Pages

Showing posts with label harish. Show all posts
Showing posts with label harish. Show all posts

Saturday, May 1, 2010

பிடித்த பாடகர்கள்

உங்க எல்லோருக்குமே தெரியும் என் குலதெய்வம் SPBன்னு. இவருடைய பல பாடல்கள்ன்னா எனக்கு உயிர். மண்ணில் இந்த காதல், அழகான ராட்சசியே, தீண்டாய் இப்படி லிஸ்டு போயிண்டே இருக்கும். இருந்தாலும் ஒரு பாட்டு மட்டுமே போடக்கூடிய சூழல். அதுனால என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டுன்னு சொல்லக்கூடிய இந்த பாட்டை போட்டுடறேன். ஃபேவரைட் சிங்கர், ஃபேவரைட் ஆக்டர்,  இப்படி எல்லாமா சேர்ந்து அமைஞ்ச பாட்டு தான் நீல வான ஓடையில்... ஆஹா..  கங்கை அமரன் இசைன்னு சமீபமாத்தான் தெரிஞ்சது. கலக்கிட்டார் போங்க.




ஷங்கர் மஹாதேவன். இவர் மிக அருமையான  பாடகர். இருந்தாலும் பாவம் இப்போதெல்லாம் குத்து பாட்டு ஹீரோ இண்ட்ரோ சாங்குக்கு தான் இவரை அணுகுகிறார்கள். அது எனக்கு வருத்தமே. குலதெய்வம் மாதிரி மூச்சு விடாமல் இவர் பாடிய ப்ரெத்லெஸ் என்ற ஆல்பம் கேட்டு வாய்பிளந்தேன். நல்ல ஒரு தனித்துவம் வாய்ந்த குரலின் சொந்தக்காரர். எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் இந்த பாட்டு தான்.




சின்னக்குயில் சித்ராவின் பல பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். இருந்தாலும் இந்த பாட்டு அவங்க பாடுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டாங்களாம். நந்தனம்ன்னு ஒரு மலையாளப்படம் பாட்டும் அப்படித்தான். இருந்தாலும் இதுல இருக்கற மெலடி எனக்கு ரொம்ப இஷ்டம். நல்ல குரல் வளம், அருமையான பாவம், செழிப்பான இசையறிவு இதெல்லாம் மட்டும் இல்லாம, தன்னடக்கம், எப்போவும் சிரித்த முகம் இதெல்லாம் பார்க்கும்போது இவங்களை பொறாமைப்படாத பெண்களே இருக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லலாம். 




சுஜாதா. இவங்க குரல் தேன்ல குழைச்ச பலாச்சுளை மாதிரி அப்படி ஒரு தித்திப்பு. இவங்களும் இதே டைப்பு சிரிச்ச முகம், அருமையான குரல் வளம், இசையறிவு, பாவத்துடன் பாடும் திறன் எல்லாம் படைத்தவர். என்னுடைய பெர்சனல் ஃபேவரைட்” உண்மை சொன்னால் நேசிப்பாயா” என்ற ஆய்த எழுத்து பாடல். இருந்தாலும் இவர் பாடினாலே ஒரு தனி ரிச்னஸ் கிடைத்து விடும் எந்த பாட்டுக்கும். எல்லாத்துக்கும் மேலே சிரிச்சுண்டே பாடுற மாதிரி இருக்கும். கேட்கும்போதே புத்துணர்ச்சி கிடைக்கும்.

 
 



உன்னிக்கிருஷ்ணன் இவர் பாட்டை முதன் முதலா கேட்டது காதலன் படத்தில் தான். கர்நாடக இசையிலிருந்து மிக எளிமையாக சினிமா இசைக்கு வந்து கோலோச்சியவர். காதலன் படத்துல வரும் ’என்னவளே’ பாட்டு சூப்பர் ஹிட் ஆனாலும் சுப்புடு போன்ற இசை விமர்சகர்களிடம் ரொம்ப கெட்ட பேர் வாங்கித்து. கடுமையான விமர்சனத்தால் பாதிப்படையாமல், உன்னி தன் சினிமா பாட்டு வாழ்க்கையும் கர்நாடக சங்கீத வாழ்க்கையும் நன்றாக சமன் செய்தார். அருமையான பாவங்கள், தேர்ந்த தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் இந்த பாடகரின் சொத்து. ஏ.ஆர்.ஆரின் இசையில் இது எப்போதும் நான் விரும்பிக்கேட்கும் பாடல்களின் ஒன்று. சில சமயம் அழுவதுமுண்டு. வைர வரிகளாச்சே!


என்ன தான் ஐஞ்சு பாட்டு தான் போடலாம்னாலும் என்னால இந்த பாட்டு போடாம இருக்க முடியலை. அருமையான இசை, உன்னி பாம்பே ஜெயஸ்ரீ குரலில் குறுந்தொகை மாதிரியான பாடல் வரிகள் ரசிக்காமல் இருக்க முடியாது.



இத்துடன் இந்த பகுதி நிறைவடைந்தாலும் இன்னும் பல பாடகர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும். இந்த் மாதிரி ஐஞ்சே ஐஞ்சு பாடகர்களையும் பாடல்களையும் தொகுத்து வழங்கச்சொன்ன கார்த்திக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :)) இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)

நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது,

பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா
எங்கள் ஸ்ரீராம் அண்ணா
பொற்கொடி
ஜெகன் நாதன்
ட்ரீமர்
பத்மனாபன் அங்கிள் ச்சே ச்சே, அண்ணா
திருமதி கீதா சாம்பசிவம்
அப்பாவி தங்கமணி
R.கோபி

மீண்டும் இதே மாதிரி ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடை & வடை பெறுவது உங்கள் அநன்யா... அநன்யா... அநன்யா............
Related Posts with Thumbnails