Pages

Sunday, June 30, 2013

அப்பாவியுடன் ரெண்டு நிஜ அப்பாவிகள்!

அந்த நிஜ அப்பாவிகள் வேற யாருமில்லீங்க, நானும் கோவிந்த் அண்ணாவும் தான்.. அதான் அப்பாவியின் ரங்ஸ்! ஐய்யோ பாவங்க அவர்! சரி விஷய்த்துக்கு வரேன்.. நேத்திக்கு கோவைக்கு அலுவல் விஷயமா போயிருந்தேனா.. அப்போ இவளை கார்த்தாலேயே கூப்பிட்டு, சாயந்திரம் மீட்டலாம்ன்னு சொல்லி இருந்தேன். இவளும் ரொம்ப துணிகரமா ஓக்கேன்னு சொன்னான்னு சந்தோஷப்பட்டா.. அது இவ்ளோ பெரிய சதியா இருக்கும்ன்னு நான் நினைக்கலை! 

3 மணிக்கு கூப்பிட்டு, நீ நேரா என் ஹோட்டல் ரூமுக்கு வந்திடுன்னு சொன்னேன்.. ”நான் இப்போ புடவை எடுக்க வந்திருக்கேன். எனக்கொண்ணு எங்க அத்தைக்கு ஒண்ணுன்னு ” சொன்னா. சர்த்தான் களுதையை எடுத்துட்டு வரட்டுமேன்னு நானும் 4 மணி வரை பொறும்ம்ம்ம்ம்மையா காத்துண்டு இருந்தேனா.. இவளை ஆளையும் காணோம் ஃபோனையும் காணோம். சென்னை சில்க்ஸ் 2 நிமிஷ நடைதானேன்னு நானே கிளம்பி(மூஞ்சி கூட அலம்பாமல்) போனா.. அம்மணி கிரவுண்ட் ஃப்ளோர்ல தான் இருக்கா. என்னைக்காண பிள்ளையார் சிலை கிட்டே ஓடோடி வந்து, என் பக்கத்துல இருந்த ஹேங்கரில் தொங்கிய புடவை என்ன விலைன்னு பார்த்தா! ”அப்புறம் அநன்ஸ், எப்படி இருக்கே, என்ன வேலை, இந்த புடவை ஓக்கேவா, கார்த்தாலே எத்தனை மணிக்கு வந்தே, இந்த பார்டர் சரியில்லை இல்லே? மத்தியானம் எங்கே சாப்பிட்டே, இது கலர் அடிக்கிதோ?, க்ளையண்ட் ஆபீஸ் எங்கே?, இதெல்லாம் என்னால காலேஜுக்கு கட்டிண்டு போக முடியுமோ?”போன்ற அதி முக்கிய(!) விஷயங்களை பத்தி கேட்டா.நானும் குழம்பிய படியே ரெண்டு மூணு கேள்விகளுக்கு தெரிஞ்ச மட்டுல பதிலைச் சொன்னேன். 

மிக குழப்பமான முக பாவத்துடன் ஆக்சுவலி (pava) பாவத்துடன் அவள் ரங்ஸ் நின்றிருந்தார். கோவிந்தண்ணா ரொம்ப சாது, படு சாஃப்ட் டைப்! இதை கட்டிண்டு என்ன பாடு படுறாரோன்னு நினைக்கும்படி இருக்கார்.

அடுத்ததா நாம சந்திக்க இருக்கும் அதி முக்கியமான கேரக்டர் நம்ம சேல்ஸ்மேன் சிங்காரவேலு(பெயரில் என்னப்பா இருக்கு? ஏதோ ஒரு பையன், விடுங்களேன்) அந்த சிங்காரவேலுவின் முகத்தில அதி பயங்கர குழப்ப ரேகைகள் ஓடின. அது ஏன்னு அப்புறம் சொல்றேன்.  அப்பாவி ரெண்டு ரெண்டு ஹேங்கராக அந்த சி.வேலுவிடம் குடுத்துண்டே வந்தா. அவனும் எல்லாத்தையும் ஒரு இடத்தில் அக்காமடேட் பண்ணிட்டு வந்தான். அவனில்லாத சமயத்தில் கோவிந்தண்ணாவின் பத்து விரல்களில் 300 ஹேங்கர்களை திணித்தாள். ஹேய், இது நல்லா இருக்குல்லே?ன்னு நான் சொன்னா, உடனே அதை எடுத்து அண்ணாவின் காதில் தொங்கவிட்டா, பின்னே கையெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாச்சே! போறபோக்கில் சட்டை பட்டன் ஹோலில் கூட மாட்டிடுவா போல இருக்கேன்னு அண்ணா டென்ஷன் ஆகி சிங்காரவேலா... சிங்கார வேலான்னு கத்திண்டே சேல்ஸ்மேனை நோக்கி ஓடினார்.

இந்தக்கலர் ஏற்கனவே என் கிட்டே இருக்கு, இந்த பார்டர் நல்லா இல்லே, வொயிட் ஃபால் கடையில கிடைக்காது, இந்த மெட்டீரியலை பீக்கோ பண்ண முடியாது, பிளவுஸ் ராமராஜன் மாதிரி இருக்கு, இதே தான் போனவாரம் (!!!) வந்து வாங்கினேன், டல்லா இருக்கு, வெளிச்சத்துல நல்லாயில்லை, வேண்டாம், நல்லாயில்லை, சரியில்லை, துணி உழைக்காது, இழை சரியில்லை, பிஞ்சிருக்கு, இதுல ஒரு லைட் ஷேட் வெச்சிருக்கேன் இப்படி ஷார்ட்லிஸ்ட் பண்ணி வெச்சிருந்த 2478 புடவைகளிலிருந்து எல்ல்ல்ல்லாவற்றையும் நீக்கினாள்.  மீதமிருந்தது ஒரு 4 புடவை தான். அந்த நாலையும் 2 மணிநேரம் திருப்பித் திருப்பி பார்த்தாள். நானும் கோவிந்தண்ணாவும் தேமேன்னு நின்னுண்டு இருந்தோம். அனன்ஸ் நீ என்ன சொல்றே.. ஏங்க, நீங்க?ன்னு ரொம்ப பவ்வியமா ஒரு 550 வாட்டி கேட்டா! எனக்கு வந்த எரிச்சலுக்கு ஓனர்கிட்டே போய் உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு சொல்லலாம்ன்னு தோணிச்சு. எனக்கே இப்படி தோணுதே, கோவிந்த் அண்ணாவுக்கு என்னெல்லாம் தோணி இருக்கும்? அந்த சிங்கார வேலு நம்மளை அனுப்பிட்டு ஒரு ஓரமா உக்காண்டு குலுங்கி அழுதிண்டு இருந்தான். யாரு பெத்த புள்ளையோ என்னமோ?

ஒரு வழியா ஓக்கே பண்ணி அந்த 4 புடவைக்கு பில்லை போட்டு பணம் கட்டிட்டு வந்தப்போ தான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இப்போ சல்வார் பாக்க போகலாம். ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் தான்னு என் தலையில கல்லைத்தூக்கி போட்டா! நானும் அண்ணாவும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்காம, ஓ.. போலாமே.. அதுக்கென்னான்னு எச்சில் முழுங்கிட்டு மேல லிஃப்ட்ல போனோம். பின்னே 4 புடவைக்கு 4 மணி நேரம் நின்னிருக்கோமே.. கால் வலி. 

அங்கே போய் இது வாண்டாம், அது வாண்டாம், பூ சரியில்லை(அதான் எங்க காதுல பூ வெச்சாச்சே), துப்பட்டா மோசம் (நான் துப்பட்டா?) , இதே கலர்ல போன வாரம்(!!!) (மறுபடியுமா?)வந்து எடுத்தேன், இப்படியெல்லம பெனாத்திண்டே சுமார் ஒரு மணி நேரம் நடந்தா. நான் பெர்ஸனலா ரெண்டு செலக்ட் பண்ணி ஷார்ட்லிஸ்டிங்க்கு அனுப்பினேன், I kept my fingers crossed. இல்லையோ பின்னே.. இவ இந்த வாட்டி ஷார்ட்லிஸ்ட் பண்ணிது ஒன்லி 5 தான். நான் போன வாரம் எது எடுத்தேன் தெரியுமான்னு அவ கொண்டு வந்து காட்டின ட்ரெஸ் செம்ம்ம்ம சூப்பர். நான் சொன்னேன், ”ATM, இதை போட்டுண்டு ... அப்படியே “ன்னு நான் சொல்லிண்டு இருக்கும்போது அவள், கோவிந்த் அண்ணா, சேல்ஸ்கேள், அங்கே சுடிதார் பார்த்துண்டு இருந்த இளசுகள் எல்லாரும் என்னை கவனிக்க, நான் கண்ட்ன்யூ செய்தேன்” பத்திரமாகவும் மெதுவாகவும் அந்த கரகத்தை தலையில எடுத்து வெச்சுக்கணும்”ன்னு முடிக்கவும் எல்லாரும் ‘கொல்ல்ல்ல்ல்’. மன்ன்ன்ன்ஞ்சள்ன்னா அப்படி ஒரு ம்ன்ன்ன்ன்ஞ்சள்.. பேசாம புரட்டாசி மாசம் போட்டுண்டா செம்ம்மையா உண்டி குலுக்கி பெரியாளா வரலாம்! 

எப்படியோ நானும் அண்ணாவும், குத்துயிரும் கொலையுயிருமாக தப்பிச்சோம் பொழைச்சோம்ன்னு வெளியில வந்ததுக்கப்புறம் தான் தெரிஞ்சுது இவ வாரா வாரம் சென்னை சில்க்ஸுக்கு வந்துடுவாளாம்.. அதான் அந்த சிங்காஅரவேலுவுக்கு வயித்துல அமிலம் சுரந்திருக்கு.. மூஞ்சியே விளக்கெண்ணய் குடிச்சாப்புல அப்படி ஒரு எக்ஸ்பிரஷன். இவங்க கார் பார்க்கிங்ல உள்ளே போனாலே அந்த பார்க்கிங் செக்யூரிட்டி உடனே சென்னை சில்க்ஸுக்கு வொயர்லெஸ் தகவல் குடுத்துடறானாம்.. அவங்க இம்மீடியட்டா ஷட்டரை போட்டுடறாங்களாம். உள்ளே இருக்கற கஸ்டமர்ஸை எல்லாம் பின்புற வேர்ஹவுஸ் எக்ஸிட் வழியாத்தான் விடுறாங்களாம்!. ஐய்யய்யோ கடை லீவான்னு இவ பி.எஸ்.ஆருக்கு போனா, அங்கேயும் கடை அடைப்பு தானாம். பின்னே, என்னதான் காம்பிடேட்டர்ஸானாலும் கடைக்காரர்களுக்குள் இந்த அளவுக்கு நட்பு இருக்க முடியுமான்னு நான் வியந்தேன். செ.சி முதலாளி உடனே PSRக்கு SMS அனுப்பிடுவாராமே! அந்த சிங்காரவேலு அனேகமா ரிஸைன் பண்றதுக்கே இவ தான் காரணமாம்.

 கோவையில இருக்கற ஸ்ரீதேவி சில்க்ஸ், கணபதி சில்க்ஸ், மஹாவீர்ஸ், ஷோபா போன்ற கடைகள் ஏன் விளம்பரம் செய்யறதில்லைன்னு இப்போ உங்களுக்கு நன்னா புரிஞ்சிருக்குமே? 

இந்த ரகளையில எனக்கு வேற அம்மணி ஒரு புடவை வாங்கி பரிசளிச்சா! நான் இவ கூட ஷாப்பிங் போன பாவத்துக்கு இவள் எனக்கு 15000 ரூபாய்க்கு பட்டுப் புடவையும் கோல்டு ஃபேஷியலும் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கணுமாக்கும். ஆனாலும் அந்த ஒரு புடவைக்கே நான் கண்ணீர் மல்கி பாட்டெல்லாம் பாடினேன். ”கருணை தெய்வமே.... அப்பாவியே.... காண வேண்டும் உன்... கொட்ட்ட்டாவியே”.... அப்படீன்னு.. பின்னே என்னங்க? ஷாப்பிங் போனா ஒருத்தி டயர்டே ஆகமாட்டாளோ? 

திருச்சி சாரதா சில்க்ஸ்ல என் ரங்ஸ் சேல்ஸ்மேனிடம் கேட்ட கேள்வி மறக்கமுடியவில்ல்லை... மறக்க முடியவில்லை! ஏங்க இவங்களுக்கெல்லாம் காலே வலிக்காதா? 

வெளியில் வந்து ஆளுக்கு 1.5 முழம் பூ வாங்கிண்டோம். பூ வெச்சுக்க ஹேர்பின் இல்லை.. சேஃப்டி பின்ல வெச்சுவிடுறேன் வான்னு சொன்னா. எனக்கு பயமான பயம், சேஃப்டி பின்னால பின் மண்டையில குத்திக் குத்தி சீழ்தலை சாத்தனார் மாதிரி ஆக்கியுட போறான்னு.. ச்சே.. அவ ரொம்ப நல்லவ.. அந்த பின்னை அவிழ்க்கவேமுடியாம வெச்சுவிட்டா.. சென்னைவரக்கும் அந்த வாடல் பூவோட ஆட்டோக்காராளெல்லாம் தெரிச்சு ஓடுறாப்புல் அவ எனக்கு வெச்சு விட்டிருந்தா! நீ என்னென்ன செய்தாலும் புதுமை.... அப்பாவி.. 

அப்புறம் லாட்ஸில் ஷூ வாங்கப் போனோமா, அங்கே மெட்டி மாத்தணும், 35 டீ கப்ஸ் வாங்கணும், ஆணி வாங்கணும், ஸ்க்ரூ வாங்கணும், புக் வாங்கணும்ன்னு தெனாலி மாதிரி கண்டினுவஸா சொல்லிண்டு இருந்தா. எதுக்குடீ 35 கப்ஸ்ன்னு கேட்டா, நான் இது வரைக்கும் வீட்டுப்பாத்திரங்கள் ஏதாவது வாங்கி இருக்கேனான்னு கேக்கறா! அதானே, அதுக்கும் சேர்த்து தான் புடவை வாங்கிடுறியேன்னு நான் சொல்ல, ”இனிமே நீ துணி வாங்கினா அதை கிச்சன்ல தான் வைக்கணும்”ன்னு அண்ணா வெச்சாரே ஒரு ஆப்பு! 

அப்புறம் அன்னபூர்னாவுல என் கிச்சடியெல்லாம் எடுத்து சாப்பிட்டுட்டு, தன்னோட பஜ்ஜியை ஒண்ணு கூட எனக்கு குடுக்காம காலி பண்ணிட்டு, சூடான ஃபில்டர் காப்பியை கங்காஜலமாக்கி குடிச்சுட்டு இன்னும் கொஞ்ச நேரம் அளவளாவிட்டு வருத்தத்துடன் பிரிஞ்சோம்.. 

லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for life! அண்ணா தான் பாவம்! :))))




20 comments:

sathishsangkavi.blogspot.com said...

கோவையின் தட்பவெட்ப நிலையைப்பற்றி சொல்லவே இல்ல...

கௌதமன் said...

கூகிள் தகராறு பண்ணுது. ஒருவேளை கூகிள் அப்பாவியின் டியரஸ்ட் நண்பியோ? அப்பாவிக்கு எதிரான கமெண்ட் எதுவும் போடவிடாது போலிருக்கே! பதிவை இரசித்துச் சிரித்தேன்.

ஹுஸைனம்மா said...

டூ பேட் அப்பாவி!! இப்படியா விருந்தாளியை துணிக்கடையிலும், ஹோட்டலிலும் பார்த்து, பேசி அனுப்புறது? தமிழர்கள், அதுவும் கொங்கு நாட்டுக்காரங்க விருந்தோம்பல்ல பெஸ்ட் இல்லியோ? வராம வந்தவங்களை வீட்டுக்கு அழச்சிட்டுப் போய், “அப்பாவியின் ஸ்பெஷல்” இட்லி கொடுத்திருக்க வேணாமோ? யூ ஆர் டூ பேட் அப்பாவி!!

ஹுஸைனம்மா said...

//லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for life!//

இந்தப் புகழ்மாலை இடலி தராததினாலா? :-)))

சாந்தி மாரியப்பன் said...

//அப்பாவியின் ரங்ஸ்! ஐய்யோ பாவங்க அவர்!//

அது தெரிஞ்சதுதானே.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்க ..

//இந்தக்கலர் ஏற்கனவே என் கிட்டே இருக்கு, இந்த பார்டர் நல்லா இல்லே, வொயிட் ஃபால் கடையில கிடைக்காது, இந்த மெட்டீரியலை பீக்கோ பண்ண முடியாது, பிளவுஸ் ராமராஜன் மாதிரி இருக்கு, இதே தான் போனவாரம் (!!!) வந்து வாங்கினேன்//

இதே இஷ்டைல்ல கவுண்டமணி+செந்தில் காம்பினேஷன்ல ஒரு மிட்டாய் ஜோக் வரும்.

இப்ப இன்னொருக்கா வாசிச்சேன். இப்பவும் சிரிச்சுச் சிரிச்சு கண்லேந்து தண்ணியாக் கொட்றது. அடப்பாவி மட்டுமல்ல அனன்ஸும் ராக்ஸ் :-)

Geetha Sambasivam said...

//அந்த சிங்கார வேலு நம்மளை அனுப்பிட்டு ஒரு ஓரமா உக்காண்டு குலுங்கி அழுதிண்டு இருந்தான். யாரு பெத்த புள்ளையோ என்னமோ?//

பாவம் இல்ல, அந்த சிங்காரவேலு! அது சரி, அப்பாவியை ஏன் கடையிலே சந்திச்சீங்க?? வீட்டுக்கு ஏன் போகலை!

தெரிஞ்சு போச்சு, அப்பாவி இட்லியைக் கொடுத்துடப் போறாங்களேனு பயந்து தானே போகலை. அப்பாடா! அநன்யா அக்காவையும் பயமுறுத்த ஒண்ணு கிடைச்சிருக்கே!

சிரிச்சு மாளலை! :))))) கடைசியிலே ரெண்டு பேரும் சந்திச்சாச்சு! கோவிந்த் பாவம் தான், அதான் இங்கே பார்க்கிறச்சயே தெரிஞ்சுடுத்தே!

'பரிவை' சே.குமார் said...

அக்கா துணிக்கடையில் உங்களை காய வச்சதை நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க... சிரிப்பை அடக்கமுடியவில்லை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சர்த்தான் களுதையை எடுத்துட்டு வரட்டுமேன்னு //
ச்சே ச்சே... நான் எங்க கழுதைய எடுக்கறேனேன்... பொடவை தானே... சரி விடு... எனக்கு தெரிஞ்சத நான் சொன்னேன், உனக்கு தெரிஞ்சத நீ சொல்லி இருக்கே...ஹி ஹி...:)


//மூஞ்சி கூட அலம்பாமல்//
அலம்பிட்டாலும்... ஹையோ ஹையோ...:)


//நானும் குழம்பிய படியே ரெண்டு மூணு கேள்விகளுக்கு தெரிஞ்ச மட்டுல பதிலைச் சொன்னேன்//
ஹ ஹ ஹ... இது செம செம செம

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கோவிந்தண்ணா ரொம்ப சாது, படு சாஃப்ட் டைப்//

பாவமா நடிக்கரத வெச்சு இப்படி தப்பு கணக்கு போடாதே அனன்யா... ஹ்ம்ம்...


//சேல்ஸ்மேன் சிங்காரவேலு//
ஹ ஹ ஹ... சூப்பர் பேரு அந்த ஆளுக்கு... அடுத்த வாட்டி போகும் போது சொல்லிடறேன்...:)


//மீதமிருந்தது ஒரு 4 புடவை தான்//

இல்லையே, கவுண்ட் தப்பா இருக்கே... ஒ, நீ மாத்ஸ்ல ராமனுஜினு மறந்துட்டேன்...:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு சொல்லலாம்ன்னு தோணிச்சு//

ஐ... பேஸ்மென்ட்ல தான் ஸ்டாக் கோடான் இருக்காம்... நேரடியா அதுல இருந்தே சூப்பரா இன்னும் நல்லா நெறைய வெரைட்டி பாத்து செலக்ட் பண்ணலாம்... நல்ல ஐடியா குடுத்ததுக்கு தேங்க்ஸ் அனன்ஸ். அடுத்த வாட்டி போகும் போது கேட்டுடறேன்...;)


//பேசாம புரட்டாசி மாசம் போட்டுண்டா செம்ம்மையா உண்டி குலுக்கி பெரியாளா வரலாம்//

அவ்வ்வ்வ்... அவ்ளோ மோசமாவா இருந்தது. சரி விடு, திருஷ்டியா ஒண்ணு இருந்துட்டு போவட்டும். அதான் நீ இருக்கியேனு காலி பண்ணினேன்னா கொன்னுடுவேன் சொல்லிட்டேன்


//கோல்டு ஃபேஷியலும் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கணுமாக்கும்//

கோல்டுக்கே கோல்ட் பேசியல் எதுக்குனு தான் விட்டுட்டேன்... :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஏங்க இவங்களுக்கெல்லாம் காலே வலிக்காதா?//

ஹும்கும்... இந்த நட்டு போல்ட்டு கடைக்கு போனா இந்த ரங்கஸ்'களுக்கு மட்டும் கால் வலிக்கிதாக்கும்...:)


//வெளியில் வந்து ஆளுக்கு 1.5 முழம் பூ வாங்கிண்டோம்//

ஹே.... இதான் எனக்கு ரெம்ப புடிச்ச பார்ட்... மை பேவரெட் யு நோ


//ச்சே.. அவ ரொம்ப நல்லவ//

அவ்வ்வ்வ்வ்... என்னை நல்லவனு சொல்லிட்டா அனன்யா...:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//”இனிமே நீ துணி வாங்கினா அதை கிச்சன்ல தான் வைக்கணும்”ன்னு அண்ணா வெச்சாரே ஒரு ஆப்பு! //

ஆப்பு வெக்கறதுல தான் அவர் மன்னனாச்சே... ஹ்ம்ம்... சரி விடு, கூடிய விரைவில் பல்ப் கண்காட்சி போடலாம்னு இருக்கேன்... உனக்கு எதுனா வேணும்னா ப்ரீ-புக் பண்ணிக்கோ ...:))


//தன்னோட பஜ்ஜியை ஒண்ணு கூட எனக்கு குடுக்காம காலி பண்ணிட்டு//

அடிப்பாவி... அசிடிட்டி, அண்டா சட்டினு டயலாக் அடிச்சுட்டு, பொய் சொன்ன வாய்க்கு கிச்சடி கிடைக்காது கேட்டியா


//லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for life! அண்ணா தான் பாவம்! :))))//

அந்த கடைசி மூணு வார்த்தை தவிர, மத்த எல்லாத்தையும் நானும் வலிமொழிகிறேன்...:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அப்பாவிக்கு எதிரான கமெண்ட் எதுவும் போடவிடாது போலிருக்கே//

KGG சார் அதுக்கு கூட தெரியுது பாருங்க... இவ நல்லவனு...:)


//யூ ஆர் டூ பேட் அப்பாவி//

அது வேற ஒண்ணுமில்ல ஹுஸைனம்மா'க்கா... அனன்யா மறுபடி வரேன்னு சொல்லி இருக்கா... சரி அப்ப பாத்துப்போம்னு விட்டுட்டேன்...:)



//அடப்பாவி மட்டுமல்ல அனன்ஸும் ராக்ஸ் :-)//

அதே அதே... சபாபதே அமைதி அக்கா...:)



//அப்பாவி இட்லியைக் கொடுத்துடப் போறாங்களேனு பயந்து தானே போகலை//

கீதா மாமி, எல்லாரும் இப்படி உசாரா இருந்தா நான் என்ன பண்ணட்டும்...:)

ஹுஸைனம்மா said...

/இந்த நட்டு போல்ட்டு கடைக்கு போனா இந்த ரங்கஸ்'களுக்கு மட்டும் கால் வலிக்கிதாக்கும்//

Thousand time repeattu!! :-))))

raji said...

Wow! Such a great post anans! ஆனாலும் நீங்க ரொம்ப lucky தான்.purchase ல உங்க பர்ஸ் தப்பிச்சா மாதிரி தெரியுதே.அப்பாவியோட ரங்ஸ் பர்ஸ் மட்டுமில்ல அவரும் பாவம்கறது உலகறிஞ்ச விஷயம் :-)

raji said...
This comment has been removed by a blog administrator.
raji said...

Wow! Such a great post anans!ஆனாலும் நீங்க ரொம்ப lucky தான்.purchase ல உங்க பர்ஸ் தப்பிச்சா மாதிரி தெரியுதே.அப்பாவியோட ரங்ஸ் பர்ஸ் மட்டுமில்ல அவரும் பாவம்கறது உலகறிஞ்ச விஷயம் :-)

வெங்கட் நாகராஜ் said...

அட ஒவ்வொரு வரியும் சிரிக்க வைத்தது....

இருந்தாலும் அப்பாவி பாவம்... இப்படி ஓட்டக் கூடாது! [நாங்க கோவை போனப்போ அவங்க வீட்டுக்குப் போய் தான் பார்த்தோம்!]

aavee said...

அப்பாவி உணமையிலேயே அப்பாவி தாங்க.. இல்லேன்னா புடவை எடுக்க போகும்போது உங்களை கூப்பிட்டு இருப்பாங்களா.. (தங்கத்தில் தனக்கான ஆப்பை தானே தயார் செஞ்சுக்குவாங்களா??)

jokes apart.. நல்லா விழுந்து விழுந்து சிரிக்க வச்சுது உங்க பதிவு.. ஏகப்பட்ட பல்பு வாங்கியதாலோ என்னவோ இந்த முறை அப்பாவியின் பதிவு கொஞ்சம் டல்லா தான் இருந்தது..

R. Jagannathan said...

My first visit to your site - from 'ATM's ' (good short form!) site. It is unbelievable that you two met for the first time as both your posts on your meeting makes me wonder if you are not 'Jigri Dosts' from childhood! And I am also surprised by the styles of your / ATM's writing - which are very similar. (A guess - Are Ananya and Thangamani are two names of the same person?!) - R. J.

Related Posts with Thumbnails