால்ட் அதான் ஓடிட்டு இருக்கும். தெரியுதோ தெரியலையோ புரியுதோ புரியலையோ, உண்மையோ பொய்யோ, இருக்கோ இல்லையோ, ராப்பகலா ‘சாமியார்’ என்ற கீவேர்டு கொண்ட ஃப்ளாஷ் நியூஸ் மட்டும் தான் சாஸ்வதம். மற்றபடி ஒரு வாரத்தில் சாமியார் விஷய்ம் ஓய்ந்தவுடன், ராயபுரத்தில் குழாயடி சண்டை!!! 2 பெண்கள் காயம்! விவரம் 8மணி செய்திகளில்! காணத்தவறாதீர்கள்!!! அப்படீன்னு போட்டு தாக்குவாங்க!

மேலே டாப் ரைட்ல டைம் அண்டு டேட். ஏன்னா நியுஸ் சானலாச்சே! நம்ம வீட்டுல காலெண்டரோ கெடியாரமோ கிடையாதே.. அப்புறம் லெஃப்டு சைடு பெரும்பாலும் இவர்கள் லோகோ, ராட்சத அளவில் இருக்கும். மற்றபடி சைடில் கொஞ்சூண்டு இடம் இருந்தால் அது, ஜோடி நம்பர் 1 சீசன் 3 , தங்கம், வெள்ளி இந்த மாதிரி மூக்குறிஞ்சிங் நெடுந்தொடர்களின் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும். ஆச்சா? இதுவே சன் நியூஸா இருந்தா, 4 ஸ்க்ரோலிங் பக்கத்துலேயே தீ.வி.பி படத்தின் ரிலேடட் ஐட்டம்ஸ் எல்லாம் போட்றுவாங்க. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் கட், செகண்டு கட், தர்டு கட், கழுத்து கட்ன்னு போட்டு வெட்டித்தனமா அந்த நடிகரின் வீர தீர சாஹஸங்களைப்பத்தி போட்டுண்டே இருப்பாங்க! பரபரப்பாம்! தீ.வி.பி ரசிகர்களிடம் அமோக ஆதரவு.. அபார சாதனைன்னு நீண்டுண்டே இருக்கும்! அப்போ சம்மரைஸ் பண்ணி பார்த்தா, கீழ 4 ஸ்க்ரால், மேல லோகோ, டைம், டேட், சைடுல ரியாலிட்டி ஷோ, மூக்குறிஞ்சி எல்லாம் போக, சுமார் 3 செ.மீ இடம் பாக்கி இருக்கும். இதில் செய்தி வாசிக்கும் பெண்ணோ பையனோ இடம் பெறுவார்கள். மிகவும் நெருக்கடியில் உட்கார்ந்து நியுஸ் வாசித்துவிட்டு போவார்கள் பாவம்! எல்லாத்துக்கும் மேல பார்வையாளர்களுக்கு எவ்வளவு கவனச்சிதறல்? தொல்லையா இருக்கே. எதை எடுக்க எதை விடுக்கன்னு குழம்பிட மாட்டாங்க?


இந்த கண்றாவிக்கு நம்ம பழைய தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும் & சோபனா ரவி / தமிழ்ச்செல்வன் செய்திகளும் எவ்வளவோ பரவாயில்லைன்னு தான் எனக்கு தோணுது! நீங்க என்ன சொல்றீங்க?

Sunday, March 7, 2010

பாலக்காட்டு ஹாஸ்யங்கள்

எஸ் வீ சேகரின் டிராமாவில் ஒரு வரி வரும். எல்லா கிராமத்துலேயும் சின்னத்தம்பி மாதிரி ஒரு அப்பாவி இருப்பான்னு. அது எவ்வளவு உண்மை! கோவிந்தராஜபுரத்திலும் அப்படி ஒரு அப்பாவி இருந்தார். எல்லோருக்கும் ஓடிப்போய் உதவுபவர். மந்தக்கரை கணபதியான் கோவிலைப்பூட்டிய ஐயு அண்ணா இந்த அப்பாவியிடம், "ஓடிப்போய் கல்பாத்தி முக்கு கடையில் வெற்றிலை வாங்கிண்டு வா” என்றுச்சொல்லி 10 ரூபாய் சில்லறை கொடுத்து இருக்கார். போகிற போக்கில், ”வேகம் வரணம் கேட்டியா?”என்றும் வலியுறுத்தியிருந்தார். நம்ம சின்னத்தம்பி அடுத்த இரண்டாம் நிமிடம் ஆட்டோவில் வந்து இறங்கி இருக்கிறார். ஐயு அண்ணாவிடம் ஐந்து ரூபாய்த்தாளை கொடுத்தார். புரியாமல் விழித்த ஐயு அண்ணா, ”என்னடா, வெற்றிலை எங்கே?” என்று கேட்க, நம்ம சின்னத்தம்பி ரொம்ப கூலாக, ”கல்பாத்தி முக்கு கடையில கேட்டாச்சு, வெற்றிலை இல்லையாம்” என்று சொன்னார். அதிர்ந்த ஐயு அண்ணா, ”பின்ன என்னடா ஆட்டோவில வந்தாய்?” என்று  கோபத்துடன் கேட்க, சி.த, ”நீங்கள் தானே வேகம் வரச் சொன்னேள்? ” என்றாராம்!!!

இவரல்லவோ வாழும் சுப்பண்டி!! பேஷ் பேஷ் பிரமாதம்!



கோபாலண்ணா வீட்டுக்கு போயிருந்தப்போ அவர் வீட்டில் இல்லாத நேரம், நான் குக்கர் வைக்க வேண்டிய சூழல். என்னவர் கோபாலண்ணா வீட்டில் சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார். அதனால், ஃபோன் பண்ணுவதற்கு முன்னாடி, இவருக்கு ஒரு வேளை தெரிந்து இருக்குமோ என்று இவரிடம் கேட்டேன். ”குக்கர் வெயிட் எங்கே வைப்பான்னு உங்களுக்கு தெரியுமான்னா” என்றேன். உடனே இவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு,” எங்க தங்கம் பாட்டி சொல்றாப்லன்னா ” இருக்கு என்றார்.” என்ன சொல்லுவா தங்கம் பாட்டி?” என்றேன். ”பிச்சைக்கு வந்த பிராமணரே, பெருங்காயச் சொப்பைக் கண்டீரா”ன்னு கேக்கற மாதிரி இருக்குன்னார். பாட்டியோட ஜோக்ஸ் டைமிங்கோஸம் ரொம்ப ஃபேமஸ்! என்ன ஒரு டைமிங் பார்த்தேளோ? அந்த ஆளே பிச்சை எடுக்க வந்திருக்கான். அவன் கிட்டக்க போய் ”பெருங்காயச்சொப்பு எங்கே”ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாம கேட்டு இருக்கேனாம்! இந்த பேச்சு வழக்கெல்லாம் அழிந்து போய்விடுமோ?



கோவிந்தராஜபுரத்தில் ரமணி ராஜான்னு சகோதரர்கள் இருந்தாகள். ஒர் சாமவேத பண்டிதர் திண்ணையில் அமர்ந்திருக்க, இவர்கள் மரியாதை நிமித்தம் அவரை நெருங்கி, குசலம் விசாரித்திருக்கிறார்கள். அவர்கள் பேசியவை கீழ்க்கண்டவாறு:

மாமா:                         “ஆரது? ரமணியா? என்ன பண்றாய்?”
ரமணி அண்ணா:   ”மாமா,  நான் பேங்கல இருக்கேன்”
மாமா:                         “ நீ என்னவாக்கும் படிச்சாய்’
ரமணி அண்ணா:   ”நான் பீகாம் படிச்சேன் மாமா”
மாமா:                          ”ராஜா, நீ என்னவாக்கும் பண்றாய்’
ராஜா அண்ணா:     “நான் கோயம்புத்தூர்ல வேலையா இருக்கேன் மாமா”
மாமா:                           ”நீ என்னவாக்கும் படிச்சாய்?”
ராஜா அண்ணா:     “மாமா, நான் எம் காம் படிச்சேன்”
மாமா:                           ”ஓஹோ, அப்போ நீ பீ காம் படிக்கலையோ”

 கூடியிருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினார்களாம்.

ராமைய்யர் என்ற மிகப்பிரபலமான சமயற்காரர், இவருடைய நெருங்கிய நண்பர் ரகுவிடம் சமயல் கலை பற்றி பேசிண்டு இருந்தாராம். பேச்சு வாக்கில், ”டே ரகு, ஒரு கிலோ உளுத்தம் பருப்புல எத்தரை ஜாங்கிரி வரும் தெரியுமோடா நோக்கு?” என்று கேட்டிருக்கிறார். ரகு, ”தெரியாதே மாமா” என்று விழிக்க, மாமா, ”என்னடா நீயெல்லாம் பீகாம் படிச்சாய்?” என்று போட்டாராம் ஒரு போடு.. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒரே கல கல!

திருட்டு தம் அடிக்கும் ரசிகப்பெருமக்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜோக்கு! இவர்கள் நண்பன் ஒருவனுக்கு புதிதாக தம்மடிக்கும் பழக்கம் ஏற்பட்டுத்தாம். கல்பாத்தி முனியப்பன் கடையில் போய் சிகரெட்டு கேட்டிருக்கிறான். அந்த கடைக்காரர் இவன் கையில் சிகரெட்டை வைக்கவும் , நண்பனின் அப்பா வருவதற்கும் சரியாக இருந்ததாம். உடனே நண்பன் சமாளிக்கும் நோக்கோடு போட்டானே ஒரு போடு." என்னவாக்கும் சந்தனத்திரி(ஊதுபத்தி) கேட்டா சிகரெட்டை குடுக்கறாய்? "

Friday, March 5, 2010

மனம் ஒரு குரங்கு 11

மனம் ஒரு குரங்கு வேணும் வேணும்ன்னு கேட்டு கோடானுகோடி ஈமெயில்கள் குவிந்ததினால், (ஹீ ஹீ) இந்த பகுதி இடம் பெறுகிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

போனவாரம் இங்கு நல்ல மழை. அபுதாபியில் மழை வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஆனால் சுதா மன்னி ஃபோனில் பேசியபோது,  ஷார்ஜாவில் பயங்கர வெள்ளம் என்றார். இப்போது மெதுவாக வெயில்காலம் ஆரம்பித்து விட்டது. இப்போ இங்கு ஒரே பொடிக்காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி வானிலையில் வீட்டை பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான். எவ்வளவுதான் கதவு ஜன்னல்களை மூடினாலும் மிக நுண்ணிய மணல் துகள்கள் வீட்டுக்குள் புகுந்து விடும். சதா சர்வ காலமும் மாப்பும் விளக்குமாறும் கையுமாகத்தான் இருக்க வேண்டி இருக்கும்.


நேற்று ரொம்ப நாளைக்கப்புறம் முரூரில் இருக்கும் கார்ரெஃபோர் போய் இருந்தோம். எனக்கென்னமோ கார்ரெஃபோர் அவ்வளவாக பிடிப்பதில்லை. அவ்வப்போது ஒரு சேஞ்சுக்கு வெவ்வேறு கடைகளுக்கு போவது. என்ன தான் ரிசெஷன் இருந்தாலும் கூட்டத்துக்கு குறைவு இருப்பதில்லை. எல்லோருக்கும் பல்க் பயிங்க்(bulk buying) எப்படி சாத்தியப்படுகிறது என்று ஒவ்வொரு முறை இந்த கடைக்கு போகும்போதும் வியக்காமல் இருப்பதில்லை! ஆளுயர ஷாம்பூவை வாங்கிக்கொண்டு போனால் எனக்கெல்லாம் 2 வருடம் வரும்.(இல்லையோ பின்னே, அறுபதடி கூந்தலாச்சே!)அடுத்த வாரமே அடுத்த பாட்டில் வாங்க வந்து விடுகிறார்கள்! இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே! எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை!



போன மாதம் துவரம் பருப்பு விலை கன்னாபின்னா என்று ஏறி விட்டது! முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்டது. இதே துவரம் பருப்பு மற்ற கடைகளில் 9 என்றால் கார்ரெஃபோரில் 9.90!!! டூம்ச்!



காய்கறிகள் எல்லாம் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். அதிலும் நம்மூர் அயிட்டங்கள் எல்லாம் அவ்வளவாக கிடைக்காது. மொத்தத்தில ஐரோப்பியர்கள் தான் அதிகம் இந்த கடையை விரும்புகிறார்கள். ஏஸர் கம்பியூட்டர்ஸில் வேலை பார்த்த போது, ஒரு கஸ்டமர், இந்தக்கடையில் எலக்ட்ரானிக்ஸெல்லாம் பகல் கொள்ளை என்று கூறினார்.சேல்ஸில் கேட்ட பொழுது, மார்ஜின் அவர்கள் அப்படி வைக்கிறார்கள் என்றனர். அதனால் இங்கு வர ஒரு மோட்டிவேஷன் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் வேடிக்கை பார்த்து பொழுது போக மிக நல்ல இடமாக காட்சி அளித்தது.



சில மாதங்களாக காயின் ட்ராலி சிஸ்டம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தி டெர்மினல் என்ற படத்தில் டாம் ஹான்க்ஸ் பண்ணியது போல சில நம்மூர்க்காரர்கள் அந்த ஒரு திராம் காயினுக்காக எங்கேயோ விடப்பட்ட ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வந்து ஸ்டாண்டில் போட்டு ஒரு திராம் எடுத்துக்கொள்கிரார்கள். நம் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் பட்டாணிகள் இதைவிட கெட்டிக்காரர்கள். எதற்கு கொண்டு போய் கடையில் விட வேண்டும்? என்று பேசாமல் கம்பியைப்போட்டு நிமிண்டி, அந்த ஒரு திராம் காயினை சாமர்த்தியமாக அபேஸ் செய்து விடுகிறார்கள்.



போன வாரம் ஈ மசாலாவில் இரவு 8 மணி படத்துக்கு காத்திருந்து பார்த்தபோது ஜிலேபியை பிழிந்து போட்டிருந்தார்கள். துள்ளிக்குதித்துக்கொண்டு ஹையா என்று பார்க்க உட்கார்ந்தேன். சூப்பர் குட் வழங்கும் என்று போட்டவுடன் எனக்கு பொறி தட்டி, சானலை மாற்றி இருந்தால் நான் கெட்டிக்காரி! அதான் இல்லையே... அதன் பிறகு எப்படியோ ஒரு மாதிரி குத்துமதிப்பாக தெலுங்கு எழுத்துக்களை படித்தும் விட்டேன். என்னமோ கோரிண்டாக்கு என்றிருந்தது.. ஆஹா.. கோதாவரி மாதிரி ‘கொம்ப்ப தீஸீ’ சேகர் கம்முல படமா இருக்குமோன்னு ஆசையா உட்கார்ந்தா, நம்ம டாக்குடர் ராஜசேகர் (ஓவரா)நடிச்சிருந்தார். வழக்கம்போல அண்ணா தங்கை பாசம். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் ஏகப்பட்ட மேக்கப்புடன் மெகாசீரியல் டைப்பில் இருந்தார்கள்.  என்னால முடியல. முதல் 15 நிமிடத்துக்குள் ஏகப்பட்ட லாலாலா கோரஸ்கள், கை காலை (புல்லரித்து) பிறாண்டி, ரத்தம் கொட்ட வைத்த செண்டிமெண்டு காட்சிகள்! விக்ரமன் எஸ் ஏ ராஜ்குமார் கூட்டணியா இருக்குமோ என்னமோ.. யப்பா.. கடுப்ஸ் ஆஃப் இண்டியா. இவங்கல்லாம் எப்போ திருந்துவாங்க?



அப்படியே சானலை மாத்தி சோனிக்கு போனோம். தூமகைன் என்று டைட்டில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது. இவர் தன் லாப்டாப்பை முறைத்துப்பார்த்துக்கொண்டே கிருபானந்த வாரியார் மாதிரி குரலை செருமிக்கொண்டு துமகைனுன்னா என்ன? மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன? தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா? வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு. அதெப்படி இன்ஸ்டண்டா இப்படி எல்லம் இவருக்கு தோணுதோ? சூப்பர்!

Wednesday, March 3, 2010

தி(ரள்) நகர்!!!

Where is this T.Nagar?

Nobody knows accurately. It is just this lovely place in Chennai, which if you decide to visit for the second time, you get a free seasonal pass for a window-side bed in Kilpauk hospital.



Sounds like a holiday package..what if I manage a third visit?

You get one year free admission at Yervadi, next to Sethu Vikram. Cost of chain included in the package.



Oh! You said it's a lovely place. Do people go there for sight-seeing?

Kinda yeah, it is Chennai's own version of "Suicide Point"



Can we shop there?

There are just two things you can do at T.Nagar. One,shop and two,die. The former is optional though.



My wife wants some good silk sarees. Where do I take her?

Push her into Pothys and run. This is your best chance to live with some self respect in future.



What if I stay?

You automatically qualify for Bihar elections.



What if I go in too?

If you are Gopi, you'll come out as Gopi 65.



I heard gold is pretty cheap at some place there?

Very cheap yeah, not just the rate. I guess you are talking about Ranganathan Street, Annachi shop.



Ya ya. How do I go there?

You just need to stand at the start of that street. Close your eyes. Open your eyes. You are inside Annachi shop, courtesy : fellow shoppers.



Can I take my vehicle?

Shut up! Even Laloo wouldn't do that!



Oh is it very crowded?

Yeah, by the time you count the number of people around you, they can telecast Junoon twice.



Junoon?? What's that?

Kadavule! Paathathu illiya Junoon neenga? Periya athu megaserial. Pesuvaanga maathi maathi thamizh athula.



Oh! By the way, do men shop in T.Nagar?

Wise men stay away. Married men do shop.



I heard there are lots of platform shops?

There is no platform. Only shops.



Whatever, how good are they?

Very good infact. You get all sortsa brands including Nykee, Ribok and Adeedas. At cheap rates that too!



Hey isn't that phony? The spellings are all messed up!!

Naah. They have been changed according to numerology, that's all.



Fine. Is there any good restaurant there?

Ya, Saravana Bhavan.



Wow! What would I get there for, say 50 rupees?

Quite a lot. Half a dosa, 5 ml Sambhar and some pebbles.



Pebbles? Why??

Huh, you are dumber than a crow! To raise the level of sambhar ofcourse.



No chutney is it?

They have it in a big vessel near the entrance. You are allowed to take a peek.



That's bad. But I heard there's a hot chips too?

You'll be a hot chip yourself once you step into Ranganathan Street.



How is the air pollution level in T.Nagar?

One deep breath and you'll die on the spot, money back guarantee.



So many issues, eh? Finally, what's the best thing about T.Nagar?

Variety. So many shops, so many dresses and so many accessories. Even if you escape death by other mean, you'll be confused to death!
Related Posts with Thumbnails